search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி விடுமுறை"

    • ருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் உட்பட 6 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.
    • தீபாவளி விடுமுறை முடிந்து நிறுவனங்கள் இயக்கத்துக்கு வருகின்றன.

    திருப்பூர்:

    திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் உட்பட 6 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை தங்கள் சொந்த ஊரில் கொண்டாடுவதையே வெளி மாவட்ட மக்கள் விரும்புகின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு கடந்த 10-ந்தேதியே புறப்பட்டு சென்றனர். பின்னலாடை நிறுவனங்களில் வழக்கம் போல் அவசரகதியில் முடிக்க வேண்டிய ஆர்டர்கள் இந்த முறை இல்லை. இயக்கம் சீராக இருப்பதால் நிறுவனங்களும் தாராளமாக, 10 நாட்கள் வரை விடுமுறை அளித்துள்ளன. வடமாநில தொழிலாளர்களும் சொந்த ஊர் சென்றுள்ளனர். இருப்பினும் தீபாவளி விடுமுறை முடிந்து நிறுவனங்கள் இயக்கத்துக்கு வருகின்றன. குறிப்பாக நிர்வாகம் மற்றும் அலுவலக பணியாளர்கள் பணிக்கு வரத்தொடங்கி உள்ளனர். கைவசம் உள்ள உள்ளூர் தொழிலாளர் மற்றும் வடமாநில தொழிலாளரை கொண்டு சில நாட்களுக்கு, வழக்கமான பணிகளை செய்ய நிறுவனத்தினர் திட்டமிட்டுள்ளனர். விடுமுறையில் சென்றவர்கள் 18, 19 ஆகிய தேதிகளில் திருப்பூர் திரும்ப உள்ளனர். அதன்படி, வருகிற 20-ந்தேதி முதல் பின்னலாடை நிறுவனங்கள் இயல்பான இயக்கத்தை துவக்கும். ஜாப் ஒர்க் நிறுவனங்கள், அதற்கு பிறகே தங்கள் இயக்கத்தை தொடங்க முடிவு செய்து உள்ளனர்.

    • நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை நாட்களான 11, 12, 13-ந் தேதி ஆகிய 3 தினங்களுக்கு பாதுகாப்பு பணியை அதிகப்படுத்த உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தெரிவித்துள்ளார்
    • நாளொன்றுக்கு 700-க்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி முறையில் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை நாட்களான 11, 12, 13-ந் தேதி ஆகிய 3 தினங்களுக்கு பாதுகாப்பு பணியை அதிகப்படுத்த உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மாவட்டம் முழுவதும் பகல் மற்றும் இரவு ரோந்து மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ரோந்து செல்ல போலீசார் பணியமர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். திருட்டு போன்ற குற்ற சம்பவங்களை தடுக்க குற்றத்தடுப்பு போலீசார் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    இதன்படி நாளொன்றுக்கு 700-க்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி முறையில் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்து உள்ளார். என்றார்.

    • தீபாவளி பண்டிகை வருகிற 12-ந்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
    • கடைவீதிகளை நோக்கி மக்கள் படையெடுப்பதால் போக்குவரத்து நெருக்கடி பெருகி வருகிறது.

    திருப்பூர்:

    தீபாவளி பண்டிகை வருகிற 12-ந்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால் திருப்பூர் பனியன் தொழிலாளர்கள் போனஸ் பெறுவதற்கு தயாராகி விட்டனர். சில பனியன் நிறுவனங்களில் கடந்த 4-ந்தேதி முதல் போனஸ் பட்டுவாடா தொடங்கியது. கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று திருப்பூர் மாநகர கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது. ஜவுளிக்கடைகளில் கூட்டம் மிகவும் அதிகமாக காணப்பட்டது. பெரும்பாலான பனியன் நிறுவனங்களில் நேற்று (புதன்கிழமை) முதல் போனஸ் பட்டுவாடா செய்யும் பணியை தொடங்கி விட்டனர். தொடர்ந்து இன்றும் (வியாழக்கிழமை) போனஸ் வழங்கி முடிக்க திட்டமிட்டுள்ளனர். திருப்பூரின் முக்கிய சாலையான குமரன் சாலையில் கடந்த 2 நாட்களாக வாகன நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. கடைவீதிகளை நோக்கி மக்கள் படையெடுப்பதால் போக்குவரத்து நெருக்கடி பெருகி வருகிறது.

    இந்நிலையில் நாளை (10-ந்தேதி) முதல் பனியன் கம்பெனிகள் விடுமுறை அளிக்க உள்ளனர். இதைத்தொடர்ந்து ெசாந்த ஊருக்கு செல்லும் தொழிலாளர்கள் 20-ந் தேதிக்கு பின்னரே திருப்பூர் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகே பனியன் நிறுவனங்கள் செயல்பட தொடங்கும். மேலும் திருப்பூர் மாநகரில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஜேப்படி ஆசாமிகள் பஸ், ரெயில் நிலையம், கடைவீதிகளில் கைவரிசை காட்டுவதை தடுக்கும் வகையில் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர டிராபிக் வார்டன்கள், ஊர்க்காவல் படையினர் போக்குவரத்தை சரிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குமரன் ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளின் ஓரம் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதசாரிகள் நடந்து செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. அதுபோல மாநகராட்சி சந்திப்பு, புதுமார்க்கெட் வீதி, வளர்மதி பஸ் நிறுத்தம், புஷ்பா ரவுண்டானா, மத்திய பஸ் நிலையம் போன்ற முக்கிய பகுதிகளில் உயர் கோபுரங்கள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று தீபாவளிக்கு மறுநாள் விடுப்பு.
    • தமிழக அரசு சார்பில் அறிக்கை வெளியீடு.

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தன்று வருவதால், மறுநாளான திங்கட்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அரசு அலுவலர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று தீபாவளிக்கு மறுநாளான திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இந்தாண்டு தீபாவளியை 12.11.2023 அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 13.11.2023 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 18.11.2023 அன்று பணி நாளாக அறிவித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×