search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் வங்கி ஊழியர் மனைவி தூக்குப் போட்டு தற்கொலை
    X

    தனியார் வங்கி ஊழியர் மனைவி தூக்குப் போட்டு தற்கொலை

    • ரோகிணி அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை கணவர் பிரகாஷ் நேற்று இரவு கண்டித்துள்ளார்.
    • வீட்டின் ஓட்டை பிரித்து பார்த்தபோது, ரோகிணி தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

    சேலம்:

    சேலம் கருப்பூர் அருகே உள்ள மாங்குப்பை பழையூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி ரோகினி (வயது 28). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வருடம் ஆகிறது. 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் ரோகிணி அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை கணவர் பிரகாஷ் நேற்று இரவு கண்டித்துள்ளார்.

    இதனால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ரோகிணி, அருகில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். பிரகாஷ் போன் செய்தும் போனை ரோகிணி எடுக்கவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை மீண்டும் போன் செய்தும் ரோகிணி எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பிரகாஷ், அங்கு சென்று பார்த்தபோது வீடு பூட்டியிருந்தது. அதன் பிறகு வீட்டின் ஓட்டை பிரித்து பார்த்தபோது, ரோகிணி தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரகாஷ், கருப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி 5 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஒ விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×