என் மலர்
தமிழ்நாடு

பாராளுமன்ற புதிய கட்டிடம் திறப்பு: எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள்- ஜி.கே.வாசன்
- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
- பல கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் புதிய சட்டசபை கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளன.
பொள்ளாச்சி:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
தொலைநோக்கு பார்வையுடன் அதிக வசதிகளுடன் கூடிய புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பாரதிய ஜனதா அரசு கட்டியுள்ளது. இந்த விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதாக தெரிவிக்கின்றன. இதனை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
பல கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் புதிய சட்டசபை கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளன. அப்போதெல்லாம் கவர்னர்களை அழைத்தது கிடையாது. பெரும்பான்மையுடன் இருக்கும் பிரதமர் பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைப்பதில் எந்த தவறும் இல்லை. தமிழக எம்.பி.க்கள் பாராளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை என்ற அறிக்கை வருத்தமளிக்கிறது.
வருமான வரித்துறை சோதனை என்பது பொதுவானது. வருமான வரித்துறை அதிகாரிகள் வாகனங்கள் மீதும், கார்கள் மீதும் தாக்குதல் நடத்துவது சட்டத்துக்கு புறம்பானது.
இவ்வாறு அவர் கூறினார்.