search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிஷி"

    • ஒரு கட்சியின் பிரச்சார பாடலுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிப்பது இதுவே முதல் முறை
    • பாஜக சர்வாதிகாரம் செய்தால், அது சரியானது. ஆனால் யாராவது அதைப் பற்றி பேசினால், அது தவறு. இது ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதைக் காட்டுகிறது

    ஆம் ஆத்மி கட்சியின் இரண்டு நிமிட தேர்தல் பிரச்சாரப் பாடலை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ திலீப் பாண்டே எழுதி பாடியுள்ளார். இந்த பாடல் ஏப்ரல் 25-ம் தேதி கட்சி தலைமையகத்தில் வெளியிடப்பட்டது.

    இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார பாடலுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி இன்று தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான அதிஷி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "ஒரு கட்சியின் பிரச்சார பாடலுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிப்பது இதுவே முதல் முறை. தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, இந்த பாடல் ஆளும் கட்சியையும் விசாரணை நிறுவனங்களையும் அம்பலப்படுத்தியுள்ளது.

    எங்கள் கட்சியின் பிரசார பாடலில் பாஜகவை குறிப்பிடவில்லை மற்றும் தேர்தல் நடத்தை நடத்தை விதிகளை மீறவில்லை. இதில் உண்மை வீடியோக்கள் மற்றும் சம்பவங்கள் உள்ளன.

    பாஜக சர்வாதிகாரம் செய்தால், அது சரியானது. ஆனால் யாராவது அதைப் பற்றி பேசினால், அது தவறு. இது ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதைக் காட்டுகிறது.

    பாஜக செய்த தேர்தல் விதிமுறை மீறல்களை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. பாஜக செய்த தேர்தல் விதிமுறை மீறல்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்தை நான் வலியுறுத்த விரும்புகிறேன். எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை நிறுத்த வேண்டாம்" என்று அவர் தெரிவித்தார்.

    ஆம் ஆத்மின் குற்றசாட்டு தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதில், "விதிகளை மீறி இருந்ததால் பரப்புரை பாடலில் சில வரிகளை மட்டுமே மாற்ற பரிந்துரைத்தோம். கெஜ்ரிவால் சிறையில் இருப்பது போன்று இடம்பெற்றுள்ள வரிகள் நீதித்துறையை அவதூறு செய்வதாக உள்ளது. விதிகளுக்கு முரணான இந்த சொற்கள் விளம்பரத்தில் பலமுறை வருகிறது" என்று தெரிவித்துள்ளது.

    • பா.ஜனதா அதன் பிரிவான அமலாக்குத்துறை மூலமாக கெஜ்ரிவால் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்க முயற்சி செய்கிறது.
    • கெஜ்ரிவாலுக்கு வீட்டில் சமைத்து வழங்கப்படும் உணவை நிறுத்துவதற்கு முயற்சி செய்கிறார்கள்.

    கெஜ்ரிவால் ஜாமின் பெறுவதற்கான இனிப்பு வகைகள் மற்றும் மாம்பழங்கள் சாப்பிடுகிறார் என அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இனிப்பு அதிகமாக சாப்பிட்டு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து அதன்மூலம் ஜாமின் பெற முயற்சிப்பதாக தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் பொய் சொல்கிறது. அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்வதற்கு மிகப்பெரிய சதி நடக்கிறது என டெல்லி மாநில மந்திரி அதிஷி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அதிஷி கூறியதாவது:-

    பா.ஜனதா அதன் பிரிவான அமலாக்குத்துறை மூலமாக கெஜ்ரிவால் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்க முயற்சி செய்கிறது. கெஜ்ரிவாலுக்கு வீட்டில் சமைத்து வழங்கப்படும் உணவை நிறுத்துவதற்கு முயற்சி செய்கிறார்கள். சர்க்கரையுடன் தேனீர் குடிப்பதாகவும், இனிப்புகள் சாப்பிடுவதாகவும் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் பொய் கூறியுள்ளது. அது முற்றிலம் பொய். கெஜ்ரிவால் கெஜ்ரிவால் செயற்கை இனிப்பை எடுத்து வருகிறார்.

    சர்க்கரை அளவு குறைவது உயிருக்கு ஆபத்தானது என்பதால் நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழம் அல்லது ஏதேனும் சாக்லேட் எடுத்துச் செல்லுமாறு டாக்டர்கள்களால் கேட்டுக்கொள்ளப்படுவார்கள். உருளைக்கிழங்குடன் பூரி சாப்பிடுவதாக அமலாக்கத்துறை சொல்கிறது. இவ்வளவு பொய் சொன்னதற்காக அமலாக்கத்துறை கடவுளுக்கு பயப்பட வேண்டும். நவராத்தியின் முதல் நாளில் மட்டும் பூரி சாப்பிட்டார். வீட்டு உணவை நிறுத்துவதற்காக இந்த பொய்கள் எல்லாம் அமலாக்கத்துறை மற்றும் பா.ஜனதாவல் பரப்பப்படுகிறது.

    கடந்த சில நாட்களில் இருந்து கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு 300 mg/dl-க்கு அதிகமாக உள்ளது. ஆனால் திஹார் ஜெயில் அதிகாரிகளால் இன்சுலின் மறுக்கப்படுகிறது. வீட்டில் சமைத்த உணவை நிறுத்தி கெஜ்ரிவாலை கொல்ல சதி நடக்கிறது.

    இவ்வாறு அதிஷி தெரிவித்துள்ளார்.

    • பா.ஜனதா, பெண் அமைச்சருக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பி மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்.
    • தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து அமைச்சர் அதிஷி கருத்து.

    பாரதீய ஜனதா கட்சியில் சேராவிட்டால் அமலாக்கத் துறையால் கைது செய்ய போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டது என்று டெல்லி பெண் அமைச்சர் அதிஷி தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த பா.ஜனதா, பெண் அமைச்சருக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பி மன்னிப்பு கேட்க வலியுறுத்தியது.

    மேலும், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் பா.ஜனதா புகார் செய்தது. இதையடுத்து இவ்விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கக் கோரி அமைச்சர் அதிஷிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து அமைச்சர் அதிஷி கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அதிஷி கூறியதாவது:-

    ஏப்ரல் 4-ம் தேதி (நேற்று), எனது செய்தியாளர் சந்திப்பில் ஒன்றின் மீது பாஜக புகார் அளித்தது. ஏப்ரல் 5-ம் தேதி காலை 11:15 மணிக்கு, அதிஷிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக செய்தி சேனல்கள் ஒளிப்பரப்பின. ஆனால் அடுத்த அரை மணி நேரத்திற்குள் எனக்கு மின்னஞ்சல் மூலம் நோட்டீஸ் அறிவிப்பு வந்தது.

    அதாவது, தேர்தல் கமிஷன் நோட்டீசை முதலில் ஊடகங்களில் பா.ஜ.க.வினர் போடுகிறார்கள் அதன் பிறகு எனக்கு நோட்டீஸ் வருகிறது. தேர்தல் ஆணையம் பாஜகவின் துணை அமைப்பாக மாறிவிட்டதா என்பதே எனது கேள்வி.

    அனைத்து மத்திய அமைப்புகளும், பாஜகவிடம் மண்டியிட்டது கவலைக்குரிய விஷயம்.

    மேலும் தற்போது தேர்தல் ஆணையம் கூட பாஜகவிடம் மண்டியிட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி பல்வேறு பிரச்சனைகளில் புகார்களை பதிவு செய்ய முயற்சிக்கும்போது எங்களுக்கு அவகாசம் வழங்கப்படவில்லை.

    எம்சிசி செயல்படுத்தப்பட்ட பிறகும், மத்திய அமைப்புகள் எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைத்து வருகின்றன. ஆனால் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    ஆனால் பா.ஜ.க.வினர் புகார் பதிவு செய்த உடனேயே 12 மணி நேரத்தில் நோட்டீஸ் வருகிறது. நோட்டீஸ் வெளியிடுவது தேர்தல் ஆணையமா அல்லது பாஜகவா?

    டிஎன் சேஷனின் வாரிசுகளாக இருந்து, இந்த நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்றுவது அவர்களின் பொறுப்பு என்று தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
    • இன்னும் இரண்டு மாதங்களில் 4 ஆம் ஆத்மி தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்பட 3 முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் பல துறைகளை கையில் வைத்திருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி மாநில பெண் மந்திரியுமான அதிஷி, இன்னும் ஒரு மாதத்தில் தான் கைது செய்யப்படுவேன் பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.

    இது தொடர்பாக அதிஷி கூறியிருப்பதாவது:-

    எனக்கு மிகவும் நெருங்கியவர் மூலமாக பா.ஜனதா என்னை அணுகி, என்னுடைய அரசியல் வாழ்க்கையை பாதுகாக்க அக்கட்சியில் இணைய கேட்டுக்கொண்டது. நான் பாரதீய ஜனதாவில் இணையவில்லை என்றால், இந்த மாதத்தில் நான் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவேன்.

    மக்களை தேர்தலுக்கு முன்னதாக இரண்டு மாதங்களில் அவர்கள் இன்னும் நான்கிற்கும் அதிகமான ஆம் ஆத்மி தலைவர்களை கைது செய்வார்கள். சவுரப் பரத்வாஜ், அதிஷி, துர்கேஷ் பதாக், ராகவ் சதா உள்ளிட்டோர் கைது செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அதிஷி தெரிவித்துள்ளார்.

    • தேசவிரோத சக்திகளை பாதுகாக்கும் வகையில் நீதிமன்றத்தில் ஆஜராகியதாக ஆம் ஆத்மி குற்றச்சாட்டு.
    • நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தல்.

    மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த சனிக்கிழமை பா.ஜனதா வெளியிட்டுள்ளது. அதில் நியூடெல்லி தொகுதியில் மறைந்த முன்னாள் மத்திய மந்திரியான சுஸ்மா சுவராஜ் மகள் பன்சூரி சுவராஜ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மக்களவை தேர்தலில் போட்டியிட பன்சூரி சுவராஜ்-க்கு வாய்ப்பு வழங்கப்பட்டதற்கு ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், பா.ஜனதா அவரது பெயரை திரும்பப்பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

    தேசவிரோத சக்திகளுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் பன்சூரி சுவராஜ் ஆஜரானார். இதனால் நாட்டு மக்களிடையே அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்தியாவில் இருந்து தப்பி ஓடிய லலித் மோடிக்கு ஆதரவாக பாஸ்போர்ட் வழக்கில் ஆஜரானார். மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரானார் என ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.

    இது தொடர்பான ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி மாநில நிதியமைச்சர் அதிஷி "இன்று பன்சூரி சுவராஜ் நியூடெல்லி மக்களவை தொகுதியில் பெண்களிடம் சென்று வாக்கு கேட்க இருக்கிறார். அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.

    இதற்கு பதிலடியாக பன்சூரி சுவராஜ் கூறுகையில் "ராஜேந்திர நகரில் நீங்கள் வேட்பாளராக நிறுத்தியவர், சொந்த கட்சியினரால் அடித்து விரட்டப்பட்டது ஏன்? என்பதை ஆம் ஆத்மி கட்சியிடம் கேட்க விரும்புகிறேன். அவர்களால் நிறுத்தப்பட்ட வேட்பாளரை சொந்த கட்சி உறுப்பினர்கள் கூட விரும்பவில்லை.

    இந்த நிலையில் அவர்கள் என்மீது குற்றச்சாட்டுகளை வைக்க முடியும். ஆனால், மக்கள் அவர்களுக்கு தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள்" என்றார்.

    டெல்லியில் கவுதம் கம்பீர் அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய மந்திரி ஹர்ஷ் வர்தன் அரசியலில் இருந்து விலகியுள்ளார். ஹர்ஷ் வர்தன் அரசியலில் இருந்து விலகியது தொடர்பாகவும் பா.ஜனதாவை ஆம் ஆத்மி விமர்சித்துள்ளது.

    • டெல்லியில் 2023-24-ல் தனிநபர் வருமானம் 4 லட்சத்து 61 ஆயிரத்து 910 ஆக அதிகரித்துள்ளது.
    • டெல்லி மாநில அரசின் பணவீக்கம் 2023 ஜனவரி முதல் டிசம்பர் வரை 2.81 சதவீதமாக உள்ளது.

    டெல்லி மாநில சட்டமன்றத்தில் அம்மாநிலத்தின் நிதி மந்திரி அதிஷி பொருளாதார ஆய்வு அறிக்கையை (2023-24) தாக்கல் செய்தார். அப்போது, 2024-25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் வருகிற 4-ந்தேதி தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

    பொருளாதார ஆய்வு அறிக்கையில் இடம் பிடித்துள்ள முக்கியம்சங்கள்:-

    டெல்லி மாநிலத்தின் வருவாய் உபரி 2022-23-ல் 14,457 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 2021-22 நிதியாண்டில் வருவாய் உபரி 3,270 கோடி ரூபாயாக இருந்தது. கெஜ்ரிவால் தலைமையிலான மாநில அரசு மட்டும்தான் நாட்டில் வருவாய் உபரி அரசாக திகழ்கிறது.

    டெல்லி மாநிலத்தின் வேலைவாய்ப்பின்மை 2022-2023-ல் 1.9 சவீதமாக குறைந்துள்ளது. 2020-21-ல் (கொரோனாவிற்குப் பிறகு) 6.3 சதவீதமாக இருந்தது.

    டெல்லியின் பணவீக்கம் 2023 ஜனவரி முதல் டிசம்பர் வரை 2.81 சதவீதமாக உள்ளது. அதே காலக்கட்டத்தின் நாட்டின் பணவீக்கம் 5.65 சதவீதமாக இருந்தது.

    2023-24-ல் தனிநபர் வருமானம் 4 லட்சத்து 61 ஆயிரத்து 910 ஆக அதிகரித்துள்ளது. 2021-22-ல் 3 லட்சத்து 76 ஆயிரத்து 217 ஆக இருந்தது. இரண்டு வருடத்தில் 22 சதவீதம் உயர்ந்துள்ளது.

    மொத்த உள்நாட்டு உற்பத்தி தற்போதைய பண மதிப்பில் 2023-24-ல் 11 லட்சத்து 7 ஆயிருத்து 746 கோடி ரூபாய் ஆகும். கடந்த வருடத்தை காட்டிலும் 9.17 சதவீதம் உயர்வு ஆகும்.

    • கடந்த இரண்டு வருடங்களாக ஆம் ஆத்மி தலைவர்கள் மிரட்டப்பட்டு வருகிறார்கள்.
    • இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட, உறுதியான ஆதாரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

    டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் சிலரை அமலாக்கத்துறை கைது செய்து உள்ளது. அவர்கள் ஜாமின் கிடைக்காமல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன்மேல் சம்மனாக கொடுத்து வருகிறது. ஆனால் அவர் ஆஜராக மறுத்து வருகிறார்.

    இந்த நிலையில்தான் இன்று ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்புடைய பலரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது தொடர்பாக டெல்லி மந்திரி அதிஷி கூறியதாவது:-

    கடந்த இரண்டு வருடங்களாக ஆம் ஆத்மி தலைவர்கள் மிரட்டப்பட்டு வருகிறார்கள். மதுபான ஊழல் என்ற பெயரில் இது நடந்து வருகிறது. சிலரின் வீடுகளில் சோதனை செய்யப்படுகிறது. சிலருக்கு சம்மன் கொடுக்கப்படுகிறது. சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் அதிகமான சோதனைகள் நடத்தப்பட்டும்கூட, அமலாக்கத்துறையால் ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யப முடியவில்லை.

    இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட, உறுதியான ஆதாரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. நீதிமன்றமும் ஆதாரங்களை வழங்கும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

    ஆம் ஆத்மி தலைவர்கள், ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்புடையவர்கள் இடத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி பொருளாளர், எம்.பி. குப்தா, கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் மற்றும் பலருக்கு தொடர்பான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

    சாட்சிகளின் வாக்குமூலம் அடங்கிய ஆடியோ அழிக்கப்பட்டுள்ளது. அதை நாட்டு மக்களுக்கு முன் கொண்டு வாரங்கள் பார்ப்போம். ஆம் ஆத்மி கட்ச தலைவர்கள் குரலை ஒடுக்கவதற்காக அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. மதுபான கொள்கை விவகாரத்தில் ஆம் ஆத்மிக்கு எதிராக போலி அறிக்கைகள் வழங்குமாறும் அமலாக்கத்துறை கட்டாயப்படுத்துகிறது. மிரட்டுகிறது.

    மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் ஆம் ஆத்மி கட்சியை முடக்க பா.ஜனதா விரும்புகிறது. ஆனால், நாங்கள் பயப்படமாட்டோம் என்பதை அவருக்கு சொல்ல விரும்புகிறேன்" என்றார்.

    அதிஷி, அமலாக்கத்துறையின் அம்பலத்தை நாளை (இன்று) 10 மணிக்கு வெளிப்படுத்த இருக்கிறேன் எனக் குறிப்பிடடிநர்தார். அவருடைய மந்திரி சபையில் இருக்கும் சவுரப் பரத்வாஜ், பா.ஜனதாவின் பணம் சுரண்டும் துறையின் மிகப்பெரிய அம்பலம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த நிலையில்தான் இன்று காலை அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

    • டெல்லி மாநில மந்திரி அதிஷி, அமலாக்கத்துறையின் அம்பலத்தை வெளியிடுவதாக தெரிவித்திருந்தார்.
    • அவர் தெரிவித்த மறுநாள் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்.

    அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    டெல்லியில் சுமார் 10 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. பணமோசடி தொடர்பான வழக்கு தொடர்பான சோதனையா அல்லது புதிய வழக்கு தொடர்பான சோதனையா என்பது குறித்து தெளிவான தகவல் வெளியாகவில்லை.

    கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ் குமார், டெல்லி ஜல் போர்டு முன்னாள் உறுப்பினர் ஷலாப் குமார், மாநிலங்களை எம்.பி. அலுவலகம், தேசிய பொருளாளர் என்.டி. குப்தா ஆகியோர் தொடர்பான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

    டெல்லி மாநில மந்திர அதிஷி, எஜென்சியின் அம்பலத்தை வெளியிடுவேன் என தெரிவித்திருந்த நிலையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக டெல்லி மாநில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • ஏற்கனவே 8 துறைகளுக்கு அமைச்சராக இருக்கிறார்
    • தற்போது நிதி உள்பட மேலும் இரண்டு துறைகளுக்கு பொறுப்பேற்க இருக்கிறார்

    டெல்லி மாநிலத்தில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி செய்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் மணிஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர ஜெயின் ஆகியோர் மந்திரி பதவியை ராஜினாமா செய்தனர்.

    இதனால் அதிஷி, சவுரப் பரத்வாஜ் ஆகியோர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். இந்த நிலையில் மந்திரி சபையை மாற்றியமைக்க கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார்.

    அதிஷியிடம் நிதி, திட்டம் மற்றும் வருவாய்த்துறைகளை கூடுதலாக வழங்க இருக்கிறார்.

    இதற்கு முன் அதிஷி 1. மின்சாரம், 2. கல்வி, 3. கலை, 4. கலாச்சாரம் மற்றும் மொழி, 5. சுற்றுலா, 6. உயர்க்கல்வி, 7. பயிற்சி மற்றும் தொழில்நுட்ப கல்வி, 8. மக்கள் தொடர்பு ஆகிய 8 துறைகளை கையில் வைத்திருக்கிறார்.

    தற்போது இந்த இரண்டு துறைகளுடன் 10 துறைகளுக்கு அமைச்சராக இருக்கப்போகிறார்.

    ×