search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Priyanka Gandhi"

    • தெலுங்கானாவில் 13-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
    • ரோடு ஷோவில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசுகிறார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் வருகிற 13-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

    தேர்தலுக்கு இன்னும் ஒரு வார காலமே இருப்பதால் அரசியல் கட்சித் தலைவர்கள் தெலுங்கானாவில் நிலவும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் தெலுங்கானாவில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று முதல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

    இன்று நாகர்கர்னூல் தொகுதிக்கு உட்பட்ட கட்வாலியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகின்றனர். அதை தொடர்ந்து அடிலாபாத் தொகுதியின் நிர்மலில் ரோடு ஷோவில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    வருகிற 9-ந் தேதி மீண்டும் தெலுங்கானாவிற்கு வரும் ராகுல் காந்தி கரீம் நகர் மற்றும் மல்காஜ்கிரி ஆகிய தொகுதிகளில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.

    அதே நாளில் பிரியங்கா காந்தி ஜாஹிராபாத் நாடாளுமன்ற தொகுதியின் காமி ரெடியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அதன் பின்னர் செவல்லா நாடாளுமன்ற தொகுதியின் தந்தூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் பேச உள்ளார்.

    இந்த தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சந்திரசேகர ராவின் பாரத ராஷ்டிரிய கட்சி வேட்பாளர் ரஞ்சித் ரெட்டி வெற்றி பெற்றார். ரஞ்சித் ரெட்டி பாரத ராஷ்ட்ரிய கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தற்போது காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    10-ந் தேதி மாலை 6 மணிக்கு மேல் பிரியங்கா காந்தி மகபூப் நகர் நாடாளுமன்ற தொகுதியின் ஷாத் நகரில் ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார்.

    • எல்லாப் பொருளுக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு, எல்லாமே விலை உயர்ந்துவிட்டது.
    • பெட்ரோல் மற்றும் டீசல் எவ்வளவு விலை உயர்ந்தது.

    குஜராத் மாநிலம், பனஸ்கந்தா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசினார்.

    அப்போது பேசிய பிரியங்கா காந்தி கூறியதாவது:-

    எனது சகோதரரை இளவரசர் (Shehzada) என பாஜகவினர் அழைக்கின்றனர். இந்த 'இளவரசர்' குமரி முதல் காஷ்மீர் வரை 4000 கி.மீ. நடந்து, மக்களின் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார். மறுபுறத்தில் (Shehanshah) 'ராஜாதிராஜா' நரேந்திர மோடி அரண்மனையில் வாழ்ந்து வருகிறார். தொலைக்காட்சியில் அவரை பார்த்திருக்கிறீர்களா? அவரது முகத்தில் ஒரு துளி தூசியைக் கூட பார்க்க முடியாது. அவரால் எப்படி மக்களின் பிரச்னைகளை புரிந்துகொள்ள முடியும்?

    பெட்ரோல் மற்றும் டீசல் எவ்வளவு விலை உயர்ந்தது அல்லது விவசாயம் எவ்வளவு விலை உயர்ந்தது என்பதை அவர் எப்படி புரிந்துகொள்வார்?

    எல்லாப் பொருளுக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு, எல்லாமே விலை உயர்ந்துவிட்டது. இதெல்லாம் மோடிக்கு புரியாது. அவர் கோட்டைக்குள் உள்ளார். அதிகாரத்தால் சூழப்பட்டிருக்கிறார். எல்லோரும் அவரைப் பார்த்து பயப்படுகிறார்கள். அவரை யாரும் எதுவும் சொல்வதில்லை. யாரேனும் குரல் எழுப்பினால், அதை அடக்குவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் விவரங்களை காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்டார்.
    • அமேதி தொகுதியில் கேஎல் சர்மா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

    உத்தரபிரதேசத்தில் தற்போது 5-ம் கட்ட தேர்தலுக்கான மனுதாக்கல் கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். இந்த 5-ம் கட்ட தேர்தலில்தான் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி செல்வாக்குமிக்க தொகுதிகளாக இருக்கும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    இந்த இரு தொகுதி வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவிக்காமல் இருந்தது. அமேதியில் ராகுலும், ரேபரேலி தொகுதியில் பிரியங்காவும் களம் இறக்கப்படுவார்கள் என்று தகவல்கள் வெளியானதால் இந்த இரு தொகுதி வேட்பாளர்கள் தொடர்பாக மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.

    ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக, சுமூக முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து இன்று காலை அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் விவரங்களை காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்டார்.

    அதில், ரேபரேலி தொகுதியில் ராகுல், அமேதி தொகுதியில் கேஎல் சர்மா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், பிரியங்கா காந்தியை உத்தரப்பிரதேசத்தின் அமேதி அல்லது ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சி களமிறக்காதது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

    அப்போது அவர் கூறியுள்ளதாவது:-

    பிரதமர் மோடியின் பொய் பிரசாரத்தை தனது தீவிரமான பரப்புரையின்மூலம் ஒற்றை ஆளாக தவிடுபொடியாக்கி வருகிறார் பிரியங்கா காந்தி.

    காங்கிரஸ் கட்சிக்காக அவர் நாடு முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். ஒரு குறிப்பிட்ட தொகுதிக்குள் பிரியங்கா காந்தி சுருங்கிவிடக் கூடாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • காந்தி குடும்பத்தின் ஆஸ்தான தொகுதிகளாக இருப்பது அமேதி மற்றும் ரேபரேலி.
    • 1967 முதல் காங்கிரஸ் வெற்றி பெற்று வருகிறது.

    உத்தரப் பிரதேசத்தில் காந்தி குடும்பத்தின் ஆஸ்தான தொகுதிகளாக இருப்பது அமேதி மற்றும் ரேபரேலி. அமேதியில் கடந்த 1967 முதல் காங்கிரஸ் வெற்றி பெற்று வருகிறது.

    1980-ல் சஞ்சய் காந்தி மூலமாக அமேதி காங்கிரஸ் தலைமையின் குடும்பத் தொகுதியாக மாறியது. அதே வருடம் சஞ்சய் காந்திக்கு பின் அங்கு வந்த இடைத்தேர்தலில் ராஜீவ் காந்தி முதன்முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி தொடர்ந்து 1984, 1989, 1991 வரை எம்பியாக இருந்தார். அவரது மறைவால் வந்த இடைத்தேர்தலில் காந்தி குடும்பத்திற்கு நெருக்கமான கேப்டன் சதீஷ் சர்மா போட்டியிட்டு வெற்றி அடைந்தார்.

    இதற்கு அடுத்து வந்த 1996 பொதுத் தேர்தலிலும் சர்மா, அமேதி எம்பியானார். பிறகு 1998ல் பாஜகவின் சஞ்சய் சிங் கைக்கு அமேதி மாறியது.

    அமேதி களத்தில் 1999ல் அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போட்டியால், மீண்டும் அது காங்கிரஸ் வசமானது. இவர், அடுத்த தேர்தலில் அருகிலுள்ள ரேபரேலிக்கு மாறிவிட, அமேதியில் ராகுல் 2004-ல் முதன்முறையாக களம் இறங்கினார்.

    அடுத்து வந்த 2009, 2014, 2019 மக்களவை தேர்தலிலும் என அமேதியில் மூன்று முறை தொடர்ந்தார் ராகுல். இதில், 2014 முதல் பா.ஜ.க.வுக்காக ராகுலை எதிர்த்த மத்திய அமைச்சரான ஸ்மிருதி இரானி, 2019-ல் ராகுலை தோற்கடித்தார்.

    கடந்த 2002 முதல் அமேதி தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்த ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டதால் அங்கு வெற்றி பெற்றதை அடுத்து அவர் மக்களவை உறுப்பினராக தொடர்ந்து இருந்து வருகிறார்.

    ரேபரேலி தொகுதியில் 2004, 2006 இடைத்தேர்தல், 2009, 2014, 2019 என தொடர்ந்து 5 முறை சோனியாகாந்தி வெற்றிபெற்று எம்.பி.யாக இருந்து வந்தார். தற்போது அவரும் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகிவிட்டார். இம்முறை ராகுல்காந்தி ரேபரேலி தொகுதியில் வேட்பாளராக களமிறங்குகிறார்.

    அமேதியில் ராகுல்காந்தியும், ரேபரேலியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும் போட்டியிட வேண்டும் என்று உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் வற்புறுத்தி வந்தனர்.

    இந்த நிலையில்  ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியிலும், கேஎல் சர்மா அமேதி தொகுதியிலும் வேட்பாளராக களமிறங்குகிறார்கள்.

    • அமேதி காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க தொகுதிகளில் ஒன்றாகும்.
    • கேஎல் சர்மா சோனியா குடும்பத்துக்கு மிக மிக நெருக்கமானவர்.

    அமேதி தொகுதி காங்கி ரஸ் வேட்பாளராக கேஎல் சர்மா அறிவிக்கப்பட்டதும் காங்கிரஸ் கட்சியினரே ஆச்சரியம் அடைந்தனர். நாடு முழுவதும் யார் இந்த கேஎல் சர்மா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    அமேதி தொகுதி காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க தொகுதிகளில் ஒன்றாகும். கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் முதல் முதலாக இந்த தொகுதியில் ராகுல் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிருதிஇரானியிடம் தோல்வியை தழுவினார்.

    இதன் மூலம் இந்த தொகுதி காங்கிரசிமிருந்து பா.ஜ.க. கைக்கு மாறியது. அங்கு மீண்டும் ஸ்மிருதி இரானி இந்த தடவை களம் இறக்கப்பட்டுள்ளார். இந்த தடவையும் ராகுல் அங்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் வயநாடு தொகுதியில் களம் இறங்கிய ராகுல் அமேதியில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை எனவே பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, இந்திராகாந்தியின் உறவினர் ஷீலா கவுலின் பேரன் ஆகிய இருவரில் ஒருவர் வேட்பாளராக தேர்வு பெறலாம் என்று தகவல்கள் வெளியானது.

    இந்த நிலையில் அனை வரது எதிர்ப்பார்ப்பையும் தகர்க்கும் வகையில் கேஎல் சர்மா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் சோனியா குடும்பத்துக்கு மிக மிக நெருக்கமானவர்.

    பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த இவர் காங்கிரஸ் பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தவர். காங்கிரசில் சேர்ந்து அந்த கட்சிக்காக சேவையாற்றி வந்த அவர் 1983-ம் ஆண்டு ரேபரேலி தொகுதிக்கு வந்து தொகுதி பொறுப்பாளராக பதவி ஏற்றார்.

    அன்று முதல் ராஜீவ்காந்தி, சோனியாகாந்தியின் தனிப்பட்ட அன்பை சம்பாதித்தார். ராஜீவ்காந்திக்காக அவரது பிரதிநிதி போல அவர் ரேபரேலி தொகுதியில் பணியாற்றி வந்தார்.

    ராஜீவ் மறைவுக்கு பிறகு சோனியா குடும்பத்தினருடன் சர்மாவுக்கு மேலும் நட்புறவு அதிகரித்தது. சோனியா ரேபரேலி தொகுதி எம்.பி.யாக இருந்த 4 தடவையும் அவரது பிரதிநிதியாக ரேபரேலி தொகுதியில் பணியாற்றி வந்தார்.

    இன்னும் சொல்லப் போனால் அறிவிக்கப்படாத எம்.பி. போலவே அவர் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சி பணிகளில் ஈடுபட்டார். இதன் காரணமாக அந்த தொகுதியில் அவருக்கு அதிக பேருடன் தொடர்பு ஏற்பட்டது.

    2004-ம் ஆண்டு ராகுல்காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட்ட போது அங்கும் சென்று ராகுலுக்காக கட்சி பணிகளிலும், தேர்தல் பணிகளிலும் ஈடுபட்டார். 2009, 2014, 2019 தேர்தல்களிலும் அமேதி, ரேபரேலி தொகுதிகளின் காங்கிரஸ் பொறுப்பாளராக பணியாற்றினார்.

    அவரது சேவையை கவுரவிக்கும் வகையிலேயே சோனியா அவரை அமேதி தொகுதி வேட்பாளராக களம் இறக்கி உள்ளார். ராகுலுக்கு பதில் அவர் போட்டியிடுவதாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் அமேதி தொகுதியை தன்வசமாக்கி வைத்திருக்கும் மத்திய மந்திரி ஸ்மிருதிஇரானிக்கு கேஎல் சர்மாவால் நெருக்கடி கொடுக்க இயலுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

    • அமேதி தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட ராகுல் காந்தி தோல்வியடைந்தார்.
    • ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட சோனியா காந்தி, மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    காங்கிரஸ் சார்பில் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் வேட்பாளர்களாக நிறுத்தப்படப்போவது யார் என்பதுதான் மில்லியன் கேள்வியாக எழுந்துள்ளது. அமேதி தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட ராகுல் காந்தி தோல்வியடைந்த நிலையில், இந்த முறை வயநாடு தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறார்.

    ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட சோனியா காந்தி, உடல்நல காரணமாக மக்களவை தொகுதியில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துவிட்டார்.

    இந்த இரண்டு தொகுதிகளில் காந்தி குடும்பங்களின் பாரம்பரிய தொகுதிகள் ஆகும். இதனால் ராகுல் காந்தி அமேதியிலும், பிரியங்கா காந்தி ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர்கள் விரும்புகிறார்கள். உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் இதைத்தான் விரும்புகிறார்கள்.

    அமேதியில் இன்று காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு மே மாதம் 20-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. வருகிற 3-ந்தேதிதான வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்வுக்குழு இன்னும் வேட்பாளரை அறிவிக்காமல் உள்ளது.

    கடந்த சனிக்கிழமை இந்த குழு ஆலோசனை நடத்தியது. இருந்தபோதிலும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இதனால் அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் யார் என்பதில் சஸ்பென்ஸ் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    • பா.ஜனாவின் நிலை மிகவும் தெளிவானது. நாங்கள் நாட்டின் தாய்மார்கள் அல்லது பெண்களுடன் நிற்கிறோம்.
    • கர்நாடகா மாநிலத்தில் யாருடைய அரசு என்பதை காங்கிரசிடம் கேட்க விரும்புகிறேன்.

    தேவகவுடா பேரனும், மக்களவை எம்.பி.யுமான பிரஜ்வால் ரேவண்ணா பெண்களை பலாத்காரம் செய்து அவற்றை வீடியோ எடுத்ததாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இது தொடர்பாக பல வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த கர்நாடகா அரசு சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளது.

    இந்த விவகாரம் நாடு தழுவிய அளவில் விமர்சனத்தை எழுப்பியுள்ளது. பிரஜ்வால் ரேவண்ணா மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர். தற்போது கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மதசார்பற்ற ஜனதா தளம் பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. இதனால் பா.ஜனதாவையும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.

    காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி "10 நாட்களுக்கு முன்பு பிரதமர் கைகளை குலுக்கியும், தோள்களில் கைபோட்டும் கர்நாடக பிரசார கூட்டத்தில் புகழ்ந்து பேசிய நபர் இன்று நாட்டை விட்டே தப்பியோடி தலைமறைவாக இருக்கிறார். நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை சீரழித்த மோடி ஆதரித்த வேட்பாளரின் குற்றங்களை கேட்கும்போதே நெஞ்சம் நடுங்குகிறது. இந்த கொடூரத்துக்காவது பிரதமர் மோடி வாய் திறப்பாரா?" என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

    இந்த நிலையில் பிரியங்கா காந்தியின் குற்றச்சாட்டுக்கு மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதாவின் மூத்த தலைவருமான அமித் ஷா பதில் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக அமித் ஷா கூறியதாவது:-

    பா.ஜனாவின் நிலை மிகவும் தெளிவானது. நாங்கள் நாட்டின் தாய்மார்கள் அல்லது பெண்களுடன் நிற்கிறோம். கர்நாடகா மாநிலத்தில் யாருடைய அரசு என்பதை காங்கிரசிடம் கேட்க விரும்புகிறேன். அங்கு காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது வரை அவர்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?. அந்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்பதால் நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது. மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இது மிகவும் முக்கியமான விசயம். நாம் இதை சகித்துக் கொள்ள முடியாது. ஆட்சியில் இருந்தும் கூட இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? இதைத்தான் நாங்கள் காங்கிரசிடம் கேட்க விரும்புகிறோம். பிரியங்கா காந்தி அவர்களுடைய முதல்-மந்திரி, துணை முதல்வரிடம் கேட்க வேண்டும்.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    • கடந்த சனிக்கிழமை ரேபரேலி, அமேதி தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை தேர்வு செய்ய காங்கிரஸ் தேர்தல் குழுவின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி மீண்டும் அமேதியில் மத்திய மந்திரி ஸ்மிருதிஇரானியை எதிர்த்து களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதி காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க கோட்டையாக திகழும் தொகுதி ஆகும்.

    1951-ம் ஆண்டு தேர்தல் முதல் இந்த தொகுதியை காங்கிரஸ் கட்சி தனது வசம் வைத்திருக்கிறது. இந்திய அரசியலில் எத்தனையோ அரசியல் மாற்றங்களும், புயல்களும் வீசினாலும் இந்த தொகுதி காங்கிரசுக்கு விசுவாசமிக்க தொகுதியாக உள்ளது.

    மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி ரேபரேலி தொகுதியில் இருந்து 3 முறை பாராளுமன்றத்துக்கு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரது கணவர் பெரோஸ் 1952-ம் ஆண்டு முதல் 1957-ம் ஆண்டு வரை இந்த தொகுதியில் எம்.பி.யாக இருந்து உள்ளார்.

    இவர்களை தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் சோனியா அடுத்தடுத்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் அந்த தொகுதியில் 4 தடவை தொடர்ந்து எம்.பி.யாக இருந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்போது சோனியா பாராளுமன்ற மேல்சபை எம்.பி.யாக தேர்வாகி உள்ளார். ரேபரேலி தொகுதியில் போட்டியிடவில்லை என்பதை அவர் கடந்த ஆண்டே அறிவித்து விட்டார். இதனால் ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்பதில் எதிர்பார்ப்பு நிலவியது.

    இந்திரா, சோனியாவை தொடர்ந்து பிரியங்காவை அந்த தொகுதியில் களம் இறக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அனைவரும் விருப்பம் தெரிவித்தனர். ரேபரேலி தொகுதியில் இருந்தும் பிரியங்காவை வரவேற்று கடிதங்கள் அனுப்பப்பட்டன. எனவே பிரியங்கா ரேபரேலி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

    கடந்த சனிக்கிழமை ரேபரேலி, அமேதி தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை தேர்வு செய்ய காங்கிரஸ் தேர்தல் குழுவின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் அந்த 2 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவிக்கும் அதிகாரம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வசம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்த 2 தொகுதிகளிலும் மே 20-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வருகிற 3-ந்தேதி மனுதாக்கலுக்கு கடைசி நாளாகும்.


    எனவே ஓரிரு நாளில் ரேபரேலி தொகுதி வேட்பாளராக பிரியங்கா அறிவிக்கப்படலாம் என்று எதிர் பார்க்கப்பட்டது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக பிரியங்கா பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்று கூறி விட்டதாக தெரிய வந்துள்ளது. தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி இருந்து பிரசார பணிகளை மட்டும் மேற்கொள்ள அவர் முடிவு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற கேள்விக்குறி எழுந்தது. அதற்கு விடை அளிக்கும் வகையில் இன்று காலை காங்கிரஸ் வட்டாரங்களில் இருந்து பரபரப்பு தகவல் வெளியானது. அதன்படி ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் களம் இறக்கப்படுவார் என்று தெரிகிறது.

    இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று வெளியிட உள்ளார். இந்த திடீர் திருப்பத்தால் ரேபரேலி தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    அந்த தொகுதியில் ரோடு ஷோ நடத்தி ராகுல் வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று தெரிகிறது.

    வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி மீண்டும் அமேதியில் மத்திய மந்திரி ஸ்மிருதிஇரானியை எதிர்த்து களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே சமயத்தில் அமேதி தொகுதியில் ஸ்மிருதிஇரானியை எதிர்த்து வெற்றி பெற இயலுமா? என்பதிலும் ராகுலுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதனால் அவர் அமேதியில் களம் இறங்க சற்று தயக்கத்துடன் இருந்து வந்தார். அதை உறுதிபடுத்தும் வகையில் அமேதியில் போட்டியிட தயாராக இருப்பதாக பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா அடிக்கடி சொல்லி வந்தார்.

    ஆனால் ராபர்ட் வதேராவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட மாட்டாது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அவருக்கு வாய்ப்பு கொடுத்தால் அது மேலும் சர்ச்சையை உருவாக்கி விடும் என்று சோனியா குடும்பத்தினர் கருதுகிறார்கள்.

    இந்த நிலையில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் புதுமுகம் களம் இறங்குவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஷீலா கவுலின் பேரனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ஷீலா கவுலும் சோனியா குடும்பத்து உறவினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது
    • ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது

    கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பியாக உள்ளார். அவர் கர்நாடகாவில் முதல் கட்டமாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. .

    இந்நிலையில் தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது. பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.

    ஹாசன் தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 26-ந் தேதி முதல் நாளில் இருந்தே இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    இப்படிப்பட்ட நபருக்கா நீங்கள் ஓட்டுப் போடப் போகிறீர்கள்? என்ற வாசகத்துடன் இந்த ஆபாச வீடியோக்கள் வலம் வருகிறது. இதனால் ஒட்டுமொத்த தேவகவுடா குடும்பமும் நிலை குலைந்து போயுள்ளது.

    இந்த நிலையில் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையா எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதனையடுத்து, பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா, ஜெர்மனுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,"10 நாட்களுக்கு முன்பு பிரதமர் கைகளை குலுக்கியும், தோள்களில் கைபோட்டும் கர்நாடக பிரச்சார கூட்டத்தில் புகழ்ந்துபேசிய நபர் இன்று நாட்டை விட்டே தப்பியோடி தலைமறைவாக இருக்கிறார். நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை சீரழித்த மோடி ஆதரித்த வேட்பாளரின் குற்றங்களை கேட்கும்போதே நெஞ்சம் நடுங்குகிறது. இந்த கொடூரத்துக்காவது பிரதமர் மோடி வாய் திறப்பாரா?" என்று பதிவிட்டுள்ளார்.

    கர்நாடகாவில் மொத்தம் 28 பாராளுமன்ற தொகுதிகளில் 14 தொகுதிகளுக்குதான் தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. வட கர்நாடகாவின் 14 பாராளுமன்ற தொகுதிகளில் மே 7-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

    • சோனியா காந்தி ரேபரேலி தொகுதியில் 2004 முதல் 2019 தேர்தல் வரை வெற்றி பெற்று எம்.பி.யாக இருந்தார். இந்த முறை அவர் போட்டியிடவில்லை.
    • அமேதி, ரேபரேலி தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ரிஷிகேஷ்:

    பாராளுமன்றத்துக்கு நடைபெற உள்ள 7 கட்ட தேர்தலில் 2 கட்ட வாக்குப்பதிவு முடிந்து விட்டது.

    உத்தரபிதேச மாநிலம் அமேதி, ரேபரேலி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி இன்னும் அறிவிக்கவில்லை. இங்கு 5-வது கட்டமாக மே 20-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந்த இரண்டு தொகுதிகளும் காங்கிரஸ் மேலிடத்தின் பாரம்பரிய தொகுதியாகும்.

    கடந்த முறை ராகுல்காந்தி அமேதி, வயநாடு ஆகிய 2 தொகுதியில் போட்டியிட்டார். இதில் அமேதி தொகுதியில் அவர் ஸ்மிருதி இரானியிடம் தோற்றார். கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார்.

    இந்த தேர்தலில் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு உள்ளார். இதற்கான ஓட்டுப்பதிவு நேற்று முடிவடைந்து விட்டது. அமேதி தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிடுவாரா? என்பது இதுவரை உறுதியாக தெரியவில்லை. அவர் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

    சோனியா காந்தி ரேபரேலி தொகுதியில் 2004 முதல் 2019 தேர்தல் வரை வெற்றி பெற்று எம்.பி.யாக இருந்தார். இந்த முறை அவர் போட்டியிடவில்லை. மேல்சபை எம்.பி.யாக சோனியா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ரேபரேலியில் பிரியங்கா போட்டியிடலாம் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அமேதி, ரேபரேலி தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் நான் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என நாடே விரும்புகிறது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நாடு முழுவதும் இருந்தும் எனக்காக குரல் எழுகிறது. நான் தீவிர அரசியலில் இறங்க வேண்டும் என்று நாட்டு மக்கள் விரும்புகிறார்கள். நான் 1999 முதல் அமேதி தொகுதியில் பிரசாரம் செய்து வருகிறேன். அமேதி தொகுதியில் ஸ்மிருதிஇரானி வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

    மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அவர்கள் (பா.ஜனதா) மத்திய விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறார்கள். பா.ஜனதாவை அகற்ற மக்கள் நினைக்கிறார்கள். ராகுல் மற்றும் பிரியங்காவின் கடின உழைப்பை பார்த்து நாட்டு மக்கள் காந்தி குடும்பத்துடன் இருக்கிறார்கள்.

    இவ்வாறு ராபர்ட் வதேரா கூறியுள்ளார்.

    இந்த மாதம் தொடக்கத்திலும் அவர் அமேதி தொகுதியில் போட்டியிட விரும்புவதை மறைமுகமாக தெரிவித்து இருந்தார். தற்போதும் அவர் அதே மனநிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அமேதி தொகுதியில் ராபர்ட் வதேராவுக்கு 'சீட்' கொடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    • பிரியங்காவுக்கு நெருக்கடி கொடுக்கவே வருண்காந்தியை முன்னிலைப்படுத்த அமித்ஷா திட்டமிட்டு இருந்தார்.
    • வேறு சாதாரண வேட்பாளரை நிறுத்தினால் பிரியங்கா சில லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற வாய்ப்புள்ளது.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படும் தொகுதியாகும்.

    காங்கிரஸ் தலைவர் சோனியா அந்த தொகுதியில் இருந்துதான் பாராளுமன்றத்துக்கு தேர்வானார். இந்த தடவை அந்த தொகுதியில் பிரியங்காவை போட்டியிட வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காகவே சோனியா அங்கு போட்டியிடுவதை தவிர்த்து மேல்சபை எம்.பி.யாகி இருக்கிறார்.

    முதன் முதலாக தேர்தல் களத்துக்கு வரும் பிரியங்காவுக்கு முதல் தேர்தலிலேயே நெருக்கடி கொடுத்து தோல்வியை பெரியதாக கொடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதாவும் தீவிரமாகி உள்ளது. பா.ஜ.க. மூத்த தலைவர்கள் இது தொடர்பாக பல தடவை ஆய்வு செய்தனர்.

    இறுதியில் மேனகா காந்தியின் மகன் வருண்காந்தியை பிரியங்காவுக்கு எதிராக களம் இறக்கலாம் என்று முடிவு செய்தனர். இது தொடர்பாக கடந்த மாதம் வருண்காந்தியை அழைத்து பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்களது திட்டத்தை அறிந்த வருண்காந்தி கடும் அதிர்ச்சி அடைந்தார்.

    வருண்காந்தி பிரியங்காவின் தம்பி ஆவார். அவர் உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதியில் இருந்து 2 தடவை பாராளுமன்றத்துக்கு எம்.பி.யாக தேர்வாகி உள்ளார். இந்த தடவையும் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்து இருந்தார்.

    ஆனால் அவருக்கு அந்த தொகுதியில் போட்டியிட பா.ஜ.க. மேலிடம் வாய்ப்பு வழங்கவில்லை. பிரியாங்கவை எதிர்த்து ரேபரேலி தொகுதியில் போட்டியிடுமாறு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டார். ஆனால் சகோதரியை எதிர்த்து தன்னால் போட்டியிட இயலாது என்று வருண்காந்தி திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

    பிரியங்காவுக்கு நெருக்கடி கொடுக்கவே வருண்காந்தியை முன்னிலைப்படுத்த அமித்ஷா திட்டமிட்டு இருந்தார். வருண்காந்தி மறுத்து உள்ளதால் அமித்ஷா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். வேறு சாதாரண வேட்பாளரை நிறுத்தினால் பிரியங்கா சில லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற வாய்ப்புள்ளது.

    இது காங்கிரஸ் கட்சிக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் மாறி விடும் என்று பா.ஜ.க. தலைவர்கள் கருதுகிறார்கள். அந்த நிலையை தடுத்து நிறுத்தவே வருண்காந்தி உதவியை அவர்கள் நாடினார்கள். ஆனால் வருண்காந்தி மறுத்து விட்டதால் வேறு யாரை பிரியங்காவை எதிர்த்து நிறுத்தலாம் என்று ஆலோசித்து வருகிறார்கள்.

    முன்னாள் மத்திய மந்திரி உமாபாரதியை பிரியங்காவுக்கு எதிராக நிறுத்தலாமா? என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பஜ்ரங்தள் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான வினய் கத்தியர், சமாஜ்வாடி முன்னாள் தலைவர் மனோஜ்பாண்டே மற்றும் அரச குடும்பத்தை சேர்ந்த ராகேஷ் பிரதாப்சிங் ஆகியோரது பெயர்களும் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன.

    • மத்திய பா.ஜ.க., அரசு கடந்த 10 ஆண்டுகளில் செய்த சாதனைகளை சொல்லி நடந்து வரும் தேர்தலில் வாக்குகளை சேகரிக்கிறோம்.
    • வாக்காளர்கள் தமிழகம் முழுவதும் விடுபட்டுள்ளார்கள்.

    திருப்பூர்:

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், திருப்பூர் பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க., வேட்பாளருமான ஏ.பி.முருகானந்தம் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாரதிய ஜனதா கட்சிக்கு முதல் வெற்றி குஜராத்தில் தொடங்கியுள்ளது. சூரத் தொகுதியில் பா.ஜ.க., வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் 400 இடங்களுக்கு அதிகமாகவே பா.ஜ.க. கைப்பற்றும்.

    தமிழகத்தில் பா.ஜ.க., தலைவர்கள் முதல் பிரதமர் மோடி தொடங்கி அண்ணாமலை வரை அனைவரின் சுற்றுப்பயணம் தமிழகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 39 தொகுதிகளிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசியல் புரட்சியை பா.ஜ.க., மேற்கொண்டுள்ளது. ஜூன் 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை முடிவில் இது தெரியும்.

    மத்திய பா.ஜ.க., அரசு கடந்த 10 ஆண்டுகளில் செய்த சாதனைகளை சொல்லி நடந்து வரும் தேர்தலில் வாக்குகளை சேகரிக்கிறோம். தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் எந்த வேலையையும் செய்யவில்லை. வாக்காளர்கள் தமிழகம் முழுவதும் விடுபட்டுள்ளார்கள். இது எங்களுக்கு மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க., வாக்கு வங்கி உள்ள பகுதிகளில் இது நடந்திருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. இது ஆளுங்கட்சி தலையீடாக கூட இருக்கலாம்.

    ராகுல் காந்தி- பிரியங்கா ஆகியோர் கோவிலுக்கு செல்வது தேர்தல் காலத்தில் மட்டும்தான். இந்தியா கூட்டணி என்பது ஒன்றுமில்லாத ஒன்று.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட தலைவர் செந்தில்வேல் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    ×