search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கன்னியாஸ்திரி"

    • மோட்டார் சைக்கிளை முந்தி சென்றபோது மினி பஸ் எதிர்பாராதவிதமாக ஜெயசெல்வி மீது மோதியது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    இரணியல் :

    தூத்துக்குடி மாவட்டம் செட்டிவிளை மணல் மாதா கோவில் பகுதியை சேர்ந்த வர் குருசுமிக்கேல். இவரது மகள் அருட் சகோதரியான ஜெயசெல்வி (வயது 37). இவர் குமரி மாவட்டம் திங்கள்நகர் அடுத்த பட்டரிவிளை ஏசுவின் திரு இருதய கன்னியர்மடத்தில் தங்கி பட்டரிவிளை உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று காலையில் பட்டரிவிளை யிலிருந்து பள்ளவிளை நோக்கி திருப்பலிக்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திங்கள்நகரில் இருந்து மினி பேருந்து ஒன்று புதுவிளை பகுதியில் வைத்து ஜெயசெல்வி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை முந்தி சென்றபோது மினி பஸ் எதிர்பாராதவிதமாக ஜெயசெல்வி மீது மோதியது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்தில் துடிதுடித்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குளச்சல் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற னர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெயசெல்வி ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறினர்.

    பின்னர் பிரேத பரி சோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து இரணி யல் போலீஸ் நிலையத்தில் அருட்சகோதரி ஞான செல்வி புகார் அளித்தார். புகாரின் பேரில் மினி பஸ்சை ஓட்டிய பிலாக்கேடு பகுதியை சேர்ந்த பாண்டி யன் (வயது 27) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு தோண்டி எடுக்கப்பட்டது.
    • ஏராளமான பொது மக்கள் மற்றும் மிசோரிக்கு சுற்றுலா வந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

    மிசோரி:

    உலகத்தில் எங்காவது ஒரு இடத்தில் அதிசய சம்பவங்கள் நடைபெறுவது உண்டு. அதுபோல தான் அமெரிக்காவில் உள்ள மிசோரி என்ற சிறிய நகரத்தில் ஒரு அதிசயம் அரங்கேறி உள்ளது.

    அங்குள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த வில்ஹல்மினா லான்சாஸ்டர் என்ற கன்னியாஸ்திரி கடந்த 2019-ம் ஆண்டு தனது 95-வது வயதில் மரணம் அடைந்தார்.

    அவரது உடல் மரச்சவப் பெட்டியில் வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவரது உடலை வேறு ஒரு இடத்தில் புதைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையொட்டி அவரது உடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு தோண்டி எடுக்கப்பட்டது.

    பின்னர் சவப்பெட்டியை திறந்து பார்த்தபோது மற்ற கன்னியாஸ்திரிகள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் கன்னியாஸ்திரி வில்ஹல்மினா லான்சாஸ்டர் உடல் புதைக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆன போதிலும் அப்படியே கெடாமல் இருந்தது. அவரது தலைமுடி, மூக்கு, உதடு மற்றும் கண்கள் எந்தவித சேதமும் இல்லாமல் இருந்தது.

    முகம் சிரித்த முகத்துடன் காட்சிஅளித்தது. பொதுவாக யாராவது இறந்து அவரது உடல் புதைக்கப்பட்டால் சில மாதங்களில் அது எலும்புக் கூடாக மாறிவிடும். ஆனால் அப்படி எதுவும் இல்லாமல் கன்னியாஸ்திரி உடல் இருந்ததால் இந்த தகவல் வேகமாக பரவியது. இதனால் ஏராளமான பொது மக்கள் மற்றும் மிசோரிக்கு சுற்றுலா வந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் கன்னியாஸ்திரி உடலை அதிசயத்துடன் பார்த்தனர். பொதுமக்கள் அவரது பாதத்தை தொட்டு வணங்கினார்கள். இன்று வரை அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. அதன்பிறகு மீண்டும் அடக்கம் செய்யப்படும். இதனை அந்த நகர மக்கள் இது மிசோரியின் ஒரு அதிசயம் என தெரிவித்து உள்ளனர்.

    அவரது உடலுக்கு அருகே ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. தயவு செய்து சகோதரியின் உடலை குறிப்பாக அவரது பாதங்களை தொடுவதில் மென்மையாக இருங்கள் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • மாடத்தட்டுவிளை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
    • அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாகவும், அதற்காக சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை எனவும் தெரியவந்தது.

    கன்னியாகுமரி :

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம், வரதராஜன் பேட்டையை சேர்ந்தவர் தேவதாஸ்.

    இவரது மகள் அன்பு விஜய் ஞானஜோதி (வயது 27). கன்னியாஸ்திரியான இவர் கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே மாடத்தட்டுவிளை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

    இதற்காக அப்பகுதியில் உள்ள வீட்டில் தங்கி இருந்தார். அவருடன் மேலும் சில பெண்கள் தங்கி இருந்தனர்.

    இந்த நிலையில் கன்னியாஸ்திரி அன்பு விஜய் ஞானஜோதி நேற்று வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலன் இன்றி கன்னியாஸ்திரி அன்பு விஜய் ஞானஜோதி பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி கன்னியா ஸ்திரி அன்பு விஜய் ஞானஜோதியின் சகோதரி ஜோதி இரணியல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கன்னியாஸ்திரி அன்பு விஜய் ஞானஜோதி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனர்.

    இதில் அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாகவும், அதற்காக சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை எனவும் தெரியவந்தது.

    இதனால் அவர் மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்பட்டது. இதன் காரணமாகவே அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என தெரிகிறது. என்றாலும் போலீசார் கன்னியாஸ்திரி அன்பு விஜய் ஞானஜோதி தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் இருக்கிறதா? எனவும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×