search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Form"

    • நலிவடைந்த அரசு சிமெண்டு ஆலையை உலர் பதன முறைக்கு மாற்றி நவீனப்படுத்த வேண்டும்.
    • பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராஜபாளையம்

    மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த விருதுநகர் மாவட்டத்தில் 1970-ம் ஆண்டு முதல்வர் கருணா நிதி ஆட்சிக் காலத்தில் தமிழக அரசின் சார்பில் ஆலங்குளத்தில் சிமெண்டு ஆலை தொடங்கப்பட்டது.

    ராஜபாளையம்-சிவகாசி நடுவே தொடங்கப்பட்ட இந்த ஆலையை சுற்றிலும் சுமார் 150 ஆண்டுகளுக்கு உரிய சுண்ணாம்புக்கல் கனிம வளங்கள் மிகுந்து காணப் பட்டன. விவசாயத்தை மட்டுமே நம்பி இருந்த இந்த பகுதியில் பலருக்கு வேலை வாய்ப்பை வழங்கி அந்த பகுதியை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்காக ஆலங்குளத்தில் தமிழ்நாடு அரசின் சிமெண்டு ஆலை நிறுவப்பட்டது.

    பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களைக் கொண்டு இந்த ஆலை நடைபெற்று வந்தது. சிவகாசியில் இருந்து ஆலங்குளம் வரை ெரயில்வே பாதை அமைக்கப்பட்டதால் ெரயில் மூலமாக பல்வேறு நகரங்க ளுக்கும் இலகுவாக சிமெண்டு மூடைகளை அனுப்ப ஏதுவாக இருந்தது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. ஆட்சியில் அரசு சூப்பர் ஸ்டார் சிமெண்டு என்று அறிமுகப்படுத்தி ரூ.240 கோடியில் நவீனப் படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அரியலூர் அரசு சிமெண்டு ஆலைக்கு அந்தச் சமயத்தில் அந்த நிதி மாற்றப்பட்டு சிமெண்டு ஆலை நவீனப் படுத்தப்பட்டது.

    ஆலங்குளம் சிமெண்டு ஆலை தற்போது வரை ஈர பதன முறையிலேயே தயாரிக்கப்பட்டு வருவதால் செலவு அதிகமாகவும், அதிகளவில் தொழிலா ளர்கள் தேவைப்படுகின்றனர். தண்ணீர் தேவையும் அதிகரித்து வருகிறது .

    இதை கருத்தில் கொண்டு நவீன முறைப்படி உலர் பதன முறைக்கு மாற்றினால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என தொழில் நுட்ப வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் செலவினங்கள் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை குறையும். தண்ணீர், மின்சாரம் மிகவும் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படும்.

    இன்னும் 137 லட்சம் மெட்ரிக் டன் சுண்ணாம்புக் கல் இருப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. தற்போதுள்ள சுண்ணாம்பு கல்லே இன்னும் 65 ஆண்டு களுக்கு மேல் ஆலையை முறையாக இயக்குவதற்கு போதுமானதாக உள்ளது.

    தற்போது சிமெண்டு ஆலையில் ரூ.340 விலையில் ''வலிமை சிமெண்டு'' தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதர சிமெண்டு விலையை விட தரமானதாகவும், வலிமையானதாகவும் உள்ளதாக கட்டிட வல்லுநர்கள் கருத்து தெரிவித்து இதை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

    ஆலங்குளம் சிமெண்டு ஆலையில் இன்னும் 2,750 ஏக்கர் நிலப்பரப்பில் சுண்ணாம்புக்கல் எடுக்கா மல் உள்ளது.

    தினமும் 1,200 டன் சிமெண்டு உற்பத்தி செய்வதற்கு உலர்பதன முறைப்படி ரூ.240 கோடி செலவு செய்தால் ஆலையை நவீனப்படுத்தியும், 250 பட்டதாரி களுக்கு வேலை கொடுத்தும், பல தொழிலா ளர்களை உருவாக்கியும், இதன் மூலம் பலருக்கு வருமானமும் ஈட்டுவதற்கு ஏதுவாக இருக்கும். கருணா நிதி ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த ஆலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான ஆட்சியில் ஆலங்குளம் அரசு சிமெண்டு ஆலையை நவீனப்படுத்தி இந்த பகுதியை வளம் பெறச் செய்ய வேண்டும் என பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தஞ்சாவூா் மாவட்டத்தில் பதிவேட்டை கொண்டு இறந்த வாக்காளா்களின் பெயரை நீக்க வேண்டும்.
    • 18 முதல் 19 வயது வரையுடைய வாக்காளா்களிடமிருந்து 28,894 படிவங்கள் பெறப்பட்டுள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணிகள் தொடா்பாக அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார்.

    மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும், சமூக சீா்திருத்தத் துறை அரசுச் செயலருமான ஆபிரகாம் தலைமை தாங்கி பேசியதாவது :-

    வட்டம், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வரும் இறப்பு பதிவேட்டைக் கொண்டு வாக்காளா் பட்டியலில் உள்ள இறந்த வாக்காளா்களின் பெயரை நீக்க வேண்டும்.

    மேலும், நவம்பா் 9 ஆம் தேதி முதல் டிசம்பா் 8 ஆம் தேதி வரை பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் மீது டிசம்பா் 26 ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தோ்தல் சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட படிவங்கள் அனைத்தையும் நிலுவையில் இல்லாமல் கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்த தோ்தல் படிவங்களை இந்திய தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியவாறு அனைத்து அலுவலா்கள் நிலையிலும் ஆய்வு செய்து, தூய வாக்காளா் பட்டியல் என்ற இலக்கை அடைய தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாவட்டத்தில் புதிய வாக்காளா்களைச் சோ்ப்பதற்கு 34,302 படிவங்கள், நீக்கம் செய்ய 23,807 படிவங்கள், திருத்தம் செய்ய 17,988 படிவங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. சிறப்பு முகாம்களில் 52,394 படிவங்களும், 18 முதல் 19 வயது வரையுடைய வாக்காளா்களிடமிருந்து 28,894 படிவங்கள் பெறப்பட்டுள்ளன.

    இச்சிறப்பு கருக்க முறைத் திருத்தப் பணிகள் நிறைவு பெற்று ஜனவரி 5 ஆம் தேதி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் (வருவாய்) சுகபுத்ரா, மாநக ராட்சி ஆணையா்கள் சரவண குமாா் (தஞ்சாவூா்), செந்தில் முருகன் (கும்பகோணம்), மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரெங்கராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த இரண்டு நாட்களில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் என சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • படிவங்களை பூர்த்தி செய்து நேரடியாக அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சைமாவட்ட கலெக்டர் தினேஷ்பொ ன்ராஜ் ஆலிவர் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரை களின் படி கடந்த 12.11.2022 மற்றும் 13.11.2022 ஆகிய இரண்டு நாட்களில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் காலை 09.30 மணி மாலை 5.30 மணி வரை நடைபெற்றது.

    இச்சிறப்பு முகாம்களில் 15704 படிவம் 6 ம், 2122 படிவம் 7 மற்றும் 5441 படிவம் 8 ம் ஆக கூடுதலாக 23267 படிவங்கள் பெறப்பட்டது.

    மேலும், ஆன்லைன் மூலமாக 1205 படிவம் 6-ம், 3187 படிவம் 7 மற்றும் 1903 படிவம் 8-ம் ஆக கூடுதலாக 6295 படிவங்கள் ஆன்லைன் மூலமாக பெறப்பட்டது. இச்சிறப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளத் தவறிய பொது மக்கள் எதிர்வரும் 26 (சனிக் கிழமை) மற்றும் 27 ஆகிய தேதிகளில் (ஞாயிற்று கிழமை) நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    மேலும், 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்களுக்கு உரிய படிவங்களை பூர்த்தி செய்து நேரடியாக அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கலாம், NVSP Portal என்ற இணையதளம் மற்றும் Voters Helpline என்ற செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×