search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் அறிக்கை"

    • முக்கிய பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக மதத்தை பற்றி பேசுகிறார்கள்.
    • தேசத்தினுடைய கடன் எவ்வளவு இருந்தது? இப்போது எவ்வளவு கடன் உயர்ந்துள்ளது?

    திருவட்டார்:

    குமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கை காய்ந்து போன சருகு போன்றது. அதில் ஓன்றுமே இல்லை. அதை காற்றில் பறக்க விடலாம். இந்தியா கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை மக்களை கவரும் வகையில் உள்ளது.

    100 நாள் வேலை வாய்ப்பை 150 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும் என்று கூறியிருப்பது, கிராமப்புற பொருளாதாரத்தை புரட்டி போடும் அளவிற்கு உள்ளது. பெட்ரோல், டீசல் விலையில் உள்ள பல்வேறு வேறுபாடுகள் களையப்படும். ஜி.எஸ்.டி. வரியால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நம்முடைய உழைப்பு நமக்கு தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக மத்திய அரசின் கஜானாவில் சேர்ந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு அதிகமான சிறு தொழில்கள் அழிந்ததற்கும் ஜி.எஸ்.டி. காரணமாக உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜி.எஸ்.டி. மறுசீராய்வு செய்யப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்து உள்ளது.

    கல்வியை எடுத்துக்கொண்டால் இன்றைக்கு சைனிக் ஸ்கூல், இந்தியாவினுடைய முக்கியமான பள்ளி. ராணுவத்திற்கு குழந்தைகளை தயாராக்க கூடிய அந்த பள்ளிகளை ஆர்.எஸ்.எஸ். கைப்பற்றி உள்ளது. அதை சார்ந்த அமைப்புகளுக்கு தாரை வார்த்து கொடுத்துள்ளனர். பல்கலைக்கழகத்திற்கு அநீதியை செய்தார்கள்.

    இதை எல்லாம் ஒவ்வொரு குடிமகனும் சிந்தித்து பார்க்க வேண்டும். குமரி மாவட்டத்தில் மதத்தை வைத்து அரசியல் செய்யப்படுவதாக, பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். அவரை பார்த்து சிரிக்கவா, அழவா என்று தெரியவில்லை.

    அவர் தான் மதத்தை பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். நாங்கள் எங்கள் பிரசாரத்தில் மதத்தைப் பற்றி பேசியுள்ளோமா? 100 சதவீதம் நாங்கள் பேசவில்லை.

    மதம் என்பது ஒரு மனிதனுடைய நம்பிக்கையை சார்ந்தது. அந்த நம்பிக்கை மாறுபட்டதற்கு உட்பட்டது. இன்று ஒரு நம்பிக்கையில் இருப்பான், நாளை ஒரு நம்பிக்கையில் இருப்பான். ஆனால் அந்த மதம் ஒன்றை மூலதனமாக வைத்து அரசியல் செய்யும் அமைப்புகள், ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. தான். இதை யாரும் மறுக்க முடியாது.

    முக்கிய பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக மதத்தை பற்றி பேசுகிறார்கள். விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், சாமானிய மக்களை பாதிக்கக்கூடிய பிரச்சனைகள் ஆகியவை மக்களிடம் சென்று விடக்கூடாது என்பதற்காக மத உணர்வை தூண்டும் வகையில் பா.ஜ.க. நாடு முழுவதும் இதனை செய்து கொண்டிருக்கிறது. அதைத்தான் பொன் ராதாகிருஷ்ணன் முடிந்த அளவு செய்து கொண்டிருக்கிறார்.

    மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு அதிகமாக செய்ததாக கூறினார்கள். எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி கொண்டு வருவதாக கூறினார்கள். ஆனால் கொண்டு வரவில்லை. அறிவித்ததோடு நிற்கிறது. அவர்கள் தவறை அடையாளப்படுத்தும் வகையில் தான் செங்கலை தூக்கி பிரசாரம் செய்து வருகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

    அ.தி.மு.க. குறித்து நான் பேச விரும்பவில்லை. அவர்கள் வந்து போய் உள்ளனர். அ.தி.மு.க. இயக்கத்திற்கு யார் பிரதமர் வேட்பாளர் என்று யோசிக்க வேண்டும். 2 கூட்டணியிலும் இல்லாதவர்கள் எப்படி பேசுவார்கள்?.

    பொருளாதார நிபுணராக இருந்த மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது பெட்ரோல், டீசல் விலை எப்படி இருந்தது? ஆனால் மோடியின் ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலை எப்படி உயர்ந்துள்ளது?

    தேசத்தினுடைய கடன் எவ்வளவு இருந்தது? இப்போது எவ்வளவு கடன் உயர்ந்துள்ளது? பல மடங்கு பட்டினி சாவு அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
    • இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல; கொள்கையால் ஒன்றிய கூட்டணி - மு.க.ஸ்டாலின்

    மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அக்கட்சியின் தலைமைக் கழகத்தில் இன்று வெளியிடப்பட்டது.

    காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

    இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "அடிமை அதிமுக அடகு வைத்த, பாசிச பாஜக பறித்த தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

    நாம் வலியுறுத்திய வாக்குறுதிகள் அனைத்தையும் உள்ளடக்கி, மாநிலக் கட்சியான தி.மு.க.வால் நிறைவேற்ற முடியுமா எனக் கேள்வி எழுப்பியோருக்கான தக்க பதிலாக அமைந்துள்ளது காங்கிரஸ் வெளியிட்டுள்ள 2024 தேர்தல் அறிக்கை.

    அதனால்தான் சொல்கிறோம். இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல; கொள்கையால் ஒன்றிய கூட்டணி" என்று பதிவிட்டுள்ளார்.

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:-

    * கடந்த 5 ஆண்டுகளில் ஜனநாயகம் பலவீனம் அடைந்து விட்டது.

    * நாடு முழுவதும் சமூக, பொருளாதார, சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

    * மத்திய அரசு பணியிடங்களில் 30 லட்சம் காலி பணியிடங்களை நிரப்புவோம்.

    * அரசு பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த பணிமுறை நீக்கப்படும்.

    * மத்திய அரசு பணிகளில் ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் ஓராண்டில் நிரப்பப்படும்.

    * பா.ஜ.க. ஆட்சியில் நீதி மறுக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும்.

    * மூத்த குடிமக்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூதியம் மாதம் ரூ.1000 வழங்கப்படும்.

    * 2025-ம் ஆண்டு முதல் மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.

    * 2024 மார்ச் மாதம் வரையில் பெறப்பட்ட கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

    • காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியானது.
    • ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவு அறிவிக்கப்படுகிறது.

    இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில், மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். நீட் தேர்வு நடத்தலாமா, வேண்டாமா என மாநில அரசுகள் முடிவு செய்யலாம். மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்து புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும். மகாலட்சுமி திட்டத்தில் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் உள்பட பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

    இந்நிலையில், காங்கிரசின் நீட் வாக்குறுதி நாடகம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், கரும்பு விவசாயி சின்னத்தை சுயேச்சைக்கு கொடுத்துள்ளனர். நாம் தமிழர் கட்சியை போட்டியாக பார்க்கவில்லை என பா.ஜ.க. கூறுகிறது. போட்டியில் இல்லாதவனிடம் எதற்காக சின்னத்தைப் பறித்தீர்கள்? மாநிலங்கள் விருப்பத்திற்கேற்ப நீட் தேர்வு நடைபெறும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறுவது நாடகம். நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதற்கு பொறுப்பேற்பது யார்? பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவோம் என பேசுவதே முட்டாள்தனம் என்றார்.

    • மத்திய அரசு வேலை வாய்ப்பில் மகளிருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பது புரட்சி கரமான திட்டம்.
    • ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கொடுக்கும் திட்டமும் நல்ல திட்டமே...

    சென்னை:

    காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையை தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

    தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி:-

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மத்திய அரசு பணியிடங்களில் 50 சதவீதம் பெண்களை அமர்த்துதல், மகாலட்சுமி திட்டத்தில் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம், ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்த படாது, நீட்தேர்வு என்பது மாநில அரசின் விருப்பம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தும் வரவேற்கத்தக்கது.

    தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்து செல்லும் திட்டங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் வலுசேர்க்கும் வகையில் காங்கிரசின் தேர்தல் அறிக்கை வெளியாகி உள்ளது. மக்களுக்கு பயனுள்ள பல நல்ல அறிவிப்புகளை காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற செய்துள்ளதை தி.மு. கழகம் முழுமையாக வரவேற்கிறது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கை விளிம்புநிலை மக்களின் உரிமையை மீட்கும் வாக்குறுதிகள் கொண்டதாக இடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறியுள்ளதை பாராட்டுகிறேன்.

    மத்திய அரசு வேலை வாய்ப்பில் மகளிருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பது புரட்சி கரமான திட்டம். இது சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

    எஸ்.சி., எஸ்.டி. காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் என்றும் பா.ஜ.க. முடக்கி வைத்துள்ள அனைத்து காலி பணியிடங்களும் நிரப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளது. மேலும் உயர்சாதி பிரிவில் நலிவடைந்தவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதை மாற்றி அனைத்து சமூகத்திலும் உள்ள நலிந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்பதை வரவேற்கிறேன். இதன் மூலம் ஓ.பி.சி. எஸ்.சி., எஸ்.டி. இட ஒதுக்கீட்டு பிரிவினர் பயன் அடைவார்கள்.

    நீட் தேர்வு முறையை மாநில அரசு முடிவு செய்து கொள்ளலாம் என்ற வாக்குறுதி தமிழ்நாட்டின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றே கூறலாம். இது தமிழக மக்களின் உணர்வுகளை, உரிமைகளை மதிப்பதாக உள்ளன. மத்திய கல்வி கொள்கை மாற்றி அமைக்கப்படுவது, ஒப்பந்த நடைறை முற்றிலும் ஒழிக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு புரட்சிகரமான வாக்குறுதிகளை அறிவித்து இருப்பது வரவேற்க கூடியது.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்:-

    அனுபவம் வாய்ந்த காங்கிரஸ் கட்சி வெளியிட்டு உள்ள தேர்தல் அறிக்கை வரவேற்கத்தக்க வகையில் அமைந்துள்ளது. ரெயில்வே துறையில் பா.ஜனதா ஆட்சி யில் மக்களை சுரண்டும் பல்வேறு செயல்கள் நடந்துள்ளன. முதியோர்களுக்கு வழங்கப்பட்ட கட்டண சலுகையை முழுமையாக ரத்து செய்திருந்தனர்.

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மீண்டும் முதியோர்களுக்கு சலுகை அளிக்கப்படும் என்று கூறியிருப்பது பயன் அளிக்கும். ரெயில்வேயில் அரை டிக்கெட் என்பதையே இல்லாமல் செய்துவிட்டனர். பொது பெட்டி யை குறைத்து குளிர்சாதன பெட்டியை அதிகமாக்கி கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.

    கொரோனா காலத்தில் சிறப்பு ரெயில்களாக அறிவிக்கப்பட்டு உயர்த்தப்பட்ட கட்டணம் இப்போதும் அப்படியே உள்ளது. இதற்கெல்லாம் முடிவு கட்டும் வகையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியாகி இருப்பது வரவேற்கத்தக்கது.

    ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கொடுக்கும் திட்டமும் நல்ல திட்டமே... சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்திருப்பதும் மிகவும் முக்கியமானதாகும். இப்படி பல நல்ல விஷயங்களை காங்கிரஸ் கட்சி கூறியிருப்பது வரவேற்கக் கூடியதுதான்.

    • உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.7.50 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படும்.
    • ரெயில்களில் முதியோருக்கு ரத்து செய்யப்பட்ட கட்டண சலுகை மீண்டும் அமல்படுத்தப்படும்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விவரம் வருமாறு:-

    * 1 முதல் 12-ம் வகுப்பு வரையில் நாடு முழுவதும் பள்ளிக்கல்வி இலவசம்.

    * மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கட்டாயமில்லை. நீட் மற்றும் கியூட் தேர்வை மாநில அரசுகள் தங்கள் விருப்பப்படி முடிவு செய்யலாம். மாநில அரசுகளே தங்களுக்கான தேர்வு முறைகள் மூலம் மாணவர்கள் சேர்க்கையை நடத்தலாம்.

    * மகாலட்சுமி திட்டத்தின் கீழ் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

    * தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் மீதான துன்புறுத்தலை தடுக்க ரோஹித் வெமுலா சட்டம் அமல்படுத்தப்படும்.

    * தேசிய கல்விக் கொள்கை மாநில அரசுகளின் ஆலோசனைக்கு பிறகே நடைமுறைப்படுத்தப்படும்.

    * உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.7.50 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படும்.

    * விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்படும்.

    * ரெயில்களில் முதியோருக்கு ரத்து செய்யப்பட்ட கட்டண சலுகை மீண்டும் அமல்படுத்தப்படும்.

    * புதுச்சேரி மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.

    * 100 நாள் வேலை திட்டத்திற்கான கூலி நாள் ஒன்றுக்கு ரூ.400 ஆக உயர்த்தப்படும்.

    * முன்னேறிய பிரிவினரிடம் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு அனைத்து பிரிவினருக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.

    * ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * நாடு முழுவதும் மருத்துவ பணியாளர்கள் மீதான தாக்குதலை தடுக்க சட்டம் இயற்றப்படும்.

    * விளையாட்டில் சிறந்து விளங்கும் 21 வயதுக்கு உள்பட்ட இளையோருக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

    * நாடு முழுவதும் "ஒரே நாடு ஒரே தேர்தல்" முறை கொண்டு வரப்படாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்திய அரசு பணியிடங்களில் 30 லட்சம் காலி பணியிடங்களை நிரப்புவோம்.
    • பா.ஜ.க. ஆட்சியில் நீதி மறுக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் குதித்துள்ளன.

    ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கட்சிகள் கொடுக்கும் வாக்குறுதிகள் மிகப்பெரிய அளவில் பேசப்படும் வகையில் அமையும். இந்த ஆண்டும் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

    காங்கிரஸ் கட்சியில் தேர்தல் அறிக்கை தயாரிக்க முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தலைமையில் குழு உருவாக்கப்பட்டது. அந்த குழுவினர் நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரிடமும் கருத்து கேட்டு தேர்தல் அறிக்கையை உருவாக்கினார்கள். அந்த அறிக்கை சமீபத்தில் காங்கிரஸ் காரிய கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.

    காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள் தேர்தல் அறிக்கையை ஆய்வு செய்தனர். இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சிறு-குறு தொழில் அதிபர்களுக்கு ஏற்ப தேர்தல் அறிக்கையில் சிறுசிறு மாற்றங்கள் செய்தனர்.

    பாரதிய ஜனதாவின் உத்தரவாதங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் புதிய உத்தரவாதங்கள் சேர்க்கப்பட்டன.

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) பகல் 11.30 மணிக்கு டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, சோனியா, ராகுல் ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

    பின்னர் தேர்தல் அறிக்கை குறித்து ப.சிதம்பரம் பேசினார். முக்கிய அம்சங்கள் குறித்து அவர் விளக்கி கூறினார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:-

    * கடந்த 5 ஆண்டுகளில் ஜனநாயகம் பலவீனம் அடைந்து விட்டது.

    * நாடு முழுவதும் சமூக, பொருளாதார, சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

    * மத்திய அரசு பணியிடங்களில் 30 லட்சம் காலி பணியிடங்களை நிரப்புவோம்.

    * அரசு பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த பணிமுறை நீக்கப்படும்.

    * மத்திய அரசு பணிகளில் ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் ஓராண்டில் நிரப்பப்படும்.

    * வேலை வாய்ப்பின்மை என்பது நாட்டின் மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது. ஐ.ஐ.டி.யில் இருந்து வெளியேறும் 30 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பில்லை. குறைந்தபட்ச ஊதியமும் நலிந்துள்ளது. பணி, ஆரோக்கியம், நலன் என்ற அடிப்படையில் திட்டங்கள் உருவாக்கப்படும்.

    * பா.ஜ.க. ஆட்சியில் நீதி மறுக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும்.

    * மூத்த குடிமக்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூதியம் மாதம் ரூ.1000 வழங்கப்படும்.

    * 2025-ம் ஆண்டு முதல் மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.

    * 2024 மார்ச் மாதம் வரையில் பெறப்பட்ட கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அடுத்த 10 ஆண்டு காலத்துக்கு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்.
    • 100 நாள் வேலை திட்டத்தில் தினக்கூலி ரூ.400 ஆக உயர்த்தப்படும்

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக அவருடைய தங்கை சர்மிளாவுக்கு மாநில தலைவர் பதவி கொடுத்து தேர்தல் களத்தில் இறக்கி உள்ளது.

    சர்மிளா அண்ணன் என்று கூட பார்க்காமல் ஜெகன்மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சனம் செய்கிறார். அவர் மூலம் ஜெகன்மோகன் ரெட்டியை வீழ்த்த காங்கிரஸ் துடிக்கிறது.

    இந்த நிலையில் பாராளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை சர்மிளா வெளியிட்டார். அதில் 9 முக்கிய உத்தரவாதங்கள் இடம்பெற்றுள்ளன.

    மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அடுத்த 10 ஆண்டு காலத்துக்கு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். ஆந்திராவில் ஒவ்வொரு ஏழை குடும்பத்துக்கும் மாதம், 8,500 வீதம் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 2000 வழங்கப்படும். இந்த பணம் குடும்ப தலைவிகளிடம் தரப்படும்.

    100 நாள் வேலை திட்டத்தில் தினக்கூலி ரூ.400 ஆக உயர்த்தப்படும். கேஜி முதல் பிஜி வரை அதாவது மழலையர் வகுப்பு முதல் முதுநிலை கல்வி வரை இலவசமாக கல்வி வழங்கப்படும்.

    வீடற்ற ஏழைகளுக்கு தலா ரூ.5 லட்சம் மதிப்பிலான வீடுகள் கட்டித் தரப்படும். சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குறுதிகள் ஆந்திராவில் விவாத பொருளாக மாறி இருக்கிறது.

    • தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு வரும் நாட்களில் மேலும் பலமாக இருக்க வேண்டும்.
    • ஸ்ரீபெரும்புதூரில் தி.மு.க.வுக்கு எதிரான எதிர்மறை வாக்குகள் உள்ளதை என்னால் பார்க்க முடிகிறது.

    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வன்மை கொடுமைக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். காவிரி மேலாண்மை கூட்டம் ஏப்ரல் 4-ந்தேதி நடைபெற உள்ளது. தமிழக அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படும். கூட்டணிக்காக பெங்களூரு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவிரி நீருக்காக பெங்களூர் செல்லவில்லை. தேர்தல் முறையாக நடக்க வேண்டும். தேர்தல் ஆணையம் முறையாக கண்காணிக்க வேண்டும். தமிழகத்தில் ஆளும் எதிர்க்கட்சிகள் விதிமீறலை தொடங்கிவிட்டன.

    ஆளுங்கட்சியின் நோக்கமே வாக்காளர்களுக்கு அழுத்தத்தை கொடுத்து வாக்கு வாங்க நினைக்கிறார்கள். மக்கள் தி.மு.க.வுக்கு எதிராக இருக்கிறார்கள் என்று நினைக்கும்போது இந்தியை பற்றி பேசுகிறார்கள். மக்கள் ஏமாறமாட்டார்கள். நிதி அமைச்சர் தேர்தலில் போட்டியிடுவதற்கான பணம் எண்ணிடம் இல்லை என்று கூறியது அவரது நேர்மை மற்றும் வெளிப்படை தன்மையை குறிக்கிறது.

    தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு வரும் நாட்களில் மேலும் பலமாக இருக்க வேண்டும். கடந்த முறை சைக்கிள் சின்னத்திற்காக போராடி பார்த்தேன். ஆனால் கிடைக்கவில்லை. தற்போது முறையான நேரத்தில் சரியான பணியின் காரணமாக சைக்கிள் சின்னம் கிடைத்து இருக்கிறது.

    9 வருட போராட்டத்திற்கு பிறகு இப்போது கிடைத்து உள்ளது. முறையாக பணிகள் செய்யாததன் காரணமாக சின்னம் கிடைக்கவில்லை என்பதால் அரசியல் காரணம் கூறுவதை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

    ஸ்ரீபெரும்புதூரில் தி.மு.க.வுக்கு எதிரான எதிர்மறை வாக்குகள் உள்ளதை என்னால் பார்க்க முடிகிறது. ஸ்ரீபெரும்புதூர் உட்பட தி.மு.க. பிரபலங்கள் இருக்கும் தொகுதியில் எல்லாம் எங்களது வெற்றி உறுதி

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகிய 3 பிரிவினர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.
    • பெண்களுக்கு மாதம் உதவி தொகை கொடுப்பது பற்றி அறிவிப்புகள் வர உள்ளன.

    ஜெய்ப்பூர்:

    காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை இந்த தடவை மிகவும் வித்தியாசமான கோலத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளது. புதிய அம்சங்களுடன் தேர்தல் அறிக்கை தயாரிக்க முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

    இந்த குழுவினர் நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரிடமும் கருத்து கேட்டு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளனர். சமீபத்தில் அந்த அறிக்கை காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    வருகிற 6-ந்தேதி தேர்தல் அறிக்கையை வெளியிட காங்கிரஸ் மேலிட தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இதற்கான விழா நடக்கிறது. அதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் ஆகியோர் பங்கேற்று தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்கள்.

    தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் தொடர்பாக நேற்று காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். அப்போது தேர்தல் அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது.

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகிய 3 பிரிவினர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதிமொழி அளிக்கப்பட உள்ளது.

    அதுபோல பெண்களுக்கு மாதம் உதவி தொகை கொடுப்பது பற்றி அறிவிப்புகள் வர உள்ளன. இதனால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக ஆறுகள் சீரமைக்கப்படும்.
    • தங்கம் இறக்குமதி வரி முற்றிலுமாக ரத்து செய்யப்படும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கான பா.ம.க. தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள் வருமாறு:-

    * சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தப்படும்.

    * தமிழகத்தில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீத பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வரப்படும்.

    * மாநிலங்களுக்கு தன்னாட்சி குறித்து பரிந்துரைக்க வலியுறுத்தப்படும்.

    * மத்திய அரசின் வரி வருவாயில் 50 சதவீதம் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    * வேளாண் விளைப் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை வழங்கப்படுவது உழவர்களின் உரிமையாக்கப்படும்.

    * 60 வயது கடந்த உழவர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும்.

    * பொதுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட ரூ.1 லட்சம் வரையிலான பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

    * நியாய விலை கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் வழங்கப்படும்.

    * கடலூர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட 3 நிலக்கரி திட்டங்கள் கைவிடப்படும்.

    * மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறி மற்றும் உணவு தானியங்களுக்கு தடை விதிக்கப்படும்.

    * குறிப்பிட்ட காலத்துக்குள் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தமிழகத்தில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    * தமிழ்நாட்டை அணு உலை இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    * கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் முழுக்க முழுக்க மத்திய அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும்.

    * மேகதாது அணைக்கான திட்ட அறிக்கை திரும்ப பெறப்படும்.

    * தமிழக ஆறுகள் சீரமைக்கப்படும்.

    * தமிழகத்தில் 3 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

    * பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.

    * கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு கால மருத்துவ உதவி ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படும்.

    * மூத்த குடிமக்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படும்.

    * பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பிற தேவைகளுக்கு ரூ.10 லட்சம் வைப்பீடு கொடுக்கப்படும்.

    * அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வலியுறுத்தப்படும்.

    * அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீட்டை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * சென்னையில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * அனைவருக்கும் இலவச மருத்துவ சேவை வழங்கப்படும்.

    * அனைத்து வட்ட தலைநகரங்களிலும் அறுவை சிகிச்சை வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனைகள் தொடங்கப்படும்.

    * சென்னையில் ரூ. ஆயிரம் கோடியில் தேசிய புற்றுநோய் மருத்துவ மையம் அமைக்கப்படும்.

    * நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * போதைப் பொருட்களை ஒழிக்க சட்டத்திருத்தம் செய்யப்படும்.

    * மது விலக்கை நடை முறைப்படுத்தும் மாநிலங்களுக்கு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * புகையிலை பொருட்கள் மீது 100 சதவீதம் வரி விதிக்கப்படும்.

    * தனி நபர் வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 7 லட்சமாக உயர்த்த வலியுறுத்தப்படும்.

    * ஜி.எஸ்.டி. வரி 2 அடுக்குகளாக குறைக்கப்படும்.

    * பெட்ரோல்-டீசல் மீதான வரி குறைக்கப்படும்.

    * தங்கம் இறக்குமதி வரி முற்றிலுமாக ரத்து செய்யப்படும். இதனால் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 6 ஆயிரம் வரை குறையும்.

    * தொழில் தொடங்க மாணவர்களுக்கு வட்டி இல்லாத கடன் வழங்கப்படும்.

    * தருமபுரி-மொரப்பூர் இடையே புதிய ரெயில் பாதை அமைக்கும் பணியை ஒரு ஆண்டில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    * தமிழக மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.

    * தமிழை தேசிய அலுவல் மொழியாக்க வலியுறுத்தப்படும்.

    * திருக்குறளை தேசிய நூலாக்க வலியுறுத்தப்படும்.

    * மது விலக்கு சட்டம் இயற்ற வலியுறுத்தப்படும்.

    * பாட திட்டங்களில் விளையாட்டு சேர்க்கப்படும்.

    * இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தப்படும்.

    * புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற வலியுறுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சதர்ன் கிரவுன் அரங்கத்தில் பா.ம.க. நாளை நிகழ்ச்சி.
    • ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்கள்.

    சென்னை:

    பா.ம.க. செய்தி தொடர்பாளர் வக்கீல் க.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை தியாகராய நகரில் உள்ள ஜி.ஆர்.டி. விடுதியில் சதர்ன் கிரவுன் அரங்கத்தில் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் கட்சி போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.
    • தி.மு.க. சார்பில் கமல்ஹாசனுக்கு ஒரு மேல்சபை எம்.பி. பதவியை தருவதாக உறுதி அளிக்கப்பட்டது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.

    இந்த கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி புதிதாக சேர்ந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்களில் ஒன்று அல்லது 2 இடங்கள் கமல் கட்சிக்கு ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவே கூறப்பட்டு வந்தது.

    அதற்கேற்ற வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் மிகவும் நெருக்கமாகவே இருந்து வந்தார். இதனால் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் மூலமாக கமல் கட்சிக்கு குறிப்பிட்ட இடங்கள் கிடைக்கும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர்.


    ஆனால் காங்கிரஸ் கட்சியோ தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் ஒரு இடத்தைகூட கமல்ஹாசனுக்கு கொடுக்க முன்வரவில்லை. அதே நேரத்தில் மற்ற கட்சிகளும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை விட்டு கொடுக்கவில்லை. இதனால் பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் கட்சி போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.

    காங்கிரஸ் கட்சி நினைத்திருந்தால் தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசும்போதே கமல்ஹாசனுக்கும் சேர்த்து தொகுதிகளை பேசி இருக்கலாம் என்றும், ஆனால் திட்டமிட்டே காங்கிரஸ் கட்சி கமல்ஹாசனை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டது என்பதே அரசியல் நிபுணர்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

    இப்படி மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு முழுக்க முழுக்க காங்கிரஸ் கட்சியே காரணம் என்கிற எண்ணம் அக்கட்சியினர் மத்தியில் பரவலாகவே இருந்து வருகிறது.

    இந்த நிலையில் தி.மு.க. சார்பில் கமல்ஹாசனுக்கு ஒரு மேல்சபை எம்.பி. பதவியை தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நீண்ட இழு பறிக்கு பிறகு கமல்ஹாசன் தி.மு.க. கூட்டணியில் சேர்ந்துள்ளார்.

    இதையடுத்து தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் பிரசாரம் செய்வார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கமல்ஹாசனோ தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய மறுத்து உள்ளார்.


    இதைத்தொடர்ந்து காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளை தவிர்த்து மற்ற கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் வகையில் கமல்ஹாசனின் சுற்றுப் பயண விவரம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது.

    வருகிற 29-ந்தேதி கமல்ஹாசன் தனது பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். ஈரோடு தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அன்று பிரசாரம் செய்யும் கமல்ஹாசன் மறுநாள் (30-ந்தேதி) சேலத்திலும் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    பின்னர் ஏப்ரல் 2-ந்தேதி திருச்சியில் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து பிரசாரம் செய்யும் கமல்ஹாசன் 3-ந்தேதி சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    பின்னர் ஏப்ரல் 6-ந்தேதி கமல்ஹாசன் சென்னையில் பிரசாரம் செய்கிறார். அன்று ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னைக்குட்பட்ட பகுதிகளில் பேசும் அவர் மறுநாளும் (7-ந் தேதி) சென்னையில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளிலேயே பிரசாரம் செய்கிறார்.

    இதன் பின்னர் 3 நாட்கள் கழித்து மதுரையில் 10-ந் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளரை ஆதரித்து பேசும் கமல் 11-ந் தேதி தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    ஏப்ரல் 14-ந்தேதி திருப்பூரிலும், 15-ந்தேதி கோவையிலும் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்கிறார். இந்த 2 தொகுதிகளிலும் கம்யூனிஸ்டு வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் செய்கிறார்.

    இறுதி நாளான ஏப்ரல் 16-ந்தேதி பொள்ளாச்சியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பேசும் கமல்ஹாசன் அத்துடன் தனது பிரசாரத்தை முடிக்கிறார்.

    பாராளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு முடிவடைந்த பிறகு தி.மு.க. அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கமல்ஹாசனை நேரில் சந்தித்து பேசினார்கள். தற்போது அவர்களது தொகுதிகளில் மட்டுமே பிரசாரம் செய்யும் வகையில் கமல்ஹாசன் தனது சுற்றுபயண திட்டத்தை வடிவமைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. மொத்தம் 11 நாட்கள் மட்டுமே பிரசாரம் செய்யும் வகையில் அவரது சுற்றுப்பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    தி.மு.க. கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் செய்ய மறுத்திருப்பது கூட்டணியில் புகைச்சலை ஏற்படுத்தி இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    ×