search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு
    X

     புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்ட அடையாறு பாஸ்கர்.

    காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு

    • ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை மாநில செயலாளர் அடையாறு பாஸ்கர் வெளியிட்டார்.
    • 4 சட்டமன்ற தொகுதியிலும் தலா 100 கொடிக்கம்பங்கள் கல்வெட்டுடன் நிறுவ வேண்டும் என்று கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் ஜக்காரியா தலைமையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கட்சி நிர்வாகிகளுக்கான தேர்தல் ராமநாதபுரத்தில் நடந்தது. இதில் ஏராளமானோர் போட்டியிட்டனர்.

    தற்போது முதற்கட்டமாக மாவட்டத்தில் நகரம் மற்றும் வட்டார அளவிலான நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு ள்ளனர்.

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளரும், ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளருமான அடையாறு பாஸ்கர் ராமநாதபுரத்தில் நகர் மற்றும் வட்டார தலை வர்களின் புதிய பட்டியலை வெளியிட்டார்.

    அதன்படி ராமநாதபுரம் நகர் தலைவராக கோபி, ராமேசுவரம் நகர் தலைவராக ராஜீவ் காந்தி, பரமக்குடி நகர் தலைவராக அஹமத் கபீர், கீழக்கரை நகர் தலைவராக அஜ்மல் கான் ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    வட்டார அளவிலான தலைவர்களாக திருவா டானை வடக்கு தட்சணா மூர்த்தி, திருவாடானை தெற்கு கணேசன், ஆர்.எஸ்.மங்கலம் வடக்கு மனோகரன், ஆர்.எஸ்.மங்க லம் தெற்கு சுப்பிரமணியன், ராமநாதபுரம் சேகர், மண்ட பம் மேற்கு அன்வர்அலி.

    மண்டபம் கிழக்கு செல்லசாமி, திருப்புல்லாணி கிழக்கு சேதுபாண்டியன், திருப்புல்லாணி மேற்கு கந்தசாமி, முதுகுளத்தூர் கிழக்கு ராமர், முதுகுளத்தூர் மேற்கு புவனேஸ்வரன், கடலாடி கிழக்கு தனசேகரன், கடலாடி மேற்கு அப்துல் சத்தார், கடலாடி வடக்கு சுரேஷ் காந்தி, கமுதி தெற்கு கோவிந்தன், கமுதி வடக்கு ஆதி, பரமக்குடி மேற்கு சுப்பிரமணியன், பரமக்குடி கிழக்கு வேலுசாமி, நயினார் கோவில் கார்மேகம், போக லூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து அடையாறு பாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதியிலும் தலா 100 கொடிக்கம்பங்கள் கல்வெட்டுடன் நிறுவ வேண்டும். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதன்படி ராமநாதபுரம் தொகுதிக்கு முன்னாள் மாவட்ட தலைவர் செல்லதுரை அப்துல்லா, திருவாடானை தொகுதிக்கு கருமாணிக்கம் எம்.எல்.ஏ, முதுகுளத்தூர் தொகுதிக்கு மாவீரன் வேலுச்சாமி, பரமக்குடி தொகுதிக்கு செந்தாமரை கண்ணன் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு அவர்கள் தலைமையில் தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப்பணி ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தொடங்கப்பட உள்ளது அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் ஜனவரி 15-ந்தேதிக்குள் குறிப்பிட்ட அளவில் கொடி கம்பங்கள் ஏற்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×