search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    X

    பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    • நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிப்பு
    • திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்துவரும் கன மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு குளு சீசன் நிலவுகிறது.

    மாவட்டத்திலுள்ள பேச்சிப்பாறை, பெருஞ் சாணி, மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் நிரம்பி வழிகின்றன. மாவட்டம் முழுவதும் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட பாசன குளங்களும் முழு கொள்ள ளவை எட்டி நிரம்பி வழி கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ் வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.

    நாகர்கோவில், கன்னி மார், குழித்துறை பகுதிகளில் நேற்று இரவும் மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகளிலும், மழை நீடித்து வருவதால் பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணை யின் நீர்மட்டம் உயர்ந்து வருவதையடுத்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேர மும் அணை யை கண்காணித்து வரு கிறார்கள்.

    அணையில் இருந்து மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உபரிநீர் வெளியேற்றப்படலாம் என்பதால் கோதையாறு, குழித்துறை ஆற்றின் கரை யோர பகுதி மக்கள் பாது காப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப் பட்டு வருகிறார்கள். பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகள் நிரம்பி வருவதையடுத்து கலெக்டர் ஸ்ரீதர் அணையை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அணையின் நீர் இருப்பு விவரங்களை அதிகாரியிடம் கேட்டறிந்தார். அணையில் இருந்து உபரிநீர் வெளி யேற்றப்படும்போது கரை யோர பகுதி மக்கள் பாதிக் கப்பட வாய்ப்புள்ளதால் அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கு மாறு அறிவுறுத்தினார்.

    திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு கடந்த 5 நாட்களாக தடை விதிக்கப் பட்டிருந்த நிலையில் தற் போது அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. இதையடுத்து அருவியில் குளிப்பதற்கு இன்று அனுமதி அளிக்கப் பட்டது. சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்த குளியல் இட்டு மகிழ்ந்தனர்.

    பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 44.49 அடி யாக இருந்தது. அணைக்கு 1023 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 452 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. பெருஞ் சாணி அணை நீர்மட்டம் 72.79 அடியாக உள்ளது. அணைக்கு 440 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 230 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது.

    சிற்றாறு 1 அணையில் இருந்தும் 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப் பட்டு வருகிறது. பேச்சிப் பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு 1 அணைகளில் இருந்து 782 கன அடி தண்ணீர் வெளியேற்றப் பட்டு வருகிறது. இந்த தண்ணீர் தோவாளை, அனந்தனார் சானல், நாஞ்சில்நாடு புத்தனார் சானல்களில் திறந்து விடப் பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பழையாறு, வள்ளியாறுகளிலும், வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மழைக்கு நேற்று மேலும் 2 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.

    Next Story
    ×