புதுவையில் நாளை மின்தடை

காலை 10 முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.சூரியகாந்தி நகர், எழில்நகர், செயின்ட் சீமோன்பேட், ஜெகராஜ் நகர்,
புதுவையில் நாளை மின்தடை
Published on

புதுச்சேரி:

புதுவை மின்துறை நகர செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவை வெங்கட்டாநகர் துணை மின் நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால் ஒயிட் டவுன் கிழக்கு பகுதி, முத்தியால்பேட்டை வடக்கு பகுதி, சாரம், காமராஜர் சாலை, அண்ணாசாலை, கிருஷ்ணா நகர் (பகுதி) மேற்கு பகுதி, கோவிந்தசாலை, மறைமலை அடிகள் சாலை தெற்கு பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 10 முதல் மதியம் 12 மணி வரை மின்தடை ஏற்படும்.

திருவள்ளுவர் நகர், முத்தியால்பேட்டை, சூரியகாந்தி நகர், எழில்நகர், செயின்ட் சீமோன்பேட், ஜெகராஜ் நகர், கருவடிகுப்பம் ரேடு, தெபெசன்பேட், விஸ்வநாதன் நகர், ரெயின்போ நகர் 9-வது குறுக்கு வீதி, ஆதிபராசக்தி கோவில் வீதி, சித்தன்குடி, நேரு நகர், ராஜீவ்காந்தி நகர், இளங்கோ நகர் (பகுதி), காமராஜ் சாலை (பகுதி), சாந்தி நகர், கோவிந்தசாலை (பகுதி), சாரம், ராஜா அய்யர் தோட்டம், சக்தி நகர், லெனின் வீதி(பகுதி), சத்தியா நகர் (பகுதி) ஆகிய பகுதிகளில் நாளை புதன்கிழமை காலை 10 முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com