நகை அடகு கடையில் திடீர் சோதனை

கர்நாடக போலீசார் நடவடிக்கை கர்நாடக போலீசார் நடவடிக்கை
நகை அடகு கடையில் திடீர் சோதனை
Published on

ஆம்பூர்:

கர்நாடக மாநிலம் பெங்களூர் சிட்டி எச்.ஆர். எஸ். லே-அவுட் பகுதி போலீஸ் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் குமார் தலைமையில் நேற்று ஆம்பூர் டி.எஸ்.பி. சரவணன் ஆம்பூர் தாலுகா இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் ஆம்பூர் தாலுகா கீழ் முருங்கை பகுதியில் உள்ள நகை அடகு கடையில் திடீர் சோதனை நடத்தினர்.

அங்கு திருட்டு நகைகளை அடமானம் வைத்ததை மீட்டனர். அதே போன்று ஆம்பூர் டவுன் பஜார் பகுதியில் ஒரு நகை அடகு கடையில் திருட்டு நகைகளை மீட்டனர். இந்த நகை அடகு கடையில் அடகு வைத்த 2 பேரை கைது செய்து கர்நாடகா போலீசார் அழைத்து சென்றனர்.

அவர்கள் வடபுதுப்பட்டு ஊராட்சி பகுதியை சேர்ந்த ஹரி பிரசாத் (வயது 25) அவரின் நண்பர் வைத்தனாகுப்பம் பகுதியை சேர்ந்த சுதாகர் (26) என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com