search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சபாநாயகர்"

    • காங்கிரசில் இருந்து விலகிய விஜயதாரணியின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
    • விளவங்கோடு சட்டசபை தொகுதி காலியாக இருப்பது குறித்து முறைப்படி அறிவிக்கப்படும்.

    நெல்லை:

    கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த நிலையில் நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

    ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் அப்பாவுக்கு அவர் அனுப்பி வைத்ததுடன், இ-மெயில் மூலமும் கடிதத்தை அனுப்பி வைத்தார். அதுமட்டுமின்றி தனது எக்ஸ் வலைதள பக்கத்திலும், பேஸ்புக் பக்கத்திலும் ராஜினாமா கடிதத்தை வெளியிட்டு உள்ளார்.

    இதற்கிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சபாநாயகர் அப்பாவுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வான விஜயதாரணி எங்கள் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து உள்ளதால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அவரது எம்.எல்.ஏ. பதவியை உடனடியாக பறித்து தகுதி நீக்கம் செய்து அறிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.

    இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:

    காங்கிரசில் இருந்து விலகிய விஜயதாரணியின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ராஜினாமா கடிதம் முறைப்படி இருந்ததால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

    இணைய வழியில் கடிதம் அனுப்பியதோடு தொலைபேசியிலும் விஜயதாரணி என்னிடம் பேசினார்.

    விளவங்கோடு சட்டசபை தொகுதி காலியாக இருப்பது குறித்து முறைப்படி அறிவிக்கப்படும் என்று கூறினார்.

    • ஒரு எம்.எல்.ஏ. என்ற முறையிலும், பா.ஜனதா தேசிய மகளிர் பிரிவு தலைவி என்ற முறையிலும் இதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
    • இந்த தரச்சான்றை பெற்றதன் மூலம், எங்களது பணி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

    சென்னை:

    வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான எனது எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று கிடைத்துள்ளது. தமிழகத்தில் இதுபோன்ற ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை புரிந்துள்ள முதல் எம்.எல்.ஏ. நான்தான். ஒரு எம்.எல்.ஏ. என்ற முறையிலும், பா.ஜனதா தேசிய மகளிர் பிரிவு தலைவி என்ற முறையிலும் இதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    2011-ம் ஆண்டு குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோது பிரதமர் மோடியின் அலுவலகத்திற்கும் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று கிடைத்தது.

    இந்த தரச்சான்றை பெற்றதன் மூலம், எங்களது பணி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த எம்.எல்.ஏ. அலுவலகம், மக்களுக்கு அளித்து வரும் சேவை மற்றும் அதன் செயல்பாட்டில் உள்ள சர்வதேச தரத்தை, இந்த சான்றளிப்பு அடிக்கோடிட்டு காட்டுகிறது. இந்த சாதனையை சபாநாயகர் அப்பாவுவிடம் காட்டி மகிழ்ச்சி அடைந்தேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • எடப்பாடி பழனிசாமி அருகில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் பின் வரிசையில் எடப்பாடி பழனிசாமியின் பின்னால் தள்ளப்பட்டார்.
    • ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. 4-வது வரிசைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் இருக்கை அருகே ஓ.பன்னீர் செல்வத்தின் இருக்கையும் இருந்தது.

    இருவரும் அ.தி.மு.க.வில் ஒன்றாக இருந்த வரை இருக்கை பிரச்சனை எழவில்லை. கட்சியில் இருந்து நீக்கப்பட்டதும் புதிய எதிர்கட்சி துணைத்தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தேர்வு செய்யப்பட்டார்.

    இதையடுத்து ஓ.பன்னீர் செல்வத்தின் இருக்கையை மாற்றி விட்டு அந்த இடத்தில் ஆர்.பி. உதயகுமாரை அமர வைக்க கோரி எடப்பாடி பழனிச்சாமி சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதம் கொடுத்தார். இது தொடர்பாக பலமுறை வலியுறுத்தவும் செய்தார். ஆனாலும் சபாநாயகர் எந்த முடிவும் எடுக்காமல் நிலுவையில் வைத்திருந்தார்.

    இதற்கிடையில் பா.ஜனதாவை எதிர்த்து தி.மு.க. கடுமையான அரசியல் செய்து வரும் நிலையில் பா.ஜனதாவுக்கு ஆதரவாகவும், அந்த கூட்டணியில் இருப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

    இந்த சூழ்நிலையை சாதுர்யமாக கையில் எடுத்த எடப்பாடி பழனிசாமி சட்டசபை விவாதத்தின்போது சபாநாயகர் முறையாக முடிவெடுப்பதில்லை. நான் 4 முறை எதிர்கட்சி துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக கடிதம் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

    மு.க.ஸ்டாலினும் உடனே குறுக்கிட்டு எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கையை சபாநாயகர் பரிசீலிக்க வேண்டும் என்றார்.

    அவர் சொன்ன மறுநாளே இருக்கை மாற்றம் அதிரடியாக நடந்தது. அதாவது எடப்பாடி பழனிசாமி அருகில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் பின் வரிசையில் எடப்பாடி பழனிசாமியின் பின்னால் தள்ளப்பட்டார்.

    அந்த வரிசையில் இருந்த ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. 4-வது வரிசைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து அந்த வரிசையில் இருந்த மற்றவர்கள் ஒவ்வொரு இருக்கை நகர்ந்து அமர்ந்தனர். கடைசியில் முன்னாள் சபாநாயகர் தனபால் இருந்த 207-வது இருக்கை ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்டது. ஓ.பன்னீர் செல்வம் இதுவரை அமர்ந்திருந்த இடத்தில் ஆர்.பி.உதயகுமார் அமர வைக்கப்பட்டார்.

    • கவர்னருக்கும் கோட்சேவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
    • சபாநாயகருக்கு கட்சி சார்ந்து பேச உரிமையில்லை.

    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை, பழைய வைத்தியநாதன் சாலையில் பா.ஜனதா கட்சியின் வடசென்னை பாராளுமன்ற தேர்தல் அலுவலகத்தை மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னையை பொறுத்தவரை பாதயாத்திரையை வேறுவிதமாக நடத்த இருக் கிறோம். செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை வைத்து அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது. சட்டசபையில் தமிழ்தாய் வாழ்த்தை முழுமையாக வாசிக்க வேண்டும்.

    கருணாநிதியால் வெட்டப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தை இசைக்கக் கூடாது. ஜி.எஸ்.டி.கொண்டு வரப்பட்டதற்கு பின்பு தான் தமிழகத்தின் வரி வளர்ச்சி அதிகரிக்கப்பட்டுள்ளது.

    சபாநாயகர் அப்பாவு தி.மு.க. உறுப்பினர் போல் நடந்து கொண்டார். நாதி ராம் கோட்சேவுக்கும் அப்பாவுக்கும் தொடர்பு இருக்கலாம். கவர்னருக்கும் கோட்சேவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சபாநாயகருக்கு கட்சி சார்ந்து பேச உரிமையில்லை.


    ஆளுநருக்காக எழுதி கொடுத்த உரையில் 10 பொய்களை சுட்டிக்காட்டி உள்ளோம். சபாநாயகர் அப்பாவு தி.மு.க.வை விட மோசமாக உள்ளார்.

    சென்னை வெள்ளத்தில் மக்கள் தத்தளிக்கவில்லை என்று கூறி தி.மு.க.வை கவர்னர் பாராட்ட வேண்டும் என்றால் எப்படி பாராட்டுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில துணைத் தலைவரும் வடசென்னை பொறுப்பாளருமான பால்கனகராஜ், பாராளுமன்ற இணை அமைப்பாளர் பிரசாத், பாராளுமன்ற பொறுப்பாளர் பெப்சி சிவா, மாவட்டத் தலைவர் கிருஷ்ணகுமார், கபிலன், ஊடகப்பிரிவு மாநில செயலாளர் மற்றும் பாராளுமன்ற பிரிவு பொறுப்பாளர் சி.பி.நவீன், ஆர்.கே.நகர் சட்டமன்ற அமைப்பாளர் எஸ்.ஆர்.செந்தில், பாஸ்கோ மாணிக்கம், சிவகுமார், திருவொற்றியூர் சட்டமன்ற அமைப்பாளர் ஜெய் கணேஷ், திருமுருகன், ராயபுரம் சட்டமன்ற அமைப்பாளர் வன்னிய ராஜன், இணை அமைப்பாளர் விஜயகுமார், பொருளாளர் சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிறுவாணி அணையில் இருந்து 73 எம்.எல்.டி. தண்ணீர் வரவேண்டும் ஆனால் 38 எம்.எல்.டி. தண்ணீர் மட்டுமே வருவதாகவும் கூறினார்.
    • பேருந்து நிலைய கட்டுமான பணிகள் முழுமையாக முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    சென்னை:

    சிறுவாணி அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

    சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், கோவை மாநகர மக்களுக்கு தண்ணீர் பிரச்சினை இருப்பதாகவும் சிறுவாணி அணையில் இருந்து 73 எம்.எல்.டி. தண்ணீர் வரவேண்டும் ஆனால் 38 எம்.எல்.டி. தண்ணீர் மட்டுமே வருவதாகவும் கூறினார்.

    இதன் காரணமாக 25 நாட்களுக்கு ஒரு முறை தான் கோவை மாநகர மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதாக தெரிவித்த அவர், கேரள அரசுடன் கலந்தாலோசித்து தண்ணீர் கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

    அதேபோல், கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கக்கூடிய வகையில் வெள்ளலூரில் 62.61 ஏக்க நிலப்பரப்பில் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 50 சதவீதம் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பணிகளை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா? எனவும் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சிறுவாணி அணையில் இருந்து குறைவாகவே கேரளா அரசு தண்ணீர் தருவதாகவும், இது குறித்து பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்துள்ளதாகவும், சிறுவாணி அணையில் இருந்து உரிய நீரை பெற அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதோடு, கோவை மாநகர மக்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

    மேலும், வெள்ளலூர் பேருந்து நிலைய கட்டுமான பணிக்காக இணைப்பு சாலைகளை அகலப்படுத்த வேண்டிய தேவை உள்ளதால், அந்தப் பணிகளை முடித்த பிறகு இந்த ஆண்டிலேயே பேருந்து நிலைய கட்டுமான பணிகள் முழுமையாக முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இருக்கைக்கு அருகில் துணைத்தலைவருக்கு இருக்கை ஒதுக்குவது மரபாகும்.
    • எதிர்க்கட்சித் துணைத்தலைவர் உதயகுமாருக்கு எனது அருகே முன் வரிசையில் இருக்கை ஒதுக்கி தர வேண்டும்.

    சென்னை:

    சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில், எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. சார்பில் 4 முறை உங்களிடம் (சபாநாயகர்) சந்தித்து கடிதம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பலமுறை நேரிலும் வலியுறுத்தியுள்ளோம்.

    சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இருக்கைக்கு அருகில் துணை தலைவருக்கு இருக்கை ஒதுக்குவது மரபாகும். எனவே எதிர்க்கட்சித் துணைத்தலைவர் உதயகுமாருக்கு எனது அருகே முன் வரிசையில் இருக்கை ஒதுக்கி தர வேண்டும்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறும்போது, எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் உங்களிடம் (சபாநாயகர்) தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார். அதற்கு நீங்களும் பதில் சொல்லி வருகிறீர்கள்.

    முன்னாள் சபாநாயகர் தனபாலு தீர்ப்பை சுட்டிக்காட்டி நீங்களும் பதில் கூறி உள்ளீர்கள். எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கையை மறுபரிசீலனை செய்து ஆவண செய்ய வேண்டும் என்று சபாநாயகரிடம் வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.

    அதைத்தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கை மறுபரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    • தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி, ஒடிசா முன்னாள் கவர்னர் ராஜேந்திரன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
    • 2011ம் ஆண்டு சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவராக சிறப்பாக செயல்பட்டவர் விஜயகாந்த் என்று புகழாரம் சூட்டினார்.

    சென்னை:

    தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் 2வது நாள் அமர்வு இன்று தொடங்கியது.

    மறைந்த உறுப்பினர்கள் வடிவேலு, தெய்வநாயகம், தங்கவேல், துரை ராமசாமி, கு.க.செல்வம், எஸ். ராஜசேகரன் உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

    தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி, ஒடிசா முன்னாள் கவர்னர் ராஜேந்திரன், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் வெங்கட்ராமன், புகழ்பெற்ற கண் மருத்துவர் பத்ரிநாத் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

    சட்டசபையில் தே.மு.தி.க. தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்பட்டது.

    விஜயகாந்த் குறித்து சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு கூறுகையில், கேப்டன் என்று புகழ் பெற்றவர், பத்ம பூஷண் விருதுக்கு தேர்வு பெற்றவர் விஜயகாந்த்.

    2006 முதல் 2016 வரை சட்டசபை உறுப்பினராக இருந்தவர் விஜயகாந்த். 2011ம் ஆண்டு சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவராக சிறப்பாக செயல்பட்டவர் விஜயகாந்த் என்று புகழாரம் சூட்டினார்.

    தொடர்ந்து விஜயகாந்த் மறைவுக்கு சட்டசபை உறுப்பினர்கள் மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.

    இதையடுத்து 2வது நாளாக இன்று கூடிய சட்டசபையில் கேள்வி நேரம் தொடங்கியது.

    • பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து நிதிஷ் குமார் ஆட்சி அமைத்தார்
    • 125 பேர் ஆதரவும், 112 பேர் எதிர்ப்பும் தெரிவித்ததால் தீர்மானம் நிறைவேறியது

    பீகார் சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) கட்சியுடன் சேர்ந்து ஆட்சியமைத்து இருந்த நிதிஷ் குமார், அக்கூட்டணியிலிருந்து திடீரென விலகி, சில தினங்களுக்கு முன் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து அவர்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார்.

    இன்று நிதிஷ் குமாரின் ஆட்சி மீதான நம்பிக்கை குறித்து முடிவாக உள்ள நிலையில், முன்னதாக சபாநாயகர் அவத் பீகாரி சவுத்ரி (Awadh Bihari Choudhary) மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    இத்தீர்மானத்திற்கு ஆதரவாக 125 உறுப்பினர்களும், எதிர்த்து 112 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

    இதனையடுத்து தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

    இதை தொடர்ந்து ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த சவுத்ரி பதவி விலகினார்.

    • மத்திய பிரதேசம் மாநிலத்தில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றது.
    • முதல் மந்திரியாக மோகன் யாதவ் பதவி ஏற்றார்.

    போபால்:

    தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் கடந்த மாதம் 7-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

    இதன் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெற்றது. இதில் தெலுங்கானாவில் காங்கிரஸ், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பா.ஜ.க.வும் வெற்றி பெற்றது.

    இதற்கிடையே, மத்திய பிரதேச மாநில முதல் மந்திரியாக மோகன் யாதவ் தேர்வானார். தெற்கு உஜ்ஜைன் தொகுதி எம்.எல்.ஏ.வான மோகன் யாதவ் முதல் மந்திரியாக பதவி ஏற்றார்.

    இந்நிலையில், மத்திய பிரதேசம் சட்டசபையில் சபாநாயகராக முன்னாள் மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு முதல் மந்திரி மோகன் யாதவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    • சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய மந்திரி பிரகலாத் ஜோதி ஆகியோரின் வேண்டுகோளை நிராகரித்து அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
    • சில உறுப்பினர்கள் கைகளில் பதாகைகள் வைத்து இருந்தனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 4-ந்தேதி தொடங்கி வருகிற 22-ந்தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடைபெறுகிறது.

    இதற்கிடையே பாராளுமன்ற பாதுகாப்பில் மிகப் பெரிய குளறுபடி ஏற்பட்டது. 2 வாலிபர்கள் அத்துமீறி நுழைந்து வண்ணப் புகையை உமிழும் குப்பிகளை வீசியதால் பெரும் பதற்றமும், பீதியும் ஏற்பட்டது.

    பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா விளக்கம் அளிக்க வலியுறுத்தி பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்கட்சியினர் கடந்த 14-ந்தேதி அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து 14 எம்.பி.க்கள் எஞ்சிய கூட்டத் தொடர் முழுவதும் 'சஸ்பெண்டு' செய்யப்பட்டனர்.

    பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக அமித்ஷா விளக்கம் அளிக்க கோரியும், 14 எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்டை திரும்ப பெற வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் 2 நாட்கள் அவை அலுவல்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    2 தினங்களுக்கு பிறகு பாராளுமன்றம் இன்று கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர்.

    பாராளுமன்ற மக்களவை காலை 11 மணிக்கு கூடியது. சபை கூடியதும் குவைத் மன்னர் ஷேக் நவாஸ் அல் ஜாபர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து பாராளுமன்ற குறைபாடு தொடர்பான பிரசினையை எதிர்க்கட்சியினர் கிளப்பினர். சபையின் மைய பகுதிக்கு எதிர்கட்சி எம்.பி.க்கள் வந்து அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினார்கள்.

    எதிர்க்கட்சி எம்.பி.க்களில் சிலர் கைகளில் பதாகைகளும் வைத்து இருந்தனர். சபைக்குள் பதாகைகள் கொண்டு வந்ததற்கு சபாநாயகர் ஓம் பிர்லா எதிர்ப்பு தெரிவித்தார். சபையின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் இருப்பதாக அவர் கூறினார்.

    சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய மந்திரி பிரகலாத் ஜோதி ஆகியோரின் வேண்டுகோளை நிராகரித்து அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

    அமளியால் அவைத்தலைவர் சபையை 12 மணி வரை ஒத்திவைத்தார்.

    மேல்சபையிலும் பாதுகாப்பு குறைபாடு பிரசினையை காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கிளப்பினார்கள். மத்திய மந்திரி அமித்ஷா விளக்கம் அளிக்கக்கோரி அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். சில உறுப்பினர்கள் கைகளில் பதாகைகள் வைத்து இருந்தனர்.

    எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளியால் அவை 2 முறை ஒத்திவைக்கப்பட்டது.

    முதல் 11.30 மணி வரை அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் ஒத்திவைத்தார். சபை கூடியதும் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பிற்பகல் 2 மணி வரை 2-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.

    • எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.
    • அப்போது, சபாநாயகர் இது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என கூறினார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதிலாக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதையடுத்து சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இருக்கையின் அருகில் உள்ள துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கித் தர வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    ஆனால் சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தில், தான் விதிப்படியே செயல்பட்டு வருவதாக தொடர்ந்து கூறி வந்துள்ளார். கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரின் போதும், அ.தி.மு.க. துணைத் தலைவர் இருக்கை விவகாரம் எதிரொலித்தது.

    இந்நிலையில் 3 நாட்கள் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடர் இன்றுடன் முடிகிறது. கடைசி நாளான இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தை எழுப்பி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக தங்களிடம் இதுவரை 10 முறை கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. (எந்தெந்த நாட்களில் கடிதம் கொடுக்கப்பட்டது என்பதையும் தெரிவித்தார்).

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பு அளித்துள்ளது. இதுபோன்ற ஆவணங்களை எல்லாம் துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக நீங்கள் கேட்டு இருக்கிறீர்கள். 2 நாட்களுக்கு முன்பும் கூட அது தொடர்பான நகல்களை நாங்கள் உங்களிடம் வழங்கி இருக்கிறோம்.

    இருப்பினும் எதற்காக நீங்கள் துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கி தர மறுக்கிறீர்கள் என்பது தெரியவில்லை. இதற்கான காரணம் என்ன என்பதும் எங்களுக்கு தெரியவில்லை. இது எங்களுக்கு வேதனை அளிக்கும் விஷயமாகவே உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத் தொடர்ந்து சபா நாயகர் அப்பாவு, துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்து கூறியதாவது:-

    சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருக்குதான் குறிப்பிட்ட இடத்தில் இருக்கை ஒதுக்கி தர வேண்டும் என்கிற விதி உள்ளது. துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக அது போன்ற எந்த விதியும் இல்லை. இதற்கு முன்பு இருக்கை விவகாரம் தொடர்பாக எனக்கு முன்பு இருந்த சபாநாயகர் எடுத்த முடிவைத்தான் நானும் எடுத்துள்ளேன்.

    துணைத் தலைவராக, கொறடாவாக நீங்கள் யாரை குறிப்பிடுகிறீர்களோ அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இருக்கை விவகாரத்தை பொறுத்தவரை யாரும் கேள்வி எழுப்ப வேண்டிய அவசியம் இல்லை. அது எனது அதிகாரத்துக்கு உட்பட்டது. இந்த விஷயத்தில் மரபுப்படியும், விதிப்படியும் நான் செயல்பட்டு வருகிறேன். அது போன்றே தொடர்ந்து செயல்படுவேன். விதிப்படியும், சட்டப்படியும் நான் இந்த அவையை நடத்தி வருகிறேன். ஒரு சின்னத்தில் போட்டியிட்டு அதற்கு எதிராக வாக்களித்த 11 பேர் மீது அப்போதைய சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கு நீங்கள்தான் (எடப்பாடி பழனிசாமி) உங்கள் அருகில் இடம் ஒதுக்கி கொடுத்தீர்கள். நான் கொடுக்கவில்லை.

    என்னைப் பொறுத்தவரையில் யாருடைய மனமும் கோணாத வகையில் இந்த அவையை நேர்மையுடன் நான் நடத்தி வருகிறேன்.

    இவ்வாறு சபாநாயகர் அப்பாவு பேசினார்.

    இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி எழுந்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக மீண்டும் பேசினார். ஆனால் அவரது மைக் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் அவர் பேசியது எதுவும் வெளியில் கேட்கவில்லை.

    இந்த நேரத்தில் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன், எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு எதிராக எழுந்து சத்தமாக பேசினார். அவரது பேச்சுக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

    இந்த நேரத்தில் ஓ.பன்னீர்செல்வமும் எழுந்து ஏதோ பேசினார். அதுவும் வெளியில் கேட்கவில்லை. இப்படி ஒரே நேரத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் மற்றும் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியனும் பேசிக் கொண்டே இருந்ததால் அவையில் கடுமையான கூச்சல்-குழப்பம் நிலவியது.

    இதைத் தொடர்ந்து சபா நாயகர் அப்பாவு அனைவரும் தங்களது இருக்கையில் அமருங்கள் என்று கூறிக்கொண்டே இருந்தார். ஆனால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரின் நட வடிக்கை ஒருதலைப்பட்சமாக இருக்கிறது என்று கூறி கோஷம் எழுப்பிய படியே தங்களது இருக்கைகளில் இருந்து எழுந்து சென்று சபாநாயகரின் இருக்கை முன்பு திரண்டனர். அப்போது அ.தி.மு.க. துணை கொறடா ரவி உள்பட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் சிலர் தரையில் அமர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து சபாநாயகர், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களைப் பார்த்து நீங்களே வெளியில் செல்கிறீர்களா? அல்லது வெளியேற்றவா? என்று கேள்வி எழுப்பினார். அதன் பிறகும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தரையில் அமர்ந்தபடியும், சபாநாயகர் இருக்கையை சுற்றி நின்ற படியும் கோஷம் எழுப்பிக் கொண்டே இருந்தனர்.

    இதைத் தொடர்ந்து சபைக் காவலர்கள் மூலமாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சபை காவலர்கள் சட்டசபை அரங்கினுள் வந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை குண்டு கட்டாக வெளியேற்றினர்.

    அப்போதும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பியதால் சபையில் பரபரப்பு நிலவியது.

    இதற்கிடையே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்படும் போது, உங்கள் அரசியலை சபைக்குள் செய்ய வேண்டாம். வெளியில் வைத்துக் கொள்ளுங்கள் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

    • பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
    • கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றும் நடக்கவில்லை என தமிழ்நாடு முதலமைச்சர் சொல்வது சரியில்லை.

    கோவை:

    கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கோவைக்கு வந்தார்.

    அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நாடு வேகமாக முன்னேறுவதற்கு இந்த இட ஒதுக்கீடு முதல் படி.

    இதனை இந்தியாவில் உள்ள பெண்கள் கொண்டாட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா முன்னேற்றம் அடைந்து வருகிறது.

    கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றும் நடக்கவில்லை என தமிழ்நாடு முதலமைச்சர் சொல்வது சரியில்லை.

    உயர்கல்வி மருந்துவப்படிப்பில் ஏறக்குறைய 70 ஆயிரம் இடங்கள் உள்ளன. அதில் 4 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளது. ஜீரோ பர்சன்டைல் என்பது இந்தாண்டு காலியிடங்களை நிரப்ப ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகிறது.

    இதனை வைத்து நீட் தேவையில்லை என்பது தவறு. மருத்துவக் கல்லூரிகள், மருத்துவ படிப்புகள் அதிகமாகி இருப்பதால் வாய்ப்புகள் அதிகம் கிடைக்கிறது.

    ஜீரோ ஜீரோ என சொல்லக்கூடாது. மருத்துவ உயர்கல்வியை சீரமைக்க மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    கவுன்சிலிங் செல்லும் போது தகுதியான மருத்துவர்களுக்கு தான் வாய்ப்புகள் கிடைக்கும்.

    இதனால் தனியார் மருத்துவ கல்லூரிகள் பலனடையும் என்பது சரியல்ல. அரசுக் கல்லூரிகளும் பலனடையும். தனியார் கல்லூரிகளும் பலனடையும். இதனை வைத்து அநாவசியமாக அரசியல் செய்யக்கூடாது.

    சனாதனம் ஒழிப்பு என்றவர்கள் ஏன் மத, சாதி வேறுபாடுகளை பேசுகிறார்கள்? நலம் பயின்ற பள்ளிகளில் மலம் கலக்கப்படுகிறது ஏன்? இதற்கு முன்பு எப்போதாவது இப்படி நடந்ததா?.

    இந்துக்கள் படிக்க மற்றவர்கள் காரணம் என சபாநாயகர் சொல்வது நியாயமா? என நீங்கள் சொல்லுங்கள். அவர் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது.

    இவர்கள் இப்படி பிரிவினையை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.

    சனாதனம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின் சட்டரீதியாக சந்தித்து தான் ஆக வேண்டும். அநாவசியமான சத்தம் போட்டால் சட்டரீதியாக சந்தித்து தான் ஆக வேண்டும்.

    பாராளுமன்றத்தில் பாஜக எம்.பி. பேசியது தவறு தான். இதற்கு ஏற்கனவே கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரை நிகழ்த்தும் போது, அவர் அழைக்கப்படுவார்.

    இன்று ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து பேசுபவர்கள், போட்டியிட்ட போது ஏன் ஆதரிக்கவில்லை?

    பெண்கள், பழங்குடியினர், கீழ்நிலையில் இருப்பவர்கள் முன்னுக்கு வர அங்கீகாரம் தர வேண்டும். நீங்கள் ஒட்டு போட்டு ஜனாதிபதி வெற்றி பெறவில்லை. அவர் ஜனாதிபதியாக பிரதமர் தான் காரணம். அதற்கு நீங்கள் முதலில் பதில் சொல்லுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×