search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இன்னொருவர் மனைவியை அபகரித்த பிரச்சினையில் மேலும் 4 பேர் மீது வழக்கு
    X

    இன்னொருவர் மனைவியை அபகரித்த பிரச்சினையில் மேலும் 4 பேர் மீது வழக்கு

    • மாதேஷ் என்பவரின் மனைவி பவித்ரா என்ப வருடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த வாரம் பவித்ரா மற்றும் அவருடைய 1½ வயது குழந்தையுடன் ஓட்டம் பிடித்தார்.
    • கடந்த 13- ந்தேதி நடந்த மோதலில் 7 பேர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகி லுள்ள ஆரூர்பட்டியை அடுத்த பூமிரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த சரவணன் மகன் கோபி (32). இவருக்கு அதே பகுதியைசேர்ந்த மாதேஷ் என்பவரின் மனைவி பவித்ரா என்ப வருடன் பழக்கம் ஏற்பட்டது.

    கடந்த வாரம் பவித்ரா மற்றும் அவருடைய 1½ வயது குழந்தையுடன் ஓட்டம் பிடித்தார். இவர்களை மீட்டு வந்த போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கடந்த 13- ந்தேதி நடந்த மோதலில் 7 பேர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று பவித்ராவின் தந்தை சிவா என்பவர் அடையாளம் தெரியாத 3 பேருடன் கோபி யின் வீட்டிற்கு சென்று கோபியின் பெற்றோரிடம் ஆகியோருடன் தகராறு செய்தனர். இதை அறிந்த கோபியின் பெரியப்பா மகன் கார்த்திக் தட்டி கேட்டார்.

    அப்போது சிவா மற்றும் அவருடன் வந்த நபர்கள் கார்த்திக்கை கடுமையாக தாக்கினர். காயமடைந்த கார்த்திக் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளர். இது பற்றி கார்த்திக் கொடுத்த புகாரின் பேரில் சிவா மற்றும் அவருடன் வந்தவர்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×