search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேபரேலி தொகுதி"

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்த நிலையில் இந்த தோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் உ.பி. மாநில தலைவர் ராஜ் பபர் ராஜினாமா செய்தார்.
    லக்னோ:

    நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரசேதத்தில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளில் பாரதிய ஜனதா -62 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ்-10 தொகுதிகளிலும், சமாஜ்வாதி-5 தொகுதிகளிலும், அப்னாதளம் -2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே காங்கிரஸ் கட்சி ஒரேயொரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மட்டும் ரேபரேலி தொகுதியில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 178 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அமேதி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைவிட கூடுதலாக 55 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    இந்நிலையில், மிக மோசமான இந்த தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் உ.பி. மாநில தலைவர் ராஜ் பபர் மற்றும் அமேதி மாவட்ட தலைவர் யோகேந்திர மிஸ்ரா ஆகியோர் தங்களது பதவிகளை இன்று ராஜினாமா செய்தனர்.
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி 1.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
    லக்னோ:

    ரேபரேலி பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக பதவி வகிக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இந்த தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டார்.

    அங்கு வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து முடிவுகள் வெளியான நிலையில் சோனியா காந்தி 5 லட்சத்து 34 ஆயிரத்து 918 வாக்குகளையும் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங் 3 லட்சத்து 67 ஆயிரத்து 740 வாக்குகளையும் பெற்றனர்.

    ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 178 வாக்குகள் வித்தியாசத்தில் சோனியா காந்தி இங்கு வெற்றி பெற்றுள்ளார். 
    உ.பி.யின் ரேபரேலியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பண மதிப்பிழப்பு, கப்பார் சிங் வரியை நடைமுறைப்படுத்தியது முட்டாள்தனமான முடிவு என குற்றம்சாட்டினார். #LokSabhaElections2019 #Raebareli #Congress #RahulGandhi #SoniaGandhi #Modi
    லக்னோ:

    உத்தரபிரதேசம் மாநிலத்தின் ரேபரேலி  பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    நாட்டில் உள்ள இளைஞர்களில் யாராவது ஒருவர், காவலாளி மோடி எனக்கு வேலை வாய்ப்பை தந்தார் என சொல்ல முடியுமா?  காரணம், 45 ஆண்டில் இருந்ததை விட கடந்த 5 ஆண்டில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்து காணப்படுகிறது.



    கடந்த 70 ஆண்டுகளில் பண மதிப்பிழப்பு மற்றும் கப்பார் சிங் வரியை நடைமுறைப்படுத்தும் முட்டாள்தனமான முடிவை எந்த அரசும் எடுத்தது கிடையாது. பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளாக நாட்டு மக்களிடம் தொடர்ந்து பொய்களை மட்டுமே பேசி வருகிறார்.

    வேலைவாய்ப்பு, விவசாயிகள் பிரச்னை மற்றும் 15 லட்சம் ரூபாய் ஆகியவை குறித்து அவர் பேசுவதில்லை. தனக்கு எழுதி தருபவற்றை பிராம்டரை பார்த்து படிக்க மட்டும் செய்கிறார். எது பேச வேண்டும் என எழுதி தருவதை மட்டுமே படிக்கிறார். காலம் அதனை மாற்றும் என தெரிவித்தார். #LokSabhaElections2019 #Raebareli #Congress #RahulGandhi #SoniaGandhi #Modi
    ரேபரேலியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி 5-வது முறையாக களமிறங்க உள்ளார். #SoniaGanthi #LokSabha #RaeBareli
    புதுடெல்லி:

    உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதி தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக விளங்கி வருகிறது. இங்கு 1971-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட தேர்தல்களில் 1977-ல் இந்திரா காந்தி தோல்வியடைந்ததை தவிர, பிற தேர்தல்கள் அனைத்திலும் அந்தக்கட்சி வெற்றிக்கனியை பறித்து இருக்கிறது.

    இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த ரேபரேலியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, கடந்த 2004-ம் ஆண்டு முதல் போட்டியிட்டு வருகிறார். 2006-ல் நடந்த இடைத்தேர்தல் உள்ளிட்ட 4 தேர்தல்களில் அந்த தொகுதியில் போட்டியிட்டு அவர் வென்றிருந்தார். 2004-ம் ஆண்டு தேர்தலில் இந்த தொகுதியில் 2.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்று இருந்தார்.இதைத்தொடர்ந்து வருகிற தேர்தலுக்கும் ரேபரேலி தொகுதி சோனியாவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

    சமீபத்தில் வெளியிடப்பட்ட கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இந்த தகவல் இடம்பெற்று இருந்தது. இதன் மூலம் 5-வது முறையாக ரேபரேலி தொகுதியில் அவர் களமிறங்க உள்ளார்.முன்னதாக சோனியாவின் உடல்நலக்குறைவு காரணமாக அவர் போட்டியிடுவது குறித்து சந்தேகங்கள் கிளம்பி இருந்த நிலையில், அவர் போட்டியிடுவதை கட்சித்தலைமை உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.  SoniaGanthi #LokSabha #RaeBareli
    ரேபரேலி தொகுதியில் எம்.பி. ஆக உள்ள சோனியாகாந்திக்கு 5 தடவையும் தேர்தல் பணி செய்தது பிரியங்காதான் என்பதால் இந்த தொகுதியில் பிரியங்காவை போட்டியிட வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Parliamentelection #PriyankaGandhi
    நேரடி அரசியலுக்கு வந்துள்ள பிரியங்காவை வருகிற பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இப்போதே அழைப்பு விடுக்கத் தொடங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து பிரியங்காவை எந்த தொகுதியில் களம் இறக்கலாம் என்ற ஆலோசனை நடந்து வருகிறது.

    பிரியங்காவை பொருத்தவரை அவர் உத்தரபிரதேசத்தில் உள்ள அமேதி, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளுடன் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல தொடர்பில் இருப்பவர். அந்த இரு தொகுதிகளிலும் அவருக்கு அபரிதமான செல்வாக்கு இருக்கிறது.

    இதில் அமேதி தொகுதியில் ராகுல் கடந்த 2004-ம் ஆண்டு முதல் எம்.பி. ஆக இருந்து வருகிறார். எனவே நான்காவது முறையாக அவர் அமேதியில் போட்டியிட உள்ளார்.



    சோனியாகாந்தி ரேபரேலி தொகுதியில் எம்.பி. ஆக உள்ளார். ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக இந்த தடவை அவர் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்ற பேச்சு நிலவுகிறது. இத்தகைய சூழ்நிலையில் ரேபரேலி தொகுதியில் பிரியங்காவை போட்டியிட வைக்கலாம் என்று நினைக்கிறார்கள்.

    ரேபரேலி தொகுதியில் பிரியங்காவின் வெற்றி 100 சதவீதம் உறுதியானதாகும். அத்தகைய சூழ்நிலையில் அவர் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள 40 தொகுதிகளிலும் தீவிர கவனம் செலுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

    ரேபரேலி தொகுதியில் இருந்து சோனியா 5 முறை எம்.பி. ஆக இருந்துள்ளார். அந்த 5 தடவையும் தேர்தல் பணி செய்தது பிரியங்காதான். எனவே ரேபரேலி தொகுதியின் சந்து பொந்துகள் கூட பிரியங்காவுக்கு தெரியும். இது பிரியங்காவின் மிகப்பெரிய பலமாகும்.

    அதுமட்டுமின்றி உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கும்போது “அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம்”என்ற கோ‌ஷத்தை எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதற்கு வலிமை சேர்க்கும் வகையில் அயோத்தி ராமர் கோவில் உள்பட பல்வேறு இந்து ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்துவிட்டு பிரசாரத்தை தொடங்க ராகுலும், பிரியங்காவும் வியூகம் வகுத்துள்ளனர். எனவே தேர்தல் சமயத்தில் உத்தரபிரதேசம் ‘களை’ கட்டும். #Parliamentelection #PriyankaGandhi

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் சோனியா காந்தியின் எம்.பி. தொகுதியான ரேபரேலியில் பிரதமர் மோடி நாளை தனது பிரசாரத்தை தொடங்குகிறார். #Modi #Congressstronghold #Modivisit #ModivisitRaeBareli
    லக்னோ:

    இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 80 பாராளுமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. எனவே, பாராளுமன்ற தேர்தலின்போது தனித்துவமாக கவனிக்கப்படும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக உத்தரபிரதேசம் இருந்து வருகிறது. இங்கு அதிக அளவிலான தொகுதிகளை கைப்பற்றும் கட்சியே மத்தியில் ஆட்சி அமைத்து வருகிறது.

     கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில்உத்தரபிரதேசத்தில் மட்டும் பா.ஜ.க. 75 தொகுதிகளை கைப்பற்றியது. அவ்வகையில் அடுத்த ஆண்டு (2019) நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலிலும் அதிக தொகுதிகளில் வெற்றிபெற அக்கட்சியின் தலைமை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்தநிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர்  சோனியா காந்தியின் எம்.பி. தொகுதியான ரேபரேலியில் பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஞாயிற்றுக்கிழமை) தனது பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

    கோப்புப்படம்

    டெல்லியில் இருந்து விமானம் மூலம் ரேபரேலி நகருக்கு வரும் அவர், ரேபரேலி-பான்டா நான்குவழி நெடுஞ்சாலையை திறந்து வைப்பதுடன் 1100 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்

    ரேபரேலியில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் மோடி, அங்கிருந்து  பிரயாக்ராஜ் (அலகாபாத்) நகருக்கு சென்று கும்பமேளா விழாவுக்கான முன்னேற்பாடுகளை பார்வையிடுகிறார். இங்கு சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பின்னர், இங்குள்ள ஜுன்சி பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் அவர் பேசுகிறார். இந்நிகழ்ச்சிகளில் உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் கலந்து கொள்கிறார்.

    ரேபரேலி நகரில் மோடி உரையாற்றும் ரெயில் பெட்டி தொழிற்சாலை மைதானத்தில் நாளை சுமார் 3 லட்சம் பேர் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் இப்பகுதியை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. #Modi #Congressstronghold #Modivisit #ModivisitRaeBareli 
    ரேபரேலி தொகுதியில் ‘பிரியங்காவை காணவில்லை’ என பல இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ள சம்பவம் காங்கிரஸ் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. #PriyankaGandhi #RaeBareli #Missing
    ரேபரேலி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதி எம்.பி. ஆவார். அங்கு சோனியா காந்திக்கு பதிலாக அவரது மகள் பிரியங்காதான் கட்சி நடவடிக்கைகளை கவனித்து வருகிறார். ஆனால் சமீப காலமாக அவர் தொகுதிக்கு செல்லவில்லை என தெரிகிறது.



    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த தொகுதிவாசிகள் ‘பிரியங்காவை காணவில்லை’ என பல இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். ரேபரேலி தொகுதி மக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினர் எனக்கூறும் சோனியா குடும்பத்தினர், தற்போது அதை மறந்துவிட்டனர் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த சுவரொட்டிகளால் தொகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் மாநில காங்கிரசிலும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. #PriyankaGandhi #RaeBareli #Missing 
    ×