search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wedding card"

    • வட கர்நாடகாவின் 14 பாராளுமன்ற தொகுதிகளுக்கு மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
    • திருமண அழைப்பிதழில் பிரதமர் மோடியின் பெயரை சேர்த்த மணமகன் சிக்கலில் தவிக்கிறார்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 பாராளுமன்ற தொகுதிகளில் 14 தொகுதிகளுக்குதான் கடந்த 26-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. வட கர்நாடகாவின் 14 பாராளுமன்ற தொகுதிகளுக்கு மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்திற்கு உட்பட்ட புத்தூர் தாலுகாவை சேர்ந்த உப்பினங்கடி போலீசாருக்கு புகார் ஒன்று வந்தது. இதில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட மணமகன் ஒருவர் தேர்தல் நன்னடத்தை விதிகளுக்கு எதிராக நடந்து கொண்டார் என சர்ச்சை எழுந்தது.

    பிரதமர் மோடியை மீண்டும் தேர்ந்தெடுப்பதே தம்பதிக்கு நீங்கள் அளிக்கும் சிறந்த பரிசாக இருக்கும் என்ற வரியை திருமண அழைப்பிதழில் இடம்பெறச் செய்திருந்தார். இதையடுத்து, தேர்தல் ஆணையத்திடம் மணமகன் உறவினர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

    இதனையடுத்து, தேர்தல் ஆணைய அதிகாரிகள் மணமகனின் வீட்டுக்கு நேரில் சென்றுள்ளனர். அப்போது அவர்களிடம், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே, மார்ச் 1-ம் தேதி திருமண வரவேற்பிதழ் அச்சடிக்கப்பட்டது. அந்த வரியானது பிரதமர் மோடி மற்றும் நாட்டின் மீது கொண்ட அன்பால் சேர்க்கப்பட்டது என விளக்கம் அளித்திருக்கிறார்.

    அந்நபருக்கு கடந்த 18-ம் தேதி திருமணம் நடந்தது. அவர் விளக்கம் அளித்தபோதும் கடந்த 26-ம் தேதி போலீசில் தேர்தல் ஆணையம் புகார் ஒன்றை அளித்தது. இதனை தொடர்ந்து எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. திருமண அழைப்பிதழை அச்சடித்த உரிமையாளரிடம் தேர்தல் ஆணையமும், போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×