search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "raided"

    • புதுக்கோட்டை சிறைச்சாலை-கூர்நோக்கு இல்லத்தில் 50க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்
    • புதுக்கோட்டை சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் என்று 442 சிறைவாசிகள் உள்ளனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட சிறைசாலை மற்றும் அரசு கூர்நோக்கு இல்லத்தில் போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.சிறைச்சாலை மற்றும் கூர்நோக்கு இல்லத்தில் 50க்கும் மேற்பட்ட போலீசார் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அதிரடியாக உள்ளே நுழைந்தனர். டி.எஸ்.பி. செல்வம் தலைமையில் உள்ளே சென்ற போலீசார் அங்கு செல்போன், கஞ்சா, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், போதை மாத்திரை ஏதும் உள்ளதா என்று சோதனையில் ஈடுபட்டனர்.

    புதுக்கோட்டை சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் என்று 442 சிறைவாசிகள் உள்ளனர். இவர்கள் அனைவரிடத்திலும் சோதனை நடைபெற்றது. மேலும் சிறைவாசிகள் அறை மற்றும் வளாகம் முழுவதும் அங்குலம், அங்குலமாக சோதனை நடைபெற்றது.மேலும் சிறைவாசி களிடம் ஆயுதம் மற்றும் ஆயுதம் போன்ற பொருட்கள் ஏதும் உள்ளதாக என்றும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.இதே போல அரசினர் கூர்நோக்கு இல்லத்திலும் தீவிர சோதனை நடை பெற்றது.

    இந்த சோதனை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்தது. சோதனை நடைபெற்ற போது சிறைவாசிகளை சந்திக்க வந்தவர்கள் அனுமதிக்கப்படவில்லை. சோதனையை முன்னிட்டு சிறைச்சாலை வளாகத்திதை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.சிறைச்சாலை, கூர்நோக்கு இல்லத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையால் பரபரப்பு நிலவியது

    • கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதாக புகார்.
    • மது பாட்டிலுக்கு 2 ரூபாய் தர வேண்டும் என கேட்பதாக புகார்.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளில், குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மது பாட்டில்களுக்கு கூடுதலாக வசூலிக்கப்படும் தொகையை கேட்டு சிலர் மிரட்டுவதாக டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.

    குறிப்பாக டாஸ்மாக் மதுக்கடை வாரியாக விற்பனை விவரங்களுடன் சிலர் வருகிறார்கள். மது பாட்டிலுக்கு 2 ரூபாய் தர வேண்டும் என கேட்பதாக சங்கத்தினர் புகார் கூறியுள்ளனர். மேலும் இந்த விவரம் தொடர்பாக ஊழியர் சங்கத்தினர் தமிழக முதல்-அமைச்சர், தமிழக மின்சாரம், மதுவிலக்கு அமலாக்க துறை அமைச்சர் மற்றும் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் அலுவலகத்திற்கும் புகார்மனு அனுப்பியுள்ளனர். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், டாஸ்மாக் வடக்கு, தெற்கு கலால் மாவட்ட எல்லைக்குள் பல்வேறு மதுபான கடைகளில் அதிகாரிகள் குழுவினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். குவார்ட்டர், பீர் பாட்டில்களுக்கு கூடுதலாக வசூலிக்கப்படும் தொகை, தினமும் விற்பனையாகும் மதுபாட்டில்கள் குறித்து பல்வேறு தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

    டாஸ்மாக் ஊழியர்கள் குறைந்தபட்ச விற்பனைக்கு மேலாக தினமும் வசூலிக்கும் தொகையின் பின்னணி குறித்தும் ஆய்வு நடக்கிறது.

    இதுகுறித்து ஊழியர் சங்கத்தினர் கூறும்போது,

    பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வகுலிப்பதாக ஊழியர்கள் மீது புகார் கூறப்படுகிறது. குடோன்களில் இருந்து மதுபான கடைக்கு கொண்டு வரப்படும் மதுபாட்டில்கள் உடைந்தால் அதற்கு ஊழியர்கள் பொறுப்பேற்க வேண்டியுள்ளது.

    ஏற்றுக்கூலி, இறக்கு கூலி, பெட்டிகள், பாட்டில்கள் சேதமடைந்தால் அதற்குரிய கட்டணம், பல்வேறு தரப்பினர் மாதந்தோறும் வசூலித்து செல்லும் தொகை குறித்தும் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு தெரிவித்திருக்கிறோம்.

    மது பாட்டில் விற்பனையில் நிலவும் பிரச்சினைகளை அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும். ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வேண்டும். கடையில் வந்து மிரட்டி பணம் கேட்டும் நிலையை தவிர்க்க வேண்டும். ஆய்வு நடத்தி குறிப்பிட்ட சில ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் திட்டத்தை டாஸ்மாக் நிர்வாகம் கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறோம் என்றனர்.

    • ஜவுளி, இனிப்பு, பட்டாசு கடைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    • ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையும், 2-வது குற்றத்திற்கு நீதிமன்றம் வாயிலாக அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்கவும் சட்டத்தில் வழிவகை உள்ளது.

    மதுரை

    சென்னை முதன்மை செயலாளர் / தொழிலாளர் ஆனையர் அதுல் ஆனந்த் அறிவுரையின்படியும், சென்னை சட்டமுறை எடையளவுக் கட்டுப்பாட்டு அதிகாரி சாந்தி உத்தரவின்ப டியும், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன் ஆகியோரது வழிகாட்டுதலின்படியும் மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வர்களால் சட்டமுறை எடையளவுச் சட்டம், எடையளவுகள் பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் திடீர் சோதனை நடத்தினர்.

    மதுரை மாவட்டத்தில் உள்ள ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைக் கடைகள், இனிப்புக் கடைகள், மற்றும் நிறுவனங்கள், பட்டாசுக் கடைகளில் இந்த சோதனை நடந்தது.

    இதில் சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் 26 நிறுவனங்களிலும், சட்டமுறை எடையளவுகள் (பொட்டலப் பொருட்கள்) விதிகளின் கீழ் 15 நிறுவனங்க ளிலும் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு சம்பந்த ப்பட்ட நிறுவனங்களின்மீது நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது.

    மேலும் பொட்டலப் பொருட்கள் விதிகளின்கீழ் உரிய காணப்படாத 9 பட்டாகக் கடைகளில் முரண்பாடு கண்டறியப்பட்டு அந்த நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    2011-ம் வருட சட்டமுறை எடையளவு (பொட்டலப் பொருட்கள்) விதிகளின்கீழ் பொட்டலப் பொருட்களின் விவரங்களை குறிப்பிடாமல் விற்பனை செய்து வரும் சில்லரை மற்றும் மொத்த விற்பனை வணிக நிறுவனங்களின் மீது முதலாவதாக கண்டறியப்படும் முரண்பாட்டிற்கு ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கவும், 2-வது முறையாக கண்டறியப்படும் முரண்பாட்டிற்கு நீதிமன்ற நடவடிக்கை தொடரவும் சட்டத்தில் வழிவகை உள்ளது.

    தராசுகள் மற்றும் எடையளவுகளை பரிசீலனை செய்து முத்திரை ஆய்வர்களிடம் உரிய காலத்தின் முத்திரையிட்ட பின்பே வியாபாரத்திற்கு பயன்படுத்தவேண்டும்.

    முத்திரையில்லாமல் எடையளவுகள் பயன்படுத்துபவர்களுக்கு முதல்முறையாக ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையும், 2-வது குற்றத்திற்கு நீதிமன்றம் வாயிலாக அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்கவும் சட்டத்தில் வழிவகை உள்ளது.

    மேற்கண்ட தகவலை மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி தெரிவித்தார்.

    ×