search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாமனார்"

    • கூலி தொழிலாளியான சரவணன் தனலட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்தார்.
    • விசாரணை நடத்திய போது சரவணன், மருதையை கல்லால் தாக்கி கொலை செய்து உடலை அங்கு வீசி சென்றது தெரிய வந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நாகியம்பட்டி ஆண்டிக்குட்டைய சேர்ந்தவர் மருதை (வயது 60) இவர் தனது மகள் தனலட்சுமியை கடநத 15 ஆண்டுகளுக்கு முன்பு கெங்கவல்லி அருகே உள்ள உலி புரம் புங்கமரத்துக்காடு பகுதியை சேர்ந்த சரவணன் (40) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். இவர்களுக்கு 12 மற்றும் 5 வயதில் 2 மகள்களும், 9 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

    கூலி தொழிலாளியான சரவணன் தனலட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்தார். நேற்று முன்தினம் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த சரவணன் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கினார். இதனால் கோபித்து கொண்டு தனலட்சுமி நாகியம்பட்டியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.

    அன்று இரவு 10 மணியளவில் நாகியம்பட்டி சென்ற சரவணன் தனது மாமனார் மருதையிடம் மனைவியை தன்னுடன் அனுப்புமாறு கூறினார். நீ சந்தேகப்பட்டு அடிப்பதால் அவளை உன்னுடன் அனுப்ப முடியாது, நீ இங்கிருந்து சென்று விடு என்று கூறினார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து அவர் தகராறு செய்ததால் அருகில் கிடந்த கம்பை எடுத்து பின்னால் விரட்டியுள்ளார். அதன் பிறகு அவர் திரும்பி வரவில்லை.

    இந்நிலையில் நேற்று அங்குள்ள அய்யப்பன் கோவில் அருகில் இருக்கும் ஆலமரத்தின் அடியில் மருதை பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அந்த பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் தம்மம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்திய போது சரவணன், மருதையை கல்லால் தாக்கி கொலை செய்து உடலை அங்கு வீசி சென்றது தெரிய வந்தது.

    போலீசார் சரவணனை தேடிய போது தலைமறைவானதும், கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பின்னூர் பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.

    அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது-

    எனது மனைவி என்னுடன் கோபித்து கொண்டு அவரது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டாள். அவளை நான் அழைக்க சென்றபோது எனது மாமனார் மருதை என்னை அடித்து விரட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் காட்டுப்பகுதியில் வைத்து அவரை கல்லால் தாக்கினேன், இதில் காயம் அடைந்த அவர் இறந்துவிட்டார், அங்கிருந்து தப்பி கேரளா சென்றேன், ஆனால் போலீசார் என்னை கைது செய்துவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மனைவி ஷகிலாவை அனுப்பி வைக்குமாறு சலீம் முகமதுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • எங்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    திருப்பூர் :

    மதுரையை சேர்ந்தவர் சலீம்முகமது (வயது 45). இவரது மனைவி மும்தாஜ். 3 மகள்கள் உள்ளனர். சலீம் முகமது தனது குடும்பத்துடன் திருப்பூர் போயம்பாளையத்தில் வசித்துக்கொண்டு அதே பகுதியில் இறைச்சிக்கடை நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவரது மகள் ஷகிலாவுக்கும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஷபிபுல்லா என்பவருக்கும் திருமணம் நடந்தது. சில நாட்கள் சந்தோஷமாக போய்க்கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் திடீரென்று கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து ஷகிலா, கணவர் ஷபிபுல்லாவை விட்டு பிரிந்து திருப்பூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.

    சம்பவத்தன்று மனைவியை வீட்டுக்கு அழைத்து வர ஷபிபுல்லா, அவரது தந்தை முகமது மீரான், தம்பி அயூப்கான், சகோதரி சபீனா ஆகியோருடன் திருப்பூர் போயம்பாளையத்தில் உள்ள மனைவி வீட்டிற்கு வந்தார்.பின்னர் மனைவி ஷகிலாவை அனுப்பி வைக்குமாறு சலீம் முகமதுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த ஷபிபுல்லாவும் அவரது தம்பியும் சேர்ந்து கிரிக்கெட் மட்டையால் மாமனார் சலீம் முகமதுவை தாக்கினர்.மும்தாஜையும் தாக்கினர். இைதயடுத்து ஷபிபுல்லா உள்ளிட்ட 4 பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.இந்தநிலையில் படுகாயமடைந்த சலீம் முகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் அனுப்பர்பளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.தனிப்படை போலீசார் திண்டுக்கல்லில் பதுங்கியிருந்த ஷபிபுல்லா மற்றும் அவரது தம்பி அயூப்கான் ஆகிய 2 பேரையும் கைது செய்து அனுப்பர்பாளையத்திற்கு அழைத்து வந்தனர். ஷபிபுல்லாவிடம் நடத்திய விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:- எனக்கும் எனது மனைவி ஷகிலாவுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தொடக்க நாட்களில் நாங்கள் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தினோம். சில நேரங்களில் அவ்வப்போது சின்ன சின்ன பிரச்சனைக்காக எங்கள் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. சில வாரங்களுக்கு முன்பு ஷகிலா என்னை விட்டு பிரிந்து திருப்பூர் வந்து விட்டார். இதில் நான் மிகவும் மன உளைச்சல் அடைந்தேன். அவருடன் தொடர்ந்து சேர்ந்து் வாழ வேண்டும் என்று விரும்பினேன். இதனால் எனது அப்பா மற்றும் தம்பி, சகோதரியுடன் திருப்பூர் வந்து மாமனார் வீட்டில் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி மனைவி ஷகிலாவை அனுப்பி வைக்குமாறு கூறினேன். இதற்கு மாமனார் சலீம் முகமது அனுப்ப முடியாது என்று வாக்குவாதம் செய்தார். அப்போது எங்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் கடும் கோபம் அடைந்த நான் அங்கு இருந்த கிரிக்கெட் மட்டையால் அவரை தாக்கினேன்.இதில் அவர் உயிரிழந்து விட்டார். நான் அவரை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இதை செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • மருமகன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 3 பேரும் தலைமறை வாகினார்.
    • போலீசார் வீட்டில் உள்ளே இருந்த 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.

    தாளவாடி:

    தாளவாடி அடுத்த திகனாரை கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ்கா ர்த்திக் (29). இவர் அதே பகுதியை சேர்ந்த பால்ராஜ், துளசியம்மா ஆகியோரின் மகள் ஜோதி என்பவரை காதலித்து கடந்த 4 மாதத்துக்கு முன்பு திரு மணம் செய்து கொண்டார்.

    இவர்களது திருமணம் பெண்ணின் பெற்றோருக்கு பிடிக்க வில்லை. கடந்த மாதம் விக்னேஷ் கார்த்திக் கேரளா வுக்கு வேலைக்காக சென்று ள்ளார். மீண்டும் தனது சொந்த ஊரான திகனாரை கிராமத்துக்கு வந்துள்ளார்.

    அப்பொழுது விக்னே ஷ்கார்த்தியின் மாமனார் பால்ராஜ் மற்றும் மாமியார் துளசிம்மா, சிறுவன் என 3 பேர் சேர்ந்து விக்னேஷ்கார்த்தியின் வீட்டுக்குள் நுழைந்து விக்னேஷின் முகத்தில் மாமியார் மிளகாய் பொடியை தூவி உள்ளார்.

    பின்னர் மாமனார் பால்ராஜ் தான் கொண்டு வந்திருந்த அரிவாளால் விக்னேஷ் கார்த்திகை சரமாரியாக வெட்டியுள்ளார்.

    இதில் விக்னேஷ்கா ர்த்தியின் கை, கால், வயிற்று பகுதி பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து அவர் மைசூர் அரசு மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மருமகன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 3 பேரும் தலைமறை வாகினார்.அவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் 2 தனிபடைகள் அமைத்து தேடிவந்தனர்.

    அருகில் உள்ள கர்நாடகா மாநிலத்திக்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் 3 பேரும் தாளவாடி அடுத்த தர்மாபுரம் கிராமத்தில் தனது வீட்டுக்கு வந்துள்ளனர்.

    இது குறித்து கிராம மக்கள் தாளவாடி போலீ சார்க்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவயிடத்திக்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் வீட்டை சுற்றி வளைத்து வீட்டில் உள்ளே இருந்த 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.

    தாக்குதலுக்கு பயன்படுத்திய அரிவாள், கத்தியையும் பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் சத்தியமங்கலம் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ராமசாமி அரிவாளால் ஜோதிலட்சுமியை திடீரென வெட்டினார்.
    • சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னிமலை:

    சென்னிமலை மணிமலை கரடு பகுதியை சேர்ந்தவர் நாச்சிமுத்து. இவரது மனைவி ஜோதிலட்சுமி (வயது 43). நாச்சிமுத்துவின் தந்தை ராமசாமி சென்னிமலை அடுத்த மேலப்பாளையத்தில் சரவணா நகரில் வசித்து வருகிறார்.

    இவர் தனது பூர்வீக நிலத்தை விற்று அதில் 3 மகன்களுக்கும் வீடு கட்டி தந்துள்ளார்.

    இந்த நிலையில் ராமசாமி மணிமலை கரடு பகுதியில் உள்ள தனது மகன் குமார் வீட்டுக்கு வந்தார். அப்போது அங்கு வந்த ஜோதிலட்சுமியிடம், ராமசாமி செய்வினை வைத்து விட்டாய். உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    மேலும் ராமசாமி தான் வைத்திருந்த தேங்காய் போடும் அரிவாளால் ஜோதிலட்சுமியை திடீரென வெட்டினார். இதில் ஜோதிலட்சுமி படுகாயம் அடைந்து கீழே விழுந்தார்.

    இதை கண்ட அவரது மகன்கள் ராமசாமியை தடுக்க சென்றனர். பின்னர் அவர் தன்னை தடுத்தால் அனைவரையும் கொன்று விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

    பின்னர் ராமசாமி அரிவாளை போட்டு விட்டு அங்கு இருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து படுகாயம் அடைந்த ஜோதிலட்சுமி 108 ஆம்புலன்சு மூலம் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமவைாக உள்ள ராமசாமியை போலீசார் வலை வீசி தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    • முரளிதரையும், மகள் குஷ்மாவையும் தொழில் அதிபர் பீஷ்மாராவ் தனது வீட்டுக்கு தலை பொங்கல் விருந்துக்கு அழைத்திருந்தார்.
    • உணவு வகைகளை பார்த்து மருமகன் முரளிதர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

    விசாகப்பட்டினம்:

    ஆந்திராவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தலை பொங்கல் கொண்டாடும் மருமகனுக்கு மிக பிரமாண்டமாக விருந்து வைப்பது சமீப ஆண்டுகளாக புகழ்பெற்று வருகிறது.

    போட்டி போட்டு வகை வகையாக மருமகன்களுக்கு விருந்து வைத்து பொங்கல் திருநாளில் பெயர் பெறுவதை ஆந்திராவில் பல்வேறு பகுதி மக்களும் பெருமையாக கருதுகிறார்கள். குறிப்பாக கோதாவரி மாவட்ட மக்கள் இத்தகைய விருந்து வைப்பதில் புகழ் பெற்று திகழ்கிறார்கள்.

    கடந்த ஆண்டு மேற்கு கோதாவரி மாவட்டத்தில் தொழில் அதிபர் ஒருவர் தனது மருமகனுக்கு 365 வகைகளில் பொங்கல் விருந்து வைத்திருந்தார். இந்த ஆண்டு எலுரு நகரை சேர்ந்த தொழில் அதிபர் பீமாராவ் அந்த சாதனையை முறியடிக்க முடிவு செய்தார்.

    அவர் மகள் குஷ்மாவை விசாகப்பட்டினம் அருகே உள்ள அனகாபள்ளியை சேர்ந்த புத்தா முரளிதர் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார். இந்த ஆண்டு முரளிதருக்கு தலை பொங்கல் ஆகும்.

    முரளிதரையும், மகள் குஷ்மாவையும் தொழில் அதிபர் பீஷ்மாராவ் தனது வீட்டுக்கு தலை பொங்கல் விருந்துக்கு அழைத்திருந்தார். நேற்று முன்தினம் அவர்களுக்கு தடபுடலாக விருந்து வைக்கப்பட்டது. விருந்தில் 379 வகையான உணவுகள் பரிமாறப்பட்டன.

    அந்த உணவு வகைகளை பார்த்து மருமகன் முரளிதர் கடும் அதிர்ச்சி அடைந்தார். 379 வகையான உணவுகளில் 10 சதவீதத்தை கூட அவர் சாப்பிடவில்லை. என்றாலும், இந்த பிரமாண்ட விருந்து ஆந்திராவில் பரபரப்பாக பேசப்பட்டது.

    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு
    • முன்விரோதத்தால் தாக்குதல்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் மணவா ளக்குறிச்சி அருகே உள்ள கட்டைக்காடை சேர்ந்தவர் ராஜன், தொழிலாளி.

    இவரது மகள் சிவகலாவை இளையான் விளையை சேர்ந்த ஸ்டீபன் (வயது 38) திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது.

    இதன் காரணமாக சிவ கலா, கணவர் வீட்டில் இருந்து பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். இதனால் ராஜன் மீது ஸ்டீபன் ஆத்திரம் அடைந்தார்.இது தொடர்பாக அவர்களுக்குள் விரோதம் ஏற்பட்டது.

    இந்த முன்விரோதத்தில் ராஜன் வீட்டுக்கு வந்த ஸ்டீபன், வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த அவர் அங்கு கிடந்த தென்னை மட்டையை எடுத்து ராஜனை தாக்கி உள்ளார். மேலும் அவருக்கு மிரட்டலும் விடுத்ததாக போலீசில் ராஜன் புகார் செய்தார்.

    அதன் பேரில் மணவா ளக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி ஸ்டீபன் மீது வழக்குப்பதிவு செய்த னர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • வீட்டுக்குள் நுழைந்து மாமனார் முத்து, மாமியார் பானுமதி மற்றும் மனைவி ஜெயகீர்த்தியை உருட்டு கட்டையால் கடுமையாக தாக்கினார்.
    • இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சத்தியமங்கலம், நவ.23-

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முத்து (73). அவரது மனைவி பானுமதி (66). இவர்களது மகள் ஜெயகீர்த்தி (36).

    கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஜெயகீர்த்திக்குக்கும், சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொல்லம் பாளையம் பகுதியை சேர்ந்த உதயகுமார் (35) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

    திருமணமான 3 மாத த்தில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். ஜெயகீர்த்தி சத்தியமங்கலத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார். உதயகுமார் எடப்பாடியில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் இரு வீட்டாரும் சமாதானம் பேசி கணவன்-மனைவியை சேர்த்து வைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். ஆனால் கணவன்-மனைவி இருவரும் சமரசம் ஆகவில்லை.

    இந்நிலையில் இன்று காலை உதயகுமார் சத்தியமங்கலத்தில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு உருட்டுக்கட்டையுடன் வந்தார்.

    வீட்டுக்குள் நுழைந்து மாமனார் முத்து, மாமியார் பானுமதி மற்றும் மனைவி ஜெயகீர்த்தியை உருட்டு கட்டையால் கடுமையாக தாக்கினார்.எதிர்பாராத இந்த தாக்கு தலால் 3 பேரும் அலறினர்.

    அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் உதயகுமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். உதயகுமார் உருட்டு கட்டையால் தாக்கியதில் முத்து, பானுமதி, ஜெயகிரீத்தி ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    இதையடுத்து அவர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக சத்தியமங்கலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக மாமனார், மாமியார், மனைவியை மருமகன் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மருமகன் மாமனார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மாமனார் மருமகனை கல்லால் தாக்கினார்.
    • இது குறித்து மருமகன் புஞ்சை புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி காந்திநகர் புதுகாலனியை சேர்ந்தவர் அண்ணாதுரை (39).பனியன் கம்பெனி தொழிலாளி. இவரது மனைவி அருணா. இவர்களுக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆன நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கணவன்- மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மாலை அண்ணாதுரை மனைவி வீட்டுக்கு வந்தார். தனது இளைய மகன் லிங்கேஸ்வரனுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது மாமனார் மணியன் (55) மனைவியை வைத்து குடும்பம் நடத்த தெரியவில்லை. எதற்கு என் பேரனுடன் பேசுகிறாய் என்று கேட்டுள்ளார்.

    இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் அண்ணாதுரையை மணியன் கல்லால் தாக்கியுள்ளார். இது குறித்து அண்ணாதுரை புஞ்சை புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மணியனை கைது செய்தனர். பின்னர் சத்தியமங்கலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×