search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திடீர் சோதனை"

    • தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை உணவு பாதுகாப்பு அலுவலர் பறிமுதல் செய்தனர்.
    • கடையின் உரிமையாளர் சண்முகத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து, கடையின் உரிமத்தை ரத்து செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் பகுதியில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என பரமத்திவேலூர் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி மற்றும் பரமத்திவேலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் பரமத்திவேலூரில் உள்ள டீக்கடைகள் மற்றும் பெட்டி கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    இதில் பரமத்திவேலூர் 4 ரோட்டில் உள்ள ஒரு கடையில் ஆய்வு மேற்கொண்டபோது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை உணவு பாதுகாப்பு அலுவலர் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கடையின் உரிமையாளர் சண்முகத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து, கடையின் உரிமத்தை ரத்து செய்தனர்.

    தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடைகளில் விற்பனை செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • 50-க்கும் மேற்பட்ட போலீசார் அணிவகுப்பில் ஈடுபட்டனர்.
    • அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள போலீசாரின் செல்போன் எண்கள் அங்கிருந்த பொதுமக்களிடம் வழங்கப்பட்டது.

    பொன்னேரி:

    மீஞ்சூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரவுடிகளை ஒழிக்க ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் படி தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ரவுடிகளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குற்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறும் அத்திப்பட்டு, அத்திப்பட்டு புதுநகர் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில், உதவி கமிஷனர் ராஜா ராபர்ட் இன்ஸ்பெக்டர் காளிராஜ் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அணிவகுப்பில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அத்திப்பட்டு புது நகர் பகுதியில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ரவுடிகளின் செயல்பாடுகள் பற்றி அப்பகுதிமக்களிடம் கேட்டறிந்தனர். மேலும் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள போலீசாரின் செல்போன் எண்கள் அங்கிருந்த பொதுமக்களிடம் வழங்கப்பட்டது.

    • ரவுடிகள் வீடுகளில் சோதனை செய்து அவர்களது செயல்பாடுக்களை கேட்டறிந்தனர்.
    • எல்லைகளில் 10-க்கும் மேற்பட்ட குழுவினர் வீடு வீடாக சென்று சோதனையிட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை, கடலூர், விழுப்புரம் மாவட்ட எல்லையில் தமிழகம் மற்றும் புதுவை போலீசார் ஒரே நேரத்தில் சோதனை செய்து வருகின்றனர்.

    ரவுடி பட்டியலில் உள்ளவர்களின் வீடுகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.கருவடிக் குப்பம் மற்றும் இடையஞ் சாவடி பகுதியில் உள்ள வீடுகளில் லாஸ்பேட்டை மற்றும் ஆரோவில் போலீ சார் 50-க்கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டனர்.

    இவர்கள் கருவடிக்குப்பம் கால்நடை மருத்துவமனை பகுதி, சாமிபிள்ளை தோட்டம் ஆகிய பகுதிகளில் ரவுடிகள் வீடுகளில் சோதனை செய்து அவர்களது செயல்பாடுக்களை கேட்டறிந்தனர்.

    மேலும் வெடி பொருள், கத்தி போன்ற ஆயுதங்கள் பதுக்கி வைத்துள்ளனரா? என சோதனையிட்டனர். ரவுடி பட்டியலில் உள்ளவர்களின் உறவினர்களிடம் மீண்டும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் பார்த்து கொள்ள எச்சரித்தனர்.

    இதே போன்ற சோதனை புதுச்சேரி மற்றும் தமிழக எல்லை பகுதியான விழுப்புரம், கடலூர் மாவட்ட எல்லைகளில் 10-க்கும் மேற்பட்ட குழுவினர் வீடு வீடாக சென்று சோதனையிட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    தீபாவளி பண்டிகையையொட்டி வெடிமருந்து பதுக்கி வைத்தல், குற்ற நடவடிக்கைக்கு திட்டமிடுதல் போன்றவற்றை தடுப்பதற்காக இந்த சோதனையை 3 மாவட்ட போலீசாரும் இணைந்து செயல்படுத்தி வருகின்றனர்.

    • தாபா, ரெஸ்டாரண்ட்களில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் அருண் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் ஆகியோர் சோதனை மேற்கொண்டனர்.
    • தொடர்ந்து பொத்தனூர், ஜேடர்பாளையம், செல்லப்பம்பாளையம் பகுதிகளில் செயல்படும் கடைகளிலும் சோதனை செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் பால் குளிரூட்டும் நிலையம் எதிரே உள்ள தாபா மற்றும் ரெஸ்டாரண்டுகளில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அப்பகுதியில் உள்ள தாபா, ரெஸ்டாரண்ட்களில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் அருண் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் ஆகியோர் சோதனை மேற்கொண்டனர். இது தொடர்பாக தாபா, ரெஸ்டாரண்ட்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.

    தொடர்ந்து பொத்தனூர், ஜேடர்பாளையம், செல்லப்பம்பாளையம் பகுதிகளில் செயல்படும் கடைகளிலும் சோதனை செய்தனர். அப்போது உணவு பாதுகாப்பு தணிக்கைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள ஓட்டல்களில் சோதனை செய்தபோது சுகாதாரமற்ற முறையில் சாம்பார், சட்னி, குருமா வைத்திருந்த தலா 2 கடைகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் இது தொடர்பான சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் உணவு பாதுகாப்பு விதிகளை மீறும் ஓட்டல்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.

    • தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.
    • ஓட்டல்கள் மற்றும் பாஸ்ட்புட் உணவு தயாரித்து விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் அருண் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் திடீர் ஆய்வு நடத்தினார்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் பழைய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டல்கள் மற்றும் பாஸ்ட்புட் உணவு தயாரிக்கும் கடைகளில் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அப்பகுதி யில் உள்ள ஓட்டல்கள் மற்றும் பாஸ்ட்புட் உணவு தயாரித்து விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் அருண் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் திடீர் ஆய்வு நடத்தினார்.

    ஆய்வில் சுகாதாரமற்ற முறையில் ஓட்டல்களில் உணவு தயாரித்து விற்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக ஓட்டல் கடைக்கு நோட்டீஸ் வழங்கி சுகாதாரமற்ற உணவுகளை பறிமுதல் செய்து ரூ.2 ஆயி ரம் அபராதம் விதித்தார்.

    மேலும் உணவு பாது காப்பு விதிமுறைப்படி உணவு தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என ஓட்டல் கடை மற்றும் பாஸ்ட் புட் உணவு தயாரிக்கும் கடை உரிமை யாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    தொடர்ந்து பரமத்திவேலூர் பகுதி களில் உள்ள ஓட்டல்கள் மற்றும் பாஸ்ட்புட் உணவு தயாரிக்கும் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படும் என உணவு பாது காப்பு துறை அலுவலர் செல்வக்குமார் தெரிவித்தார்.

    • ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஓட்டல்களில் ஆய்வு செய்தனர்.
    • இது தொடர்பாக 3 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    ஈரோடு:

    தமிழக அரசின் உணவு பாதுகாப்பு துறை சார்பில் அனைத்து உணவ கங்களி லும் தேங்காய் சட்னி, தயிர், மோர் வகைகள், ஷவர்மா உள்ளிட்ட உணவு பொருட்கள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.

    இதன்படி ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வன், அருண்குமார் ஆகியோர் 15-க்கும் மேற்பட்ட ஓட்ட ல்களில் ஆய்வு செய்தனர்.

    இதில், கடைகளில் உள்ள குளிர்பதன பெட்டியில் (பிரிட்ஜில்) இருப்பு வைக்க ப்பட்டிருந்த 12 லிட்டர் தேங்காய் சட்னி, சமைத்த நிலையில் வைக்கப்பட்டி ருந்த ஷவர்மா இறைச்சி வகைகள் 3.5 கிலோவை பறிமுதல் செய்யப்பட்டு உணவு பாதுகாப்பு, தரங்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அவைகள் உடனடியாக அழிக்கப்பட்டன.

    இது தொடர்பாக 3 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. 2 கடைகளுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

    இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் தங்க விக்னேஷ் கூறுகையில்,

    மாவட்டம் முழுவதும் இதேபோன்று திடீர் ஆய்வு தொடரும். பொதுமக்கள் தரமில்லாத உணவு பண்டங்கள், பொருட்கள் கண்டறிந்தால் உடனடியாக 94440 42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றார்.

    • பேக்கிங் செய்த உணவு பண்டங்கள் தரமற்ற பொருட்களைக் கொண்டு தயாரித்து வழங்குவதாக, பொதுமக்கள் உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
    • நேற்று வேலூரில் உள்ள பேக்கரி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    பரமத்தி வேலூரில் உள்ள பேக்கரி கடைகளில் தயாரிப்பு தேதி இல்லாத பேக்கிங் செய்த உணவு பண்டங்கள் தரமற்ற பொருட்களைக் கொண்டு தயாரித்து வழங்குவதாக, பொதுமக்கள் உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் சுகாதாரமற்ற தண்ணீரில் திண்பண்டங்கள் தயாரிப்பதாகவும் புகார் எழுந்தது.பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் நாமக்கல் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அருண் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் மற்றும் வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் திருநாவுக்கரசு ஆகியோர் நேற்று வேலூரில் உள்ள பேக்கரி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பழைய பை-பாஸ் சாலையில் உள்ள ஒரு பேக்கரி கடையில் மேற்கொண்ட ஆய்வில் தயாரிப்பு தேதி இல்லாமல் திண்பண்டங்கள் தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து பேக்கரி கடைக்கு நோட்டீஸ் வழங்கி, சுகாதாரமற்ற 4 கிலோ திண்பண்டங்களை பறி முதல் செய்து ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.மேலும் சுகாதாரமற்ற முறை யில் பேக்கரிகளில் திண்பண் டங்கள் தயாரிப்பது மற்றும் தயாரிப்பு தேதி இல்லாமல் விற்பனை செய்வது கண்டு பிடிக்கப்பட்டால் கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் தீடீர் சோதனை செய்தார்.
    • 3 கடைகளுக்கு தலா ஆயிரம் வீதம் ரூ.3000 அபராதம் விதிக்கப்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலை பகுதியில் உள்ள பேக்கரி, ஸ்வீட்ஸ், பப்ஸ் தயாரிப்பு கடைகளில் பிளாஸ்டிக் மூலம் தயாரி க்கப்பட்ட முட்டைகளால் பப்ஸ் வகைகள் தயாரி க்கப்படுகிறதா? என உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் தீடீர் சோதனை செய்தார்.

    ஆய்வில் பப்ஸ் வகை களை உரிய முறையில் தயாரி க்காமல் முட்டை வெளியே தெரியும்படி மைதா மாவில் தயாரிக்க ப்படும் பப்ஸ் வகைகளை தொடர்ந்து ஓவனில் வைத்து சூடேற்றும் பொழுது முட்டையின் வெள்ளை கருவானது தொடர்ந்து சூடேறி பிளாஸ்டிக் போன்று கெட்டியாகி விடுகிறது.

    அவ்வாறு தயாரிக்காமல் உரிய முறையில் உணவு பாதுகாப்பு விதிகளின்படி உரிய முறையில் முட்டை முழுவதுமாக மூடி உள்ளவாறு தயாரிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.மேலும் பப்ஸ் வகைகள் மற்றும் எண்ணெய் பல காரங்களை பேப்பரில் வைத்து பொதுமக்களுக்கு உண்ண கொடுத்ததற்காக 3 கடைகளுக்கு தலா ஆயிரம் வீதம் ரூ.3000 அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள், பாலித்தீன் கவர்களில் சூடான டீயை பார்சல் செய்து கொடுக்க கூடாது எனவும், அலுமி னியம் பாயில் கவரில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது.

    இதனை மீறி தடை செய்யப்பட்ட பாலித்தீன் கவர்கள், கேரி பேக்குகளை பயன்படுத்தும் கடைகளுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் எனவும் கடை உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

    இது சம்பந்தமான புகார்களை 9444042323 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    • திடீர் சோதனை மேற்கொண்டனர்.
    • 5 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    பவானி:

    பவானி நகராட்சிக்கு உட்பட்ட மேட்டூர் மெயின் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மளிகை கடை, மொத்த வியாபாரம் செய்யும் கடைகள், உணவுப் பொருள் விற்பனை செய்யும் கடைகள், டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உள்பட பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட கேரி பேக் விற்பனை செய்யப் படுகிறதா?

    அல்லது பயன் பயன்படுத்தி வருகிறார்களா? என கண்டறியும் வகையில் பவானி நகராட்சி ஆணை யாளர் (பொறுப்பு) கதிர்வே ல் மற்றும் பரப்புரை யாளர்கள் திடீர் சோதனை மேற்கொண்ட னர்.

    சோதனையில் 5 கடைகளில் சுமார் 20 கிலோ கேரி பேக் மற்றும் பிளாஸ்டிக் கப்புகள் இருப்பது கண்டறியப் பட்டது. அவற்றை நகராட்சி நிர்வாகத்தினர் பறிமுதல் செய்தனர்.

    மேலும் 5 கடைகளுக்கு ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

    ேமலும் தடை செய்யப்பட்ட கேரிபேக் விற்பனை செய்யப்பட்டு வருவது மீண்டும் கண்டறி யப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • 988 பாட்டில்கள், ரூ.76 ஆயிரம் பறிமுதல்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு குடியாத்தம் நகர பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று விடுமுறை அளித்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டார்.

    குடியாத்தத்தில் சில இடங்களில் கள்ளச் சந்தையில் மது பாட்டில்கள் விற்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணனுக்கு தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் நேற்று காலையில் குடியாத்தம் சுண்ணாம்பேட்டை ஆற்று ஓரம் உள்ள டாஸ்மாக் கடையை ஒட்டியபடி உள்ள பாரில் திடீர் சோதனை செய்தனர்.

    அப்போது அங்கு 520 மது பாட்டில்களும், மது விற்ற ரூ.73 ஆயிரத்து 660 இருந்தது.

    இது தொடர்பாக சிவகங்கை மாவட்டம் வெண்ணையூர் பகுதியை சேர்ந்த பிரசாத் (வயது 38) செவ்வாய்பேட்டை சேர்ந்த ராஜேஷ் (33) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    மேலும் தனிப்படை போலீசார் குடியாத்தம் காந்திநகர் சிவமதி கார்டன் ஆர்டிஓ அலுவலகம் ரோடு பகுதியில் வசித்து வரும் கிரிபிரசாத் (34) என்பவர் வீட்டின் பின்புறம் போலீசார் திடீரென சோதனை செய்தனர்.

    அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 468 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர் அவரிடம் இருந்து ரூ.2750-ஐ பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் கிரிபிரசாத் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • கர்நாடக போலீசார் நடவடிக்கை
    • கர்நாடக போலீசார் நடவடிக்கை

    ஆம்பூர்:

    கர்நாடக மாநிலம் பெங்களூர் சிட்டி எச்.ஆர். எஸ். லே-அவுட் பகுதி போலீஸ் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் குமார் தலைமையில் நேற்று ஆம்பூர் டி.எஸ்.பி. சரவணன் ஆம்பூர் தாலுகா இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் ஆம்பூர் தாலுகா கீழ் முருங்கை பகுதியில் உள்ள நகை அடகு கடையில் திடீர் சோதனை நடத்தினர்.

    அங்கு திருட்டு நகைகளை அடமானம் வைத்ததை மீட்டனர். அதே போன்று ஆம்பூர் டவுன் பஜார் பகுதியில் ஒரு நகை அடகு கடையில் திருட்டு நகைகளை மீட்டனர். இந்த நகை அடகு கடையில் அடகு வைத்த 2 பேரை கைது செய்து கர்நாடகா போலீசார் அழைத்து சென்றனர்.

    அவர்கள் வடபுதுப்பட்டு ஊராட்சி பகுதியை சேர்ந்த ஹரி பிரசாத் (வயது 25) அவரின் நண்பர் வைத்தனாகுப்பம் பகுதியை சேர்ந்த சுதாகர் (26) என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் நேற்று இரவு புதுப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • பண்ருட்டியில் ரவுடிகளின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    கடலூர்:

    பண்ருட்டி, புதுப்பேட்டையில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேஷ்,டிஎஸ்பி சபியுல்லா உத்தரவின் பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார்,சப்-இன்ஸ்பெக்டர்(பயிற்சி)ஜெயந்தி மற்றும் போலீசார் நேற்று இரவு புதுப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ரவுடிகள் வீடுகளில் ஆயுதங்கள் எதுவும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என சோதனை செய்தனர்.

    மேலும் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள ரவுடிகளின் வீடுகளில் சோதனை நடத்தினர்.  மேலும் தடை செய்யப்பட்ட ரவுடிகள் ஊருக்குள் நுழைந்தால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறினர். போலீசாரின் திடீர் சோதனையால் அந்த பகுதிகள் பரபரப்பாக காணப்பட்டது.

    ×