search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wife"

    • அன்பாக கவனித்து வந்த மனைவி இறந்ததால் அவரது பிரிவை சுப்பிரமணியனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
    • நாள் முழுவதும் தன் வாழ்வில் என்னென்ன நடந்தது என்பதை கல்லறை முன்பு கூறுவார்.

    கோவை:

    கணவன்-மனைவி அன்பு என்பது ஆத்மார்த்தமானது. அன்பான மனைவிக்கு கணவனிடம் உள்ள அன்பு போற்றத்தக்கது. ஏதோ ஒரு காரணத்தால் தங்கள் துணை இறந்த பிறகு அவர்களை மறக்க முடியாமல் தவிக்கும் கணவன், மனைவியை இன்றும் பார்க்கிறோம்.

    அதேபோல் இறந்த தன் மனைவியை மறக்க முடியாமல் அவரது கல்லறைக்கு தினமும் சென்று வழிபட்டு வருகிறார் கோவையைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி. கோவை ரத்தினபுரியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 55). இவரது மனைவி சரோஜினி. இவர் கணவர் சுப்பிரமணியன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். இதனால் இவர்களது இல்லற வாழ்வு மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது.

    இந்நிலையில் சரோஜினி உடல் நலக்குறைவால் திடீரென மரணம் அடைந்தார். தினமும் அன்பாக கவனித்து வந்த மனைவி இறந்ததால் அவரது பிரிவை சுப்பிரமணியனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மனைவியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மறுநாள் முதல் அவரது கல்லறைக்கு சுப்பிரமணியன் செல்லத் தொடங்கினார். தினமும் வேலைக்கு செல்வதற்கு முன்பாக காலையில் சரோஜினியின் கல்லறைக்கு செல்வதை வழக்கமாக கொண்டார். அங்கு கல்லறை முன்பு விளக்கேற்றி வழிபட்டு விட்டு வேலைக்கு செல்வார்.

    பின்னர் மாலையிலும் கல்லறைக்கு சென்று வணங்குவார். அப்போது அன்று நாள் முழுவதும் தன் வாழ்வில் என்னென்ன நடந்தது என்பதை கல்லறை முன்பு கூறுவார். சரோஜினி இறந்தாலும் தன்னுடனேயே வாழ்வதாக எண்ணி இவ்வாறு அவர் பேசி வருகிறார்.

    தனது மனைவி மீது சுப்பிரமணியன் கொண்டுள்ள அன்பை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். இதுபற்றி சுப்பிரமணியன் கூறுகையில் என் மனைவி சரோஜினி, அதிக பாசத்துடன் என்னை கவனித்து வருகிறார். அவரது இழப்பை என்னால் தாங்க முடியவில்லை. ஷாஜகான் தனது மனைவிக்காக தாஜ்மகால் கட்டியது போல் எனது மனைவிக்காக நானும் எதாவது ஒன்று செய்ய வேண்டும் என்பது லட்சியமாக உள்ளது. விரைவில் அதனை செய்து முடிப்பேன் என்றார்.

    • மாதேஷ் என்பவரின் மனைவி பவித்ரா என்ப வருடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த வாரம் பவித்ரா மற்றும் அவருடைய 1½ வயது குழந்தையுடன் ஓட்டம் பிடித்தார்.
    • கடந்த 13- ந்தேதி நடந்த மோதலில் 7 பேர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகி லுள்ள ஆரூர்பட்டியை அடுத்த பூமிரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த சரவணன் மகன் கோபி (32). இவருக்கு அதே பகுதியைசேர்ந்த மாதேஷ் என்பவரின் மனைவி பவித்ரா என்ப வருடன் பழக்கம் ஏற்பட்டது.

    கடந்த வாரம் பவித்ரா மற்றும் அவருடைய 1½ வயது குழந்தையுடன் ஓட்டம் பிடித்தார். இவர்களை மீட்டு வந்த போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கடந்த 13- ந்தேதி நடந்த மோதலில் 7 பேர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று பவித்ராவின் தந்தை சிவா என்பவர் அடையாளம் தெரியாத 3 பேருடன் கோபி யின் வீட்டிற்கு சென்று கோபியின் பெற்றோரிடம் ஆகியோருடன் தகராறு செய்தனர். இதை அறிந்த கோபியின் பெரியப்பா மகன் கார்த்திக் தட்டி கேட்டார்.

    அப்போது சிவா மற்றும் அவருடன் வந்த நபர்கள் கார்த்திக்கை கடுமையாக தாக்கினர். காயமடைந்த கார்த்திக் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளர். இது பற்றி கார்த்திக் கொடுத்த புகாரின் பேரில் சிவா மற்றும் அவருடன் வந்தவர்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரோகிணி அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை கணவர் பிரகாஷ் நேற்று இரவு கண்டித்துள்ளார்.
    • வீட்டின் ஓட்டை பிரித்து பார்த்தபோது, ரோகிணி தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

    சேலம்:

    சேலம் கருப்பூர் அருகே உள்ள மாங்குப்பை பழையூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி ரோகினி (வயது 28). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வருடம் ஆகிறது. 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் ரோகிணி அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை கணவர் பிரகாஷ் நேற்று இரவு கண்டித்துள்ளார்.

    இதனால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ரோகிணி, அருகில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். பிரகாஷ் போன் செய்தும் போனை ரோகிணி எடுக்கவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை மீண்டும் போன் செய்தும் ரோகிணி எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பிரகாஷ், அங்கு சென்று பார்த்தபோது வீடு பூட்டியிருந்தது. அதன் பிறகு வீட்டின் ஓட்டை பிரித்து பார்த்தபோது, ரோகிணி தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரகாஷ், கருப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி 5 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஒ விசாரணை நடத்தி வருகிறார்.

    • மனைவி ஷகிலாவை அனுப்பி வைக்குமாறு சலீம் முகமதுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • எங்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    திருப்பூர் :

    மதுரையை சேர்ந்தவர் சலீம்முகமது (வயது 45). இவரது மனைவி மும்தாஜ். 3 மகள்கள் உள்ளனர். சலீம் முகமது தனது குடும்பத்துடன் திருப்பூர் போயம்பாளையத்தில் வசித்துக்கொண்டு அதே பகுதியில் இறைச்சிக்கடை நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவரது மகள் ஷகிலாவுக்கும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஷபிபுல்லா என்பவருக்கும் திருமணம் நடந்தது. சில நாட்கள் சந்தோஷமாக போய்க்கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் திடீரென்று கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து ஷகிலா, கணவர் ஷபிபுல்லாவை விட்டு பிரிந்து திருப்பூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.

    சம்பவத்தன்று மனைவியை வீட்டுக்கு அழைத்து வர ஷபிபுல்லா, அவரது தந்தை முகமது மீரான், தம்பி அயூப்கான், சகோதரி சபீனா ஆகியோருடன் திருப்பூர் போயம்பாளையத்தில் உள்ள மனைவி வீட்டிற்கு வந்தார்.பின்னர் மனைவி ஷகிலாவை அனுப்பி வைக்குமாறு சலீம் முகமதுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த ஷபிபுல்லாவும் அவரது தம்பியும் சேர்ந்து கிரிக்கெட் மட்டையால் மாமனார் சலீம் முகமதுவை தாக்கினர்.மும்தாஜையும் தாக்கினர். இைதயடுத்து ஷபிபுல்லா உள்ளிட்ட 4 பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.இந்தநிலையில் படுகாயமடைந்த சலீம் முகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் அனுப்பர்பளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.தனிப்படை போலீசார் திண்டுக்கல்லில் பதுங்கியிருந்த ஷபிபுல்லா மற்றும் அவரது தம்பி அயூப்கான் ஆகிய 2 பேரையும் கைது செய்து அனுப்பர்பாளையத்திற்கு அழைத்து வந்தனர். ஷபிபுல்லாவிடம் நடத்திய விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:- எனக்கும் எனது மனைவி ஷகிலாவுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தொடக்க நாட்களில் நாங்கள் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தினோம். சில நேரங்களில் அவ்வப்போது சின்ன சின்ன பிரச்சனைக்காக எங்கள் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. சில வாரங்களுக்கு முன்பு ஷகிலா என்னை விட்டு பிரிந்து திருப்பூர் வந்து விட்டார். இதில் நான் மிகவும் மன உளைச்சல் அடைந்தேன். அவருடன் தொடர்ந்து சேர்ந்து் வாழ வேண்டும் என்று விரும்பினேன். இதனால் எனது அப்பா மற்றும் தம்பி, சகோதரியுடன் திருப்பூர் வந்து மாமனார் வீட்டில் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி மனைவி ஷகிலாவை அனுப்பி வைக்குமாறு கூறினேன். இதற்கு மாமனார் சலீம் முகமது அனுப்ப முடியாது என்று வாக்குவாதம் செய்தார். அப்போது எங்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் கடும் கோபம் அடைந்த நான் அங்கு இருந்த கிரிக்கெட் மட்டையால் அவரை தாக்கினேன்.இதில் அவர் உயிரிழந்து விட்டார். நான் அவரை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இதை செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • தற்போதைய காலக்கட்டத்தில் செல்போன் காதலர்களுக்கு அத்தியாவசியமான பொருளாகிவிட்டது.
    • அந்த இளம்பெண்ணின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    பெங்களூரு :

    'காதல்' என்ற வார்த்தையை வர்ணிக்க முடியாது என்பார்கள் கவிஞர்கள். அதுபோல் காதலை மையமாக வைத்து வந்த ஏராளமான திரைப்படங்கள் வெற்றி அடைந்துள்ளன. கவிஞர்கள் பெருமாலும் ஆணுக்கும், பெண்ணுக்கும் உண்டான காதலை மையப்படுத்தியே கவிதைகள், பாடல்கள் எழுதுவார்கள். அக்காலத்தில் காதல் ஒரு ஊரிலோ அல்லது கிராமத்திலோ தான் இருக்கும்.

    ஒருவரையொருவர் முகம் பார்த்து பேசி பழகி பின்னர் திருமணம் பந்தத்தில் இணைவார்கள். பல காதல்கள் பெற்றோர் எதிர்ப்பு, சாதி, மதம், அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பிரிந்ததும் உண்டு. அது இன்றளவும் நடந்து வருகிறது. ஆனால் தற்போது காதல் கடல் கடந்து கணினி, செல்போன் வாயிலாக காற்றில் பறந்து காதலர்களிடையே இணைப்பை ஏற்படுத்துகிறது. தற்போதைய காலக்கட்டத்தில் செல்போன் காதலர்களுக்கு அத்தியாவசியமான பொருளாகிவிட்டது.

    காதல் என்பது பைத்தியக்காரத்தனம், முட்டாள்தனம், வேலையில்லாதவர்கள் செய்யும் வேலை என்று கூறி பலர் பலவிதங்களில் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் அதையும் மீறி காதலர்கள் தங்களது காதலை வளர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதுபோல் ஏராளமான காதல் ஜோடிகள் தங்கள் காதலில் மட்டுமல்லாது பல எதிர்ப்புகளை மீறி திருமணம் புரிந்து வாழ்விலும் வெற்றி அடைந்திருக்கிறார்கள். அந்த வகையில் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு இளம்பெண் தனது கணவர் மீதான அதீத காதலை வெளிப்படுத்தும் வகையில் ஒரு வினோத செயலை செய்திருக்கிறார்.

    அதாவது அந்த இளம்பெண் தனது கணவரின் பெயரான 'சதீஷ்' என்ற பெயரை தன்னுடைய நெற்றியில் பச்சை குத்திக் கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டார்.

    அந்த புகப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து 2.68 லட்சத்திற்கும் மேற்பட்டோர் 'லைக்' செய்துள்ளனர். சிலர் 'இதுதான் உண்மையான காதல்' என்றும், சிலர் 'இது ஓவர் ஆக்டிங்' என்றும் தங்கள் கருத்தை பதிவிட்டுள்ளனர். ஆனால் அந்த கருத்துகளுக்கு இளம்பெண் பதில் ஏதும் கூறவில்லை. தனது கணவர் மீதான அதீத அன்பையும், காதலையும் வெளிப்படுத்தவே தான் இதுபோன்று செய்ததாக அந்த இளம்பெண் தெரிவித்துள்ளார். தற்போது அந்த இளம்பெண்ணின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • வீட்டில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி ஆகியவற்றை அவர்களிடம் கொடுத்துள்ளார்.
    • கடந்த இரண்டு மாதமாக திரும்பி வரவில்லை.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பருவாய் கிராம் குழிகாட்டு தோட்டத்தை சேர்ந்தவர் சின்னச்சாமி (65) விவசாயி, இந்த நிலையில் இவரது வீடு அருகே பக்கத்து வீட்டில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிவா, லட்சுமி என்ற தம்பதிகள் கடந்த ஆறு மாத காலமாக குடியிருந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த மார்ச் 16 ந்தேதி அன்று அவசரமாக கிருஷ்ணகிரி செல்ல வேண்டி இருப்பதாகவும், செலவுக்கு பணம் தேவைப்படுவதாகவும், அவர்களிடம் உள்ள ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டியை வைத்துக்கொண்டு, ரூ. 2 லட்சம் பணம் தருமாறு சின்னச்சாமியை அவர்கள் கேட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் பேச்சை நம்பி அவர்கள் கொடுத்த தங்கக் கட்டியை வாங்கிக்கொண்டு, அவர்களுக்கு ரூ 1.40 லட்சம் பணம் மற்றும் வீட்டில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி ஆகியவற்றை அவர்களிடம் கொடுத்துள்ளார். அதனைப் பெற்றுக் கொண்டு, ஊருக்குச் சென்று விட்டு ஒரு வார காலத்தில் திரும்பி வருவதாக சென்ற அவர்கள், கடந்த இரண்டு மாதமாக திரும்பி வரவில்லை. இதையடுத்து, சின்னச்சாமி அவர்களது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் என்ன வந்ததாக கூறப்படுகிறது. இதை எடுத்து அவர்கள் கொடுத்த தங்கக் கட்டியை நகைக்கடைக்கு எடுத்துச் சென்று சோதனை செய்து பார்த்தபோது அது தங்க முலாம் பூசிய உலோகம் என்பது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தன்னை ஏமாற்றியது குறித்து காமநாயக்கன் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தங்கக் கட்டி என மோசடி செய்த அந்த தம்பதிகளை வீசி தேடி வருகின்றனர்.

    • கருத்து வேறுபாடுகா ரணமாக மனைவி, இரு மகன்களை அழைத்து க்கொண்டு பிரிந்து சென்றார்.
    • சிவஞானசுந்தரம் தங்கியிருந்த அறையில் துர்நாற்றம் வீசியது.

    திருப்பூர் :

    திருப்பூர், காந்தி நகர், லட்சுமி தியேட்டர் ரோடுபகுதியை சேர்ந்தவர் சிவஞான சுந்தரம், ( வயது 50). தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கருத்து வேறுபாடுகா ரணமாக மனைவி, இரு மகன்களை அழைத்து க்கொண்டு பிரிந்து சென்றார். இதனால் ஆசிரியர் சிவஞானசுந்தரம் மட்டும் தனியாக தங்கி இருந்து பள்ளிக்கு சென்று இந்த நிலையில் அவர் தங்கியிருந்த அறையில் நேற்று துர்நாற்றம் வீசியது.இது குறித்து அக்கம் பக்கத்தினர் வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கதவை உடைத்துபார்த்த போது அங்கு ஆசிரியர் சிவஞானசுந்தரம் தூக்கு போட்டு தற்கொலைசெய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவர் தங்கியிருந்த அறையில் சோதனை நடைபெற்ற போது அங்கு ஒரு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என எழுதிவைக்கப்பட்டிருந்து. கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 2010ம் ஆண்டு, குடும்ப பிரச்சினையில் இருவரிடையே தகராறு ஏற்பட்டது.
    • வழக்கு திருப்பூர் ஜே.எம்.எண் 1 கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    மணப்பாறை, சுக்கம்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(48).இவர் திருப்பூர் கோல்டன்நகரில் மனைவி சாந்தியுடன் வசித்து வந்தார்.கடந்த 2010ம் ஆண்டு, குடும்ப பிரச்சினையில் இருவரிடையே தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி கத்தியால் சாந்தியை குத்திக் காயப்படுத்தினார்.இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.இவ்வழக்கு திருப்பூர் ஜே.எம்.எண் 1 கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ஜாமினில் வெளி வந்த கிருஷ்ணமூர்த்தி, 2012ம் ஆண்டுக்குப் பின் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார்.இந்நிலையில் அவருக்கு கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்து, போலீசார் அவரைத் தேடி வந்தனர்.

    இதையறிந்த கிருஷ்ணமூ ர்த்தி, திருப்பூர் ஜே.எம்.எண் 1 கோர்ட்டில் சரணடைந்தார். பின்னர் அவர் திருப்பூர் மாவட்ட சிறையில் அடைக்க ப்பட்டார்.

    • பணத்திற்கு ஆசைப்பட்டுகணவன்-மனைவி நிதி நிறுவனத்தில் கையாடல் செய்து பணம் மோசடி செய்துள்ளனர்.
    • இது குறித்து நடவடிக்க வேண்டும் என நிர்வாகிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து புகார் மனு கொடுத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு, கருங்கல்பாளையத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்த பொது மேலாளர் மாரிமுத்து(42) என்பவர் தலைமையில் நிர்வாகிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து புகார் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

    நாங்கள் ஈரோடு, கருங்கல்பாளையம் நியூ ஸ்டேட் பேங்க் காலனியில் தலைமை இடமாக வைத்து நிதி நிறுவனம் நடத்தி வருகிறோம். எங்களுக்கு ஈரோடு, பவானி, ஓமலூர், சங்ககிரி, அரச்சலூர், மற்றும் அம்பாசமுத்திரம் என 6 இடங்களில் எங்கள் கிளைகள் உள்ளன.

    எங்கள் நிறுவனத்தில் சேலம் மாவட்டம் சங்ககிரி, தேவன்ன கவுண்டனூர் பகுதியை சேர்ந்த ஒருவர் பணிபுரிந்து வந்தார். அவர் சொல்பவர்கள் எல்லாம் எங்கள் நிறுவனத்திற்கு வரச்சொல்லி ஆவணங்களை சரிபார்த்து பெற்றுக்கொண்டு பணத்தை அவரிடம் வழங்கினோம்.

    அவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அவர்கள் திருமணத்தையும் நாங்களே தலைமையேற்று நடத்தி வைத்தோம். இந்நிலையில் பணத்திற்கு ஆசைப்பட்டு இருவரும் எங்கள் நிதி நிறுவனத்தில் கையாடல் செய்து பணம் மோசடி செய்துள்ளனர்.

    இருவரும் 3 மாதத்திற்குள் எங்கள் நிதி நிறுவனம் இடமிருந்து ரூ.19 லட்சத்து 37 ஆயிரத்து 325 ரூபாயை மோசடி செய்து கையாடல் செய்து உள்ளனர். இது குறித்து அவர்களிடம் கேட்டபோது முறையாக பதில் சொல்லாமல் உள்ளனர்.

    எனவே அவர்கள் இருவர் மீதும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

    பாகிஸ்தானில் திருமண வயது வராத மகளை ஒரு லட்ச ரூபாய்க்காக திருமணம் செய்து கொடுக்க முயன்ற போது தடுத்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    டாடு :

    பாகிஸ்தானின் லக்கி ஷா சதார் பகுதியைச் சேர்ந்தவர் சுல்பிகர் ஜிஸ்கானி. இவரது மனைவி பாப்லி ஜிஸ்கானி. சுல்பிகர் ரூ. 1 லட்சத்திற்காக தனது மகள் ஹுமேராவை ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முயன்றுள்ளார். இதைத் தடுத்த பாப்லியை சுல்பிகர் கழுத்தை நெறித்து கொன்றுள்ளார்.

    இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து பாப்லியின் சகோதரர் முனவ்வர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சுல்பிகரை கைது செய்துள்ளனர். மேலும் ஏற்கெனவே, சுல்பிகர் தன்னுடைய இரண்டு மகள்களையும் இதுபோல பணத்திற்காக விற்று விட்டதாகவும் முனவ்வர் தெரிவித்துள்ளார்.

    விரைவில் இதுகுறித்த விசாரணை தொடங்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். செஹ்வான் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, பாப்லி ஜிஸ்கானியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
    மனைவியை அடித்து உதைத்த கணவன், கள்ளக்காதலி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகில் உள்ள வனிச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுந்தரம்(வயது37) இவரது மனைவி ரேவதி (27).  சுந்தரம் டெம்போ டிரைவராக வேலை செய்து வருகிறார் .

    இந்நிலையில் சுந்தரத்திற்கு பவளத்தானுர் பகுதியில் பழக்கடை வைத்து இருக்கும் கண்ணம்மா (35) என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் சுந்தரம் கண்ணம்மாளின் பழக்க–டையில் இருந்து கொண்டு தனது வீட்டிற்கு செல்வதை தவிர்த்து வந்துள்ளார் .

    இந்நிலையில் ரேவதி கணவர் சுந்தரத்தை பல முறை கண்டித்துள்ளார்.இருந்தும் சுந்தரம், கண்ணம்மாள் இருவருக்கும் இடையே பழக்கம் நீடித்து வந்துள்ளது.இதனால் ஆத்திரம் அடைந்த ரேவதி  கணவரை தேடி பவளத்தா–னுர் பகுதிக்கு வந்துள்ளார்.

    அப்போது சுந்தரமும் ,கண்ணம்மாளும் பழக்கடை–யில் ஒன்றாக வியாபாரம் செய்துகொண்டு இருந்ததை பார்த்த ரேவதி இருவரையும் கண்டித்துள்ளார் .இதனால் ஆத்திரமடைந்த கணவர் சுந்தரமும் கண்ணம்மாளும் இங்கு எதற்கு வந்தாய் என்றுகூறி ரேவதியை அடித்து உதைத்துள்ளனர்.

    இதுபற்றி ரேவதி கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் சுந்தரம் மற்றும் கண்ணம்மாள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், ஆரம்பத்தில் கண்டறிந்தால் எளிதில் தீர்க்க முடியும். வாழ்க்கைத் துணைக்கு எப்போதும் தனிப்பட்ட சுதந்திரத்தை அளித்தால் வாழ்க்கை சோலைவனமாக மாறும்.
    கணவன்-மனைவி இருவரும் இணைந்து வாழ்ந்தாலும், தனிமையான நேரங்கள், தனிப்பட்ட விருப்பங்கள் போன்றவை முக்கியமானவை. இருவரில், ஒருவரது தனிப்பட்ட சுதந்திரத்தில் இடையூறு ஏற்பட்டாலும், உறவில் விரிசல் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆரம்பத்திலேயே சிக்கலை கண்டுபிடித்து சீர்செய்வதன் மூலம், உறவை மகிழ்ச்சியாக நீட்டிக்கலாம். எத்தகைய நேரங்களில் தனிமை தேவைப்படும் என்பதை இங்கே காண்போம்.

    விரக்தியாக இருத்தல்:

    உங்கள் வாழ்க்கைத்துணை இறுக்கமாக இருக்கும் தருணங்களில், யாருடனும் பேசாமல் தனிமையில் இருக்கவே தோன்றும். ஏதோ ஒரு பொருளை இழந்ததுபோல், விரக்தியுடனே இருப்பார்கள். எந்த விஷயத்திலும் கவனம் செலுத்தாமல் இருப்பது போலத் தோன்றும். எதைக் கேட்டாலும், எரிச்சலுடன் கோபமடைவார்கள். இத்தகைய சமயங்களில் அவர்களோடு வாதிடாமல், சற்று அமைதியாக இருப்பது அவசியம்.

    மகிழ்ச்சியான தருணங்களை ஒதுக்குதல்:

    இதுநாள் வரை வாழ்க்கைத் துணையுடன் இணைந்து, வார இறுதி நாட்களில், வெளியிடங்களுக்கு செல்லவோ, மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்கவோ திட்டமிட்டிருக்கலாம். ஆனால், உங்கள் வாழ்க்கைத் துணை, அவரின் தனிப்பட்ட சுதந்திரம் பறிபோவதாக உணரும்போதோ அல்லது, அவருக்கான ஆசை, விருப்பம் நிறைவேறாமல் பறிபோவதாக நினைத்தாலோ அதற்கு ஏற்ப நடந்து கொள்வது அவசியம். வழக்கமாக நீங்கள் போடும் திட்டங்களைத் திடீரென பொய்க்காரணம் கூறி ரத்து செய்யலாம். இது ஒரு முறை நடக்கும்போது, பெரிது படுத்த தேவையில்லை. அதுவே, தொடரும்போது, கட்டாயம் அதில் கவனம் செலுத்தி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.

    எதையும் விவாதிக்க மாட்டார்:

    அலுவலகத்தில் நடப்பவை, குடும்பத்தில் நடப்பவை என அனைத்து விஷயங்களையும் தினமும் உங்களுடன் பகிர்ந்து கொள்வது உங்கள் வாழ்க்கைத்துணையின் வழக்கமாக இருக்கலாம். ஆனால், அவரின் தனிப்பட்ட விருப்பங்கள் மறுக்கப்படும்போது, அவருக்குள் ஏற்படும் மாறுபாட்டால், அதை உங்களிடம் விவாதிக்க விரும்பாமல் மறுக்கலாம். அவ்வாறு இருக்கும்போது அவரிடம், மேற்கொண்டு எதையும் கேட்டு சங்கடத்தை ஏற்படுத்தாமல், இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை அமைதியாய் இருப்பது நல்லது.

    காரணமின்றி சண்டை போடுதல்:

    வாழ்க்கைத் துணையிடம் சண்டையிடுவது இயல்புதான். ஆனால், அதற்கும் நியாயமான காரணம் இருக்க வேண்டும். எந்தக் காரணமும் இல்லாமல், அனைத்து விஷயங்களுக்கும் எப்போதும் சண்டையிட்டு, பிரச்சினையைப் பெரிதாக்க முயல்வதாகத் தெரிந்தால், வாழ்க்கைத் துணைக்குச் சற்று அமைதி தேவை என புரிந்து கொள்ளுங்கள். அப்போது, அங்கிருந்து விலகி சில மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்க முயலுங்கள். மேலும், துணைக்கு எந்த வகையில், சுதந்திரம் தேவை என்பதைக் கேட்டுத் தெளிவடைவது சிறந்தது.

    எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், ஆரம்பத்தில் கண்டறிந்தால் எளிதில் தீர்க்க முடியும். வாழ்க்கைத் துணைக்கு எப்போதும் தனிப்பட்ட சுதந்திரத்தை அளித்தால் வாழ்க்கை சோலைவனமாக மாறும்.
    ×