search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய பாராளுமன்றம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாராளுமன்றம் என்பது அனைத்து தரப்பு மக்களுக்குமானதாகும்.
    • புதிய பாராளுமன்றம் திறக்கப்பட்ட தினத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் கருப்பு தினமாக அறிவிக்கிறது.

    சிதம்பரம்:

    சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    உலகிலேயே 2-வது பெரிய ரெயில்வே ஸ்தாபனமான இந்திய ரெயில்வே துறையில் ஓடிசா ரெயில் விபத்தில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சி.ஐ.ஜி. எனப்படும் தணிக்கை துறையின் அறிக்கையை துரிதமாக செயல்படுத்தியிருந்தால் இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும். எனவே இந்த விபத்திற்கு பிரதமர் மோடி முழுப்பொறுப்பேற்க வேண்டும். மத்திய ரெயில்வே மந்திரி பதவி விலக வேண்டும், இது தொடர்பாக விசாரணை நடத்திட தனி ஆணையம் அமைக்க வேண்டும்.

    கடந்த காலத்தில் ரெயில்வே அமைச்சராக இருந்த மம்தாவால் செயல்படுத்தப்பட்ட கலாச்சி என்ற பெயரிலான விபத்து தடுப்பு திட்டம் செயல்படுத்தியிருந்தாலே இந்த விபத்து நிகழாமல் இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. ரெயில் விபத்து தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.ஆயிரம் கோடி ஓதுக்கீடு செய்தும் இந்த விபதது நடந்துள்ளது உலக அரங்கில் இந்தியாவிற்கு தலை குனிவை ஏற்படுத்தியுள்ளது.

    ஸ்ரீராம், ஹரே ராம் என்று கோஷம் இடுபவர்களுக்கும், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு மட்டுமே பிரதமர் மோடி மந்திரி சபையில் இடம் தரப்படுகிறது, பாராளுமன்றம் என்பது அனைத்து தரப்பு மக்களுக்குமானதாகும். ஆனால், இங்கு ஒரு குறிப்பிட்ட மதத்தினரை அழைத்து திறப்பு விழா நடத்தியது தவறாகும். எனவே, புதிய பாராளுமன்றம் திறக்கப்பட்ட தினத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் கருப்பு தினமாக அறிவிக்கிறது.

    விழுப்புரம் மெல்பாதி கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சென்றவர்களை தாக்கிய சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருந்தபோதும் அவர்கள் கைது செய்யப்படவில்லை. கடந்த 1947-ம் ஆண்டு ஆலய நுழைவு தனிச்சட்டம் இயற்றப்பட்டது. இருந்தபோதும் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான இந்து சமய அறநிலைத்துறை தொடர்பான கோவில்களில் சாதிய மறுப்பு நிகழ்வு நடைபெறுவது வெட்கக்கேடானது.

    பா.ம.க. போன்று சாதி வெறுப்பு அரசியலில் ஈடுபடும் அரசியல் வாதிகளாலேயே இது போன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் தொடர்கதையாக உள்ளது. இதற்கு எதிராக எனது தலைமையில் வருகிற 9-ந்தேதி சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இதேபோல மதுரை திருமோகூர் கோவிலில் நடைபெற்ற கலவரத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். 30-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளும், கார், கொடி மரம், பெயர்ப்பலகைகள் கலவரத்தில் அடித்து நொறுக்கப்பட்டது. இது தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டதே தவிர யாரும் கைது செய்யப்படவில்லை. இதனை கண்டித்து எனது தலைமையில் 12-ந்தேதி மதுரையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    சிதம்பரத்தில் நடந்த குழந்தை திருமணம் கண்டிக்கத்தக்கதாகும். குழந்தைகள் திருமண வயதை எட்டிய பின்னரே அவர்களுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்பதே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைபாடாகும்.

    தமிழகம் முழுவதும் சிறையில் 10 ஆண்டு நிறைவு செய்த தண்டனை கைதிகளை கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு விடுதலை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாம் அனைவரும் இந்திய குடிமக்கள்.
    • இந்தியாவை மதவாத நாடாக மாற்ற நினைக்கிறார்கள்.

    திருவனந்தபுரம் :

    பாராளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவின்போது நடந்த நிகழ்வுகள் இந்தியாவை மதவாத நாடாக மாற்றும் முயற்சியின் வெளிப்பாடு என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நாம் அனைவரும் இந்திய குடிமக்கள். மதத்தின் அடிப்படையில் நமக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை. ஏனெனில் இந்தியாவில் மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படாது. ஆனால், நம் நாட்டில் குடியுரிமை திருத்த சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது அனைத்து கொள்கைகளையும் தூக்கி எறிந்து, ஒருவரின் மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்பட்டது என்பதை நிறுவுவதற்காகத்தான் திருத்தம் செய்யப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. அதை (குடியுரிமை திருத்த சட்டம்) இங்கு அமல்படுத்த மாட்டோம் என்று கேரளா உடனடியாக அறிவித்தது. நாங்கள் இன்னும் அதில் உறுதியாக நிற்கிறோம். மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதற்கு எதிராக கேரளா எப்போதும் உறுதியாக உள்ளது.

    இந்தியா மதச்சார்பற்ற குடியரசு என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மதச்சார்பின்மை என்பது நாம் பொதுவாக ஏற்றுக்கொண்டது. ஆனால் பாராளுமன்ற திறப்பு விழா என்ற பெயரில் நடத்தப்படும் செயல்பாடுகளை மக்கள் மத்திய அரசிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.

    இது முற்றிலும் மத அடிப்படையிலான விழா. இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருப்பதை ஆர்.எஸ்.எஸ். ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் இந்தியாவை மதவாத நாடாக மாற்ற நினைக்கிறார்கள். அதுதான் திறப்பு விழா அன்று பாராளுமன்றத்தின் உள்ளே நடந்த நிகழ்வுகளில் தெள்ளத்தெளிவாக தெரிந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் நாளே செங்கோல் வளைந்து விட்டது என்று கூறியுள்ளார்.
    • தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் கருப்புகொடி ஏற்றுகின்றனர். கள்ளச்சாராய மரணங்கள் நடந்த போது கருப்புக்கொடி ஏற்றவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா கோயிலின் 186-வது குரு பூஜை விழா நடைபெற்றுது. கவர்னர் தமிழிசை கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. தமிழின் செங்கோலுக்கு இவ்வளவு மரியாதை, அங்கீகாரம் கொடுத்த போது தமிழகத்தில் இருந்து யாரும் புறக்கணித்திருக்க கூடாது. இதில் எதிர்கட்சியினர் சிலர் அரசியல் செய்கின்றனர் என்றார்.

    தமிழகத்தில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது. தமிழுக்கு பெருமை சேர்க்கும் என நினைத்த நேரத்தில் வாக்கிங் ஸ்டிக்காக முடக்கியதை பெருமைப்படுத்தி இருக்கிறார்கள்.

    ஆனால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் நாளே செங்கோல் வளைந்து விட்டது என்று கூறியுள்ளார்.

    அவர்கள் இப்படி பேசுவது சரியானதல்ல எவ்வளவு மாற்றுக்கருத்து இருந்தாலும், தமிழர்களின் செங்கோலை அரசியலாக்கி இருக்க கூடாது. இப்படி ஒரு முயற்சியை நாம் மேற்கொள்ளவில்லை என்றால் வருங்காலத்தில் செங்கோலின் அருமை பெருமை மறைந்து போயிருக்கும்.

    எந்த மாநிலத்துக்கும் மொழிக்கும் கிடைக்காத மரியாதை நமக்கு கிடைத்திருக்கிறதது. புதிய பாராளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவில் காலையில் தமிழ் மட்டுமே ஒலித்தது. தமிழ் ஆதீனங்கள் மட்டும் தான் அங்கு இருந்தனர். இது தமிழுக்கு கிடைத்த மரியாதை.

    மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கூட தமிழ் மாநிலத்துக்கு கிடைத்த அங்கீகாரத்தை பார்த்து மகிழ்கின்றனர். ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் கருப்புகொடி ஏற்றுகின்றனர். கள்ளச்சாராய மரணங்கள் நடந்த போது கருப்புக்கொடி ஏற்றவில்லை.

    தமிழர்களின் அடையாளம் நிலை நாட்டும் போது கருப்புக்கொடி ஏற்றுகின்றனர். அப்படியானால் இவர்களின் அடையாளத்தை மக்கள் புரிந்து கொள்வார்கள். திருவள்ளுவர் செங்கோல் என்பது மக்களாட்சியின் ஒரு அடையாளம் என்று சொல்லியிருக்கிறார்.

    ஆகவே செங்கோல் பற்றி தவறாக சொல்பவர்கள் எல்லோரும் அதன் உண்மை தன்மையை புரியாதவர்களாக இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கவர்னர் மீதான ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று கூறியுள்ளாரே என நிருபர்கள் கேட்டதற்கு, நாராயணசாமி குற்றச்சாட்டுக்கு நான் சிரிக்கத்தான் செய்வேன் என்று கவர்னர் தமிழிசை பதிலளித்தார்.

    • கட்டிடத்தில் சர்தார் வல்லபாய் படேல், அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் மற்றும் ஏராளமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.
    • குமாவத் தனது வலைதள பதிவில், ‘புதிய இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் 2 பெரிய தூண்கள் என்னால் செதுக்கப்பட்டவை’. இந்த பெருமையை நான் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை என குறிப்பிட்டிருந்தார்.

    சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கும் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திராவின் ஒவ்வொரு பதிவும் ஏராளமான லைக்குகளை பெற்று வருகிறது.

    இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். கட்டிடத்தில் சர்தார் வல்லபாய் படேல், அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் மற்றும் ஏராளமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.

    இவற்றை செதுக்கிய சிற்பி மூர்த்திகர் நரேஷ் குமாவத்தை தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா வாழ்த்தி உள்ளார். குமாவத் தனது வலைதள பதிவில், 'புதிய இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் 2 பெரிய தூண்கள் என்னால் செதுக்கப்பட்டவை'. இந்த பெருமையை நான் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை என குறிப்பிட்டிருந்தார்.

    அவரது இந்த பதிவை ஆனந்த் மகிந்திரா மறு பதிவு செய்து, 'அற்புதமான பணி, அற்புதமான மரியாதை, வாழ்த்துக்கள்' என பதிவிட்டுள்ளார். 'கம்பீரமான கலை படைப்பு' என்ற தலைப்பில் பகிரப்பட்ட இந்த பதிவு ஆயிரக்கணக்கான பார்வைகளையும், கருத்துக்களையும் பெற்று வருகிறது.

    • இந்தியாவின் பன்முகத்தன்மை, கலாசாரம், கட்டிடக்கலை, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு என அனைத்து அம்சங்களுடன் அழகாக கம்பீரமாக காட்சியளிக்கிறது.
    • பாராளுமன்ற அறைகளுக்கு வெளியே உள்ள உட்புற பகுதிகள் நட்சத்திர ஓட்டல் லாபியை போல காணப்படுகிறது.

    புதுடெல்லி:

    புதிய பாராளுமன்ற கட்டிடம் ரூ.1250 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். பாராளுமன்றத்தில் சபாநாயகர் இருக்கை அருகே கண்ணாடி பேழைக்குள் சோழர் கால செங்கோலையும் நிறுவினார்.

    64,500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடம் இந்தியாவின் பன்முகத்தன்மை, கலாசாரம், கட்டிடக்கலை, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு என அனைத்து அம்சங்களுடன் அழகாக கம்பீரமாக காட்சியளிக்கிறது.

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் உள் அலங்காரத்துக்கு மட்டும் 200 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஓவியங்கள், சுவர் பேனல்கள், கல் சிற்பங்கள் மற்றும் உலோக சுவரோவியங்கள் உள்பட 5 ஆயிரம் வகை கலைப்பொருட்கள் பாராளுமன்றத்தை அலங்கரிக்கிறது.

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் உள்ள அரசியலமைப்பு மண்டபத்தில் இந்தியாவின் ஜனநாயக வளர்ச்சி கண்காட்சிகள் மூலம் சித்தரிக்கப்பட்டுள்ளன. மேலும் பூமியின் சுழற்சியை விளக்கும் பூகோள பந்தும் உள்ளது. இதன் முக்கோண கூரையில் இருந்து தொங்கும் பூகோள பந்து 'பிரபஞ்சத்துடன் இந்தியா' என்ற கருத்தை குறிக்கிறது. இந்த பூகோள பந்துக்கு பிரெஞ்சு இயற்பியலாளர் லியோன் போக்கால்ட் என்பவரின் பெயரிடப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் அட்சரேகையில் இந்த பூகோள பந்து ஒரு சுழற்சியை முடிக்க 49 மணி 59 நிமிடம் 18 வினாடிகள் ஆகிறது.

    இதன் மேற்கூரையில் இடம்பெற்றுள்ள 6 தனித்தனி பேனல்கள் 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி புதுடெல்லியில் இருந்த இரவு வானத்தின் தோற்றம் மற்றும் வானத்தின் அமைப்பு ஆகியவற்றின் கலை விளக்கத்தை சித்தரிக்கிறது.

    மக்களவை மற்றும் மாநிலங்களவையில் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட ஓட்டளிப்பு முறை, நன்கு வடிவமைக்கப்பட்ட ஒலியியல், அதிநவீன ஆடியோ விஷுவல் இடம்பெற்றுள்ளன.

    மகாத்மா காந்தி, சாணக்யா, கார்கி, சர்தார் வல்லபாய் படேல், அம்பேத்கர் ஆகியோரின் பித்தளை திருவுருவ சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கோனார்க்கில் உள்ள சூரியன் கோவிலில் இருந்து எடுத்துவரப்பட்ட தேர் சக்கரமும் உள்ளது.

    பொது நுழைவு வாயில்கள் 3 கேலரிகளுக்கு செல்லும் வகையில் உள்ளன. சங்கீத் கேலரி இந்தியாவின் நடனம், பாடல், மற்றும் இசை மரபுகளை வெளிப்படுத்துகிறது. ஸ்தப்தியா கேலரி இந்தியாவின் கட்டிடக்கலை பாரம்பரியத்தை உணர்த்துகிறது. ஷில்ப் கேலரி பல்வேறு மாநிலங்களின் தனித்துவமான கைவினை மரபுகளை காட்சிப்படுத்துகிறது.

    சங்கீத் கேலரிக்கு உஸ்தாத் அம்ஜத் அலிகான், பண்டிட் ஹரிபிரசாத், பிரசாத் சவுராசியா, உஸ்தாத் பிஸ்மில்லா கான், பண்டிட் ரவிசங்கர் உள்ளிட்ட இசைக்கலைஞர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தங்களது இசைக்கருவிகளை வழங்கியுள்ளனர்.

    இங்கு இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கலைப்பொருட்களின் அருகிலும் கியூஆர் கோடு பொறிக்கப்பட்டுள்ளது. இதை செல்போன் மூலம் ஸ்கேன் செய்தால் அந்த கலைப்பொருட்கள் குறித்த தகவல்கலை பார்வையாளர்கள் தெரிந்து கொள்ளலாம்.

    இந்தியாவின் பாரம்பரியம், கலாசாரத்தை போற்றும் விதமாக புதிய பாராளுமன்ற கட்டுமான பணிகளில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பொருட்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டு பொருத்தப்பட்டு உள்ளன.

    மக்களவை அறையின் உள்புறம் தேசிய பறவையான மயில் வடிவத்தில் காணப்படுகிறது. மாநிலங்களவை தேசிய மலரான தாமரை வடிவில் காணப்படுகிறது.

    பாராளுமன்றத்தில் உள்ள ஒரு சுவரோவியத்தில் பண்டைய இந்தியாவின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதில் கடந்த காலத்தின் முக்கிய ராஜ்ஜியங்கள் மற்றும் நகரங்கள் உள்ளன. இன்றைய பாகிஸ்தான் வரை இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்திய தொல்பொருள் ஆய்வு மற்றும் யுனெஸ்கோவின் கீழ் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களும் சுவரோவியமாக உள்ளன.

    பாராளுமன்ற அறைகளுக்கு வெளியே உள்ள உட்புற பகுதிகள் நட்சத்திர ஓட்டல் லாபியை போல காணப்படுகிறது. மத்திய முற்றம் திறந்த வெளியாக காணப்படுகிறது. அதன் மையத்தில் ஒரு ஆலமரம் உள்ளது. அதை சுற்றி எம்.பி.க்களின் ஓய்வறைகள் மற்றும் நூலகம் உள்ளது.

    பாராளுமன்ற மக்களவையில் 158 கம்பளங்களும், மாநிலங்களவையில் 156 கம்பளங்களும் விரிக்கப்பட்டுள்ளன. இரு அவைகளையும் சேர்த்து 35 ஆயிரம் சதுர அடி பரப்பளவை இந்த கம்பளங்கள் அலங்கரிக்கின்றன. இந்த கம்பளங்களை உத்தரபிரதேச மாநிலம் படோஹி மற்றும் மிர்சாபூர் ஆகிய 2 கிராமங்களை சேர்ந்த 900 கைவினைஞர்கள் சுமார் 18 மாதங்கள் உழைத்து உருவாக்கியுள்ளனர். இந்த கம்பளங்கள் ஒரு சதுர அங்குலத்துக்கு 120 முடிச்சுகள் போடப்பட்டுள்ளன. மொத்தம் 60 கோடி முடிச்சுகள் போடப்பட்டுள்ளன.

    மக்களவையில் விரிக்கப்பட்டுள்ள கம்பளங்கள் தேசிய பறவையான மயில் வடிவமைப்பிலும், மாநிலங்களைவையில் விரிக்கப்பட்டுள்ள கம்பளங்கள் தேசிய மலரான தாமரையை போன்றும் உள்ளன. இந்த கம்பளங்கள் மிகவும் நுட்பமாக வடிவமைக்கப்பட்டு 20 முதல் 25 பிம்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இவை இந்தியாவின் ஒப்பற்ற கலைத்திறனுக்கு சான்றாக விளங்குகின்றன.

    • அடுத்தகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை உடனடியாக தொடங்க அனைத்து மாநிலங்களுக்கும் டெல்லி தலைமை உத்தரவிட்டுள்ளது.
    • வீடுதோறும் மத்திய அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களையும் விநியோகிக்க இருக்கிறார்கள்.

    சென்னை:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்று 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. நேற்று பாராளுமன்ற புதிய கட்டிடத்தை திறந்து ஒரு வரலாற்று பதிவையும் செய்துள்ளது.

    அடுத்தகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை உடனடியாக தொடங்க அனைத்து மாநிலங்களுக்கும் டெல்லி தலைமை உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் இன்று சென்னை வருகிறார். மாநில தலைவர் அண்ணாமலையுடன் நிருபர்களை சந்தித்து ஒரு மாத பிரசார திட்டங்களை அறிவிக்கிறார்கள்.

    நாளை முதல் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் தொடங்குகிறது. இந்த சந்திப்பின்போது கடந்த 9 ஆண்டுகளில் மோடி அரசு நாட்டுக்கு செய்துள்ள சாதனைகள் பற்றி மக்களிடம் எடுத்து சொல்கிறார்கள்.

    அத்துடன் தமிழகத்துக்கு மத்திய அரசு மூலம் செய்யப்பட்டுள்ள திட்டங்கள் துறைவாரியாக நிதி ஒதுக்கீடுகள், செயல்படுத்திய திட்டங்கள் பற்றியும் விளக்குகிறார்கள்.

    பொதுக்கூட்டங்கள், தெருமுனை கூட்டங்கள் நடத்தி இவற்றை பிரசாரம் செய்வது, சமூக வலைத்தள ஆதரவாளர்களுடன் கலந்துரையாடுவது, தொழிலாளர்கள், அரசு திட்டங்களின் பயனாளிகளுடன் கலந்துரையாடல், முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு என்று அனைத்து தரப்பினரையும் சந்தித்து அரசின் சாதனைகளை விளக்க உள்ளார்கள்.

    இது தவிர வீடுதோறும் மத்திய அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களையும் விநியோகிக்க இருக்கிறார்கள். இதற்கான திட்டங்களை அனைத்து மாவட்டங்களிலும் தயார் செய்யும்படி கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

    சென்னை:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்று 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. நேற்று பாராளுமன்ற புதிய கட்டிடத்தை திறந்து ஒரு வரலாற்று பதிவையும் செய்துள்ளது.

    அடுத்தகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை உடனடியாக தொடங்க அனைத்து மாநிலங்களுக்கும் டெல்லி தலைமை உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் இன்று சென்னை வருகிறார். மாநில தலைவர் அண்ணாமலையுடன் நிருபர்களை சந்தித்து ஒரு மாத பிரசார திட்டங்களை அறிவிக்கிறார்கள்.

    நாளை முதல் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் தொடங்குகிறது. இந்த சந்திப்பின்போது கடந்த 9 ஆண்டுகளில் மோடி அரசு நாட்டுக்கு செய்துள்ள சாதனைகள் பற்றி மக்களிடம் எடுத்து சொல்கிறார்கள்.

    அத்துடன் தமிழகத்துக்கு மத்திய அரசு மூலம் செய்யப்பட்டுள்ள திட்டங்கள் துறைவாரியாக நிதி ஒதுக்கீடுகள், செயல்படுத்திய திட்டங்கள் பற்றியும் விளக்குகிறார்கள்.

    பொதுக்கூட்டங்கள், தெருமுனை கூட்டங்கள் நடத்தி இவற்றை பிரசாரம் செய்வது, சமூக வலைத்தள ஆதரவாளர்களுடன் கலந்துரையாடுவது, தொழிலாளர்கள், அரசு திட்டங்களின் பயனாளிகளுடன் கலந்துரையாடல், முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு என்று அனைத்து தரப்பினரையும் சந்தித்து அரசின் சாதனைகளை விளக்க உள்ளார்கள்.

    இது தவிர வீடுதோறும் மத்திய அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களையும் விநியோகிக்க இருக்கிறார்கள். இதற்கான திட்டங்களை அனைத்து மாவட்டங்களிலும் தயார் செய்யும்படி கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

    • உடலுக்கு உயிர் போன்றது நாட்டின் பாராளுமன்றம்.
    • இந்திய பாராளுமன்றம் ஜனநாயகத்தின் கோவில்.

    மும்பை :

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பாராட்டி திரை நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் கருத்து கூறி வருகின்றனர்.

    இந்தி நடிகர் ஷாருக்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    நமது அரசியல் அமைப்பை நிலைநிறுத்தும், மகத்தான நமது தேசத்தின் ஒவ்வொரு குடிமகனையும் பிரதிநிதித்துவப்படுத்தி, ஒருதாய் மக்களின் பன்முகத்தன்மையை பாதுகாப்பவர்களுக்கு என்ன ஒரு அற்புதமான வீடு!. மகிமையான இந்தியா என்ற பழைய கனவுடன் புதிய இந்தியாவுக்கான புதிய பாராளுமன்ற கட்டிடம். ஜெய் ஹிந்த். எனது பாராளுமன்றம், எனது பெருமை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மேலும் அவர் அதே பதிவில் ஆடியோ மூலம், "உடலுக்கு உயிர் போன்றது நாட்டின் பாராளுமன்றம். ஜனநாயகத்தின் ஆன்மா புதிய வீட்டில் வலுவாக இருக்கவும், சுதந்திரம், சகோதரத்துவம் மற்றும் சமத்துவத்தை பல யுகங்களுக்கு தொடர்ந்து வளர்க்கவும் எனது உருக்கமான பிரார்த்தனைகள்" என கூறியுள்ளார்.

    நடிகர் அக்ஷய் குமார் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்றத்தின் புகழ்பெற்ற புதிய கட்டிடத்தை பார்த்து பெருமை அடைகிறேன். இது என்றும் இந்தியாவின் வளர்ச்சி கதையில் சின்னமாக இருக்க வேண்டும். டெல்லியில் உள்ள பெரும்பாலான கட்டிடங்கள் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டு இருப்பதை கவனித்து இருக்கிறேன். இன்று இந்த புத்தம் புதிய பிரமாண்ட கட்டிடத்தை பார்க்கும் போது என் இருதயம் பெருமிதம் கொள்கிறது. இந்திய பாராளுமன்றம் ஜனநாயகத்தின் கோவில். இது புதிய இந்தியாவின் சின்னம். இந்தியா கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தில் மட்டும் முன்னோடியாக இல்லாமல், வளர்ச்சி மூலம் உலகத்திலும் முன்னோக்கி செல்கிறது. இந்த நாளை சாத்தியமாக்கிய பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள். இந்தியா வரும் ஆண்டுகளில் மேலும் வளர கடவுள் ஆசிர்வதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    புதிய பாராளுமன்ற கட்டிடம் குறித்து பெருமிதமாக கருத்து தெரிவித்த நடிகர் ஷாருக்கான், அக்ஷய் குமார் பிரதமர் மோடி பாராட்டி உள்ளார். அவர் டுவிட்டரில் 2 பேரின் கருத்தையும் பாராட்டி பதில் அளித்து உள்ளார்.

    • கடந்த 1962-ம் ஆண்டு நான் முதல் முறையாக கர்நாடக சட்டசபைக்குள் நுழைந்தேன்.
    • 1991-ம் ஆண்டு முதல் முறையாக பாராளுமன்றத்துக்குள் நுழைந்தேன்.

    பெங்களூரு :

    புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்ற முன்னாள் பிரதமர் தேவேகவுடா, அதுதொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கடந்த 1962-ம் ஆண்டு நான் முதல் முறையாக கர்நாடக சட்டசபைக்குள் நுழைந்தேன். 1991-ம் ஆண்டு முதல் முறையாக பாராளுமன்றத்துக்குள் நுழைந்தேன். அப்போது, பிரதமர் ஆவேன் என்றோ, இத்தனை காலம் பொது வாழ்க்கையில் நீடிப்பேன் என்றோ நினைத்ததே இல்லை.

    இன்னும் பெரிய ஆச்சரியம் என்னவென்றால், என் வாழ்நாளில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் அமர்வேன் என்று நினைத்து பார்க்கவில்லை. 91 வயதில் அதை சாதித்துள்ளேன்.

    இந்திய ஜனநாயக வரலாற்றின் மாபெரும் தருணத்தை பார்த்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பாராளுமன்றமானது நாட்டுக்கு வழிகாட்டும் வெளிச்சம்.
    • புதிய பாராளுமன்ற கட்டிடம் நமது ஜனநாயக பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்.

    புதுடெல்லி :

    டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த விழாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்தியில், 'புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா அனைத்து இந்தியர்களுக்கும் பெருமை மற்றும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இது இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும்' என கூறியிருந்தார்.

    பாராளுமன்றமானது நாட்டுக்கு வழிகாட்டும் வெளிச்சம் என்று குறிப்பிட்டு இருந்த திரவுபதி முர்மு, புதிய பாராளுமன்ற கட்டிடம் நமது ஜனநாயக பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல் என்றும் பெருமிதம் வெளியிட்டு இருந்தார்.

    ஜனாதிபதியின் இந்த வாழ்த்துச்செய்தியை திறப்பு விழாவின்போது மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் வாசித்தார்.

    • பாராளுமன்றத்தை நோக்கி மல்யுத்த வீரர்கள் பேரணி நடத்த முயன்றனர்.
    • மல்யுத்த வீராங்கனைகள் கைது செய்யப்பட்டதை சுட்டிக் காட்டி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி டுவீட்

    பாலியல் புகாரில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றதை ஒட்டி போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

    ஆனால், தடையை மீறி பாராளுமன்றத்தை நோக்கி மல்யுத்த வீரர்கள் பேரணி நடத்தினர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், மல்யுத்த வீராங்கனைகள் கைது செய்யப்பட்டதை சுட்டிக் காட்டி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி டுவீட் செய்துள்ளார்.

    இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மல்யுத்த வீரர்களின் மார்பில் இருக்கும் பதக்கங்கள் நம் நாட்டின் பெருமை. அந்த பதக்கங்களாலும், விளையாட்டு வீரர்களின் கடின உழைப்பாலும் நாட்டின் கவுரவம் அதிகரிக்கிறது.

    பாஜக அரசின் ஆணவம் அதிகமாகிவிட்டதால், நமது பெண் வீராங்கனைகளின் குரலை அரசு இரக்கமின்றி மிதித்து வருகிறது.

    இது முற்றிலும் தவறு. அரசின் திமிரையும், அநீதியையும் முழு நாடும் பார்த்துக் கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • 4 அடுக்கு மாடிகளை கொண்ட புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் மக்களவை , மாநிலங்களவை கூடுவதற்காக தனித்தனி அரங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
    • டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்டி உள்ளது.

    டெல்லியில் உள்ள பழைமை வாய்ந்த பாராளுமன்ற கட்டிடத்திற்கு பதிலாக அதன் அருகிலேயே 64 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமான புதிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. ரூ.1250 கோடி மொத்த மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய பாராளுமன்றத்தை பிரதமர் மோடி நேற்று காலை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

    4 அடுக்கு மாடிகளை கொண்ட புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் மக்களவை , மாநிலங்களவை கூடுவதற்காக தனித்தனி அரங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    2 மிகப்பெரிய ஆலோசனை கூடங்களும் கட்டப்பட்டுள்ளன. மக்களவையில் 888 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 384 எம்.பி.க்களும் அமரும் வகையில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    உலகின் மிகப்பெரிய பாராளுமன்றங்களில் ஒன்றாக இந்த பாராளுமன்றம் முக்கோண வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இந்திய கட்டிட கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த எச்.பி.சி. நிறுவனத்தை சேர்ந்த பிமல் படேல் என்பவர் இந்த பாராளுமன்ற கட்டிடத்துக்கான வடிவமைப்பை செய்து கொடுத்து உள்ளார். டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்டி உள்ளது.

    இதில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 900 கைவினைஞர்களால் 10 லட்சம் நேர உழைப்பில் நெய்யப்பட்ட பிரீமியம் கை முடிச்சுக் கம்பளங்கள் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் உள்ள மக்களவை மற்றும் மாநிலங்களவையின் தளங்களை அலங்கரிக்கின்றன. மக்களவை மற்றும் மாநிலங்களவைகளில் கம்பளங்களில் முறையே தேசிய பறவையான மயில் மற்றும் தேசிய மலர் தாமரையின் நேர்த்தியான உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஒபீட்டீ கார்பெட்ஸ் என்கிற தரைவிரிப்பு தயாரிக்கும் நிறுவனத்தின் தலைவர் ருத்ரா சட்டர்ஜி கூறியதாவது:-

    நெசவாளர்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவைக்காக தலா 150க்கும் மேற்பட்ட தரை விரிப்புகளை வடிவமைத்துள்ளனர். 35000 சதுர அடி பரப்பளவில் உள்ள ஒவ்வொரு அவையின் கட்டிடக்கலைக்கேற்ப ஒத்திசைக்க அரை வட்ட வடிவில் அவற்றை ஒரே கம்பளமாக தைக்கப்பட்டது.

    இதேபோல், நெசவாளர்கள் ஒவ்வொன்றும் 17,500 சதுர அடி வரையிலான அரங்குகளுக்கான தரைவிரிப்புகளை வடிவமைக்க வேண்டியிருந்தது. இது வடிவமைப்புக் குழுவிற்கு சவாலாக இருந்தது. ஏனெனில், அவர்கள் கம்பளத்தை தனித்தனி துண்டுகளாக வடிவமைத்து, அவற்றைத் தடையின்றி ஒன்றாக இணைக்க வேண்டியிருந்தது. நெசவாளர்கள் இணக்கமாக ஒன்றிணைந்து ஒரு ஒருங்கிணைந்த கம்பளத்தை உருவாக்கினர். இது அதிக அடிவாரத்தைத் தக்கவைக்க முடியும்.

    வேலைத்திறனின் நுணுக்கங்களுக்காக ஒரு சதுர அங்குலத்திற்கு 120 முடிச்சுகளுநடன் தரைவிரிப்புகள் நெய்யப்பட்டது. இதுபோன்று, மொத்தம் 600 மில்லியன் முடிச்சுகள் உள்ளன.

    ராஜ்யசபாவில் பயன்படுத்தப்பட்டுள்ள வண்ணங்கள் முதன்மையாக கோகும் சிவப்பு நிறத்தில் இருந்தும், லோக்சபாவின் தோற்றம் மயிலின் நீலக்கத்தாழை பச்சை நிறத்தை அடிப்படையாகக் கொண்டு ஈர்க்கப்பட்டது.

    நாங்கள் திட்டத்தை 2020ம் ஆண்டில் கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் தொடங்கினோம். செப்டம்பர் 2021ம் ஆண்டில் தொடங்கப்பட்ட நெசவு செயல்முறை மே, 2022ம் ஆண்டில் முடிந்தது. மேலும் இரு அவைகளிலும் நிறுவ நவம்பர் 2022ல் தொடங்கியது. ஒவ்வொரு கம்பளத்தையும் அதிக அடர்த்தியுடன் ஒரு சதுர அங்குலத்திற்கு 120 முடிச்சுகள் உருவாக்குவதற்கு ஏறக்குறைய ஏழு மாதங்கள் எடுத்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாராளுமன்றம் அருகே மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நோக்கி அமைதி பேரணி நடத்த திட்டம்.
    • பேரணியின் முடிவில் பாராளுமன்றம் முன்பு மகிளா மகாபஞ்சாயத்து நடத்த முடிவு செய்தனர்.

    பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கணைகள் போராடி வருகின்றனர்.

    பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை. அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

    இன்று பாராளுமன்ற கட்டடம் திறப்பு விழாவையொட்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாராளுமன்றம்  நோக்கி அமைதி பேரணி நடத்த திட்டமிட்டனர்.

    பேரணியின் முடிவில் பாராளுமன்றம் முன்பு மகிளா மகாபஞ்சாயத்து நடத்த முடிவு செய்தனர்.

    அதன்படி, மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி பேரணியாக சென்றனர்.

    அப்போது, தடையை மீறி சென்ற அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் காங்கிரஸ் உள்பட முக்கிய கட்சிகள் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

    ×