என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்- ஆசிரியர் கூட்டணியினர் வலியுறுத்தல்
- உயர்கல்வி படித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.
- மத்திய அரசு நடைமுறையில் உள்ள கல்வியை மாநில அரசின் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்.
திருவாரூர்:
திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கொரடாச்சேரி வட்டாரக்கிளை நிர்வாகிகள் பொது உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டாரத் தலைவர் நக்கீரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஈவேரா சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ஐயப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயந்தி, மேனாள் மாநில செயற்குழு உறுப்பினர் வீரசேகரன், மேனாள் நற்பணி தலைவர் அறிவழகன், வட்டாரத் செயலாளர் தேர்தல் ஆணையர் வேதமூர்த்தி, வட்டாரச் செயலாளராக சந்திரமோகன், வட்டாரப் பொருளாளர் யசோதா, வட்டார மகளிர் வலையமைப்பு தலைவர் கார்த்திகாராணி, செயலாளர் யோகப்பிரியா, பொருளாளர் மாலதி ஆகியோர் உரையாற்றினர்.
கூட்டத்தில் வட்டார துணைத் தலைவர்கள் ஜெய்சங்கர், சாந்தி, துணைச் செயலாளர்கள் மார்க்ரெட் ஹேமலதா, தனலட்சுமி, அகஸ்டின் மகளிர் வலையமைப்பு துணைத்தலைவர்கள் சுபா, லட்சுமி, துணைச் செயலாளர்கள் தமிழ்ப்பிரியா, நல்லம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்ச்சியில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல் படுத்த வேண்டும். அகவிலைப் படியை உடனே வழங்க வேண்டும். உயர்கல்வி படித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஊதி்யம் வழங்குவதற்கு தேவையான நிதியை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும்.
மத்திய அரசு நடைமுறையில் உள்ள கல்வியை மாநில அரசின் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்