search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு அலுவலர்களுக்கான செஸ் போட்டியில் பங்கேற்று விளையாடிய கரூர் கலெக்டர்
    X

    அரசு அலுவலர்களுக்கான செஸ் போட்டியில் பங்கேற்று விளையாடிய கரூர் கலெக்டர்

    • 44வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டியையொட்டி கரூர் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் போட்டியை தொடங்கி வைத்து, மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத்துடன் செஸ் விளையாடினார்

    கரூர்:

    மாமல்லபுரத்தில் நடைபெறும் 44வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டியையொட்டி கரூர் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அதன் ஒரு கட்டமாக அரசு அலுவலர்களுக்கான செஸ் போட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் போட்டியை தொடங்கி வைத்து, மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத்துடன் செஸ் விளையாடினார். மேலும், அலுவலர்கள் போட்டியில் பங்கேற்று விளையாடுவதை பார்வையிட்டார். மேலும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.

    மாவட்ட வருவாய் அலுவலர்கள் ம.லியாகத், கவிதா (நிலம் எடுப்பு), சமூக பாதுகாப்பு திட்ட தனித்துனை ஆட்சியர் சைபுதின், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தண்டாயுதபாணி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து, கரூர் கோட்டைமேடு மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி சுற்றுச்சுவரில் வரையப்பட்டுள்ள செஸ் போட்டி விழிப்புணர்வு மற்றும் கரூர் அமராவதி புதிய பால த்தின் தென்கிழக்கு பகுதியில் வரையப்பட்டுள்ள செஸ் பலகை போன்ற கருப்பு, வெள்ளை கட் டங்களை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    Next Story
    ×