search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டியல்"

    • தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினரை கண்டா வரச்சொல்லுங்க என போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.
    • தொகுதி மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றவே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சுப்பராயன் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார்.

    இவர் தொகுதி மக்களை சரிவர சந்திக்க வில்லை என்று வேட்பாளர் அறிவிக்கப்படுவதற்கு முன்பே திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினரை கண்டா வரச்சொல்லுங்க என போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்தநிலையில் திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் தனது தொகுதிக்கு செய்த பணிகளை பட்டியலிட்டு கூறினால் ரூ.1கோடி பரிசு என்ற போஸ்டர் மண்ணின் மைந்தர்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் தொகுதியின் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.

    இந்நிலையில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு வெளியே வந்த வேட்பாளர் சுப்பராயனிடம் , தொகுதி மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றவே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதிலளித்த அவர், ஒரு கோடி ரூபாய் பரிசு தருவதாக கூறிய நபரும், அவரின் அமைப்பினரும், ஒரு கோடி ரூபாயுடன் என் எம்.பி., அலுவலகத்திற்கு வந்தால், திருப்பூர் தொகுதியில் நிறைவேற்றிய திட்டங்கள் விபரம் முழுவதையும் தெரிவிக்கிறேன். ஒரு கோடி ரூபாய் பணத்தை ஆதரவற்ற அனாதை இல்லங்களுக்கு வழங்கவும் காத்திருக்கிறேன்.எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றார்.

    • கருத்து கேட்பு கூட்டத்தின்போது ஒவ்வொரு மாவட்டத்தில் நிலவும் கோஷ்டி மோதல் பிரச்சினைகளும் பூதாகரமாக வெடித்தது.
    • பட்டியலை இன்னும் ஓரிரு நாளில் தயாரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் குழு வழங்கும் என தெரிகிறது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் யார்-யாரை நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று தி.மு.க. ஒரு சர்வே எடுத்து வைத்துள்ளது.

    இந்நிலையில் ஒவ் வொரு மாவட்ட நிர்வாகிகளையும் அண்ணா அறிவாலயத்திற்கு அழைத்து கடந்த சில நாட்களாக கருத்து கேட்டு வந்தது.

    தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் இடம் பெற்றிருந்த முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தினமும் காலை, மாலை என இரு நேரமும் நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டறிந்தனர்.

    இந்த கருத்து கேட்பு கூட்டத்தின்போது ஒவ்வொரு மாவட்டத்தில் நிலவும் கோஷ்டி மோதல் பிரச்சினைகளும் பூதாகரமாக வெடித்தது.

    ஆனாலும் உங்கள் பிரச்சினைகளை பாராளுமன்றத் தேர்தலுக்கு பிறகு பேசி தீர்த்து கொள்ளலாம். இப்போது மேலிடம் அறிவிக்கும் வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள். தொகுதிக்கு எவ்வளவு ஓட்டு கிடைக்கும் என்று கேட்டறிந்தனர்.

    28-ந் தேதி தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதன் அடுத்த கட்டமாக ஒவ்வொரு தொகுதிக்கும் யார்-யாரை வேட்பாளராக அறிவிக்கலாம் என்ற உத்தேச பட்டியலை இந்த குழு தயாரிக்க உள்ளது.

    இந்த பட்டியலை இன்னும் ஓரிரு நாளில் தயாரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் குழு வழங்கும் என தெரிகிறது.

    இதற்கிடையே தி.மு.க.வில் யார்-யாருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற தகவலும் வெளியாகி வருகிறது.

    1 மத்திய சென்னை-தயாநிதிமாறன், 2 வட சென்னை-கலாநிதி வீராசாமி, 3 தென்சென்னை-தமிழச்சி தங்கபாண்டியன், 4 ஸ்ரீபெரும்புதூர்-டி.ஆர்.பாலு, 5 காஞ்சிபுரம்-செல்வம், 6 அரக்கோணம்-ஜெகத்ரட்சகன், 7 வேலூர்-கதிர் ஆனந்த் (அமைச்சர் துரைமுருகனின் மகன்) 8 திருவண்ணாமலை-அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே.கம்பன், இவர் மாநில மருத்துவ அணி துணைத் தலைவராக உள்ளார். 9 கள்ளக்குறிச்சி-கவுதம் சிகாமணி (அமைச்சர் பொன்முடியின் மகன்), 10 கடலூர்-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவன், 11 சேலம்-வீரபாண்டி ஆறுமுகம் பேரன் டாக்டர் தருண் அல்லது உதயநிதி ரசிகர் மன்ற மாநிலச் செயலாளர் பி.கே.பாபு, 12 நீலகிரி-முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, 13 பொள்ளாச்சி-சண்முக சுந்தரம் எம்.பி. அல்லது மக்கள் நீதி மய்யத்தில் இருந்து இணைந்த மகேந்திரன், 14 பெரம்பலூர்-அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண், 15 தர்மபுரி-முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அல்லது டாக்டர் செந்தில் குமார், 16 திண்டுக்கல்-வேலுசாமி எம்.பி., 17 தூத்துக்குடி-தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., 18 நெல்லை-மகளிரணி ஹெலன் டேவிட்சன் அல்லது கிரகாம்பெல், 19 தென்காசி-தனுஷ் எம்.குமார் எம்.பி., 20 தஞ்சை-முன்னாள் மத்திய மந்திரி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்.

    தி.மு.க. வசம் உள்ள இந்த தொகுதிகளில் சிலவற்றை காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் கேட்டு பட்டியல் கொடுத்துள்ளதால் தொகுதிகளை மாற்றிக் கொடுக்க வாய்ப்புள்ளது.

    மேலும் சில தொகுதிகள் கூட்டணி வசம் இருப்பதால் அந்த தொகுதிகளில் சிலவற்றை தி.மு.க. கேட்டு பெறும் என தெரிகிறது. அதற்கேற்ப பட்டியல் மாற்றமும் இருக்கும் என்று நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தலை சந்திப்பதற்கான அடுத்த கட்ட பணிகளை அண்ணாமலை தொடங்கி இருக்கிறார்.
    • ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பேர் வீதம் வேட்பாளர் பட்டியலை தயார் செய்து இந்த மாத இறுதிக்குள் அனுப்பி வைக்கும்படி மாவட்ட தலைவர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா தயாராகி வருகிறது. கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. வெளியேறிவிட்ட நிலையில் பா.ஜனதா தனித்தே நிற்கிறது.

    பா.ம.க., தே.மு.தி.க., அ.ம.மு.க., த.மா.கா. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கு முயற்சிகள் நடந்தது. ஆனால் இந்த கட்சிகள் இதுவரை தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.

    இந்நிலையில் தேர்தலை சந்திப்பதற்கான அடுத்த கட்ட பணிகளை அண்ணாமலை தொடங்கி இருக்கிறார். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் தகுதியானவர்களை தேர்வு செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

    கட்சிக்காக உழைத்து மக்கள் மத்தியில் செல்வாக்குடனும், தொண்டர்கள் பின்புலத்துடனும் இருப்பவர்களை தேர்வு செய்து ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பேர் வீதம் வேட்பாளர் பட்டியலை தயார் செய்து இந்த மாத இறுதிக்குள் அனுப்பி வைக்கும்படி மாவட்ட தலைவர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

    இந்த மாத இறுதியில் பா.ஜனதா தலைவர் நட்டா தமிழகம் வருகிறார். அதற்குள் பட்டியலை தயார் செய்து அவரிடம் வழங்க திட்டமிட்டுள்ளனர்.

    இந்நிலையில் நேற்று மதுரையில் பிரதமர் மோடியை தேனி எம்.பி.யும், ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் சந்தித்து பேசினார். தேனி தொகுதியில் மீண்டும் போட்டியிடவும் அதற்கு பா.ஜனதா ஆதரவை கோரியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வலிமையான கரன்சியில் அமெரிக்க டாலர் கடைசியாக 10வது இடத்தில் உள்ளது.
    • பொருளாதார நிலை, எண்ணெய் இருப்பு மற்றும் வரி இல்லாத அமைப்பு காரணமாக முதல் இடத்தை பிடித்துள்ளது.

    சர்வதேச வர்த்தகத்தின் உயிர்நாடியாக கரன்சி கருதப்படுகிறது. இது ஒரு நாட்டின் பொருளாதார வலிமையை காட்டுகிறது.

    கரன்சி வளரும்போது, நாட்டின் பொருளாதாரமும் வளர்கிறது. இது முதலீடுகளை ஈர்க்கிறது மற்றும் உலகளவில் உறவுகளை ஊக்குவிக்கிறது. சில நாணயங்கள் பிரபலமாக இருந்தும், பரவலாகப் பயன்பாட்டில் இருப்பினும் அவற்றின் மதிப்பு மற்றும் வலிமை குறைவாகவே இருக்கிறது.

    அமெரிக்க வணிக இதழான போர்ப்ஸ் உலகின் வலிமையான பத்து கரன்சி பட்டியலையும், அவற்றின் வெற்றிக்கான காரணத்தையும் வெளியிட்டுள்ளது.

    குவைத் தினார் ₹ 270.23 மற்றும் $3.25 என்ற மதிப்பில் முதல் இடத்தில் இருக்கிறது. பஹ்ரைன் தினார் ₹ 220.4 மற்றும் $2.65 மதிப்பில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஓமானி ரியால் ₹ 215.84 மற்றும் $2.60 விலையில் மூன்றாவது அதிக மதிப்புடையது.

    அதைத் தொடர்ந்து ஜிப்ரால்டர் பவுண்ட், பிரிட்டிஷ் பவுண்ட், கேமன் தீவுகள் டாலர், சுவிஸ் பிராங்க் மற்றும் யூரோ போன்ற கரன்சிகள் பட்டியலில் வரிசைப்படுத்தபட்டு இருக்கிறது.

    மிகவும் பரவலாக வர்த்தகம் செய்யப்பட்டும், முதன்மை இருப்பு நாணயமாக இருந்தாலும், வலிமையான கரன்சியில் அமெரிக்க டாலர் கடைசியாக 10வது இடத்தில் உள்ளது. ஒரு அமெரிக்க டாலர் மதிப்பு₹ 83.10.

    ஒரு அமெரிக்க டாலருக்கு 82.9 என்ற மதிப்பில் இந்தியா 15வது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் குவைத் தினார் அந்த நாட்டின் பொருளாதார நிலை, எண்ணெய் இருப்பு மற்றும் வரி இல்லாத அமைப்பு காரணமாக முதல் இடத்தை பிடித்துள்ளது.

    • கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் தொகுதி தொண்டர்களுக்கு அறிவுரை
    • தி.மு.க.வினருக்கு கிழக்கு மாவட்டச் செயலாளர் மகேஷ் வேண்டுகோள்

    நாகர்கோவில் :

    குமரி கிழக்கு மாவட்டச் செயலாளரும், நாகர்கோ வில் மாநகராட்சி மேயரு மான மகேஷ் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள வாக்காளர் பட்டி யலை திருத்தம் செய்திட வரைவு வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணை யம் வெளி யிட்டுள்ளது. குமரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கன்னியாகுமரி, நாகர்கோ வில் மற்றும் குளச்சல் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதி களிலும் கடந்த 27-ந் தேதி முதல் வருகிற டிசம்பர் மாதம் 9-ந்தேதி வரை புதிய வாக்கா ளர்களைச் சேர்க்க வும், பெயர்கள் நீக்கவும், திருத்தம் செய்யவும் மனுச் செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

    இது தவிர வருகிற 4-ந்தேதி (சனிக்கிழமை) 5-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை), 18-ந்தேதி (சனிக் கிழமை), 19-ந் தேதி (ஞாயிற் றுக்கிழமை) ஆகிய 4 நாட்க ளில் நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங் களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்பு முகாம்களும் நடைபெற உள்ளது.

    இந்த சிறப்பு முகாம்களில் குமரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள மாநகர், ஒன்றிய, நகர் பகுதி, பேரூர், வட்ட, கிளை செயலாளர்கள் அனைத்து சார்பு அணிகளின் நிர்வா கிகள் இணைந்து இந்த வாய்ப்பினை பயன்படுத்தி 1-1-2024 அன்று 18 வயது நிரம்பக் கூடிய புதிய வாக்காளர்களை வாக்கா ளர் பட்டியலில் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள், முகவரி மாற்றம் செய்தல், ஆதார் எண்ணை வாக்கா ளர் பட்டியலுடன் இணைப்பு போன்ற பணி களை சிறப்பாக மேற் கொண்டு தகுதயுள்ள வாக் காளர்கள் விடுபட்டு விடா மல் இணைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • பெண் வாக்காளர்களை விட ஆண் வாக்காளர்கள் அதிகம்
    • குமரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ஸ்ரீதர், அரசியல் கட்சியினர் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிர மணியன், ஆர்.டி.ஓ. சேது ராமலிங்கம், தி.மு.க. சார்பில் இளைஞரணி அமைப்பா ளர் அகஸ்தீசன், அ.தி.மு.க. சார்பில் பகுதி செயலாளர் ஜெயகோபால், பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜெகதீசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இசக்கி முத்து, காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் நவீன் குமார், தே.மு.தி.க. சார்பில் மணிகண்டன் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    தேர்தல் தாசில்தார் சுசீலா, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜாசிங் மற்றும் அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:- குமரி மாவட்டத்தில் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் 5-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளி யிடப்பட்டது. அதன்படி 15 லட்சத்து 46 ஆயிரத்து 581 வாக்காளர்கள் இருந்தனர். இதைத்தொடர்ந்து வாக்குச் வாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று கள ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி 12,860 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 37,405 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது குமரி மாவட்டத்தில் 7 லட்சத்து 61 ஆயிரத்து 884 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 60 ஆயிரத்து 10 பெண் வாக்காளர்கள், 143 இதர வாக்காளர்கள் என 15 லட்சத்து 22 ஆயிரத்து 36 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் பெண் வாக்காளர்களை விட ஆண் வாக்காளர்கள் தற்போது அதிகமானோர் உள்ளனர்.

    கன்னியாகுமரி சட்ட சபை தொகுதியில் அதிகபட்சமாக 2,89,373 வாக்காளர்கள் உள்ளனர். அங்கு ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 43,417 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 45 ஆயிரத்து 891 பேரும், இதர வாக்காளர்கள் 65 பேரும் உள்ளனர். நாகர்கோவில் தொகு தியில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 976 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 31 ஆயிரத்து 535 பெண் வாக்காளர்கள், 13 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 59 ஆயிரத்து 524 வாக்காளர்கள் உள்ளனர்.

    குளச்சல் தொகுதியில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 540 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 29 ஆயிரத்து 926 பெண் வாக்காளர்கள், 14 இதர வாக்காளர்கள் என 2 லட்சத்து 63 ஆயிரத்து 480 வாக்காளர்கள் உள்ளனர். பத்மநாபபுரம் தொகுதி யில் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 89 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 17 ஆயிரத்து 382 பெண் வாக்காளர்கள், 26 இதர வாக்காளர் என 2 லட்சத்து 36 ஆயிரத்து 497 வாக்காளர்கள் உள்ளனர்.

    விளவங்கோடு தொகு தியில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 525 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 17 ஆயிரத்து 14 பெண் வாக்காளர்கள், இதர வாக்காளர்கள் 4 என 2 லட்சத்து 32 ஆயிரத்து 543 வாக்காளர்கள் உள்ளனர். கிள்ளியூர் தொகுதியில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 336 ஆண் வாக்கா ளர்கள், 1 லட்சத்து 18 ஆயிரத்து 262 பெண் வாக் காளர்கள், 21 இதர வாக்காளர்கள் என 2 லட்சத்து 40 ஆயிரத்து 619 வாக்காளர்கள் உள்ளனர்.

    மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் ஏற்கனவே 1,695 வாக்குச் சாவடிகள் இருந்தது. தற்போது பத்மநாபபுரம் தொகுதியில் 3 வாக்குச்சா வடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது 1,698 வாக்குச்சாவடிகள் உள்ளது. கன்னியாகுமரி தொகுதி யில் 310 வாக்கு சாவடிகளும், நாகர்கோவில் தொகுதியில் 275 வாக்குச்சாவடிகளும், குளச்சல் தொகுதியில் 300 வாக்குச்சாவடிகளும், பத்மநாபபுரம் தொகுதியில் 273 வாக்குச்சாவடிகளும், விளவங்கோடு தொகுதியில் 272 வாக்குச்சாவடிகளும், கிள்ளியூர் தொகுதியில் 268 வாக்குச்சாவடிகளும் உள்ளன.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட காரணங்க ளுக்கான விண்ணப்பங்கள் வரு கிற 4-ந்தேதி, 5-ந்தேதி, 18-ந்தேதி, 19-ந்தேதி பெறப்படுகிறது. பொது மக்கள் அன்று நடைபெறும் சிறப்பு முகாம்களில் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்து கொள்வதுடன் வாக்காளர் பட்டியில் குறைபாடுகள் இருந்தால் நேரில் வந்து நிவர்த்தி செய்யலாம். வாக்களர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தல் பணிக்கு அனைத்து கட்சிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • உறுப்பினர் பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது
    • கூட்டுறவு சங்க வங்கிகளில் ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்ப திவாளர் தமிழ்நங்கை விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    எதிர்வரும் கூட்டுறவு சங்க தேர்தலை முன்னிட்டு சங்கத்தில் உறுப்பினர் பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    எனவே, உரிய காலத்திற்குள் ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் ஆகிய விவரங்களை தாங்கள் உறுப்பினராக உள்ள கூட்டுறவு சங்க வங்கிகளில் அளிக்க வேண்டும்.

    தவறும் பட்சத்தில் தங்களது பெயர் அ-வகுப்பு உறுப்பினர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படும். மேற்படி அ-வகுப்பு உறுப்பினர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படும்போது எதிர்வரும் கூட்டுறவு சங்க தேர்தலில் தங்களால் வாக்களிக்க இயலாத நிலை மற்றும் தேர்தலில் போட்டியிட இயலாத நிலை ஏற்படும்.

    எனவே, மேற்கண்ட வாய்ப்பை பயன்படுத்தி தங்களது ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் ஆகிய விவரங்களை தாங்கள் உறுப்பினர்களாக உள்ள கூட்டுறவு சங்க வங்கி களில் ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போலீஸ் இன்ஸ்பெக்டரை விட போலீஸ் மோப்ப நாய்க்கு வாடகை அதிகமாக இருக்கிறது.
    • அரசின் நிதி நெருக்கடியை சரிசெய்வதற்கான திட்டம் என்று கருத்து நிலவியது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் போலீஸ் நிலையங்களை வாடகைக்கு எடுக்கலாம் என்று கேரள காவல்துறை தெரிவித்துள்ளது. போலீஸ் நிலையத்துடன் இன்ஸ்பெக்டர் மோப்பநாய், வயர்லெஸ் கருவிகள் உள்ளிட்டவைகளையும் கட்டணம் செலுத்தி வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

    மேலும் ஒவ்வொரு வசதிக்கான கட்டண பட்டியலையும் வெளியிட்டிருக்கிறது. நாள் ஒன்றுக்கு போலீஸ் நிலையத்திற்கு ரூ12 ஆயிரம், வயர்லெஸ் கருவிகளுக்கு ரூ12ஆயிரத்து 130, மோப்ப நாய்க்கு ரூ7ஆயிரத்து 280, போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரூ3 ஆயிரத்து 35 முதல் ரூ3ஆயிரத்து 340 வரை என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மொத்தமாக ஒரு போலீஸ் நிலையம், ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், வயர்லெஸ் கருவிகள், மோப்பநாய் என அனைத்தும் சேர்த்து ரூ34 ஆயிரத்து 750 கட்டணமாக இருக்கிறது. இன்ஸ்பெக்டருக்கு பதிலாக சிவில் போலீஸ அதிகாரிக்கான கட்டணம் ரூ610 ஆகும்.

    காவல்துறை வெளியிட்டுள்ள இந்த பட்டிலின்படி, போலீஸ் இன்ஸ்பெக்டரை விட போலீஸ் மோப்ப நாய்க்கு வாடகை அதிகமாக இருக்கிறது. ஆனால் அதற்கான காரணம் தெளிவாக கூறப்படவில்லை.

    காவல்துறையின் இந்த முடிவுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அரசு அதிகாரிகள் சிலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

    அரசின் நிதி நெருக்கடியை சரிசெய்வதற்கான திட்டம் என்று கருத்து நிலவியது. ஆனால் இது நிதிநிலையை உயர்த்துவதற்கான திட்டம் இல்லை என்றும், இது ஏற்கனவே உள்ள பழைய திட்டம் எனவும், புதிய கட்டணங்களுடன் தற்போது வெளிவந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    • தரவரிசை மொத்தம் 19 சுகாதார குறியீடுகள் அடிப்படையில் வெளியிடப்பட்டு வருகிறது.
    • கரந்தை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் 5-வது இடத்தை பிடித்தது.

    தஞ்சாவூர்:

    தமிழக அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை கடந்த 3 மாதங்களாக ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடுகள் அடிப்படையில் தரவரிசை பட்டியலை மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது.

    அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 312 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரவரிசை வெளியிடப்பட்டு வருகிறது.

    தஞ்சை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் கல்லுக்குளம், கரந்தை, மகர்நோன்புச்சாவடி, சீனிவாசபுரம் ஆகிய 4 இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இதில் தஞ்சை கல்லுக்குளம் ஆரம்ப சுகாதார நிலையம் தமிழகத்திலேயே சிறந்த ஆரம்ப சுகாதார நிலையமாக தேர்வு செய்யப்பட்டு 2-வது இடத்தை பிடித்துள்ளது.

    இந்த தரவரிசை மொத்தம் 19 சுகாதார குறியீடுகள் அடிப்படையில் வெளியி டப்பட்டு வருகிறது.

    இந்த மதிப்பீட்டின் அடிப்படையில் ஜூன் மாத தரவரிசை பட்டியலில் தஞ்சை மாநகராட்சி பகுதியில் உள்ள கல்லுக்குளம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் தமிழக அளவில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

    இதே போல் கரந்தை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் 5-வது இடத்தையும், மகர்நோம்புசாவடி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் 38-வது இடத்தையும், சீனிவாச புரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் 39-வது இடத்தையும் பிடித்து தஞ்சை மாநகராட்சிக்கு பெருமை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தேசிய தரவரிசை பட்டியலில் கலசலிங்கம் பல்கலைகழகத்துக்கு 29-வது இடம் வகிக்கிறது.
    • பேராசிரியா்கள் மற்றும் அலுவலா்களை பாராட்டினர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    புதுடெல்லி கல்வி அமைச்சகம் 2023-ம் ஆண்டுக்கான பல்கலை கழகங்களுக்கான தேசிய அளவிலான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் விருதுநகா் மாவட்டம் கிருஷ்ணன்கோவிலில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகம் 29-வது இடம் பிடித்துள்ளது.

    மேலும் கல்வி அமைச்சகத்தின் தகவல்படி தேசிய பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலில் 36-வது இடத்தையும், தேசிய அளவிலான அனைத்து பிரிவு கல்லூரிகளின் தரவரிசை பட்டியலில் 48-வது இடத்தையும் கலசலிங்கம் பல்கலைக்கழகம் பிடித்துள்ளது.

    இதைத்தொடர்ந்து பல்கலைக்கழக வேந்தா் ஸ்ரீதரன், இணை வேந்தா் அறிவழகி ஸ்ரீதரன், துணைத்தலைவா்கள் சசிஆனந்த், அா்ஜூன் கலசலிங்கம், துணைவேந்தா் மற்றும் பதிவாளா் ஆகியோர் டீன்கள், துறைத்தலைவா்கள், பேராசிரியா்கள் மற்றும் அலுவலா்களை பாராட்டினர்.

    • அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டார்.
    • 20 பேரூராட்சிகளின் வார்டு உறுப்பினர்கள் 299 பேர் என மொத்தம் 486 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.

    இதற்கான ஊரகப்பகுதி மற்றும் நகர்ப்புறப் பகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னி லையில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டார்.

    பின்னர் அவர் தெரிவித்தாவது:மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 28 பேர், தஞ்சாவூர் மாமன்ற வார்டு உறுப்பினர்கள் 51 பேர், கும்பகோணம் மாமன்ற வார்டு உறுப்பினர்கள் 48 பேர், பட்டுக்கோட்டை நகர் மன்ற வார்டு உறுப்பினர்கள் 33 பேர், அதிராம்பட்டினம் நகர்மன்ற வார்டு உறுப்பினர்கள் 27 பேர், 20 பேரூராட்சிகளின் வார்டு உறுப்பினர்கள் 299 பேர் என மொத்தம் 486 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

    மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்கான வரைவு வாக்காளார் பட்டியல் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளான தஞ்சாவூர், கும்பகோணம் மாநகராட்சி அலுவலகங்கள், தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி அலுவலகம், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகங்கள், உதவி இயக்குநர் (பேரூரா ட்சிகள்) அலுவலகம், 20 பேரூராட்சி அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.இக்கூட்டத்தில் வட்டாட்சியர் (தேர்தல்) ராமலிங்கம், தி.மு.க ஒன்றியச் செயலர் முரசொலி, அ.தி.மு.க ஒன்றியச் செயலர் முத்துமாறன், காங்கிரஸ் மாவட்டப் பொதுச் செயலர் மோகன்ராஜ், பா.ஜ.க காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட திட்டமிடும் குழு தேர்தல் வாக்காளர் பட்டியல் வெளியிடபடவுள்ளது என கலெக்டர் தெரிவித்தார்
    • இந்த பட்டியல், இன்று அந்தந்த அலுவலகங்களில் பொதுவான தகவலுக்காக வெளியிடப்படவுள்ளது

    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் படி, கரூர் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கு இன்றைய நிலையில் உள்ள மாவட்ட பஞ்சாயத்து, டவுன் பஞ்சாயத்து, மாநகராட்சி, நகராட்சி கவுன்சிலர்கள் கொண்ட வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல், இன்று (2) அந்தந்த அலுவலகங்களில் பொதுவான தகவலுக்காக வெளியிடப்படவுள்ளது. இவ்வாறு, அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

    ×