search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தொடர் விடுமுறை- புதுவையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
    X

    தொடர் விடுமுறை- புதுவையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    • கடந்த வெள்ளிக்கிழமை முதலே புதுவையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.
    • பயணிகள் அதிக வருகையால் புதுவையில் சாதாரண விடுதி முதல் நட்சத்திர விடுதி வரை அறைகள் இல்லை.

    புதுச்சேரி:

    புதுவையில் வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சுற்றுலா பயணிகள் வருவது உண்டு.

    அதோடு, புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட தொடர் விடுமுறை, கோடை விடுமுறையிலும் புதுவையில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிவார்கள், இந்த ஆண்டு சனி, ஞாயிறு, சரஸ்வதி பூஜை, விஜயதசமி என விடுமுறை விடப்பட்டது.

    இதன் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை முதலே புதுவையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. அண்டை மாநிலம் மட்டுமல்லாது வட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வந்தனர்.

    இதனால், மணக்குள விநாயகர் கோவில், கடற்கரை சாலை, படகுத்துறை, பூங்காக்கள், அரவிந்தர் ஆசிரம்,பிரெஞ்சு குடியிருப்பு பகுதி என அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகளை காண முடிந்தது.

    பயணிகள் அதிக வருகையால் புதுவையில் சாதாரண விடுதி முதல் நட்சத்திர விடுதி வரை அறைகள் இல்லை. ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே விடுதி அறைகள் கிடைத்தது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்டுகள் அனைத்தும் நிரம்பியது.

    இதனால் பல சுற்றுலா பயணிகள் அறை கிடைக்காமல் தவித்தனர். புதுவை மாநிலத்தின் எல்லை பகுதிகளில் உள்ள விடுதிகளுக்கு படையெடுத்தனர். இன்னும் சிலர் புதுவையில் தங்க முடியாமல் அருகிலுள்ள தமிழக பகுதிகளான விழுப்புரம், கடலூரில் தங்கி புதுவைக்கு வந்தனர்.

    Next Story
    ×