search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Observations"

    • மாணவர்களை குறித்து சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர்.
    • தொங்கியபடி சென்றால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்

    கடலூர்:

    பண்ருட்டியில் இருந்து சேந்த நாடு செல்லும் அரசு பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணங்களை மேற்கொண்ட மாணவர்களை குறித்து சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக அரசு பஸ் போக்குவரத்து அதிகாரிகள் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு செட்டிபாளையம், தட்டாஞ்சாவடி பகுதி சேர்ந்த சில மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிபடி சென்றனர்.

    இதனைத் தொடர்ந்து பண்ருட்டி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார், போக்குவரத்து அதிகாரிகள் பஸ்சை நிறுத்தி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். தொடர்ந்து, யாராவது பஸ்சில் தொங்கியபடி சென்றால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்களிடமும், பஸ் டிரைவர், கண்டக்டரிடமும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×