search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூர் தொகுதி தேர்தல் ரத்தாகுமா?- கலெக்டர் அன்பழகன் பேட்டி
    X

    கரூர் தொகுதி தேர்தல் ரத்தாகுமா?- கலெக்டர் அன்பழகன் பேட்டி

    கரூர் தொகுதி தேர்தலை ரத்து செய்வது குறித்து ஆணையம் தான் முடிவு எடுக்கும் என்று மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான அன்பழகன் தெரிவித்தார். #KarurPolls #CollectorAnbazhagan
    கரூர்:

    கரூர் பாராளுமன்ற தொகுதியில் நேற்று மாலையுடன் பிரசாரம் முடிந்தது. இதற்கிடையே அ.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஒரே இடத்தில் பிரசாரத்தை நிறைவு செய்வதில் போட்டி ஏற்பட்டு பெரும் வன்முறை வெடித்தது.

    இதில் போலீசார் மற்றும் பொதுமக்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணி கூறுகையில், கரூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய சதி நடப்பதாக தெரிவித்தார்.

    மேலும் கரூர் மாவட்ட கலெக்டர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் கூறி டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் வக்கீல் மூலம் புகார் மனு அளித்துள்ளார்.

    இந்த புகார் தொடர்பாக கரூர் மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான அன்பழகன் கூறுகையில், கரூர் பாராளுமன்ற தொகுதி நிலவரம் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்தேன். கரூர் தொகுதி தேர்தலை ரத்து செய்வது குறித்து ஆணையம் தான் முடிவு எடுக்கும்.

    காய்ந்த மரம் தான் கல்லடி படும், நேர்மையாக இருப்பவர்கள் மீது புகார் கூறுவது இயல்புதான்.

    இவ்வாறு அவர் கூறினார். #KarurPolls #CollectorAnbazhagan
    Next Story
    ×