என் மலர்
நீங்கள் தேடியது "Mantrikar murder"
- எருமநாயக்கன்பாளையம் ஆனைபாலி என்ற இடத்தில் தலையில் பலத்த காயத்துடன் முத்துராஜ் இறந்து கிடந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் முத்துராஜ் மர்ம நபர்களால் அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
- கொலையில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே வாழக்குட்டப்பட்டி எருமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த ஜக்கம்ம நாயக்கர் மகன் முத்துராஜ் (வயது 39). இவர் மாந்திரீகம் செய்து தாயத்து கட்டும் தொழிலும் செய்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த வியாழக்கிழமை எருமநாயக்கன்பாளையம் ஆனைபாலி என்ற இடத்தில் தலையில் பலத்த காயத்துடன் முத்துராஜ் இறந்து கிடந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் முத்துராஜ் மர்ம நபர்களால் அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று எருமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த முத்தையா மகன் ஜெயக்குமார் (37), மல்லூர் வேங்காம்பட்டி கீழ் தெருவை சேர்ந்த பூவரசன் (30), வேங்கம்பட்டி நடுத்தெருவை சேர்ந்த ராஜா (28), அதே பகுதியை சேர்ந்த கணேசன் (53) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சம்பவத்தன்று இரவு முத்துராஜ் கடைக்கு சென்று விட்டு வந்தபோது மறைந்திருந்த ஜெயக்குமார் தரப்பினர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து இரும்பு கம்பி மற்றும் கட்டையால் பலமாக தாக்கியதில் இறந்தது தெரியவந்தது.
இந்த கொலையில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.






