search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "photo"

    • யானைகளை புகைப்படம் எடுத்த நபருக்கு ரூ.5ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர்.
    • கடந்த 2 மாதங்களில் 40 பேரிடம் ரூ.4 லட்சம் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புலிகள் காப்பகம் உள்ளது. இந்த அடர்ந்த வனப்பகுதியில் தாளவாடி, ஆசனூர், தலமலை உள்பட 10 வன சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை கள், புலி, சிறுத்தை, கரடி என பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

    மேலும் ஆசனூர் வனப்பகுதிகளில் குளம், குட்டைகள் மற்றும் நீரோடைகள் உள்ளது. இந்த நீர்நிலைகளில் வன விலங்குகள் வந்து தண்ணீர் குடித்து செல்வது வழக்கம்.

    இந்நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் தாளவாடி, ஆசனூர் வனப்பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் ஒரு சில நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆசனூர் வனப்பகுதி பசுமையாக காட்சி அளித்து வருகிறது.

    ஆசனூர் வனப்பகுதியை ரசிப்பதற்கு தினமும் பொதுமக்கள் பலர் வந்து இயற்கை அழகை ரசித்து வருகிறார்கள். அப்படி வரும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் அனுமதியின்றி வனப்பகுதிக்குள் நுழைந்து வருகிறார்கள். இதையடுத்து வனத்துறையின்ர் கண்காணித்து அவர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைக்கிறார்கள்.

    இந்நிலையில் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஈரோடு மாட்ட பொதுமக்கள் மட்டுமின்றி கோவை, திருப்பூர் உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து இயற்கை அழகை ரசிக்கிறார்கள். இதனால் ஆசனூருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.

    மேலும் வனத்துறையினரும் ரோந்து வந்து கண்காணித்து வருகிறார்கள். அப்போது வனப்பகுதிக்குள் நுழைபவர்களை எச்சரித்து அனுப்பி வைக்கிறார்கள்.

    இந்நிலையில் ஆசனூர் வனப்பகுதிக்குள் சிலர் அனுமதியின்றி நுழைந்து ஆபத்தை உணராமல் சுற்றி திரிந்தனர். அப்போது 3 பேர் ஆசனூர் வனப்பகுதியில் உள்ள நீரோடையில் குளித்து கொண்டு இருந்தனர். அந்த பகுதியில் ரோந்து வந்த வனத்துறையினர் அவர்களிடம் விசரணை நடத்தி அவர்கள் 3 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் அந்த பகுதியில் அனுமதியின்றி நுழைந்து யானைகளை புகைப்படம் எடுத்த நபருக்கு ரூ.5ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர். மேலும் அவர் கொண்டு வந்த கேமிராவையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்களிடம் வனப்பகுதியில் உள்ள ஆபத்து குறித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ஆசனூர் வனசரக அலுவலர் சிவகுமார் கூறும்போது, வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி உள்பட பல வன விலங்குகள் உள்ளன. பொதுமக்கள் ஆபத்தை உணராமல் அத்துமீறி நுழைகிறார்கள். இதனால் ஆபத்து நிகழ கூடும். எனவே பொது மக்கள் வனப்பகுதிக்குள் நுழைவதை தவிர்க்க வேண்டும். அதையும் மீறி அனுமதியின்றி நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து புகைப்படம் எடுத்தல், நீரோடைகளில் குளித்தல் போன்ற குற்றங்களுக்காக கடந்த 2 மாதங்களில் 40 பேரிடம் ரூ.4 லட்சம் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 140 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.9 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.

    • சம்பவம் குறித்து மாணவியின் தாய் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • மாணவி மாயமானது அவரது பெற்றோரையும், உறவினர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    கோவை:

    கோவை ராமநாதபுரம் அடுத்த ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் சுதாகரன்.

    இவரது மனைவி சசிகலா. இவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 12 வயதில் ஸ்ரீநிதி என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

    ஸ்ரீநிதி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது முழு ஆண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் ஸ்ரீநிதி வீட்டில் இருந்து வந்தார்.

    நேற்று காலை சுதாகரன் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் சசிகலா, அவரது மகள் ஸ்ரீநிதி மற்றும் மகன் மட்டும் இருந்தனர். மதியம் சசிகலா வீட்டில் வேலைகளை பார்த்து கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீநிதி தனது சகோதருடன் வீட்டின் முன்பு நின்று விளையாடி கொண்டிருந்தார். சசிகலா வேலையை முடித்து விட்டு மதியம் 1.30 மணிக்கு வெளியில் வந்து பார்த்த போது மகன் மட்டும் நின்றிருந்தார். மகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சியான அவர் இதுகுறித்து தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக அவர் வீட்டிற்கு விரைந்து வந்தார். பின்னர் 2 பேரும் சேர்ந்து அக்கம்பக்கம் உள்ளவர்களின் வீடு மற்றும் அருகே உள்ள இடங்கள் முழுவதும் ஸ்ரீநிதியை தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை.

    உறவினர் வீட்டிற்கு சென்றிருக்கலாம் என நினைத்து அவர்களை தொடர்பு கொண்டு விசாரித்தனர். ஆனால் மாணவி அங்கும் செல்லவில்லை என்பது தெரியவந்தது.

    இதனால் மாணவியின் தாய் சசிகலா சம்பவம் குறித்து கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மாணவியின் வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் விசாரித்து விட்டு, அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராக்களையும் ஆய்வு செய்தனர்.

    அப்போது அதில் மாணவி வீட்டில் இருந்து நடந்து ஒண்டிப்புதூர் பஸ் நிறுத்தத்திற்கு செல்வதும், அங்கிருந்து உக்கடம் செல்லும் பஸ்சில் ஏறும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.

    இதையடுத்து போலீசார் உக்கடம் பஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு பஸ் நிலையம் மற்றும் அங்கு வந்த அனைத்து பஸ்களிலும் ஏறி தேடி பார்த்தனர். ஆனால் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் எங்கு சென்றார் என்பதும் தெரியவில்லை.

    மாணவி மாயமாகி ஒரு நாள் ஆகியும் இன்னும் கிடைக்காததால் மாணவியின் பெற்றோர் அழுதபடியே மிகுந்த சோகத்தில் உள்ளனர். அவர்களை உறவினர்கள் ஆறுதல் கூறி தேற்றி வருகின்றனர்.

    இதற்கிடையே மாயமான மாணவியை கண்டுபிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி மாணவியை தேடி வருகின்றனர். மாணவி மாயமானரா? அல்லது யாராவது கடத்தி சென்றனரா? என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இந்நிலையில் மாணவியை எங்கு தேடியும் கிடைக்காததால், மாணவியின் தந்தை சுதாகரன், தனது நண்பர் ஒருவரின் உதவியுடன் தனது மகளின் புகைப்படம், பெயர், வயது, வீட்டின் முகவரி என அனைத்து தகவல்களையும் சமூக வலைதளங்களான வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என அனைத்திலும் பதிவிட்டார். அதில், இந்த புகைப்படத்தில் உள்ள மாணவியின் பெயர் ஸ்ரீநிதி, கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்த அவரை நேற்று மதியம் முதல் காணவில்லை. அவரை யாராவது பார்த்தால் அதில் கொடுக்கப்பட்டுள்ள செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும் என கூறப்பட்டிருந்தது.

    தற்போது இந்த தகவலானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கோவை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மின்னல் வேகத்தில் வைரலாகி வருகிறது.

    இதனை பார்க்கும் பலரும் தங்களது செல்போனில் உள்ள வாட்ஸ் அப், பேஸ் புக் குழுக்களில் பகிர்ந்து மாணவியை கண்டுபிடிக்க தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர். மாணவி மாயமானது அவரது பெற்றோரையும், உறவினர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    • தர்காவில் வழங்கப்படும் அன்னதான உணவுகளை வீணடிக்க கூடாது.
    • பிரார்த்தனை செய்யும் இடங்களில் பிறருக்கு இடையூறாக புகைப்படம், வீடியோ எடுக்க கூடாது.

    நாகப்பட்டினம்:

    நாகூர் தர்கா போர்ட் ஆப் டிரஸ்டிகள் சார்பாக தர்கா மானேஜிங் டிரஸ்டி டாக்டர் செய்யது காமில் சாஹிப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப–தாவது:-

    நாகூர் தர்காவுக்கு வரும் யாத்ரீகர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். முடிந்தவரை தனி மனித இடைவெளி கடைப்பிடித்து முக கவசம் அணிய வேண்டும்.

    குப்பை தொட்டிகளில் குப்பைகளை போடுங்கள். தங்களது காலணிகளை தர்கா உள்ளே எடுத்து செல்லாதீர்கள். தர்கா கழிவறைகளை பயன்படுத்தினால் சுத்தம் செய்துவிட்டு செல்லுங்கள். குடிநீரை வீண் விரயம் செய்யாதீர்கள்.

    தர்காவில் வழங்கப்படும் அன்னதான உணவுகளை வீணடிக்க கூடாது.தர்கா குளத்தில் உணவு பொருட்களை, குப்பை களை போடக்கூடாது. பிரார்த்தனை செய்யும் இடங்களில் பிறருக்கு இடையுறாக புகைப்படம், வீடியோ எடுக்க கூடாது.

    தர்காவில் பொது இடங்களில் ஏதேனும் சந்தேகத்துக்கிடமான பொருட்கள் கண்டால் தர்கா அலுவலகத்தில் தெரியபடுத்தவும்.

    தங்களது உடைகளை தாங்களே பார்த்து கொள்ளுங்கள். ஒரு வேளை உடைமைகள் பொருட்கள் தொலைந்தால் தர்கா அலுவலகம் முன் அமைந்துள்ள தொண்டர் படையை உடனே தொடர்பு கொள்ளுங்கள்.

    அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். உங்களது குறை நிறைகளை மானேஜிங் டிரஸ்டி, நாகூர் தர்கா, நாகூர்-611002 என்ற முகவரிக்கு எழுத்து பூர்வமாக தெரியுங்கள்.

    அவரச குறை நிறைகளை வாட்சப் மூலமாக தர்கா மானேஜிங் டிரஸ்டிக்கு 96774-10786, 98424-41404 அனுப்பவும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முகாம்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது.
    • ஆதார் எண், கைபேசி எண் இணைக்காத வாக்காளர்கள் படிவம் 6-பி பூர்த்தி செய்தும் வழங்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் வசதிக்காக இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது.

    நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) இந்த சிறப்பு முகாம்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது.

    இந்த சிறப்பு முகாமில் 2023 ஜனவரி 1-ம் தேதியன்று 18 வயது நிரம்பியவர்கள் அதாவது 2005 ஜனவரி 1-ம் தேதியன்றோ அல்லது அதற்கு முன்பாக பிறந்தவர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமல் உள்ளவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் எண் 6ஐ அருகாமையில் உள்ள வாக்கு சாவடிகளில் பெற்று பூர்த்தி செய்து அதனுடன் வயது மற்றும் இருப்பிடத்திற்கான ஆவண நகல்களை இணைத்து தங்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தினை படிவத்தில் ஒட்டி சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கலாம்.

    மேலும் இறப்பு, நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவு போன்ற காரணங்களின் அடிப்படையில் பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7-ஐ பூர்த்தி செய்தும், வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து வகையான பிழை திருத்தங்கள் மேற்கொள்ள தொகுதி மாற்றம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய, பெயர், உறவுமுறை, புகைப்படம் மாற்றம் செய்ய, காணாமல் போன வாக்காளர் அட்டைக்கு பதிலாக மாற்று அட்டை பெற படிவம் 8-ஐ பூர்த்தி செய்தல், இதுவரை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண், கைபேசி எண் இணைக்காத வாக்காளர்கள் படிவம் 6-பி பூர்த்தி செய்தும் வழங்கலாம்.

    பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

    அலுவலக வேலை நாட்களில் தாசில்தார் அலுவலக தேர்தல் பிரிவில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உதவித்தொகை, உதவி உபகரணங்கள் மற்றும் இதர கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம்.
    • ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து மனு அளிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கு எண் 10 -ல் நாளை (வியாழக்கிழமை ) காலை 11 மணிக்கு மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. அன்றைய கூட்டத்தில் மாற்றுத்தி றனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள் மற்றும் இதர கோரிக்கைகளை மனுக்களாக நேரடியாக அளிக்கலாம். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்கள் அனைத்தும் உதவிகள் வாரியாக சம்பந்தப்பட்ட அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் உதவிகள் வழங்கிட தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    எனவே, இந்த வாய்ப்பினை அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேற்படி குறைதீர்க்கும் நாளில் மனுக்கள் அளிக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்தி றனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகல், இருப்பிடத்திற்கான ஆதாரமாக குடும்ப அட்டையின் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் -1 மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து மனு அளிக்க வேண்டும்.

    எனவே தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் நாளை காலை 10 மணிக்குள் நேரில் வந்து மனுக்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண் 04362-236791-ல் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புகைப்படத்தை படிவத்தில் ஒட்டி அந்தந்த வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களிடம் வழங்கலாம்.
    • வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெ க்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த 9-ந் தேதி வெளியி டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலின் நகல், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சா வடிகள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி அலுவலகங்களிலும் பொது மக்களின் பார்வைக்காக அடுத்த மாதம் 26 ஆம் தேதி வரை வைக்கப்படும்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் பிழையின்றி இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    பொது மக்களின் வசதிக்காக இன்று தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்கள் காலை 9.30 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.

    மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது.

    இதேபோல் நாளை (ஞாயிற்று கிழமை) மற்றும் 26-11-2022 (சனிக் கிழமை), 27-11-2022 (ஞாயிற்றுகிழமை) ஆகிய நாட்களிலும் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    இச்சிறப்பு முகாமில் 1.1.2023 அன்று 18 வயது நிரம்பியவர்கள் அதாவது 1.1.2005 அன்று அல்லது அதற்கு முன்பாக பிறந்தவர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமல் உள்ளவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட படிவம் எண் 6-ஐ அருகாமையிலுள்ள வாக்குச்சாவடிகளில் பெற்று பூர்த்தி செய்து அதனுடன் வயது மற்றும் இருப்பிடத்திற்கான ஆவண நகல்களை இணைத்து தங்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை படிவத்தில் ஒட்டி அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கலாம்.

    மேலும் இறப்பு, நிரந்தரமாக இடம் பெயர்ந்த வர்கள், இரட்டை பதிவு போன்ற காரணங்களின் அடிப்படையில் பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7 ஐ பூர்த்தி செய்தும், அனைத்து வகையான பிழை திருத்தங்கள் மேற்கொள்ள, தொகுதி மாற்றம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய, பெயர், உறவு முறை, புகைப்படம் மாற்றம் செய்ய படிவம் 8 -ஐ பூர்த்தி செய்தும், இதுவரை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் வாக்காளர்கள் படிவம் 6பி-ஐ பூர்த்தி செய்தும் வழங்கலாம் .

    பொது மக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் காலை 9.30 மணி மாலை 5.30 மணி வரை விண்ணப்பங்களை சமர்ப்பி க்கலாம்.

    அலுவலக வேலை நாட்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கலாம்.

    மேலும், நேரில் சென்று படிவங்கள் பெற்று பூர்த்தி செய்து வழங்க இயலாதவர்கள் www.nvsp.in என்ற இணையதளம் மற்றும் Voters Help Line என்ற Mobile App மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் விபரங்கள் அறிய 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காமராஜர் ஆட்சி சாதனை புகைப்படம் திறக்கப்பட்டது.
    • இதில் காங்கிரஸ் கமிட்டி ஊடகப்பிரிவு மாநில பொதுச் செயலாளர் பால் ஜோசப், மூத்த வழக்கறிஞர்கள் பிஸ்மில்லா கான், முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாநகர் காங்கிரஸ் சார்பாக மதுரை மேலமாசி, வடக்கு மாசி வீதி சந்திப்பில் உள்ள பெருந்தலைவர் காமராஜரின் சிலைக்கு வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் வேல்பாண்டி தலைமையில், மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன் முன்னிலையில் காங்கிரஸ் மனித உரிமை துறை மாநில பொதுச் செயலாளர் பி.ஜே. காமராஜ், காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் எஸ்.பி. வரதராஜன் ஆகியோர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    இதையொட்டி காமராஜர் ஆட்சி காலத்தில் நடத்திய சாதனை நிகழ்வுகளை விளக்கும் வகையில் அவரது புகைப்படங்களை, மனித உரிமை துறை மாநில பொதுச் செயலாளர் பி.ஜே. காமராஜ் திறந்து வைத்தார். இதில் காங்கிரஸ் கமிட்டி ஊடகப்பிரிவு மாநில பொதுச் செயலாளர் பால் ஜோசப், மூத்த வழக்கறிஞர்கள் பிஸ்மில்லா கான், முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் செந்தில்ராஜ் புகைப்படம் மற்றும் பெயரை மர்மநபர் ஒருவர் வாட்ஸ்அப்பில் பயன்படுத்தி அதன்மூலம் பலருக்கு பணம் கேட்டு தகவல் அனுப்பி உள்ளார்.
    • சம்பந்தப்பட்ட மர்மநபர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு, கலெக்டர் அறிவுறுத்தினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் புகைப்படம் மற்றும் பெயரை மர்மநபர் ஒருவர் வாட்ஸ்அப்பில் பயன்படுத்தி அதன்மூலம் பலருக்கு பணம் கேட்டு தகவல் அனுப்பி உள்ளார்.

    மேலும் கலெக்டர் செந்தில்ராஜ் அனுப்பியது போன்று போலீஸ் அதிகாரி ஒருவருக்கும் தகவல் அனுப்பினார்.

    இது குறித்து கலெக்டருக்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட மர்மநபர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு, கலெக்டர் அறிவுறுத்தினார்.

    அதன்பேரில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட மர்மநபர் யார்? எத்தனை பேருக்கு இது போன்ற தகவல் அனுப்பி உள்ளார் ? யாரிடமாவது மோசடியாக பணம் பெற்றுள்ளாரா ? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் தனது புகைப்படத்தை மர்மநபர் ஒருவர் மோசடியாக வாட்ஸ்அப்பில் பயன்படுத்தி அதன்மூலம் பணம் கேட்டு பலருக்கு தகவல்கள் அனுப்பி வருவதாக தெரிகிறது.

    இதனால் யாரும் ஏமாற வேண்டாம். அது போன்ற தகவல்கள் வந்தால் உடனடியாக சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யுங்கள் என கலெக்டர் செந்தில்ராஜ் கூறி உள்ளார்.

    சி விஜில் ஆப் மூலம் பணப்பட்டுவாடா குறித்து 76 புகைப்பட ஆதாரங்கள் வந்துள்ளன என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார். #LokSabhaElections2019 #SatyabrataSahoo

    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தல் நடத்தை விதி முறைகளை மீறியதாக 1011 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் சென்னை, திருப்பூர், தேனி, மதுரை மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன.

    பொதுமக்கள் தேர்தல் கமி‌ஷனுக்கு புகார் அளிக்கக் கூடிய சி விஜில் செயலி (ஆப்) மூலம் 968 புகார்கள் வந்துள்ளன. அதில் 622 புகார்களுக்கு ஆதாரம் இல்லை. 314 புகார்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.


    பணம் விநியோகம் சம்பந்தமாக 76 புகைப்பட ஆதாரங்கள் வந்துள்ளன. மதுபானங்கள் வழங்குவதாக 11 புகைப்படங்கள் வந்துள்ளன. இதுவரை வாகன சோதனையில் ரூ.38 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    தேர்தல் செலவின சிறப்பு பார்வையாளர் மதுமகாஜன் நாளை சென்னை வருகிறார். ஓட்டுரிமை இருந்து வெளிநாட்டில் வசிப்பவர்கள் ஓட்டுபோட வேண்டுமானால் இங்கு வந்து தான் ஓட்டுபோட முடியும். வெளிநாட்டில் இருந்து கொண்டே ஓட்டு போட முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #SatyabrataSahoo

    தேர்தல் பிரசாரத்துக்கு ராணுவ வீரர்களின் புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாது என தேர்தல் கமிஷனின் செயலாளர் பிரமோத் குமார் சர்மா தெரிவித்துள்ளார். #ElectionCommission #ElectionCampaign #SoldiersPhoto
    புதுடெல்லி:

    அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் தேர்தல் கமிஷனின் செயலாளர் பிரமோத் குமார் சர்மா கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து உள்ளார். அதில், ராணுவ தளபதி, ராணுவ வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் ராணுவ விழாக்கள் தொடர்பான புகைப்படங்களை தேர்தல் தொடர்பான விளம்பரங்களுக்கோ, பிரசாரத்துக்கோ எந்த வகையிலும் பயன்படுத்தக்கூடாது என்றும், இது தொடர்பாக கட்சியினருக்கும், வேட்பாளர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

    சில அரசியல் கட்சிகள், தலைவர்கள், வேட்பாளர்கள் ராணுவத்தினரின் புகைப்படங்களை தங்கள் தேர்தல் பிரசார விளம்பரங்களில் பயன்படுத்துவதாக ராணுவ அமைச்சகம் தேர்தல் கமிஷனின் கவனத்துக்கு கொண்டு வந்ததாகவும், இதைத்தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருக்கிறது. 
    பாலியல் தொல்லைக்கு ஆளான கன்னியாஸ்திரியின் புகைப்படத்தை வெளியிட்ட கன்னியர் சபை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநில கோட்டயத்தை அடுத்த குருவிலாங்காடு கன்னியர் மடத்தில் தங்கியிருந்த கன்னியாஸ்திரி ஒருவரை ஜலந்தர் ஆயர் பிராங்கோ முல்லக்கல் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது.

    இப்புகார் குறித்து கோட்டயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜலந்தர் ஆயர் பிராங்கோ முல்லக்கல், வருகிற 19-ந்தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று கோட்டயம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

    இதற்கிடையே ஆயர் பிராங்கோ முல்லக்கல்லை கைது செய்ய போலீசார் தாமதம் செய்வதாக கூறி கன்னியாஸ்திரியின் ஆதரவாளர்கள், உறவினர்கள் கொச்சியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 8-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.

    இப்போராட்டத்திற்கு பெண் உரிமை அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். நடிகைகள் ரீமா கல்லிங்கல், பாக்கிய லெட்சுமி ஆகியோரும் போராட்ட களத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் ஆயர் மீது புகார் கூறிய கன்னியாஸ்திரி பற்றி, அவர் பணியாற்றி வந்த கன்னியர் சபை பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியது.

    இது தொடர்பாக நேற்று கன்னியர் சபை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கன்னியாஸ்திரி மீதான குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டதோடு, கன்னியாஸ்திரியும், ஆயர் பிராங்கோ முல்லக்கல்லும் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டது.

    இந்த புகைப்படங்கள் சில ஊடகங்களில் வெளியானது. இதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்திய சட்ட விதிகளின் படி, பாலியல் கொடுமைக்கு ஆளான பெண்கள், சிறுவர்கள் குறித்த புகைப்படங்கள், விவரங்களை வெளியிடக்கூடாது. அவ்வாறு வெளியிட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.

    இதன்படி, பாலியல் தொல்லைக்கு ஆளான கன்னியாஸ்திரியின் புகைப்படத்தை வெளியிட்ட கன்னியர் சபை மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் பலர் புகார் செய்தனர். அதன் பேரில் கேரள போலீசார் இது தொடர்பாக கன்னியர் சபை மீது நேற்று வழக்குப்பதிவு செய்தனர். #tamilnews
    கோவையில் கள்ளநோட்டுகளை அச்சடித்த வழக்கில் கைதானவர் முதலமைச்சருடன் இருப்பது போன்ற புகைப்படம் வெளியானது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.#fakecurrency #TNCM
    கோவை:

    கோவை வேலாண்டிபாளையம் மருதகோனார் வீதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 31). இவர் தனது நண்பர்களான கிதர் முகமது, சுந்தர் ஆகியோருடன் சேர்ந்து கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டார். இதையடுத்து ஆனந்த், கிதர் முகமது ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த சுந்தர் கோவை கோர்ட்டில் சரண் அடைந்தார்.

    இந்த நிலையில் ஆனந்த், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களுடன் எடுத்துக்கொண்டது போன்ற புகைப்படம் வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    அதில் கள்ளநோட்டுகள் கும்பலுடன் ஆளும் கட்சியினருக்கு தொடர்பு உள்ளதா? என்ற வாசகமும் இடம் பெற்று உள்ளது. இந்த புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சருடன் ஆனந்த் இருப்பது போன்று பரவி வரும் புகைப்படம் உண்மையானதா? அல்லது மார்பிங் செய்யப்பட்டதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அத்துடன் அந்த புகைப்படத்தில் இருக்கும் மற்ற நபர்களிடமும் இது உண்மையாக எடுக்கப்பட்டதா? அப்படி என்றால் எப்போது எடுக்கப்பட்டது? அங்கு ஏன் ஆனந்த் வந்தார்? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த புகைப்படம் போலியானது என்று தெரியவந்தால், புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #fakecurrency #TNCM
    ×