search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சபாநாயகர்"

    • அதிமுக-வில் இருந்து ஓ. பன்னீர் செல்வம், அவரது ஆதரவாளர்கள் நீக்கம்
    • சட்டமன்றத்தில் இருக்கைகளை மாற்றியமைக்க அதிமுக-வினர் கோரிக்கை

    அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்துக்கு பதிலாக ஆர்.பி. உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக அங்கீகரிக்க வேண்டும். அதற்காக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் இருக்கை அருகில் உள்ள எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி. உதயகுமாருக்கு ஒதுக்க வேண்டும் என்று சட்டசபையில் அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    இதுதொடர்பாக பலமுறை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.-க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பும் செய்துள்ளனர். ஆனாலும் அவர்களின் கோரிக்கை ஏற்கப்படாமலேயே உள்ளது.

    இந்த நிலையில் வருகிற 9-ந்தேதி சட்டசபை கூடுகிறது. இதுதொடர்பாக சபாநாயகர் அப்பாவு பேட்டியளித்தபோது, எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், "தற்போது கோரிக்கை ஏதும் வரவில்லை" என்று கூறினார்.

    இந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று குழுவாக சென்று சபாநாயகர் அப்பாவுவை சந்தித்தனர். ஆர்.பி. உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஏற்று ஓ.பி.எஸ். இருக்கையை மாற்றுமாறு அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ ஆகியோர் சபாநாயகரிடம் 3-வது முறையாக மனு அளித்தனர்.

    இந்த குழுவில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, பொள்ளாச்சி ஜெயராமன், தளவாய் சுந்தரம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, விஜயபாஸ்கர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

    சபாநாயகர் அப்பாவுவை சந்தித்துவிட்டு வெளியே வந்த பிறகு செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதவாது:-

    சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தீர்மானம் நிறைவேற்றி அதை முதல் கடிதம், 2-வது கடிதமாக சபாநாயகரிடம் ஏற்கனவே கொடுக்கப்பட்டது. இன்று 3-வது முறையாக மனு அளிக்கப்பட்டு உள்ளது. இருக்கை வழங்குவது பரிசீலனையில் இருப்பதாக சபாநாயகர் கூறி இருக்கிறார்.

    இடத்தை வழங்குகிறீர்களா? இல்லையா? என்பது தெளிவாக எங்களுக்கு கடிதம் மூலமாக கொடுக்கப்பட வேண்டும் என்று சபாநாயகரிடம் இன்று வலியுறுத்தப்பட்டுள்ளது. கடிதத்தின் மூலமாக பதில் வந்தவுடன் அதற்கான நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி மேற்கொள்வார். சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.

    இந்த கோரிக்கையை அவர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காலாப்பட்டு தொகுதி மக்களுக்கு பல ஆண்டாக மனைப்பட்டா கோரி வருகிறோம்.
    • எம்.எல்.ஏ.க்கள் கூறும் பணிகளை கலெக்டர் செய்வதில்லை என குற்றம்சாட்டினார்.

    புதுச்சேரி:

    புதுவை பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் தனது தொகுதியில் இலவச மனைப்பட்டா வழங்குவது உள்ளிட்ட வருவாய்த்துறை சார்ந்த பணிகள் நடைபெறவில்லை என குற்றம்சாட்டியிருந்தார்.

    இதற்காக சட்டசபை கூடும் நாளில் தர்ணா போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்து சபாநாயகர் ஏம்பலம் செல்வத்திடம் கடிதம் அளித்திருந்தார்.

    இந்நிலையில் புதுவை சட்டசபை இன்று காலை கூடியது. காலை 9 மணிக்கு சட்டசபைக்கு வந்த பாஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் சட்டசபையின் படிக்கட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடங்கினார்.

    9.10 மணியளவில் சுயேச்சை எம்.எல்.ஏ. அங்காளன் சட்டசபைக்கு வந்தார். அவரும் கல்யாண சுந்தரத்துக்கு ஆதரவாக படிக்கட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

    தனது தொகுதியிலும் இதே பிரச்சினை நிலவுவதாக குற்றம்சாட்டினார்.

    9.30 மணிக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சட்ட சபைக்கு வந்தார். அவர் தர்ணாவில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.களை சமரசம் செய்து, தனது அறைக்கு கையோடு அழைத்துச்சென்றார். இதனால் எம்.எல்.ஏ.கள் தர்ணா ½ மணி நேரத்தில் முடிவடைந்தது.

    முன்னதாக கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறும்போது,

    காலாப்பட்டு தொகுதி மக்களுக்கு பல ஆண்டாக மனைப்பட்டா கோரி வருகிறோம்.

    ஆனால் அதற்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை. வருவாய்த்துறை சார்ந்த எந்த பணிகளும் நடைபெறவில்லை. வருவாய்த்துறை செயலரான கலெக்டரை சந்திக்க முயற்சித்தால் அவர் எம்.எல்.ஏ.க்களை சந்திப்பது இல்லை. அவர் முதலமைச்சர் அருகிலேயே அமர்ந்து கொள்கிறார். எம்.எல்.ஏ.க்கள் கூறும் பணிகளை கலெக்டர் செய்வதில்லை என குற்றம்சாட்டினார்.

    • பெற்றோர்கள் நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்லும்போது, அதன் நன்மை, தீமைகளை கவர்னர் ஆய்வு செய்து விளக்கி கூறலாம்.
    • எதிர்க்கட்சி தலைவரும் நீட் தேர்வு தேவையில்லை என்று ஆதரித்து பேசினார்.

    ராதாபுரம்:

    நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-

    விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது ஆட்சி மாற்றம் ஏற்படலாம். அந்த நம்பிக்கையில்தான் ஆட்சி மாற்றமே நீட் தேர்வுக்கு விடிவு என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். நாடு முழுவதுமே ஆட்சி மாற்றத்தை மக்கள் எதிர்பார்த்துள்ளனர். அது நிறைவேறும்.

    பெற்றோர்கள் நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்லும்போது, அதன் நன்மை, தீமைகளை கவர்னர் ஆய்வு செய்து விளக்கி கூறலாம். மாறாக ஆணவத்தில் நான் கையெழுத்திட மாட்டேன் என்று கூறுவது தேவையில்லாதது. தனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?, தன்னால் என்ன செய்ய முடியும்? என்பதைக்கூட கவர்னர் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்.

    தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு பா.ஜ.க. உறுப்பினர்கள் 4 பேரை தவிர மற்ற அனைவருமே ஆதரித்து பேசி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சி தலைவரும் நீட் தேர்வு தேவையில்லை என்று ஆதரித்து பேசினார். தற்போது ஜனாதிபதியின் பரிசீலனையில் உள்ள நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு கவர்னர் கையெழுத்திட மாட்டேன் என்று ஆணவமாக கூறுவது நியாயமா? என்று எனக்கு தெரியவில்லை. மக்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நெல்லை மாவட்டத்தில் விவசாயத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது.
    • விவசாயிகளின் கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் நல்ல செய்தி வரும்.

    நெல்லை:

    நெல்லையில் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-

    உலகம் இருக்கும் வரையில் தமிழக மக்களுக்காக கருணாநிதி செய்த பணிகள் பேசப்படும்.

    நெல்லை மத்திய மாவட்ட அலுவலகத்தில் சென்னை கடற்கரையில் அண்ணாவின் அருகில் கலைஞர் துயில் கொள்ளும் நினைவகம் போன்று மாதிரி நினைவகம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் விவசாயத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டருடன் ஆலோசனை நடத்தப்பட்டு இருக்கிறது. நெல்லை மாவட்டத்தை, வறட்சி மாவட்டமாக அறிவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை கலெக்டர் மேற்கொண்டு வருகிறார். விவசாயிகளின் கோரிக்கைகள் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் நல்ல செய்தி வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து மத்திய அரசுக்கு 1 ரூபாய் செலுத்தினால் அந்த மாநிலத்திற்கு நிதியாக 2 ரூபாய் வருகிறது.
    • இதுவரை 4½ லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

    தென்காசி:

    தமிழக சபாநாயகர் அப்பாவு குற்றாலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

    மத்திய அரசுக்கும், தமிழகத்திற்கும் ஜி.எஸ்.டி. வரி தொடர்பான ஒப்பந்தம் உள்ளது. தமிழகத்தில் இருந்து 1 ரூபாய் வரி மத்திய அரசுக்கு நாம் செலுத்தினால் 17 பைசா நமக்கு வரும்.

    ஆனால் உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து மத்திய அரசுக்கு 1 ரூபாய் செலுத்தினால் அந்த மாநிலத்திற்கு நிதியாக 2 ரூபாய் வருகிறது. ஏன் இந்த பாரபட்சம்?. மத்திய அரசின் நிதி தமிழகத்தில் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று கூறுவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். மத்திய அரசின் நிதி தவறாக பயன்படுத்தப்படவில்லை.

    சமீபத்தில் கூட அரசுடன் ஒரு நிறுவனம் தொழில் தொடங்குவதற்காக ரூ.1,600 கோடி ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதுவரை 4½ லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. 1971-ம் ஆண்டு முதல் இன்றுவரை தமிழகத்தில் கல்வி வளர்ச்சி நன்றாக உள்ளது.

    இவ்வாறு சபாநாயகர் அப்பாவு கூறினார்.

    • மேல்சபை 12 மணிக்கு பிறகு நடைபெற்று வருகிறது.
    • சபையை சுமூகமாக நடத்துவது குறித்து அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

    புதுடெல்லி:

    மணிப்பூர் கலவர சம்பவத்தால் பாராளுமன்றம் இன்று 4-வது நாளாக முடக்கப்பட்டது. மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மேல்சபை 12 மணிக்கு பிறகு நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் அனைத்து கட்சி தலைவர்கள், பிரதிநிதிகளுடன் சபாநாயகர் ஓம் பிர்லா இன்று ஆலோசனை நடத்தினார். சபையை சுமூகமாக நடத்துவது குறித்து அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

    • ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களால் முதலமைச்சர் தேர்வு செய்யப்படுகிறார்.
    • செந்தில் பாலாஜி பதவியில் நீடிக்க கூடாது என்று கவர்னர் கூறுவதற்கு எந்த சட்டமும் இல்லை.

    நாகர்கோவில்:

    அழகப்புரம் பகுதியில் இருந்து ராதாபுரம் கால்வாய் வழியாக விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சபாநாயகர் அப்பாவு கலந்துகொண்டு தண்ணீரை திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களால் முதலமைச்சர் தேர்வு செய்யப்படுகிறார். அவர் தனக்கு வேண்டிய யாரையும் அமைச்சராக்கலாம். முதலமைச்சரின் முடிவிற்குள் யாரும் தலையிடக்கூடாது என்பது மரபு. யாருக்கு எந்த துறை கொடுக்க வேண்டும் என்பதும் முதலமைச்சரின் விருப்பம்.

    செந்தில் பாலாஜி பதவியில் நீடிக்க கூடாது என்று கவர்னர் கூறுவதற்கு எந்த சட்டமும் இல்லை. செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பிக்கவில்லை. முதலமைச்சரின் உரிமையில் கவர்னர் தலையிடுவதை தவிர்த்திருக்கலாம். மதசார்புடைய நாடு என்று கவர்னர் பல இடங்களில் கூறுவது ஏற்புடையது இல்லை. கவர்னர் சட்டப்படி சட்ட ஆலோசனை பெற்று செயல்பட வேண்டும்.

    முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, அமைச்சரவையில் எந்த இலாகாவும் இல்லாமல் இருந்து காலமானார் என்பது முன்னாள் முதலமைச்சருக்கு தெரியும் என்று நம்புகிறேன். தமிழகத்தின் கோவிலாக இருக்கும் தலைமை செயலகத்திற்குள் நுழைந்து, அமலாக்கத்துறை ஜனநாயக மாண்பை மீறி விட்டார்கள். பாராளுமன்றத்தை போன்று உயர் மதிப்பு, தமிழக சட்டப்பேரவைக்கும், தலைமை செயலகத்திற்கும் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதலமைச்சரின் அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது.
    • தண்டனை பெற்றால் மட்டும்தான் பதவியில் இருக்கக்கூடாது.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதி பாசன விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க கோதையாறு பாசன திட்ட அணைகளில் இருந்து ராதாபுரம் கால்வாய் பாசனத்திற்கு இன்று முதல் வரும் அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரை 150 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி நெல்லை மாவட்டம் ராதாபுரம் பாசனத்திற்கு அழகப்பபுரம் அருகே நிலப்பாறை திருமூலநகர் கால்வாயில் இருந்து 150 கன அடி தண்ணீரை சபாநாயகர் அப்பாவு இன்று திறந்து வைத்தார்.

    இதன் மூலம் மாவட்டத்தில் சுமார் 15 ஆயிரத்து 987 ஏக்கர் நிலங்கள் நேரடியாக பயன்பெறும். 52 குளங்கள் மூலம் மறைமுகமாக 1013 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    பின்னர் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி தனது அமைச்சரவைக்கு யார்-யாருக்கு எந்த துறை ஒதுக்க வேண்டும் என முடிவெடுக்கும் அதிகாரம் தமிழக முதலமைச்சருக்கு தான் உள்ளது. முதலமைச்சரின் பரிந்துரையை கவர்னர் திருப்பி அனுப்பியது வேதனையாக உள்ளது. அதை தவிர்த்திருக்க வேண்டும். முதலமைச்சரின் அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது. சட்டம் அதைத்தான் சொல்கிறது.

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லை. வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி நீதிமன்ற காவல், வழக்கு நிலுவையில் இருந்தால் அமைச்சர் பதவியில் இருக்க கூடாது என்று எந்த சட்டத்திலும் இல்லை. தண்டனை பெற்றால் மட்டும்தான் பதவியில் இருக்கக்கூடாது. தொடர்ந்து, கவர்னர் இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மிர்சாபூர் கம்பளம், நாகபுரி தேக்கு, திரிபுரா மூங்கில், ராஜஸ்தான் கல் சிற்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
    • அசோகர் சின்னத்துக்கான பொருட்கள் ராஜஸ்தான், மகாராஷ்டிராவில் இருந்து பெறப்பட்டன.

    புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா இன்று நடந்தது. அதன் சிறப்பு அம்சங்கள் வருமாறு:-

    * புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் மொத்த மதிப்பீடு ரூ.1250 கோடி.

    * குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த எச்.பி.சி. நிறுவனத்தை சேர்ந்த பிமல் படேல் என்பவர் இந்த பாராளுமன்ற கட்டிடத்துக்கான வடிவமைப்பை செய்து கொடுத்து உள்ளார்.

    * டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்டி உள்ளது.

    * 4 மாடிகளுடன் 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது.

    * பாராளுமன்ற மக்களவையில் ஒரு மேஜையின் முன் உள்ள இருக்கைகளில் 2 எம்.பி.க்கள் அமர முடியும்.

    * எம்.பி.க்கள் தங்களின் முன்பு உள்ள டிஜிட்டல் தொடுதிரை மூலம் பார்த்து வாசிக்கலாம். தேவையான வற்றை சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

    * அரசியல் சாசன காட்சியகம், கூட்டரங்கம், 6 கமிட்டி அறைகளுக்கான 92 அறைகள் இடம்பெற்று உள்ளன.

    * ஆடியோ, வீடியோ சார்ந்த உபகரணங்கள் மேம்பட்டதாக உள்ளன.

    * அலுவலக அறையில் மத்திய மந்திரிகளுக்காக 92 அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    * மின்சக்தி பயன்பாடு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சில அம்சங்கள் உள்ளன.

    * மழைநீர் சேகரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது.

    * ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட நீரை மறுசுழற்சி செய்து மறுபடியும் பயன்படுத்தும் அம்சங்களும் உள்ளன.

    * மத்திய மந்திரிகள், எம்.பி.க்கள், அதிகாரிகள் இளைப்பாறுவதற்காக இளைப்பாறும் அறையும் அமைக்கப்பட்டுள்ளது. இது உணவோடு சேர்ந்து உரையாடக்கூடிய இடமாக உள்ளது.

    * பசுமை நாடாளுமன்றம் என்ற முயற்சியும் எடுக்கப்பட்டுள்ளது.

    * 23 லட்சத்து 4 ஆயிரத்து 95 மனித வேலை நாட்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

    * இந்த கட்டிடத்தின் ஆயுள் காலம் 150 ஆண்டுகள்.

    * கட்டிடக் கலையில் இந்தியாவின் அனைத்து மாநில அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

    * 75 ரூபாய் நாணயம் மற்றும் தபால்தலை வெளியிடப்பட்டது.

    * மக்களவையில் 888 எம்.பி.க்கள், மாநிலங்களவையில் 384 எம்.பி.க்கள் என மொத்தம் 1272 எம்.பி.க்கள் அமர முடியும்.

    * மிர்சாபூர் கம்பளம், நாகபுரி தேக்கு, திரிபுரா மூங்கில், ராஜஸ்தான் கல் சிற்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    * சிவப்பு-வெள்ளை மார்பிள் ராஜஸ்தானில் இருந்தும், கேஷரியா பச்சை நிற கற்கள் உதய்பூரில் இருந்தும், சிவப்பு நிற கிரானைட் கற்கள் அஜ்மீரில் இருந்தும், வெள்ளை நிற மார்பிள் கற்கள் ராஜஸ்தானில் இருந்தும், ஜல்லிக் கற்கள் உத்தரபிரதேசம், ராஜஸ்தானில் இருந்தும் கொண்டு வரப்பட்டுள்ளன.

    * மேற்கூரைக்கான எக்கு டாமன் டையூவில் இருந்து வரவழைக்கப்பட்டது.

    * பித்தளை வேலைகள் குஜராத்திலும், மேசை, இருக்கைகள் செய்யும் பணி மும்பையிலும் நடந்தது.

    * அசோகர் சின்னத்துக்கான பொருட்கள் ராஜஸ்தான், மகாராஷ்டிராவில் இருந்து பெறப்பட்டன.

    * அரியானாவில் தயாரிக் கப்பட்ட எம்-சானட் மணல் கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்பட்டது. சிமெண்ட் கற்கள் அரியானா, உத்தர பிரதேசத்தில் இருந்து வர வழைக்கப்பட்டன.

    * 2020 டிசம்பர் 10-ந் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு சுமார் 2½ ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ளது.

    * மக்களவை மயில் வடிவத்திலும், மாநிலங்களவை தாமரை வடிவத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.

    * செங்கோல் நிறுவிய நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து திருவாவடுதுறை உள்ளிட்ட 20 ஆதீனங்கள் பங்கேற்றனர்.

    * செங்கோலை பூஜையில் வைத்து பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் வழிபட்டனர்.

    * மத்திய மந்திரிகள், மாநில முதல்-மந்திரிகள், எம்.பி.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

    * பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

    * வந்தே மாதரம் பாடலை நாதஸ்வரத்தில் இசைத்த கலைஞர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறினார்.

    * திருவாவடுதுறை, தருமபுரி, மதுரை உள்ளிட்ட 20 ஆதீனங்களிடம் பிரதமர் மோடி தனித்தனியாக ஆசி பெற்றார்.

    * பாராளுமன்ற திறப்பையொட்டி இஸ்லாம், கிறிஸ்தவம், பவுத்தம் உள்ளிட்ட அனைத்து மத பிரார்த்தனை நடந்தது. இதில் சங்கராச்சாரியார்கள், பாதிரியார்கள், மதகுருமார்கள் பங்கேற்ற னர்.

    * பாராளுமன்ற கட்டுமான பணியில் ஈடுபட்ட கட்டுமான பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பிரதமர் மோடி கவுரவித்தார்.

    * செங்கோலை உருவாக்கிய உம்மிடி ஜுவல்லர்ஸ் அதிபர்களையும் பிரதமர் மோடி கவுரவித்தார்.

    * புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கான கல்வெட்டை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    * சபாநாயகர் இருக்கைக்கு அருகில் கண்ணாடிபெட்டிக் குள் சோழர் காலத்து செங்கோலை பிரதமர் மோடி நிறுவினார். அதன்பிறகு குத்துவிளக்கு ஏற்றினார்.

    * அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே என்னும் தேவார பாடல் ஒலிக்கப்பட்டது.

    • காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்த பின் நடைபெறும் முதல் சட்டமன்ற கூட்டம் பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் துவங்குகிறது.
    • சட்டமன்ற கூட்டத்திற்கு ஆர்வி தேஷ்பாண்டே தற்காலிக சபாநாயகராக செயல்படுவார் என்று அறிவிப்பு.

    கர்நாடக சட்டமன்ற தேர்ததில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அம்மாநில முதலமைச்சராக சித்தராமையா கடந்த சனிக்கிழமை (மே 19) பதவியேற்றுக் கொண்டார். பதிவியேற்ற பிறகு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மூன்று நாட்களுக்கு கர்நாடக சட்டமன்ற கூட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டதாக முதல்வர் சித்தராமையா அறிவித்து இருந்தார்.

    காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்த பின் நடைபெறும் முதல் சட்டமன்ற கூட்டம் பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் இன்று துவங்குகிறது. இன்று தொடங்கி மே 24 ஆம் தேதி வரை சட்டமன்ற கூட்டம் நடைபெற இருக்கிறது. சட்டமன்ற கூட்டத்திற்கு ஆர்வி தேஷ்பாண்டே தற்காலிக சபாநாயகராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

     

    இதைத் தொடர்ந்து சபாநாயகர் ஆர்வி தேஷ்பாண்டே தலைமையில் இன்று (மே 22) சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 224 சட்டமன்ற உறுப்பினர்களும் பதவி ஏற்க உள்ளனர்.

    சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் ஆர்வி தேஷ்பாண்டே பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். சட்டமன்ற கூட்டத்தின் மூன்றாவது நாள், மே 24 ஆம் தேதி புதிய சபாநாயகர் தேர்வு நடைபெற இருக்கிறது. 

    • கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோரும் கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
    • வாழ்க்கைப் பணி மற்றும் கடலோர விழிப்புணர்வை மேம்படுத்தும் தெரு நாடகம் நடத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, மாசுக்கட்டுப்பாடு குழும நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையத்துடன் இணைந்து கடற்கரையை தூய்மை படுத்தி, தரத்தை மேம்படுத்தவும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    புதுவை காந்தி திடலில் ஜி20 கடற்கரை தூய்மைப்படுத்தும் பணியை கவர்னர் தமிழிசை, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    அவர்களுடன் இணைந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோரும் கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

    நிகழ்ச்சியில் வாழ்க்கை நோக்கம் குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    தொடர்ந்து கவர்னர் தமிழிசை, மற்றும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் விழிப்புணர்வு நடைபயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர் .

    வாழ்க்கைப் பணி மற்றும் கடலோர விழிப்புணர்வை மேம்படுத்தும் தெரு நாடகம் நடத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை செயலாளர் முத்தம்மா, உள்ளாட்சி துறை, நகராட்சி மற்றும் இத்துறையின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    தேசிய சேவை திட்டம், தேசிய மாணவர் படை பள்ளி கல்லூரி மாணவர்கள், தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் தூய்மை நிகழ்ச்சி நடந்தது.

    • சுப்ரீம் கோர்ட்டு ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு கூறி உள்ளது.
    • நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சட்டமன்றம் செயல்படுவதில்லை. சட்டமன்றம் தனித்தன்மை வாய்ந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் வடக்கு பச்சையாறு அணையில் இருந்து பிசான சாகுபடிக்கு தேவையான தண்ணீரை தமிழக சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவரிடம், சுப்ரீம் கோர்ட்டு ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு கூறி உள்ளது. சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் இருக்கை நிலைப்பாடு என்ன? என்பது குறித்து நிருபர்கள் கேட்டனர்.

    அதற்கு பதில் அளித்து சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:-

    இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பு கூறி உள்ளது. அதற்குள் செல்ல விரும்பவில்லை. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சட்டமன்றம் செயல்படுவதில்லை. சட்டமன்றம் தனித்தன்மை வாய்ந்தது. சட்டமன்றத்திற்கு உட்பட்ட பகுதியில் அல்லது சட்டமன்றத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்து எல்லாமே சட்டப்பேரவை தலைவருடைய முழு பொறுப்பாகும்.

    ஆகவே, உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கும், சட்டமன்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×