search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுவை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்ட தமிழிசைக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
    • இந்திய நாடு வளர்ச்சியடைந்து வருகிறது. வேண்டும் மோடி, மீண்டும் மோடி என்ற வாசகத்தை கொடுத்தது நான்தான்.

    புதுச்சேரி:

    புதுவையின் பொறுப்பு கவர்னராக இருந்த தமிழிசை நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இதைத்தொடர்ந்து நேற்று புதுவைக்கு வந்த தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுச்சேரி மக்கள் என் மீது அபரீதமான அன்பை பொழிந்தார்கள். இந்த அன்பு என்றும் தொடரும். புதுச்சேரிக்கும், எனக்கும் உள்ள தொடர்பு தொடரும். வாழ்க்கையில் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.

    பிரதமர், உள்துறை அமைச்சர், ஜனாதிபதி ஆகியோருக்கு நன்றி. புதுச்சேரிக்கு வந்தது மறக்க முடியாத நிகழ்வு. தமிழில் பதவிப்பிரமாணம் எடுக்க முடிந்தது.

    தமிழில் கவர்னர் உரையாற்றியுள்ளேன். கவர்னராக பல திட்டங்களை செயல்படுத்த முடிந்தது. 3 மாதம் பொறுப்பு என கூறினார்கள். ஆனால் 3 ஆண்டுகளாகி விட்டது. அரசு பள்ளி மாணவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. இதைவிட மக்களுக்கு அதிகமாக சேவை செய்ய வேண்டும் என்ற உள்ளுணர்வோடு செல்கிறேன். ராஜினாமா செய்தது நானே எடுத்த முடிவு. தெலுங்கானாவில் கவர்னர் மாளிகை ஊழியர்கள் அழுது கொண்டே வழியனுப்பினர். 300 பேர் அங்கு கவர்னருக்காக பணியாற்றுகின்றனர். அந்த வாழ்க்கையை விட்டு விட்டு பொது வாழ்க்கைக்கு வருவதற்கான அன்பை புரிந்து கொள்ள வேண்டும். சுயநலத்துக்காக எடுக்கப்பட்ட முடிவு அல்ல.


    கவர்னர் மாளிகை மக்கள் பவனமாகத்தான் இருந்தது. இன்னும் மக்களுக்கு நேரடி தொடர்பு கொள்ள முடியவில்லை என்ற ஆதங்கத்தில் ராஜினாமா செய்தேன்.

    நான் தமிழகத்தை சேர்ந்த தமிழ் மகள். என்னை அந்நிய மாநிலமாக பார்க்காதீர்கள் என கோரிக்கை வைத்தேன். நாளை பா.ஜனதா கட்சி அலுவலகம் செல்கிறேன். அவர்கள் முடிவை ஏற்பேன்.

    புதுச்சேரி மக்கள் என்னை புறக்கணிக்கவில்லை, அவர்கள் என் மீது அதிக அன்பு வைத்துள்ளனர். வரும் காலத்தில் புதுச்சேரி முதலமைச்சர், கவர்னரிடம் பல்வேறு ஆலோசனைகளை தொடர்ந்து கூறுவேன். பெண்கள் பாதுகாப்பாக என் குரல் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும்.

    எனது பலம் மக்கள் அன்பு, பாசம், என் மீது உள்ள நம்பிக்கை, கடவுள் மீது உள்ள நம்பிக்கை. எதிர் வினைகளை, விமர்சனங்களை தூசிபோல தட்டி விட்டு செல்வது என் பலம்.

    இந்த பலம் எனக்கு கைகொடுக்கும். எனது விருப்பம் மக்கள் தொடர்பு தான். நான் மிகுந்த மகிழ்ச்சியோடு இங்கிருந்து செல்கிறேன். மக்கள் பணியிலிருந்து என்னை பிரிக்க முடியாது.

    எனது மக்கள் பணி தொடரும். மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்பதே என் எண்ணம். அவரால்தான் இந்திய நாடு வளர்ச்சியடைந்து வருகிறது. வேண்டும் மோடி, மீண்டும் மோடி என்ற வாசகத்தை கொடுத்தது நான்தான்.

    அதுதான் என் முழு முதல் கவனமாக இருக்கும். மக்களுக்கான எனது கவர்னர் பணிக்கு எந்த உள்ளர்த்தமும் கற்பிக்க வேண்டாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து தமிழக அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் கருத்து உட்பட பல்வேறு கேள்விகளுக்கு சிரிப்பை மட்டுமே தமிழிசை பதிலாக அளித்தார்.

    கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்ட தமிழிசைக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து தலைமை செயலர் சரத்சவுகான், காவல் துறை தலைவர் ஸ்ரீநிவாஸ் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், கவர்னர் மாளிகை அதிகாரிகள், ஊழியர்கள் அவரை வழி அனுப்பி வைத்தனர்.

    • தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமை தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
    • பா.ம.க. இடம் பெற்றிருந்தால் அந்த கட்சிக்கான வாக்குகள் அ.தி.மு.க.வுக்கு கிடைத்திருக்கும்.

    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி, இந்தியா கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி என மும்முனைப்போட்டி உருவாகியுள்ளது.

    தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமை தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சிறிய கட்சிகள் ஆதரவு அளித்திருந்தாலும், குறிப்பிட்ட வாக்கு சதவீதம் உள்ள கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெறவில்லை.

    இந்த நிலையில் பா.ம.க. தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே புதுவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் உட்பட 23 பேர் கட்சித்தலைமையிடம் விருப்ப மனு தாக்கல் செய்தனர்.

    விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் சமீபத்தில் தொகுதிவாரியாக அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடந்தது. புதுவையில் 23 பேரும் நேர்காணலில் பங்கேற்றனர். ஆனால் இதில் அ.தி.மு.க. அவைத்தலைவர் அன்பானந்தம், அன்பழகன் உடையார், இளைஞர் பாசறை தலைவர் தமிழ்வேந்தன் ஆகியோரிடம் மட்டும் நேர்காணல் நடத்தப்பட்டது.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் 5 தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அ.தி.மு.க. பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியின்றி தனித்து விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து இடம்பெற்ற கட்சிகளுக்கு புதுவையில் வாக்கு சதவீதம் கிடையாது.

    பா.ம.க. இடம் பெற்றிருந்தால் அந்த கட்சிக்கான வாக்குகள் அ.தி.மு.க.வுக்கு கிடைத்திருக்கும். ஆனால் அதுவும் தற்போது கானல்நீராகிவிட்டது. பாராளுமன்ற தேர்தலில் பெரும் ஓட்டுகள், வரும் காலத்தில் கூட்டணி அமைந்தால் அ.தி.மு.க.வுக்கு கூடுதல் சீட் பெற உதவும்.

    இதனால் கணிசமான சதவீத வாக்குகளை பெற்றே தீர வேண்டும் என்ற நிலையில் புதுவை அ.தி.மு.க.வினர் உள்ளனர். 

    • அதிமுக தலைவர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தி, பாஜக வாக்கு பெற நினைப்பது கீழ்த்தரமானது.
    • தங்கள் தலைவர்கள் மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லை என இதன்மூலம் தெரிகிறது. கொஞ்சம் கூட பாஜகவுக்கு வெட்கமாக இல்லையா?

    சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் சந்தித்து பேசினார்.

    அப்போது, "அதிமுக தலைவர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தி, பாஜக வாக்கு பெற நினைப்பது கீழ்த்தரமானது. தங்கள் தலைவர்கள் மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லை என இதன்மூலம் தெரிகிறது. கொஞ்சம் கூட பாஜகவுக்கு வெட்கமாக இல்லையா?" என்று தெரிவித்தார்.

    மேலும், புதுச்சேரியில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா புகைப்படங்களை போட்டு வாக்கு சேகரித்ததற்கு புதுவை மாநில அதிமுக செயலாளர் ஏற்கனவே கண்டித்துள்ளார். அதிமுக தலைவர்களை முன்னிறுத்தி வாக்கு சேகரிக்க பாஜக வெட்கப்பட வேண்டும்

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதா முகங்களைக் காட்டி மக்களை ஏமாற்ற முயன்றால் அது நடக்காது. அந்த இரண்டு முகங்களுக்கு அதிமுக மட்டுமே சொந்தமானது. இப்படியொரு கீழ்த்தரமான அரசியலை பாஜக கையில் எடுத்துள்ளது.

    திருச்சியில் அண்ணாமலை பேசுவதைப் பார்த்து இருப்பீர்கள். ஏதோ இதுவரை இல்லாத வகையில் மிகப் பெரிய எழுச்சி மாநாட்டை நடத்துவதாக அண்ணாமலை கூறியிருந்தார். ஆனால், நான் டிவியில் பார்த்தேன் எல்லா சேர்களும் காலியாக இருந்தது. காலி சேர்களை பார்த்து அண்ணாமலை பேசி வருகிறார். அந்தக் கூட்டத்தில் யாருமே இல்லை. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எந்தவொரு ஆதரவும் இல்லை

    தமிழகத்தில் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் தான் போட்டி. பாஜகவுடன் கூட்டணி கிடையாது. பாஜக எங்களை மிரட்ட நாங்கள் ஒன்றும் குழந்தைகள் கிடையாது. லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்" என்று அவர் தெரிவித்தார்

    • பெரிய மாநிலங்களில் எம்.பி. சீட்கள் அதிகளவில் இருக்கும்.
    • புதுவை தொகுதியில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் போட்டியிடவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை ஆளும் கட்சியான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

    பா.ஜனதா வேட்பாளர் யார்? என்பதை கட்சித் தலைமை பரிசீலித்து வருகிறது. மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், புதுச்சேரி கவர்னர் தமிழிசை ஆகியோர் பெயர்கள் உலா வந்தது. இவர்களோடு புதுச்சேரியில் பணியாற்றும் வனத்துறை அதிகாரியின் பெயரும் அடிபட்டது. இவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

    இதேபோல எதிர்கூட்டணியான காங்கிரஸ், தி.மு.க.வில் புதுவை பாராளுமன்ற தொகுதி யாருக்கு என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. காங்கிரசில் ஏற்கனவே சிட்டிங் எம்.பி.யாக உள்ள வைத்திலிங்கம் போட்டியிடுவார் என்ற தகவல் வெளியாகி வருகிறது. முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியும், மேலிடத்தை அணுகி சீட் கேட்டு வருகிறார்.


    இதற்கிடையே தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் பொருளாளர் நாசே.ராமச்சந்திரன் பெயரும் உலா வருகிறது. இவர் புதுவையை அடுத்துள்ள தமிழக பகுதியான வழுதாவூர் அடுத்த கிராமத்தை சேர்ந்தவர். இவர் கல்லூரிகளை நடத்தி வருகிறார். இவர் தனக்கு புதுவை பாராளுமன்ற தொகுதியில் சீட் கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

    பெரிய மாநிலங்களில் எம்.பி. சீட்கள் அதிகளவில் இருக்கும். அங்கு வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்.

    ஆனால் புதுவையில் ஒரே ஒரு தொகுதிதான். 1971-ல் காங்கிரஸ் சார்பில் மோகன்குமாரமங்கலம் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு புதுவை தொகுதியில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் போட்டியிடவில்லை.

    ஆனால், 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அதிகளவில் தமிழகத்தை சேர்ந்த வி.ஐ.பி.க்கள் பெயர் அடிபடுகிறது.

    • நோயாளிகளின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
    • நோயாளிகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக புதுவை சுகாதாரத்துறை தகவல்.

    புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மக்கள் சளி, காய்ச்சலால் அவதியடைந்து வந்தனர். தற்போது புதுச்சேரியில் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.

    இதற்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனைகளில் அதிக அளவில் நோயாளிகள் வருகின்றனர். இதில் சிகிச்சைக்காக வந்த புதுச்சேரியை சேர்ந்த நோயாளிகளின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

    இதில் 9க்கும் மேற்பட்டோர் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக புதுவை சுகாதாரத்துறை தெரிவித்தது.

    இந்நிலையில், புதுக்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 58 வயதான கூலித் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    உயிரிழந்த கூலித் தொழிலாளி கோவிந்துக்கு பல்வேறு இணை நோய்கள் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார்.

    • கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோரும் கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
    • வாழ்க்கைப் பணி மற்றும் கடலோர விழிப்புணர்வை மேம்படுத்தும் தெரு நாடகம் நடத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, மாசுக்கட்டுப்பாடு குழும நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையத்துடன் இணைந்து கடற்கரையை தூய்மை படுத்தி, தரத்தை மேம்படுத்தவும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    புதுவை காந்தி திடலில் ஜி20 கடற்கரை தூய்மைப்படுத்தும் பணியை கவர்னர் தமிழிசை, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    அவர்களுடன் இணைந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோரும் கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

    நிகழ்ச்சியில் வாழ்க்கை நோக்கம் குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    தொடர்ந்து கவர்னர் தமிழிசை, மற்றும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் விழிப்புணர்வு நடைபயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர் .

    வாழ்க்கைப் பணி மற்றும் கடலோர விழிப்புணர்வை மேம்படுத்தும் தெரு நாடகம் நடத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை செயலாளர் முத்தம்மா, உள்ளாட்சி துறை, நகராட்சி மற்றும் இத்துறையின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    தேசிய சேவை திட்டம், தேசிய மாணவர் படை பள்ளி கல்லூரி மாணவர்கள், தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் தூய்மை நிகழ்ச்சி நடந்தது.

    • கடந்த வெள்ளிக்கிழமை முதலே புதுவையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.
    • பயணிகள் அதிக வருகையால் புதுவையில் சாதாரண விடுதி முதல் நட்சத்திர விடுதி வரை அறைகள் இல்லை.

    புதுச்சேரி:

    புதுவையில் வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சுற்றுலா பயணிகள் வருவது உண்டு.

    அதோடு, புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட தொடர் விடுமுறை, கோடை விடுமுறையிலும் புதுவையில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிவார்கள், இந்த ஆண்டு சனி, ஞாயிறு, சரஸ்வதி பூஜை, விஜயதசமி என விடுமுறை விடப்பட்டது.

    இதன் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை முதலே புதுவையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. அண்டை மாநிலம் மட்டுமல்லாது வட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வந்தனர்.

    இதனால், மணக்குள விநாயகர் கோவில், கடற்கரை சாலை, படகுத்துறை, பூங்காக்கள், அரவிந்தர் ஆசிரம்,பிரெஞ்சு குடியிருப்பு பகுதி என அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகளை காண முடிந்தது.

    பயணிகள் அதிக வருகையால் புதுவையில் சாதாரண விடுதி முதல் நட்சத்திர விடுதி வரை அறைகள் இல்லை. ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே விடுதி அறைகள் கிடைத்தது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்டுகள் அனைத்தும் நிரம்பியது.

    இதனால் பல சுற்றுலா பயணிகள் அறை கிடைக்காமல் தவித்தனர். புதுவை மாநிலத்தின் எல்லை பகுதிகளில் உள்ள விடுதிகளுக்கு படையெடுத்தனர். இன்னும் சிலர் புதுவையில் தங்க முடியாமல் அருகிலுள்ள தமிழக பகுதிகளான விழுப்புரம், கடலூரில் தங்கி புதுவைக்கு வந்தனர்.

    • புதுவை கந்தப்ப முதலியார் வீதியை சேர்ந்தவர் காந்திராஜ். பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்.
    • விஜய் மோசடி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை கந்தப்ப முதலியார் வீதியை சேர்ந்தவர் காந்திராஜ். பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். இவர் புதுவை பிரெஞ்சு துணை தூதரகத்தில் பரபரப்பு புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-

    புதுவை கந்தப்ப முதலியார் வீதியில் எனது மாமா செல்வமணி என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. பிரெஞ்சு குடியுரிமை பெற்ற அவர் தற்போது பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீட்டில் லாஸ்பேட்டையை சேர்ந்த விஜய் என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு வாடகைக்கு சென்றார். ஆனால் அவர் சரியாக வாடகை செலுத்தாததால் வீட்டை காலி செய்யும்படி கூறியும், அவர் காலி செய்யவில்லை.

    இதற்கிடையே விஜய் மோசடி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில்சிறையில் இருந்து வெளியே வந்த விஜய், ரவுடிகள் மூலம் அந்த வீட்டை அபகரித்துக் கொண்டார். மேலும் ரவுடிகளை வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்

    இது தொடர்பாக ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தும், அதனை போலீசார் ஏற்றுக் கொள்ளவில்லை .

    2 எம்.எல்.ஏ.க்கள் தூண்டுதலின்பேரில் போலீசார் புகாரை ஏற்க மறுக்கின்றனர். எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    எம்.எல்.ஏ.க்கள் உதவியுடன் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவரின் வீடு அபகரிக்கப்பட்டதாக எழுந்துள்ள புகாரால் புதுவை அரசியல் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • காலரா நோய் தடுப்பு முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளன.
    • பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம் என புதுச்சேரி சுகாதாரத்துறை தகவல்.

    காரைக்கால்:

    புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்தது.

    பாதிக்கப்பட்ட நோயாளிகள் மாவட்ட அரசு பொது மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அதில் சிலருக்கு காலரா தொற்று உறுதியாகியுள்ளது.இதன் எதிரொலியாக காரைக்கால் மாவட்டம் முழுவதும் பொது சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது.

    காரைக்காலில் காலரா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் இணை நோய் காரணமாக உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    வாந்தி, வயிற்றுப்போக்கால் காரைக்காலில் இதுவரை 1,584 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், காலரா தடுப்பு முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைய வேண்டாம் புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

    காலரா பரவல் எதிரொலியாக காரைக்காலில் நாளை முதல் 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் முகம்மது மன்சூர் உத்தரவிட்டுள்ளார். இந்த 3 நாட்கள் விடுமுறையின்போது பள்ளி, கல்லூரிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஓடும் பஸ்சில் ஜிப்மர் ஊழியரிடம் ஜேப்படி செய்த இளம்பெண் கையும் களவுமாக சிக்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை தட்டாஞ்சாவடி ஞானு தியாகு நகரை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மனைவி அஞ்சம்மாள் (வயது 26). இவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தினக்கூலி ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் ஜிப்மரில் பணி முடித்து அரசு டவுன் பஸ்சில் வீடு திரும்பி கொண்டு இருந்தார்.

    அப்போது பஸ்சில் அஞ்சம்மாள் அமர்ந்து இருந்த இருக்கை அருகே பயணம் செய்த ஒரு இளம்பெண் நைசாக அஞ்சம்மாள் வைத்திருந்த கைப்பையில் இருந்த மணிபர்சை எடுத்தார். இதனை பார்த்து விட்ட அஞ்சம்மாள் மற்ற பயணிகளின் உதவியோடு அந்த பெண்ணை கையும்- களவுமாக பிடித்து கோரிமேடு போலீசில் ஒப்படைத்தார்.

    இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன், உதவி சப்-இன்ஸ் பெக்டர் அன்பழகன் ஆகியோர் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜேப்படி செய்த பெண் உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்த சக்திவேல் என்பவரின் மனைவி தேன்மொழி (வயது 20) என்பது தெரியவந்தது.

    இதையொட்டி தேன்மொழியை கைது செய்தனர். போலீசார் இதுபோல அவர் வேறு யாரிடமாவது கைவரிசை காட்டினாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×