search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்காணிப்பு"

    • மெரினா கடற்கரை எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட கடலோர பகுதிகள் முழுவதிலும் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணிக்க உள்ளனர்.
    • கூட்ட நெரிசலில் பிக் பாக்கெட், செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்க சாதாரண உடையிலும் போலீசார் கண்காணிக்க உள்ளனர்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் அதனை கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வருகிறார்கள். வருகிற 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் மறுநாள் 16-ந் தேதி மாட்டுப் பொங்கலும் அதற்கு மறுநாள் (17-ந் தேதி) காணும் பொங்கலும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

    காணும் பொங்கல் அன்று தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் பொது மக்கள் கூட்டம் கூட்டமாக கூடி உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பொழுதை போக்குவார்கள். இதனால் கடற்கரை பகுதிகள், பூங்காக்கள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதும்.

    இந்த ஆண்டும் காணும் பொங்கலை வழக்கமான உற்சாகத்தோடு கொண்டாட மக்கள் மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர். மெரினாவில்

    சென்னையில் மெரினா கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கல் அன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள்.

    இதன் படி வருகிற 17-ந் தேதி அன்று மெரினாவில் கூடும் மக்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு தேவை யான பாதுகாப்பு ஏற்பாடு களை போலீசார் செய்து வருகிறார்கள். போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, இணை கமிஷனர் தர்மராஜ் ஆகியோர் மேற்பார்வையில் மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    மெரினா கடற்கரை எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட கடலோர பகுதிகள் முழுவதிலும் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணிக்க உள்ளனர்.

    காணும் பொங்கல் தினத்தில் திரளாக மக்கள் கூடுவார்கள் என்பதால் அன்றைய தினம் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதற்காக கடற்கரை யோரங்களில் தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டு உள்ளன. இதையும் தாண்டி மக்கள் கடலில் இறங்கி விடக்கூடாது என்பதற்காக போலீஸ் குதிரைப்படை வீரர்களை கொண்டும் கண்காணிக்கப்பட உள்ளது.

    மெரினாவில் கூட்ட நெரிசலின் போது குழந்தைகள் காணாமல் போனால் அவர்களை கண்டுபிடிப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதற்காக மெரினாவுக்கு பெற்றோருடன் வருகை தரும் குழந்தைகளின் கைகளில் பாதுகாப்பு வளையம் ஒன்றை கட்டிவிட போலீசார் முடிவு செய்துள்ளனர். அந்த வளையத்தில் போலீஸ் உதவி மைய செல்போன் எண்களும், பெற்றோர்களின் செல்போன் எண்களும் இடம் பெற்றிருக்கும். இதன் மூலமாக மாயமாகும் குழந்தைகளை உடனுக்குடன் கண்டு பிடிக்க முடியும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    கூட்ட நெரிசலில் பிக் பாக்கெட், செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்க சாதாரண உடையிலும் போலீசார் கண்காணிக்க உள்ளனர்.

    டிரோன்கள் மூலமாகவும் வானில் வட்டமடித்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர மெரினாவில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களை அமைத்தும் போலீசார் பைனாகுலர் மூலமாக கூட்டத்தை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அண்ணா சதுக்கம் மற்றும் மெரினா போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அருகே உள்ள சுகாதார மையம் மற்றும் ஆஸ்பத்திரிக்கு செல்ல அறிவுறுத்தி வருகின்றனர்.
    • பயணிகளுக்கு உதவும் வகையில் பிரத்யேகமாக மே ஐ ஹெல்ப் யூ சேவை கோவை விமான நிலையத்தில் செயல்பட்டு வருகிறது.

    கோவை:

    ஜே.என்.1 கொரோனா தொற்று பரவ தொடங்கியதில் இருந்து இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

    அண்டை மாநிலமான கேரளாவில் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

    இதையடுத்து கேரளத்தையொட்டி உள்ள தமிழக எல்லையான கோவை மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மாவட்டத்தில் சுகாதாரத்துறை மூலம 4 நடமாடும் காய்ச்சல் கண்டறியும் குழு, 36 மருத்துவ குழுக்களும் அமைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மேலும் கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் மாநகராட்சி பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் இணைந்து வீடு, வீடாக சென்று காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என பரிசோதித்து வருகின்றனர்.

    காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அருகே உள்ள சுகாதார மையம் மற்றும் ஆஸ்பத்திரிக்கு செல்ல அறிவுறுத்தி வருகின்றனர்.

    கோவை விமான நிலையத்திலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

    கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட பல நகரங்களுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருவதை அடுத்து, வெளிநாடுகளில் இருந்து கோவை வரும் பயணிகள் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    இதுகுறித்து விமான நிலைய இயக்குநர் செந்தில்வளவன் கூறியதாவது:-

    ஒவ்வொரு நாளும் சராசரியாக 23 முதல் 29 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    கோவையில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு உதவும் வகையில் கோவை-மும்பை இடையே தினமும் காலை 9 மணிக்கும், இரவு 9 மணிக்கும் புதிய விமானங்கள் இயக்கப்படுகின்றன.

    இதுதவிர ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு வாரத்தின் அனைத்து நாட்களும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

    உருமாறிய கொரோனா பரவலை கண்காணிக்கும் வகையில், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு காய்ச்சல் கண்டறியும் உபகரணங்கள் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதுதவிர முதியவர்கள் குழந்தைகளுடன் வரும் பெண்கள் உள்ளிட்ட பயணிகளுக்கு உதவும் வகையில் பிரத்யேகமாக மே ஐ ஹெல்ப் யூ சேவை கோவை விமான நிலையத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த சேவைக்கு பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • போலீசார் அங்கு ட்ரோன் மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
    • 3 கிலோ மீட்டருக்கும் மேல் வாகனங்கள் வரிசைக்கட்டி நின்றது.

    புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கடந்த கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டும் சுற்றுலா பயணிகள் தங்களின் கொண்டாட்டத்திற்காக குலு மணாலியில் குவிந்தனர்.

    இதனால், அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக, சுமார் 3 கிலோ மீட்டருக்கும் மேல் வாகனங்கள் வரிசைக்கட்டி நின்றது.

    இதேபோல், தற்போது புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்திற்கு வாகனங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இதனால், லஹாவுல் மற்றும் ஸ்பிட்டி போலீசார் அங்கு ட்ரோன் மூலம் தொடர்ந்த கண்காணித்து வருகின்றனர். 

    • சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ஆகியோர் உத்தரவிட்டு உள்ளனர்.
    • 2024-ம் ஆண்டு புத்தாண்டு தினத்தை அமைதியாகவும், மகிழ்சியாகவும் கொண்டாட வேண்டும் என்றும் போலீசார் வேண்டுகோள்விடுத்து உள்ளனர்.

    சோழிங்கநல்லூர்:

    மழை வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு உள்ள சென்னை மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகிறார்கள்.

    குறிப்பாக மெரினா கடற்கரை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஓட்டல்கள், ரிசாட்டுகளில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டும்.

    இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் கிழக்கு கடற்ககரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், ரெஸ்டாரண்டுகள் பண்ணை வீடுகள் புத்தாண்டு கொண்டா ட்டத்துக்கு முழு வீச்சில் தயாராகி வருகின்றன.

    இதையொட்டி போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உள்ளனர். புத்தாண்டையொட்டி வருகிற 31-ந்தேதி இரவு சென்னை நகரம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், கிழக்கு கடற்கரை சாலை, கொட்டிவாக்கம், நீலாங்கரை, அக்கரை, உத்தண்டி கோவளம், மாமல்லபுரம், உள்ளிட்ட கடற்கரை பகுதிகள் முழுவதும் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர்.

    பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேவையான முன் னேற்பா டுகளை மேற்கொள்ள சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ஆகியோர் உத்தரவிட்டு உள்ளனர்.

    அதன்படி கடற்கரை பகுதிகளில் ரோந்து பணியை தீவிர படுத்தவும் கடற்கரை பகுதிகளில் தடுப்பு வேலிகளை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை முழுவதும் 500 இடங்களில் வாகன சோதனைகளிலும் ஈடுபடுகிறார்கள். மெரினா காமராசர் சாலை, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும் இளைஞர்கள் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களில் செல்வதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க உள்ளனர். இதற்காக 25 தனிப்படைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிகளில் மணலிலும் கடலிலும் செல்லும் வகையிலான வாகனங்களில் ரோந்து சென்று கண்காணிக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது. மெரினா, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட கடல் பகுதிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளன. டிரோன் மூலம் கண்காணித்து பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட உள்ளனர். 2024-ம் ஆண்டு புத்தாண்டு தினத்தை அமைதியாகவும், மகிழ்சியாகவும் கொண்டாட வேண்டும் என்றும் போலீ சார் வேண்டுகோள்விடுத்து உள்ளனர்.

    மாமல்லபுரம் பகுதிகளில் இருக்கும் கடற்கரை ரிசார்ட், ஓட்டல்கள், விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்தினருடன் புத்தாண்டு கொண்டாட்ட ஏற்பாடு ளுக்கான கட்டுப்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து செங்கல்பட்டு மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சாய் பிரணீத் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது டி.ஜே. என்ற பெயரில் ஆபாச நடனம் நடத்தக்கூடாது, விருந்தினர்களை கடலில் குளிக்க அனுமதிக்க கூடாது, தனியார் பாதுகாப்பு பவுன்சர்கள் என்ற பெயரில் அடாவடி நபர்களை நியமிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது. அப்போது மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் உடன் இருந்தார்.

    • மலைரெயில் பாதைகளில் அவ்வப்போது யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
    • காட்டு யானை நடமாட்டம் குறித்து ரயில்வே ஊழியர்களும் கண்காணித்து பாதுகாப்பான முறையில் இருக்க வேண்டும்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த 10 நாட்களாக பிறந்த குட்டியுடன் 10 யானைகள் முகாமிட்டு உள்ளன. அவை மலைப்பாதையில் உள்ள கிராமங்களான பர்லியாறு, கே.என்.ஆர், மரப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி திரிந்து வருகின்றன. அவற்றை வனத்துறையினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அந்த யானைகள் கூட்டம் காட்டேரி பூங்கா அருகே உள்ள ரண்ணிமேடு ரயில் நிலையம் அருகில் திடீரென முகாமிட்டன. பின்னர் ரெயில் நிலையத்தில் உள்ள குடிநீர் குழாய்களை உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்றன. பின்னர் குடியிருப்பு பகுதிக்கு இரவு நேரத்தில் சென்ற காட்டு யானைகள் அங்கு உள்ள விளைநிலங்களில் பயிரிட்டு உள்ள வாழை மரங்களை மிதித்து சேதப்படுத்தின.

    இந்நிலையில் வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து காட்டு யானை கூட்டம் குடியிருப்பு பகுதிக்கு வராமல் தடுத்து நிறுத்தி விரட்டும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் இரவில் தனியாக வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் கூறியதாவது:-

    தொடர்மழை காரணமாக குன்னூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பசுமை திரும்பி உள்ளது. எனவே சமவெளி பகுதிகளில் இருந்து வரும் காட்டு யானைகள், மலைப்பாதைகளில் முகாமிட்டு வருகிறது இதனை விரட்டி அடிக்கும் பணியில் வனஊழியர்கள் தனித்தனி குழுவாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். மேலும் மலைரெயில் பாதைகளில் அவ்வப்போது யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

    குன்னூரில் இருந்து நேற்று மாலை புறப்பட்ட மேட்டுப்பாளையம் மலை ரெயில், ரன்னிமேடு பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது ரெயில் பாதையில் யானைகள் நின்றதால் அந்த ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் யானைகளை காட்டுக்குள் விரட்டினோம். இதுதொடர்பாக ரயில்வே உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. காட்டு யானைகளை சமவெளி பகுதிக்கு விரட்டும் பணி நடந்து வருகிறது.

    மேலும் காட்டு யானை நடமாட்டம் குறித்து ரயில்வே ஊழியர்களும் கண்காணித்து பாதுகாப்பான முறையில் இருக்க வேண்டும். வாகன ஓட்டிகளும் மலைப்பாதையில் மிகவும் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் யானைகள் நடமாடும் இடங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்

    இவ்வாறு அவர் கூறினார்.

    • யாருக்காவது காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் இருந்தால் அவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.
    • பொது இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் அணிய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது.

    கோவை:

    கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினமும் 200-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    கடந்த 12 மணி நேரத்தில் கேரளாவில் 280 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் பலியாகி உள்ளனர்.

    தொடர்ந்து கேரளாவில் கொரோனா அதிகரித்து வருவதை அடுத்து, கேரள மாநில எல்லையொட்டி இருக்கும் தமிழக பகுதிகளான கோவை, நீலகிரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    கேரள மாநிலத்தையொட்டி உள்ள தமிழக எல்லையில் அமைந்துள்ளது கோவை மாவட்டம்.

    கேரளாவில் இருந்து கோவைக்கு தினந்தோறும் வேலை, தொழில், கல்லூரி சம்பந்தமாக ஏராளமானோர் கோவைக்கு வருவதும், இங்கிருந்து பலர் கேரளாவுக்கும் சென்று வருகிறார்கள்.

    தற்போது கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், கோவை மாவட்ட எல்லைகளான வாளையார், பொள்ளாச்சி மீனாட்சிபுரம், ஆனைகட்டி உள்பட அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    அங்கு மருத்துவ குழுவினர், போலீசார் முகாமிட்டுள்ளனர். அவர்கள் அந்த வழியாக கேரளாவில் இருந்து கோவைக்குள் வரக்கூடிய வாகனங்களை தடுத்து நிறுத்தி, அதில் இருக்கும் பயணிகள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்கின்றனர்.

    அதில் யாருக்காவது காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் இருந்தால் அவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

    மேலும் அவர்களின் சளி மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை தெரிந்த பின்னரே அவர்களை கோவைக்குள் அனுமதித்து வருகின்றனர்.

    கோவையில் பொது மக்கள், பொது இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் அணிய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது.

    மேலும் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆஸ்பத்திரிகளுக்கு காய்ச்சலுடன் வருபவர்களும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். இருமல், சளி போன்ற பாதிப்புகள் இருந்தால் தனிமைப்படுத்தி கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில், கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகளான நாடுகாணி, கக்கநல்லா உள்பட அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு ள்ளது.

    அந்த வழியாக கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வரும் பயணிகள் அனைவரும், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது.

    பரிசோதனைக்கு பின்னரே அவர்கள் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து நீலகிரி கலெக்டர் அருணா கூறியதாவது:-

    கேரளாவில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்குள் வருவோரின் உடல் வெப்ப நிலை, சளி மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன.

    இதுவரை 30 பேரின் சளி மாதிரிகள் சேகரி க்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. பரிசோதனை முடிவில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது. எனவே பொது மக்கள் கொரோனா குறித்து அச்சப்பட தேவையில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மாணவர்களை குறித்து சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர்.
    • தொங்கியபடி சென்றால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்

    கடலூர்:

    பண்ருட்டியில் இருந்து சேந்த நாடு செல்லும் அரசு பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணங்களை மேற்கொண்ட மாணவர்களை குறித்து சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக அரசு பஸ் போக்குவரத்து அதிகாரிகள் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு செட்டிபாளையம், தட்டாஞ்சாவடி பகுதி சேர்ந்த சில மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிபடி சென்றனர்.

    இதனைத் தொடர்ந்து பண்ருட்டி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார், போக்குவரத்து அதிகாரிகள் பஸ்சை நிறுத்தி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். தொடர்ந்து, யாராவது பஸ்சில் தொங்கியபடி சென்றால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்களிடமும், பஸ் டிரைவர், கண்டக்டரிடமும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பந்தலூரில் சுற்றி திரியும் கரடியை பிடிக்க வனத்துறை மும்முரம்
    • வனச்சரக அலுவலா் சஞ்சீவி தலைமையில் ஊழியர்கள் நடவடிக்கை

    ஊட்டி, 

    நீலகிரி மாவட்டம் பந்தலூா் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் சமீபகாலமாக கரடி நடமாட்டம் அதிகளவில் உள்ளது. எனவே அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனா்.

    இதனால் அவர்கள் ஊருக்குள் திரியும் கரடியைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனா். தொடா்ந்து பந்தலூா் வனச்சரக அலுவலா் சஞ்சீவி தலைமையில் ஊழியர்கள் ரிச்மண்ட் பகுதியில் கூண்டு வைத்து கரடி நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

    • நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிப்பு
    • திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்துவரும் கன மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு குளு சீசன் நிலவுகிறது.

    மாவட்டத்திலுள்ள பேச்சிப்பாறை, பெருஞ் சாணி, மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் நிரம்பி வழிகின்றன. மாவட்டம் முழுவதும் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட பாசன குளங்களும் முழு கொள்ள ளவை எட்டி நிரம்பி வழி கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ் வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.

    நாகர்கோவில், கன்னி மார், குழித்துறை பகுதிகளில் நேற்று இரவும் மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகளிலும், மழை நீடித்து வருவதால் பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணை யின் நீர்மட்டம் உயர்ந்து வருவதையடுத்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேர மும் அணை யை கண்காணித்து வரு கிறார்கள்.

    அணையில் இருந்து மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உபரிநீர் வெளியேற்றப்படலாம் என்பதால் கோதையாறு, குழித்துறை ஆற்றின் கரை யோர பகுதி மக்கள் பாது காப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப் பட்டு வருகிறார்கள். பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகள் நிரம்பி வருவதையடுத்து கலெக்டர் ஸ்ரீதர் அணையை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அணையின் நீர் இருப்பு விவரங்களை அதிகாரியிடம் கேட்டறிந்தார். அணையில் இருந்து உபரிநீர் வெளி யேற்றப்படும்போது கரை யோர பகுதி மக்கள் பாதிக் கப்பட வாய்ப்புள்ளதால் அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கு மாறு அறிவுறுத்தினார்.

    திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு கடந்த 5 நாட்களாக தடை விதிக்கப் பட்டிருந்த நிலையில் தற் போது அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. இதையடுத்து அருவியில் குளிப்பதற்கு இன்று அனுமதி அளிக்கப் பட்டது. சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்த குளியல் இட்டு மகிழ்ந்தனர்.

    பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 44.49 அடி யாக இருந்தது. அணைக்கு 1023 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 452 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. பெருஞ் சாணி அணை நீர்மட்டம் 72.79 அடியாக உள்ளது. அணைக்கு 440 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 230 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது.

    சிற்றாறு 1 அணையில் இருந்தும் 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப் பட்டு வருகிறது. பேச்சிப் பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு 1 அணைகளில் இருந்து 782 கன அடி தண்ணீர் வெளியேற்றப் பட்டு வருகிறது. இந்த தண்ணீர் தோவாளை, அனந்தனார் சானல், நாஞ்சில்நாடு புத்தனார் சானல்களில் திறந்து விடப் பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பழையாறு, வள்ளியாறுகளிலும், வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மழைக்கு நேற்று மேலும் 2 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.

    • நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை நாட்களான 11, 12, 13-ந் தேதி ஆகிய 3 தினங்களுக்கு பாதுகாப்பு பணியை அதிகப்படுத்த உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தெரிவித்துள்ளார்
    • நாளொன்றுக்கு 700-க்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி முறையில் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை நாட்களான 11, 12, 13-ந் தேதி ஆகிய 3 தினங்களுக்கு பாதுகாப்பு பணியை அதிகப்படுத்த உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மாவட்டம் முழுவதும் பகல் மற்றும் இரவு ரோந்து மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ரோந்து செல்ல போலீசார் பணியமர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். திருட்டு போன்ற குற்ற சம்பவங்களை தடுக்க குற்றத்தடுப்பு போலீசார் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    இதன்படி நாளொன்றுக்கு 700-க்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி முறையில் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்து உள்ளார். என்றார்.

    • சென்னையில் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் போன்றவை பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
    • பயணிகள் வைத்திருக்கும் உடைமைகள் மற்றும் பைகளை தீவிரமாக சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கிறார்கள்.

    சென்னை:

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (12-ந்தேதி) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு குடும்பத்துடன் செல்கிறார்கள். இதனால் சென்னையில் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் போன்றவை பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

    பயணிகளின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக நேற்று 1365 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று வழக்கமான பஸ்களுடன் கூடுதலாக 1895 சிறப்பு பஸ்களும், நாளை கூடுதலாக 1,415 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. இந்த பஸ்கள் கோயம்பேடு, தாம்பரம், கே.கே.நகர், பூந்தமல்லி, மாதவரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன. இதனால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் நேற்று முதல் பயணிகள் குவிந்து வருகிறார்கள்.

    எனவே பயணிகளின் பாதுகாப்புக்காக கோயம்பேடு பஸ் நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். 300 போலீசார் 2 ஷிப்டு முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பயணிகள் வைத்திருக்கும் உடைமைகள் மற்றும் பைகளை தீவிரமாக சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கிறார்கள். கோயம்பேடு பஸ் நிலைய வளாகம் முழுவதும் மோப்பநாய் உதவியுடன் சோதனையும் மேற்கொண்டனர். இந்நிலையில் கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் கோயம்பேடு மார்க்கெட் ஆகிய பகுதிகளில் டிரோன் கேமராவை பறக்க விட்டும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இன்றும், நாளையும் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு பயணிகள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
    • இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும், ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.

    கொலை வழக்குகள், வழிப்பறி குற்றவாளிகள் மற்றும் திட்டமிட்டு செயல்படும் குற்றவாளிகள் ஆகியோர்களை தொடர்ந்து கண்காணித்து முறையான நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் அறிவுறுத்தினார்.

    மேலும் மாவட்டத்தில் கொடுங்குற்ற வழக்குகளில் விரைவில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தவர்கள், கொலை, கொள்ளை வழக்குகளில் விரைந்து செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த தனிப்படையினர் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளை நிறைவேற்றுவதில் சிறந்த பங்களிப்பை ஆற்றியவர்கள். நீதிமன்றத்தில் வழக்குகளை கோப்புக்கு எடுத்து விரைவில் முடித்திட திறம்பட செயல்பட்டவர்கள், சி.சி.டி. என்.எஸ். பிரிவில் சிறப்பாக செயல்பட்டவர்கள் ஆகியோருக்கு போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    பின்னர் சூப்பிரண்டு சுந்தரவதனம் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து காவல் வாகனங்களை மாதாந்திர ஆய்வு மேற்கொண்டார். காவல் வாகனங்களை ஆய்வு செய்து அதன் ஓட்டுநர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் ஒவ்வொரு உட்கோட்டத்தில் உள்ள இரு சக்கர வாகனங்களையும் ஆய்வு மேற்கொண்டு காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    ×