search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹெல்மேட்"

    • போலீஸ் நிலையம் முன்பு ஏராளமான வக்கீல்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.
    • சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

    பெங்களுரு:

    கர்நாடக மாநிலம் சிக்மகளூர் பகுதியை சேர்ந்தவர் வக்கீல் பிரீதம். சம்பவத்தன்று இவர் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிக்மகளூர் நகர போலீசார் அவரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது வக்கீல் பிரீதமை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றி தெரியவந்ததும் போலீஸ் நிலையம் முன்பு ஏராளமான வக்கீல்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து அங்கு பதட்டமான சூழ்நிலை உருவானது. பின்னர் சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு விக்ரம் ஆம்தே விரைந்து வந்து விசாரணை நடத்தினார். பின்னர் வக்கீல் மீது தாக்குதல் நடத்தியதாக சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

    மேலும் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேரையும் சஸ்பெண்டும் செய்தார். தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் இருந்து போலீஸ் சூப்பிரெண்டு விக்ரம் ஆம்தே வெளியே செல்லாமல் வக்கீல்கள் போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீஸ் சூப்பிரெண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.

    மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர் என்று தெரிவித்தார். இதையடுத்து வக்கீல்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் போலீசாரை கண்டித்து சிக்மகளூர் பார்கவுன்சில் உறுப்பினர்கள் இன்று ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

    • ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து செல்லும் நபர்களும் உயிரிழக்கும் சதவீதம் அதிகமாக உள்ளது.
    • ஒரு சில இடங்களில் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களே ஹெல்மெட் அணியாமல் செல்வதையும் காணமுடிந்தது.

    கோவை:

    கோவையில் மாநகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் எப்போது பார்த்தாலும் போக்குவரத்து நெரிசலாகவே காணப்படுகிறது. காலை, மாலை வேளைகளில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் உள்ளது.

    இந்த சாலைகளில் அடிக்கடி வாகன விபத்துக்களும், இந்த விபத்துக்களில் உயிரிழப்புகளும் நடப்பது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் அதிகளவில் விபத்துக்களில் சிக்குவது வாடிக்கையாகி வருகிறது. இதனை தடுக்க மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    இதற்கிடையே மாநகர போலீசார், இருசக்கர வாகன விபத்துக்களில் உயிரிழப்பவர்கள் குறித்து விரிவாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின் முடிவில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து செல்லும் நபர்களும் உயிரிழக்கும் சதவீதம் அதிகமாக உள்ளது. இதனை தடுக்கவும், 100 சதவீதம் விபத்துக்களை தடுக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்க மாநகர போலீசார் முடிவு செய்தனர்.

    அதன்படி கோவை மாநகரில் இன்று முதல் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்பவர்களும், கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டது.

    இதனையடுத்து இன்று ஒருசிலர் போலீசாரின் உத்தரவை கடைபிடித்து, மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்தவர்களும் ஹெல்மெட் அணிந்திருந்தனர்.

    இந்த திட்டம் அமலானதை அடுத்து முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாநகர போலீசார் முக்கியமான சாலைகளில், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சாலைகளில் வந்த மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்தவர்கள் ஹெல்மெட் அணிந்துள்ளனரா என கண்காணித்தனர். அப்படி அணியவில்லை என்றால், அந்த வாகன ஓட்டிகளை பிடித்து எச்சரிக்கை விடுத்தனர். மேலும் அவர்களை போக்குவரத்து பூங்காவுக்கு அழைத்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    கோவை மாநகரில் இந்த திட்டம் இன்று அமலுக்கு வந்தாலும், ஒரு சிலர் மட்டுமே இதனை கடைபிடித்தனர். ஆனால் மாநகரின் பெரும்பாலான இடங்களில் அதனை யாரும் கடைபிடித்த மாதிரி தெரியவில்லை.

    வழக்கம் போலவே மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருப்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றனர். ஒரு சில இடங்களில் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களே ஹெல்மெட் அணியாமல் செல்வதையும் காணமுடிந்தது.

    விபத்துக்களை தடுக்கும் நோக்கில் கோவை மாநகரில் இன்று முதல் மோட்டார் சைக்கிளின் பின்னால் இருப்பவரும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இதனை வாகன ஓட்டிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும். இது தொடர்பாக வாகன தணிக்கையிலும் போலீசார் ஈடுபட்டு வருகிறோம். ஹெல்மெட் அணியவில்லை என்றால் மோட்டார் வாகன சட்ட விதிகளின் படி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களுக்கு ஒருவார காலத்துக்கு போக்குவரத்து பூங்காவில் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×