search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வெள்ளத்தில் சிக்கிய குழந்தையை மீட்டபோது, தூங்காமல் வேலைபார்த்த களைப்பு பறந்து போனது - தலைமைக் காவலர் தயாளன்
    X

    வெள்ளத்தில் சிக்கிய குழந்தையை மீட்டபோது, தூங்காமல் வேலைபார்த்த களைப்பு பறந்து போனது - தலைமைக் காவலர் தயாளன்

    • தென் சென்னையிலும், வட சென்னையிலும் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளத்தை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • இன்னமும் பல்லாயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்து அபாயகரமான அளவில் நிற்கிறது.

    சென்னை:

    மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட சென்னையில் மீட்பு பணிகளும், நிவாரண பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

    வடசென்னை மற்றும் தென்சென்னை பகுதியில் மிக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய சென்னை பகுதியில் இயல்பு நிலை திரும்பி விட்ட நிலையில் தென் சென்னையிலும், வட சென்னையிலும் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளத்தை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மாதவரம், மணலி, எண்ணூர், கொரட்டூர், தாம்பரம், வேளச்சேரி, பீர்க்கங்கரணை, பெரும்பாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் இன்னமும் பல்லாயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்து அபாயகரமான அளவில் நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் இருப்பவர்களை படகுகளின் மூலம் மீட்கும் பணி இன்று 3-வது நாளாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மழை வெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தினரை போலீஸ் ஒருவர் பத்தித்திரமாக மீட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இதில் காவலர் ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு கொஞ்சியபடி புன்னகையுடன் நடந்துவரும் காட்சி பதிவாகி இருக்கிறது. இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    இதுபற்றி தலைமை காவலர் தயாளன் கூறும்போது,

    வெள்ளத்தில் சிக்கிய குழந்தையை மீட்டபோது, தூங்காமல் வேலைபார்த்த களைப்பு பறந்து போனது என்று கூறினார்.

    Next Story
    ×