என் மலர்
நீங்கள் தேடியது "நடிகர் ரஜினகாந்த்"
- கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது.
- சிக்கிடு பாடலுக்கான ப்ரோமோஷன் வீடியோக்களை படக்குழு வெளியிட்டு வந்தது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. படத்தின் டப்பிங் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது.
படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் மற்றும் "சிக்கிடு" வைப் பாடலின் ப்ரோமோ வீடியோ என அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதற்கிடையே சிக்கிடு பாடலுக்கான ப்ரோமோஷன் வீடியோக்களை படக்குழு வெளியிட்டு வந்தது. பொதுமக்கள் பலரும் கூலி என குறிக்கும் பேட்சை கையில் அணிந்தபடி இருக்கும் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இத்தகைய ப்ரோமோஷன் வீடியோக்கள் சிக்கிடு பாடலின் எதிர்பார்ப்பை எகிறவைத்தன.
இந்நிலையில் கூலி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான "சிக்கிடு" பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.
- அரசியல் கட்சித்தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, சீமான், பிரேமலதா உள்ளிட்டோரும ஏற்கனவே வாழ்த்து தெரிவித்தனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அரசியல் கட்சித்தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமிக்கு தொலைபேசி மூலம் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்துக் கூறினார்.
நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, சீமான், பிரேமலதா உள்ளிட்டோரும ஏற்கனவே வாழ்த்து தெரிவித்த நிலையில், ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
- புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்.
- தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
இந்தியர்களுக்கு கடந்த 1947-ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தபோது அதிகார பரிமாற்றம் நடைபெற்றதை குறிக்கும் வகையில் பிரதமர் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது.
புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். சபாநாயகரின் இருக்கைக்கு அருகே இந்த செங்கோல் நிறுவப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவுவது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தமிழன்டா என்ற ஹேஷ்டேக் உடன் டுவீட் செய்துள்ளார்.
இதுகுறித்து ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இந்திய நாட்டின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் - செங்கோல்.
#தமிழன்டா
தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.






