search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "LS Election"

    • மக்களை சந்திக்க பா.ஜனதாவுக்கு பதற்றமாக உள்ளதா?. எதிர்க்கட்சிகளை குறிவைக்க தற்போது தேர்தல் ஆணையம் பக்கம் திரும்பியுள்ளனரா?.
    • மாநில அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மாற்றப்படுகிறார்கள். கேட்டால் சுதந்திரமான, நியாயமான தேர்தல் என்கிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் பல வருடங்கள் வேலை பார்த்து வரும் அதிகாரிகள் தேர்தலையொட்டி மாற்றப்படுவார்கள்.

    இந்திய தேர்தல் ஆணையம் நேற்று ஆறு மாநில உள்துறை செயலாளர்களை மாற்ற உத்தரவிட்டுள்ளது. அத்துடன் மேற்கு வங்காள மாநில டிஜிபி ராஜீவ் குமாரையும் மாற்ற உத்தரவிட்டுள்ளது. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தெரிக் ஓ'பிரைன் கூறுகையில் "பா.ஜனதாவின் இழிவான யுக்திகள் தேர்தல் ஆணையம் போன்ற நிறுவனங்களை அழிக்கின்றன. மக்களை சந்திக்க பா.ஜனதாவுக்கு பதற்றமாக உள்ளதா?. எதிர்க்கட்சிகளை குறிவைக்க தற்போது தேர்தல் ஆணையம் பக்கம் திரும்பியுள்ளனரா?. தேர்தல் ஆணையமா?. அல்லது எச்.எம்.வி.யா? (ECI or HMV?)

    மாநில அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மாற்றப்படுகிறார்கள். கேட்டால் சுதந்திரமான, நியாயமான தேர்தல் என்கிறார்கள். நாங்கள் 2024 தேர்தல் உச்சநீதிமன்றம் கண்காணிப்பில் நடைபெற வேண்டும் என விரும்புகிறோம்" என்றார்.

    • ஊழல் கட்சி என்று நீங்கள் கூறிய அதே காங்கிரஸ் கட்சியின் மடியில் அமர்ந்துள்ளீர்கள்.
    • உங்களால் கூட்டணி அமைக்க முடியும். பிரதமர் மோடி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பார்.

    மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து டெல்லி, அரியானா, குஜராத் போன்ற மாநிலங்களில் போட்டியிடுகின்றன.

    இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டாலும் சரி, காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி இணைந்தாலும் சரி ஜீரோ பிளஸ் ஜீரோ ஜீரோதான் என அமித் ஷா கேலி செய்துள்ளார்.

    மேலும், "ஊழல் கட்சி என்று நீங்கள் கூறிய அதே காங்கிரஸ் கட்சியின் மடியில் அமர்ந்துள்ளீர்கள். காங்கிரஸ் கட்சி ஊழல் கட்சி என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். உங்களால் கூட்டணி அமைக்க முடியும். ஆனால் பிரதமர் மோடி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பார்.

    டெல்லியில் இரண்டு விதமான அரசியல் செய்யும் நபர்கள் உள்ளனர். ஒரு நபர் தாங்கள் சொன்னதை செய்யும் வகையைச் சேர்ந்தவர். மற்றொருவர் அதற்கு எதிர்ப்பதமாக செய்யக் கூடியவர். இரண்டு விதமாக மக்கள் டெல்லியில் உள்ளனர். ஒருவர் நரேந்திர மோடி. மற்றொருவர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். கெஜ்ரிவால் அவர் சொன்னது எதையும் செய்யவில்லை" என்றார்.

    இதற்கு ஆம் ஆத்மி கட்சி பதிலடி கொடுத்துள்ளது. மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் எங்களை டெல்லி மாநில ஆட்சியில் அமர்த்தினர். அதேபோன்று இந்த முறை டெல்லியில் இருந்து பா.ஜனதா எம்.பி.க்களை வெளியேற்றி பாராளுமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கையை உயர்த்துவார்கள் எனத் தெரிவித்துள்ளது.

    • தேசவிரோத சக்திகளை பாதுகாக்கும் வகையில் நீதிமன்றத்தில் ஆஜராகியதாக ஆம் ஆத்மி குற்றச்சாட்டு.
    • நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தல்.

    மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த சனிக்கிழமை பா.ஜனதா வெளியிட்டுள்ளது. அதில் நியூடெல்லி தொகுதியில் மறைந்த முன்னாள் மத்திய மந்திரியான சுஸ்மா சுவராஜ் மகள் பன்சூரி சுவராஜ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மக்களவை தேர்தலில் போட்டியிட பன்சூரி சுவராஜ்-க்கு வாய்ப்பு வழங்கப்பட்டதற்கு ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், பா.ஜனதா அவரது பெயரை திரும்பப்பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

    தேசவிரோத சக்திகளுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் பன்சூரி சுவராஜ் ஆஜரானார். இதனால் நாட்டு மக்களிடையே அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்தியாவில் இருந்து தப்பி ஓடிய லலித் மோடிக்கு ஆதரவாக பாஸ்போர்ட் வழக்கில் ஆஜரானார். மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரானார் என ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.

    இது தொடர்பான ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி மாநில நிதியமைச்சர் அதிஷி "இன்று பன்சூரி சுவராஜ் நியூடெல்லி மக்களவை தொகுதியில் பெண்களிடம் சென்று வாக்கு கேட்க இருக்கிறார். அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.

    இதற்கு பதிலடியாக பன்சூரி சுவராஜ் கூறுகையில் "ராஜேந்திர நகரில் நீங்கள் வேட்பாளராக நிறுத்தியவர், சொந்த கட்சியினரால் அடித்து விரட்டப்பட்டது ஏன்? என்பதை ஆம் ஆத்மி கட்சியிடம் கேட்க விரும்புகிறேன். அவர்களால் நிறுத்தப்பட்ட வேட்பாளரை சொந்த கட்சி உறுப்பினர்கள் கூட விரும்பவில்லை.

    இந்த நிலையில் அவர்கள் என்மீது குற்றச்சாட்டுகளை வைக்க முடியும். ஆனால், மக்கள் அவர்களுக்கு தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள்" என்றார்.

    டெல்லியில் கவுதம் கம்பீர் அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய மந்திரி ஹர்ஷ் வர்தன் அரசியலில் இருந்து விலகியுள்ளார். ஹர்ஷ் வர்தன் அரசியலில் இருந்து விலகியது தொடர்பாகவும் பா.ஜனதாவை ஆம் ஆத்மி விமர்சித்துள்ளது.

    • சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களில் போட்டியிடுகிறது.
    • உத்தவ் தாக்கரேயின் சிவசேனா 20 இடங்களில் போட்டியிடுகிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங்கிரஸ், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து மக்களவை தேர்தலை சந்திக்கின்றன.

    இந்த மூன்று கட்சிகளும் இந்தியா கூட்டணியில் உள்ளன. இந்தியாவில் அதிக மக்களவை இடங்களை கொண்ட 2-வது மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது. இங்கு ஒவ்வொரு கட்சிகளும் எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து மூன்று கட்சிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

    சுமார் ஒரு மாதங்களுக்கு மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. மும்பையில் உள்ள தொகுதிகளை ஒதுக்குவதில் காங்கிரஸ்- உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி இடையே இழுபறி நீடித்து வந்தது. இதனால் ராகுல் காந்தி உத்தவ் தாக்கரேயிடம் டெலிபோன் மூலம் பேசினார்.

    இந்த நிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரேயின் சிவசேனா 20 இடங்களிலும், காங்கிரஸ் 18 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களிலும் போட்டியிடுகின்றன. விரைவில் எந்தெந்த தொகுதிகள் என்பது அறிவிக்கப்படும்.

    48 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் கடந்த 2019 மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா 23 இடங்களிலும், சிவசேனா 18 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 1 இடத்திலும், வெற்றி பெற்றிருந்தன.

    சிவசேனா 23 இடங்களில் போட்டியிட்டிருந்தது. தற்போது சிவசோன 2-வது உடைந்துள்ளது. உத்தவ் தாக்கரேயின் சிவசேனா 3 இடங்களில் குறைவாக போட்டியிடுகிறது. காங்கிரஸ் ஒரு இடங்களில் குறைவாக போட்டியிடுகிறது. சரத்பவார் கட்சி 15 இடங்களில் குறைவாக போட்டியிடுகிறது.

    வன்சித் பகுஜன் அகாதி என்ற மாநில கட்சி உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சியில் இருந்து 2 இடங்களை பெறும். சுயேட்சை வேட்பாளர் ராஜு ஷெட்டி சரத் பவாரிடம் இருந்து ஒரு இடம் பெற்றுக் கொள்வார்.

    • முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்ய ஆலோசனை கூட்டம்.
    • பிரதமர் மோடி தலைமையில் சுமார் நான்கரை மணி நேரம் நடைபெற்றுள்ளது.

    மக்களவை தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. 3-வது முறையாக வெற்றி பெற்று பிரதமராக வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருக்கிறார். அதற்கு வலுசேர்க்கும் வகையில் 370 இடங்களை பிடிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வருகிறது பா.ஜனதா.

    தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக வேட்பாளர்களை பட்டியலை வெளியிட பா.ஜனதா தீர்மானத்தித்துள்ளது. முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் பிரதமர் தலைமையிலான பா.ஜனதாவின் மத்திய தேர்தல் கமிட்டி நேற்று முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வது குறித்து ஆலோசனை நடத்தியது.

    இந்த ஆலோசனை கூட்டம் நள்ளிரவு வரை நீடித்துள்ளது. இரவு 10.30 மணிக்கு தொடங்கிய ஆலோசனைக் கூட்டம் சுமார் நான்கரை மணி நேரம் நடைபெற்றுள்ளது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமித் ஷா, ஜே.பி. நட்டா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    பா.ஜனதாவின் மத்திய தேர்தல் குழு வேட்பாளர்கள் பட்டியல் குறித்து அலுவலகத்தில் ஆராய்ந்து வந்த நிலையில், பிரதமர் மோடி தனது அலுவலகத்தில் அமித் ஷா மற்றும் நட்டாவுடன் தனியாக ஆலோசனை நடத்தியுள்ளார்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேவந்திர பட்நாவிஸ், பிரகாஷ் ஜவடேகர், மன்சுக் மாண்டவியா, புஷ்கர் தாமி, பிரமோத் சவாந்த், பூபேந்திர யாத், ஜோதிராதித்யா சிந்தியா, கேஷவ் மவுரியா யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

    உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், கேரளா, தெலுங்கானா, ராஜஸ்தான், கோவா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வேட்பாளர்களை அறிவிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

    மாநிலத் தலைவர்களுடன் யாரை வேட்பாளராக நிறுத்தில் வெற்றி உறுதி செய்யப்படும் என்பது குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார். அவர்கள் தெரிவிக்கும் பெயரை குறித்து வைத்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    பஞ்சாப், ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் வேட்பாளர் பட்டியல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மாநிலங்களிலும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மார்ச் 10-ந்தேதிக்குள் 50 சதவீத வேட்பாளர்களை அறிவித்துவிடலாம் என பா.ஜனதா நம்புகிறது. கடந்த 2019-ல் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே 164 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. அந்த வகையில் தற்போது வெளியிட விரும்புகிறது.

    வெற்றி பெறக்கூடிய ஆய்வு என்ற பா.ஜனதா கட்சி இதை கூறுகிறது. ஏனென்றால் வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்களை தேடிப்பிடித்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில் கட்சி தீவிரம் காட்டி வருவதால் இப்படி அழைக்கப்படுகிறது.

    காங்கிரஸ் கட்சி இன்னும் இட ஒதுக்கீடு பேச்சுவார்த்தையை முடிக்காத நிலையில், முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு உளவியல் ரீதியாக நெருக்கடியை கொடுக்க முடியும் பா.ஜனதா எதிர்பார்க்கிறது.

    மாநிலங்களவை எம்.பி.யாக மீண்டு வாய்ப்பு வழங்கப்படதாக சில மத்திய மந்திரிகள் பெயர் வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெறலாம் எனக் கூறப்படுகிறது.

    பாராளுமன்றத்துக்கு ஆறாம் கட்டமாக இன்று நடைபெற்றுவரும் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி மேற்கு வங்காளத்தில் மிக அதிகமாகவும் டெல்லியில் மிக குறைவாகவும் வாக்குகள் பதிவானது.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு கடந்த மாதம் 11-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. ஏப்ரல் 11-ந்தேதி 91 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 18-ந்தேதி 96 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 23-ந்தேதி 116 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 29-ந்தேதி 71 தொகுதிகளுக்கும், மே 5-ம் தேதி 51 தொகுதிகளிலும் ஐந்து கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.

    இந்நிலையில், மேற்கு வங்காளம், டெல்லி, அரியானா, உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் ஆறாம் கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    இந்த தேர்தலில்  ஓட்டுரிமை பெற்ற 10 கோடியே 17 லட்சத்து 82 ஆயிரத்து 472 வாக்காளர்கள் 979 வேட்பாளர்களின் அரசியல் தலைவிதியை நிர்ணயிப்பதற்காக 1 லட்சத்து 13 ஆயிரத்து 167 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.



    இன்று காலையில் இருந்து வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி மேற்கு வங்காளம் மாநிலத்தில் 63.09 சதவீதம் வாக்குகளும் டெல்லியில் 36.73 சதவீதம் வாக்குகளும்  அரியானாவில் 51.48 சதவீதம் வாக்குகளும் பதிவாகின.

    உத்தரப்பிரதேசத்தில் 40.96 சதவீதம் வாக்குகளும்  பீகாரில் 43.86 சதவீதம் வாக்குகளும் ஜார்கண்டில் 54.09சதவீதம் வாக்குகளும் மத்தியப்பிரதேசத்தில் 48.53 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.

    ஒட்டுமொத்தமாக 46.52 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.
    ×