என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சபாநாயகர் ஏம்பலம்"

    • தமிழகம்போல புதுவையில் பிரம்மாண்டமான தேசிய நெடுஞ்சாலைகள் இல்லை.
    • குறிப்பிட்ட இடத்தை நிர்ணயித்து அங்கு பொதுக்கூட்டம் நடத்தலாம்.

    புதுச்சேரி:

    புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் கரூரில் நடந்த த.வெ.க. தலைவர் விஜய் நடத்திய ரோடு ஷோவில் 41 பேர் பலியாகியுள்ளனர். இதுதொடர்பான வழக்குகள் ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில் புதுவையில் ரோடு ஷோ நடத்த த.வெ.க.வினர் அனுமதி கேட்டு வருகின்றனர்.

    தமிழகம்போல புதுவையில் பிரம்மாண்டமான தேசிய நெடுஞ்சாலைகள் இல்லை. குறுகிய சிறிய சாலைகள்தான் உள்ளது.

    அதோடு போக்குவரத்து நெரிசலும், நெருக்கடியும் அதிகம். இதனால் புதுவையில் ரோடு ஷோ நடத்துவதை விஜய் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக குறிப்பிட்ட இடத்தை நிர்ணயித்து அங்கு பொதுக்கூட்டம் நடத்தலாம். அதற்கு அரசு அனுமதி வழங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோரும் கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
    • வாழ்க்கைப் பணி மற்றும் கடலோர விழிப்புணர்வை மேம்படுத்தும் தெரு நாடகம் நடத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, மாசுக்கட்டுப்பாடு குழும நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையத்துடன் இணைந்து கடற்கரையை தூய்மை படுத்தி, தரத்தை மேம்படுத்தவும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    புதுவை காந்தி திடலில் ஜி20 கடற்கரை தூய்மைப்படுத்தும் பணியை கவர்னர் தமிழிசை, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    அவர்களுடன் இணைந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோரும் கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

    நிகழ்ச்சியில் வாழ்க்கை நோக்கம் குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    தொடர்ந்து கவர்னர் தமிழிசை, மற்றும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் விழிப்புணர்வு நடைபயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர் .

    வாழ்க்கைப் பணி மற்றும் கடலோர விழிப்புணர்வை மேம்படுத்தும் தெரு நாடகம் நடத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை செயலாளர் முத்தம்மா, உள்ளாட்சி துறை, நகராட்சி மற்றும் இத்துறையின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    தேசிய சேவை திட்டம், தேசிய மாணவர் படை பள்ளி கல்லூரி மாணவர்கள், தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் தூய்மை நிகழ்ச்சி நடந்தது.

    • வருகிற 31-ந்தேதி காலை 9.30 மணிக்கு புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது.
    • அன்றைய தினம் சபையில் கவர்னர் உரையாற்றுகிறார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

    பாராளுமன்ற தேர்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக அரசின் 5 மாத செலவினத்துக்கு ரூ.4 ஆயிரத்து 634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    தேர்தல் முடிந்தவுடன் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்காக மாநில திட்டக்குழு கூட்டம் கடந்த மாதம் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் கூடியது. கூட்டத்தில் ரூ.12 ஆயிரத்து 700 கோடிக்கு வரைவு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.

    புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் பெற வேண்டும். இதற்காக கோப்பு மத்திய உள்துறை, நிதி அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புதுச்சேரி அரசின் ரூ.12 ஆயிரத்து 700 கோடி பட்ஜெட்டுக்கு மத்திய உள்துறை, நிதித்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.

    இதைத்தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யும் கோப்புக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார். இதன்படி வருகிற 31-ந்தேதி (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. அன்றைய தினம் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் உரையாற்றுகிறார்.

    ஆகஸ்டு 2-ந் தேதி காலை 9.30 மணிக்கு நிதித் துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்த தகவலை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இன்று தெரிவித்தார்.

    15-வது சட்டசபையின் 5-வது கூட்டம் வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் சபையில் கவர்னர் உரையாற்றுகிறார். 1-ந் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது. மறுநாள் 2-ந் தேதி காலை 9.30 மணிக்கு நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். பட்ஜெட்கூட்ட தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும்.

    இவ்வாறு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தெரிவித்தார்.

    ×