search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ்"

    • டிஜிபி அலுவலகத்திற்கு மர்ம நபரிடம் இருந்து மின்னஞ்சல்.
    • மோப்ப நாய்களுடன் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைக்கு விரைந்த போலீசார்.

    சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்துள்ளது.

    சென்னையில் பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை உள்பட 30 இடங்களில் குண்டு வெடிக்கும் என டிஜிபி அலுவலகத்திற்கு மர்ம நபரிடம் இருந்து மின்னஞ்சல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதைதொடர்ந்து, போலீசார் மோப்ப நாய்களுடன் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைக்கு விரைந்துள்ளனர்.

    • தென் சென்னையிலும், வட சென்னையிலும் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளத்தை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • இன்னமும் பல்லாயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்து அபாயகரமான அளவில் நிற்கிறது.

    சென்னை:

    மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட சென்னையில் மீட்பு பணிகளும், நிவாரண பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

    வடசென்னை மற்றும் தென்சென்னை பகுதியில் மிக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய சென்னை பகுதியில் இயல்பு நிலை திரும்பி விட்ட நிலையில் தென் சென்னையிலும், வட சென்னையிலும் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளத்தை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மாதவரம், மணலி, எண்ணூர், கொரட்டூர், தாம்பரம், வேளச்சேரி, பீர்க்கங்கரணை, பெரும்பாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் இன்னமும் பல்லாயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்து அபாயகரமான அளவில் நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் இருப்பவர்களை படகுகளின் மூலம் மீட்கும் பணி இன்று 3-வது நாளாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மழை வெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தினரை போலீஸ் ஒருவர் பத்தித்திரமாக மீட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இதில் காவலர் ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு கொஞ்சியபடி புன்னகையுடன் நடந்துவரும் காட்சி பதிவாகி இருக்கிறது. இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    இதுபற்றி தலைமை காவலர் தயாளன் கூறும்போது,

    வெள்ளத்தில் சிக்கிய குழந்தையை மீட்டபோது, தூங்காமல் வேலைபார்த்த களைப்பு பறந்து போனது என்று கூறினார்.

    • பேருந்து நிலையத்தில் வெளிப்படையாக முகம் சுழிக்கும் வகையில் ஆபாசமாக காதல் செய்து வருகின்றனர்.
    • பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆபாசமாக நடந்து கொள்ளும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தங்களது ஊர்களுக்கு செல்ல பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஏராளமானோர் தினமும் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி மாணவர்களில் சில காதல் ஜோடிகள் பேருந்து நிலையத்தில் வெளிப்படையாக முகம் சுழிக்கும் வகையில் ஆபாசமாக காதல் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் பேருந்து நிலையத்தின் மையப்பகுதியில் காதல் ஜோடிகள் அத்துமீறியதை கண்ட பொதுமக்கள் பாதுகாப்புக்கு நின்ற போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் நேரடியாக சென்று பார்த்த போதும் போலீசார் வருவது கூட தெரியாமல் கல்லூரி காதல் ஜோடி முத்தமழை பொழிந்து கொண்டிருந்தனர். இருவரையும் பிடித்த போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆபாசமாக நடந்து கொள்ளும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    • போலீஸ் நிலையம் முன்பு ஏராளமான வக்கீல்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.
    • சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

    பெங்களுரு:

    கர்நாடக மாநிலம் சிக்மகளூர் பகுதியை சேர்ந்தவர் வக்கீல் பிரீதம். சம்பவத்தன்று இவர் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிக்மகளூர் நகர போலீசார் அவரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது வக்கீல் பிரீதமை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றி தெரியவந்ததும் போலீஸ் நிலையம் முன்பு ஏராளமான வக்கீல்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து அங்கு பதட்டமான சூழ்நிலை உருவானது. பின்னர் சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு விக்ரம் ஆம்தே விரைந்து வந்து விசாரணை நடத்தினார். பின்னர் வக்கீல் மீது தாக்குதல் நடத்தியதாக சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

    மேலும் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேரையும் சஸ்பெண்டும் செய்தார். தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் இருந்து போலீஸ் சூப்பிரெண்டு விக்ரம் ஆம்தே வெளியே செல்லாமல் வக்கீல்கள் போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீஸ் சூப்பிரெண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.

    மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர் என்று தெரிவித்தார். இதையடுத்து வக்கீல்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் போலீசாரை கண்டித்து சிக்மகளூர் பார்கவுன்சில் உறுப்பினர்கள் இன்று ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

    • நடிகை குஷ்பூவுக்கு சமூக வலைதளத்தில் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
    • சேரி மொழி என நடிகை குஷ்பு எக்ஸ் தளத்தில் பதிவு.

    மணிப்பூர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என தி.மு.க. ஆதரவாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, சேரி மொழியில் தன்னால் பேசமுடியாது என்று குஷ்பு பதிலளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நடிகை குஷ்பூவுக்கு சமூக வலைதளத்தில் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், சென்னை சாந்தோமில் உள்ள நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு வீட்டிற்கு போலீசார் பாதுகாப்பு அளித்துள்ளனர்.

    சேரி மொழி என நடிகை குஷ்பு எக்ஸ் தளத்தில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சமூக வலைதளத்தில் மிரட்டல் வருவதாக எழுந்த புகாரை அடுத்து 6 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • பூட்டிய அறைக்கு உள்ளே இருப்பது யார்? நீங்களாக வெளியில் வருகிறீர்களா? அல்லது கதவை உடைத்து உள்ளே வரட்டுமா? என்று கேட்டுள்ளார்.
    • பணியின்போது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட இருவரையும் பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா உத்தரவிட்டார்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை காவேரி நகர் அடுத்த ஆரோக்கியநாதபுரம் பகுதியில் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையின் கீழ் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில், கடந்த வாரம் நள்ளிரவு நேரத்தில் இந்த அலுவலகத்தில் உள்ள ஏ.சி.அறை ஒன்றில் ஒரு ஆண், ஒரு பெண் என போலீஸ் ஜோடி ஒன்று தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, துணை போலீஸ் சூப்பிரண்டு ஒருவருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், உடனடியாக அங்கு விரைந்து சென்ற அவர் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருப்பதை கண்டு கதவை தட்டினார். யாரும் கதவை திறக்கவில்லை.

    இதனையடுத்து அவர் பூட்டிய அறைக்கு உள்ளே இருப்பது யார்? நீங்களாக வெளியில் வருகிறீர்களா? அல்லது கதவை உடைத்து உள்ளே வரட்டுமா? என்று கேட்டுள்ளார். இதனை அடுத்து அந்த ஜோடி மெதுவாக கதவை திறந்து வெளியில் வந்தனர்.

    அவர்கள் இருவரையும் அக்கோலத்தில் பார்த்த அந்த துணை போலீஸ் சூப்பிரண்டு இருவரையும் அழைத்து விசாரணை நடத்தினார். அதில் அந்த ஆண் போலீஸ்காரர் அதே போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியில் உள்ளவர் என்றும், அந்த பெண் போலீஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் பணியில் உள்ளவர் என்றும் இருவரும் திருமணம் ஆகாதவர்கள் என்றும் தெரிய வந்தது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அறிக்கை அளித்தார்.

    இதனையடுத்து பணியின்போது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட இருவரையும் பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா உத்தரவிட்டார். இச்சம்பவம் சகபோலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • யானைகள் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழிமறித்து துரத்துவதும் தொடர் கதையாகி வருகிறது.
    • கர்நாடக-தமிழகம் இடையே சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, செந்நாய், மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வன சாலை பகுதியில் திண்டுக்கல்லில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

    இச்சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அவ்வப்போது சாலையை கடந்து செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களாக தமிழக-கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனைசாவடி அருகே யானைகள் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழிமறித்து துரத்துவதும் தொடர் கதையாகி வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் ஆசனூர் அடுத்த காராப்பள்ளம் சோதனைசாவடியில் ஆசனூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை சோதனை சாவடி அருகே வந்தது. இதை கண்ட போலீசார் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சுமார் 15 நிமிடம் சாலையில் ஒற்றை யானை உலா வந்தது. இதனால் அவ்வழியாக வந்த வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன.

    இதனால் கர்நாடக-தமிழகம் இடையே சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மெதுவாக யானை வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னரே போலீசார் நிம்மதி அடைந்து பெருமூச்சுவிட்டனர். போக்குவரத்தும் சீரானது.

    • வழக்குப் பதிவு செய்யப்பட்டு குட்கா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • பல்வேறு போலீஸ் நிலையங்களில் குட்கா விற்பனைக்கு போலீசார் உடந்தையாக இருப்பதாக புகார்கள் எழுந்தன.

    சென்னை:

    சென்னையில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் மேற்பார்வையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குட்கா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சென்னையில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் குட்கா விற்பனைக்கு போலீசார் உடந்தையாக இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக நடத்தப்பட்ட ரகசிய விசாரணையில் அது உறுதியானது. இதை தொடர்ந்து சென்னையில் 6 சப்-இன்ஸ்பெக்டர்கள், 2 ஏட்டுகள், 14 போலீசார் என 22 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.

    கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் இதற்கான உத்த ரவை பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக உயர் அதிகாரிகள் கூறும்போது, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனைக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும், காவல் துறையினர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    • தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
    • ராஜேஸ்வரி என்ற மனைவியும் பிரித்தி, நிவேதா ஸ்ரீ என்ற 2 மகள்களும் உள்ளனர்.

    நாகர்கோவில் :

    சுசீந்திரத்தைச் சேர்ந்த அய்யப்பன் (வயது 52), தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். 2 நாட்கள் விடுமுறையில் வீட்டுக்கு வந்த இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். அய்யப்பனுக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும் பிரித்தி, நிவேதா ஸ்ரீ என்ற 2 மகள்களும் உள்ளனர்.

    • 50-க்கும் மேற்பட்ட போலீசார் அணிவகுப்பில் ஈடுபட்டனர்.
    • அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள போலீசாரின் செல்போன் எண்கள் அங்கிருந்த பொதுமக்களிடம் வழங்கப்பட்டது.

    பொன்னேரி:

    மீஞ்சூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரவுடிகளை ஒழிக்க ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் படி தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ரவுடிகளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குற்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறும் அத்திப்பட்டு, அத்திப்பட்டு புதுநகர் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில், உதவி கமிஷனர் ராஜா ராபர்ட் இன்ஸ்பெக்டர் காளிராஜ் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அணிவகுப்பில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அத்திப்பட்டு புது நகர் பகுதியில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ரவுடிகளின் செயல்பாடுகள் பற்றி அப்பகுதிமக்களிடம் கேட்டறிந்தனர். மேலும் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள போலீசாரின் செல்போன் எண்கள் அங்கிருந்த பொதுமக்களிடம் வழங்கப்பட்டது.

    • தொடர்ந்து ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் அளித்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • ஆதரவின்றி கிடந்த முதியவருக்கு செங்கிப்பட்டி போலீசார் முதலுதவி அளித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

    வல்லம்:

    தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் தனியார் கம்பெனி அருகே பாலத்தின் அடியில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ஆதரவின்றி மிகவும் மோசமான நிலையில் கோழி கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் அனாதையாக கிடந்துள்ளார்.

    அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற செங்கிப்பட்டி போலீஸ் ஏட்டு ராஜகோபால் மற்றும் போலீசார் சிவலிங்கம், மோகன்ராஜ் ஆகியோர் கோழி கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் கிடந்த அந்த முதியவரை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அந்த முதியவரை மீட்டு அவரை குளிக்க வைத்து, ஆடைகள் அணிவித்தனர். பின்னர் அந்த முதியவருக்கு உணவு வழங்கி தேவையான மருத்துவ முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் அளித்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆதரவின்றி கிடந்த முதியவருக்கு செங்கிப்பட்டி போலீசார் முதலுதவி அளித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

    மனிதாபிமானம் இன்னும் மரித்து போகவில்லை என்பதற்கு சாட்சியாகவும், போலீசார் பொதுமக்களின் நண்பன் என்பதை உணர்த்தும் விதமாகவும் நடந்து கொண்ட செங்கிப்பட்டி போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். 

    • எருமநாயக்கன்பாளையம் ஆனைபாலி என்ற இடத்தில் தலையில் பலத்த காயத்துடன் முத்துராஜ் இறந்து கிடந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் முத்துராஜ் மர்ம நபர்களால் அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
    • கொலையில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மல்லூர் அருகே வாழக்குட்டப்பட்டி எருமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த ஜக்கம்ம நாயக்கர் மகன் முத்துராஜ் (வயது 39). இவர் மாந்திரீகம் செய்து தாயத்து கட்டும் தொழிலும் செய்து வந்தார்.

    இந்தநிலையில் கடந்த வியாழக்கிழமை எருமநாயக்கன்பாளையம் ஆனைபாலி என்ற இடத்தில் தலையில் பலத்த காயத்துடன் முத்துராஜ் இறந்து கிடந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் முத்துராஜ் மர்ம நபர்களால் அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று எருமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த முத்தையா மகன் ஜெயக்குமார் (37), மல்லூர் வேங்காம்பட்டி கீழ் தெருவை சேர்ந்த பூவரசன் (30), வேங்கம்பட்டி நடுத்தெருவை சேர்ந்த ராஜா (28), அதே பகுதியை சேர்ந்த கணேசன் (53) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சம்பவத்தன்று இரவு முத்துராஜ் கடைக்கு சென்று விட்டு வந்தபோது மறைந்திருந்த ஜெயக்குமார் தரப்பினர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து இரும்பு கம்பி மற்றும் கட்டையால் பலமாக தாக்கியதில் இறந்தது தெரியவந்தது.

    இந்த கொலையில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ×