search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனையை வரன்முறைபடுத்த தவறினால் குடிநீர்-மின் இணைப்பு வழங்கப்படாது: கலெக்டர் எச்சரிக்கை
    X

    மனையை வரன்முறைபடுத்த தவறினால் குடிநீர்-மின் இணைப்பு வழங்கப்படாது: கலெக்டர் எச்சரிக்கை

    மனையை வரன்முறை படுத்த தவறினால் குடிநீர், மின்சார இணைப்புகள் வழங்கப்பட மாட்டாது என்று கலெக்டர் அன்பழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    கரூர்:

    கரூர் நகராட்சி ஆணையர் அலுவலக வளாகத்தில், நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்துதல் தொடர்பான சிறப்பு முகாம் நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் அன்பழகன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

     20.10.2016-க்கு முன் ஏற்படுத்தப்பட்ட மனைகள் அல்லது அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்திக்கொள்ள குறைந்த அவகாசமே உள்ளதால் இந்த முகாமில் விண்ணப்பித்து பயன் பெறலாம். மனையின் கிரைய பத்திரம், பட்டா, சிட்டா, வில்லங்க சான்றிதழ், புலப்பட நகல், மனைப்பிரிவு வரைபடம் ஆகியவற்றின் நகல்களும் கரூர் நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். 

    வரன்முறைப்படுத்த தவறும் மனைப்பிரிவுகளில் அனுமதியற்ற மனைகளாக அமைவதுடன் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் அகற்றும் வசதி, மின்சார வசதி போன்ற வசதிகள் வழங்க இயலாது. மேலும், கட்டிட அனுமதி வழங்கப்பட மாட்டாது என்பதால் மனை உரிமையாளர்கள் வங்கிகளில் கடன் பெற இயலாது.  பத்திரப்பதிவு அலுவலகத்தில் மனையின் கிரையப்பதிவு மேற்கொள்ள இயலாது. எனவே, இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் மனைகளை வரன்முறைப்படுத்திக்கொள்ளுமாறும், கூடுதல் விவரங்களுக்கு கரூர் நகராட்சி அலுவலகத்தில் நகர அமைப்பு பகுதியினை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.  

    இவ்வாறு அவர் கூறினார். 

    முகாமில், நகராட்சி ஆணையர் அசோக்குமார், தாசில்தார் கலியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×