search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடும்"

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
    • இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும், ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.

    கொலை வழக்குகள், வழிப்பறி குற்றவாளிகள் மற்றும் திட்டமிட்டு செயல்படும் குற்றவாளிகள் ஆகியோர்களை தொடர்ந்து கண்காணித்து முறையான நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் அறிவுறுத்தினார்.

    மேலும் மாவட்டத்தில் கொடுங்குற்ற வழக்குகளில் விரைவில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தவர்கள், கொலை, கொள்ளை வழக்குகளில் விரைந்து செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த தனிப்படையினர் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளை நிறைவேற்றுவதில் சிறந்த பங்களிப்பை ஆற்றியவர்கள். நீதிமன்றத்தில் வழக்குகளை கோப்புக்கு எடுத்து விரைவில் முடித்திட திறம்பட செயல்பட்டவர்கள், சி.சி.டி. என்.எஸ். பிரிவில் சிறப்பாக செயல்பட்டவர்கள் ஆகியோருக்கு போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    பின்னர் சூப்பிரண்டு சுந்தரவதனம் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து காவல் வாகனங்களை மாதாந்திர ஆய்வு மேற்கொண்டார். காவல் வாகனங்களை ஆய்வு செய்து அதன் ஓட்டுநர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் ஒவ்வொரு உட்கோட்டத்தில் உள்ள இரு சக்கர வாகனங்களையும் ஆய்வு மேற்கொண்டு காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    • சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
    • மாலையில் இருந்து இரவு முழுவதும் கன மழையாக பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று காலை முதல் சாரல் மழை பெய்தது. மாலையில் இருந்து இரவு முழுவதும் கன மழையாக பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இன்று காலை சாரல் மழையுடன் பனி மூட்டமும் காணப்படுகிறது. இதனால் வழக்கத்திற்கு மாறாக குளிரின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. தற்போது ஏற்காட்டில் காபி அறுவடை காலம் தொடங்கியுள்ளதால் காபி தோட்டங்களில் காபி அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்த மழை காரணமாக காபி அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பனி மூட்டம் அடர்த்தியாக காணப்படுவதால் சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு நகர்ந்து செல்கின்றன. குளிரின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    • 2-வது நாளாக இன்றும் தீயை அணைக்கும் பணி தீவிரம்
    • குப்பைகள் மலைபோல் குவிந்து கிடப்பதால் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது தொடர் கதையாக நடந்து வருகிறது.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் மாநகராட்சி குப்பை கிடங்கு வலம்புரி விளையில் உள்ளது. இங்கு குப்பைகள் மலைபோல் குவிந்து கிடப்பதால் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது தொடர் கதையாக நடந்து வருகிறது.

    இந்த குப்பை கிடங்கை மாற்ற வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை வைத்து வருகி றார்கள். இந்த நிலையில் குப்பை கிடங்கில் நேற்று மாலை திடீர் என தீப்பிடித்து எரிந்தது. காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென்று பரவியது. இதனால் குப்பை கிடங்கு முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிந்தது.

    இதுபற்றி நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி யில் இரு ந்தும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்தது. இருப்பினும் தீயை கட்டுப்ப டுத்த முடியவில்லை. தொடர்ந்து தீ எரிந்து கொண்டே இருந்தது.

    இதைத்தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் மேயர் மகேஷ் நேற்று இரவு வலம்புரிவிளை குப்பை கிடங்கை நேரில் சென்று பார்வையிட்டார். தீயை விரைந்து அணைக்க தேவையான நடவடிக்கை களை மேற்கொள்ளபடும் என்று உறுதி அளித்தார்.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாகவும் குப்பை கிடங்கில் இருந்து புகை மண்டலங்கள் அதிகளவு வெளியேறி கொண்டு இருக்கிறது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். நச்சுப்பு கையின் காரணமாக குழந்தை கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    ஒரு சில குடும்பத்தினர் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். தூர்நாற்றமும் வீசுவதால் அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மூக்கை பிடித்து விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு ள்ளது. வலம்புரிவிளை குப்பை கிடங்கில் உள்ள புகை மண்டலம் வட்டவிளை, இருளப்புரம், இளங்கடை பகுதிகளிலும் சூழ்ந்துள்ள தால் மக்கள் அவதிப்பட்டு உள்ளனர்.

    காற்று வேகமாக வீசுவதால் சுசீந்திரம் வரை புகை மண்டலங்களாக காட்சியளிக்கிறது. தீய ணைப்பு வீரர்கள் ஜே.சி.பி. எந்திரத்தின் மூலமாக குப்பைகளை கிளறி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். 40 தீயணைப்பு வீரர்கள் அங்கேயே முகாமிட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இன்னும் தீயை கட்டுப்படுத்த 2 நாட்கள் ஆகலாம் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

    • நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
    • தமிழகத்திலேயே குமரி மாவட்டத்தில் தான் அதிக இருச்சக்கர வாகனங்கள் விற்பனை ஆகின்றன.

    கொல்லங்கோடு, ஜூன்.17-

    தமிழகத்திலேயே குமரி மாவட்டத்தில் தான் அதிக இருச்சக்கர வாகனங்கள் விற்பனை ஆகின்றன.

    இதில் நவீன ரக வாகனங்களும், விலை உயர்ந்த இருச்சக்கர வாகனங்களும் இங்கு அதிகம் விற்பனை ஆகின்றன. மாணவர்கள் மற்றும் இளைஞர்களே இத்தகைய வாகனங்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இந்த வாகனங்களில் அரசு அனும தித்து உள்ள அள வை விட அதிக ஒலி எழுப்பும் கருவி களை பொருத்தி வீதிகளிலும், சாலைகளி லும் வலம் வரு கிறார்கள்.

    குறிப்பாக கிராம புறங்களில் உள்ள சாலைகளில் இப்படி அதிக ஒலி எழுப்பியபடி செல்லும் இருச்சக்கர வாகனங்களால் பொதுமக்கள் பலரும் அலறியடித்து ஓட்டம் பிடிக்கிறார்கள். மேலும் முதியோர் மற்றும் பெண்கள், குழந்தைகள் இச்சத்தத்தை கேட்டு மிரண்டு ஓடும் சம்பவங்களும் நடக்கிறது. இப்படி அதிக ஒலியுடன் வலம் வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.

    இதையடுத்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த போக்குவரத்து விழிப்புணர்வு ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற கலெக்டர், குமரி மாவட்டத்தில் அதிக ஒலி எழுப்பி செல்லும் வாகனங்களை அனைத்தையும் பறிமுதல் செய்து கடும் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என போலீசாருக்கு அறிவுறுத்தினார். கலெக்டரின் உத்தரவை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அதிக ஒலி எழுப்பும் வாகனங்கள் போக்குவரத்து போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாகனங்களை போலீஸ் நிலையம் கொண்டு சென்ற போலீசார் அதில் பொருத்தப்பட்ட கருவிகளை அகற்றியதோடு, அதனை ஓட்டி வந்தோருக்கு அபராதமும் விதித்தனர்.

    குளச்சல் பகுதியில் நேற்று சுமார் 12-க்கும் மேற்பட்ட வாகனங்கள் போலீ சாரால் பறிமுதல் செய்யப்பட்டன. இது போல நாகர்கோ வில், தக்கலை, மார்த்தாண்டம் பகுதிகளில் வாகனங்களை கண்காணிக்கும் பணி நடந்து வரு கிறது.

    ஆனால் கொல் லங்கோடு பகுதி யில் இன்னும் அதிக ஒலி எழுப் பியபடி செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட வில்லை. இதனால் இங்கு சாலையில் நடந்து செல்லும் முதியோரும், பெண்களும் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். சில இடங்களில் ஆடு, மாடு போன்ற விலங்குகள் மிரண்டு ஓடி விபத்தை ஏற்படுத்தும் சம்பவங்களும் நடந்தது.

    எனவே இந்த பகுதியில் அதிக ஒலி எழுப்பும் வாகனங்களால் பேராபத்து ஏற்படும் முன்பு போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி
    • மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் சளித் தொல்லையால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. நேற்று இரவு கடுமையான பனிபொழிவு இருந்த நிலையில் அது இன்று காலை வரை நீடித்தது. அதிகாலை 8 மணி வரை பனிப்பொழிவு காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

    அதிகாலை நேரங்களில் வேலைக்கு செல்ல தயாரான பொதுமக்கள் சிரமப்பட்டனர்.அரசு பஸ்களில் டிரைவர்கள் காலை 8 மணி வரை முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனம் ஒட்டி சென்றனர். எதிரே வந்த வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. இருசக்கர வாகன ஓட்டிகள் குளிரில் நடுங்கினர். குறிப்பாக கிராமப்புறங்களில் பனிபொழிவு அதிகமாக காணப்பட்டது.

    வயல்வெளி பகுதி களிலும் பனிபடர்ந்து இருந்தது. தேரூர், அரும நல்லூர், பூதப்பாண்டி, சுசீந்திரம், பொற்றையடி, அஞ்சுகிராமம் பகுதிகளில் பனிபொழிவு அதிகமாக காணப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு குளிர் காற்று வீசியது. அதிகாலையில் பனிபொழிவு ஒருபுறம் இருக்க மதியம் சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தி வருகிறது.

    இந்த சீதோஷ்ண நிலை மாற்றத்தின் காரணமாக பொதுமக்கள் சளி தொல்லையால் அவதிப்பட்டு வருகிறார்கள். சளி தொல்லையின் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். சளி தொல்லை அதிகமாக இருப்பதால் வைரஸ் காய்ச்சலும் பரவி வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் வழக்கத்தை விட புறநோயாளிகளின் வருகை அதிகமாக உள்ளது .மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் சளித் தொல்லையால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    • நாமக்கல் நகரப் பகுதியில் இன்று காலை கடும் பனிப்பொழிவு நிலவியது.
    • காலை 7 மணி வரை பனி மூட்டம் இருந்ததால் சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றன.

    நாமக்கல்:

    நாமக்கல் நகரப் பகுதியில் இன்று காலை கடும் பனிப்பொழிவு நிலவியது. வழக்கத்திற்கு மாறாக பனி மூட்டம் மிகுந்து காணப்பட்டது. அருகே இருப்பவர்கள் யார் என தெரியாத அளவிற்கு பனி மூட்டம் இருந்தது.

    காலை 7 மணி வரை பனி மூட்டம் இருந்ததால் சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றன. கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் அன்றாட வேலைக்கு சென்றனர்.

    நகரப் பகுதி கோடை வாசஸ்தலம் போல் காட்சியளித்த நிலையில், கடும் குளிரால் மக்கள் தவிப்புக்கு உள்ளாகினர்.

    • தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நேற்று கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பேசிய ஒன்றியக்குழு துணைத்தலைவர் சீனிவாசன் துட்டம்பட்டி ஊராட்சியில் 1 ஏக்கர் பரப்பளவில் வனத்துறை சார்பில் மரகத பூஞ்சோலை அமைக்க அனுமதி வழங்கியதற்கு பாராட்டு தெரிவித்து பேசினார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நேற்று கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் சுமதிபாபு தலைமை தாங்கினார். ஆணை யாளர்கள் விஜயலட்சுமி, ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக கூட்டத்தில் பேசிய ஒன்றியக்குழு துணைத்தலைவர் சீனிவாசன் துட்டம்பட்டி ஊராட்சியில் 1 ஏக்கர் பரப்பளவில் வனத்துறை சார்பில் மரகத பூஞ்சோலை அமைக்க அனுமதி வழங்கியதற்கு பாராட்டு தெரிவித்து பேசினார்.

    அதனை தொடர்ந்து பேசிய தலைவர் சுமதிபாபு, பல்வேறு ஊராட்சிகளில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடாக பயனாளிகள் பட்டியல் சேர்க்கபட்டு பணி நடை பெறுவதாக குற்றம் சாட்டி னார். அதற்கு பதில் அளித்து பேசிய ஆணையாளர் ரவிச்சந்திரன் ஊராக வேலை திட்டத்தில் பயனாளிகள் சேர்க்கை குறித்து கண்டறியபட்டால் சம்பந்தபட்ட ஊராட்சி நிவாகத்தின் மீதும், பணித்தள பொறுப்பாளர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    தொடர்ந்து பேசிய தலைவர் சுமதிபாபு, துறை சார்ந்த அதிகாரிகள் பெரும்பாலானோர் கூட்டத்திற்கு வருவது இல்லை. இதனால் துறை சார்ந்த விளக்கம் கேட்டு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்றும், அனைவரும் ஒன்றிய குழு கூட்டத்திற்கு தவறா மல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

    தொடர்ந்து கூட்டதில் சேலம் மேற்கு சட்ட மன்ற உறுப்பினர் கோரிக்கை யின் படி தாரமங்கலம் ஊராட்சி யில் உள்ள அழகுசமுத்திரம், கருக்கல்வாடி, கோண கப்பாடி ஆகிய ஊரட்சி களை பிரித்து ஓமலூர் ஒன்றியத்தில் உள்ள 8 ஊரட்சிகளை பிரித்து முத்துநாயக்கன்பட்டியை தலைமை இடமாக கொண்டு புதிய ஒன்றியம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு அனுமதி கூடாது என்று ஊராட்சி கவுன்சி லர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தீர்மானம் நிராக ரிக்கப்பட்டது.

    • மார்கழி மாதம் இன்று பிறந்த நிலையில் நாமக்கலில் கடும் பனி மூட்டம் நிலவியது.
    • அதிகாலை முதல் பனிமூட்டம் இருந்ததால் சாலை முழுவதும் மேகம் போல் பனி படர்ந்து இருந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்த நிலையில் மார்கழி மாதம் இன்று பிறந்த நிலையில் நாமக்கலில் கடும் பனி மூட்டம் நிலவியது.

    அதிகாலை முதல் பனிமூட்டம் இருந்ததால் சாலை முழுவதும் மேகம் போல் பனி படர்ந்து இருந்தது. இதனால் அருகில் இருப்பவர்கள் கூட பார்க்க முடியாமல் நிலை காணப்பட்டது. வாகனங்கள் சாலையில் முகப்ப விளக்கை எரிய விட்டபடியே சென்றன. ராசிபுரம், மோகனூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் இதே போல் பனிமூட்டம் இருந்தது. பனி காரணமாக கடும் குளிர் நிலவியது. காலை 8 மணிக்கு மேல் தான் வெயில் வந்தது. குளிரால் பொது மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது. பனி பொழிவு அதிகாமாக இருந்தாலும், இன்று வெயிலின் தாக்கமும் அதிகரித்து காணப்பட்டது.

    • பொதுமக்கள் பாதிப்பு- வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
    • மெதுவான வேகத்தில் வாகனங்களை இயக்கிச் செல்கிறார்கள்.

     ஊட்டி :

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    இதற்கிடையே காலை, மாலை நேரங்களில் பனிப்பொழிவும் அதிகமாக உள்ளது. மழையுடன், பனிப்பொழிவும் காணப்படுவதால் நீலகிரி மாவட்டத்தில் தற்போது கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    கடும் குளிரால் பள்ளி செல்லும் குழந்தைகள் நடுங்கியபடி பள்ளிக்கு செல்கின்றனர். முதியவர்கள் மற்றும் பெண்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது.அதேசமயம் ஊட்டிக்கு சுற்றுலா வரும் சுற்றுலாபயணிகள் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

    ஊட்டி - மேட்டுபாளையம் வரை சாலையில் கடும் பனிமூட்டம் சூழ்ந்துள்ளது. பனி மூட்டத்தால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    காலை 8 மணிக்கு பிறகும் வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவான வேகத்தில் வாகனங்களை இயக்கிச் செல்கிறார்கள்.

    இன்று காலை வெகு நேரமாகியும் வெயில் தென்படாத நிலையில், குளிர் அதிகமாக காணப்பட்டது. இந்த காலநிலை மாற்றத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    • பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விசேஷங்கள் இல்லாததால் பூவன் வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி.
    • கடந்த வாரம் நடைபெற்ற பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.600க்கு விற்பனையானது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பொத் தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், அண்ணா நகர், பிலிக்கல் பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், நன்செய் இடையாறு, குப்புச்சிபாளையம், பால ப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக் கணக்கான ஏக்கர் பரப்பில் விவசாயிகள் பூவன், வாழை, ரஸ்தாலி, பச்ச நாடன், கற்பூரவல்லி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு ரகமான வாழைகளை பயிரிட்டுள்ளனர்.

    வாழைத்தார்கள் நன்கு விளைந்தவுடன் கூலி ஆட்கள் மூலம் வாழைத்தார்களை வெட்டி உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு வாழைத்தார்களை விற்பனை செய்து வருகின்றனர்.

    அதேபோல் வியா பாரிகள் வாழைத் தோப்பு களிலேயே நேரடியாக வாங்கி செல்கின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.600-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.450-க்கும், பச்சநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் தார் ஒன்று ரூ.400-க்கும் மொந்தன் வாழைத்தார் ஒன்று ரூ.550க்கும் வாங்கிச் சென்றனர். நேற்று பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.250-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் தார் ஒன்று ரூ.350-க்கும், பச்சநாடன் வாழைத்தார் தார் ஒன்று ரூ.200-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் தார் ஒன்று ரூ.300-க்கும், மொந்தன் வாழைத்தார் ஒன்று ரூ.400க்கும் வாங்கிச் சென்றனர்.

    திருமண முகூர்த்தங்கள், கோவில் விசேஷங்கள் இல்லாததால் பூவன் வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித் தனர்.

    • தாரமங்கலம் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.வினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
    • மேலும் கூட்டத்தில் அத்தியாவசிய திட்டப்பணிகள் குறித்த செலவுகளுக்கு தீர்மானம் நிறைவேற்றபட்டது.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சி மன்ற கூட்டம் நேற்று கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரமன்றத்தலைவர் குப்பு என்கிற குணசேகரன் தலைமை தாங்கினார். ஆணையாளர் மங்கையர்கரசன், துணைத்தலைவர் தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கடந்த 3 மாதங்களில் சுகாதார பணிகளுக்கு தேவையான பினாயில், சுண்ணாம்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்கியதற்கான அனுமதி கோரி மன்ற பொருளில் அனுமதிக்கு வைக்கப்பட்டது.

    அப்போது கடந்த 3 மாதங்களில் மன்ற உறுப்பினர்கள் யாருடைய அனுமதியும் இன்றி பல லட்சம் ரூபாய்க்கு பொருட்கள் வாங்கியதாக கணக்கு காட்டுவதில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது என்று கூறி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பாலசுப்பிரமணியம், ருக்மணி, சின்னுசாமி, தமிழ்செல்வி ஆகியோர் ஆணையாளரிடம் வாக்குவாதம் செய்தனர் .

    இதை தொடர்ந்து பொருட்கள் வாங்கியதற்கான பில் மற்றும் கணக்குகள் குறித்து ஆதாரத்துடன் உரிய விளக்கம் கொடுக்கப்பட்டது. பின்னர் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அமைதியாக அமர்ந்தனர். மேலும் கூட்டத்தில் அத்தியாவசிய திட்டப்பணிகள் குறித்த செலவுகளுக்கு தீர்மானம் நிறைவேற்றபட்டது.

    ×