search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "miracle"

    • ஆலயத்தின் முன்புறம் இருபுறங்களும் ஏஞ்சல் சிலை உள்ளது.
    • சுற்று வட்டாரத்தை சேர்ந்த பலர், ஆலயத்திற்கு வந்து சிலையில் இருந்து தண்ணீர் வடியும் அதிசயத்தை பார்த்து சென்றனர்.

    ஓட்டப்பிடாரம்:

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தருவை குளம் பகுதியில் தூய மிக்கல் அதிதூதர் ஆலயம் அமைந்துள்ளது.

    இந்த ஆலயத்தின் முன்புறம் இருபுறங்களும் ஏஞ்சல் சிலை உள்ளது. இதில் வலது புறம் உள்ள ஏஞ்சல் சிலையில் இடது விரல்களில் இருந்து தண்ணீர் போன்ற ஒரு திரவம் வழிந்து கொண்டிருக்கிறது. இதைப்பார்த்த அப்பகுதியினர் ஆச்சர்யம் அடைந்தனர்.

    இந்த செய்தி அப்பகுதி முழுவதும் காட்டுத்தீயாக பரவியது. இதையறிந்த சுற்று வட்டாரத்தை சேர்ந்த பலர், ஆலயத்திற்கு வந்து சிலையில் இருந்து தண்ணீர் வடியும் அதிசயத்தை பார்த்து சென்றனர். இதனால் ஆலயத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

    இதனையொட்டி ஆலயத்தில் சிறப்பு திருப்பலி ஆராதனையை நடத்தினர். தொடர்ந்து ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏற்றி ஜெபம் செய்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

    • காளியம்மன் கோவில் வேப்பமரத்தில் இருந்து முதலில் மரத்தின் ஒரு பகுதியில் மட்டும் பால் வடிந்தது.
    • தமிழகத்தில் கோவிலில் அவ்வப்போது நிகழும் இந்த அதிசயம் தற்போது தஞ்சையிலும் நிகழ்ந்துள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கரந்தை சி.ஆர்.சி டெப்போ அருகில் எம்ஜிஆர் நகர் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோயிலில் முனீஸ்வரர், நாகம்மன் சன்னதிகளும் பரிவார தெய்வங்களாக உள்ளன. தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வர். இங்கு சுமார் 40 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் உள்ளது.

    இந்நிலையில் இந்த வேப்பமரத்தில் இருந்து திடீரென வெள்ளை நிறத்தில் பால் வடிந்தது. தொடர்ந்து இடைவிடாமல் பால் வடிந்து வருகிறது.

    தகவல் அறிந்த பக்தர்கள் ஏராளமானோர் கோவிலில் திரண்டு வேப்பமரத்தில் பால் வடியும் அதிசயத்தை கண்டு வியந்து தரிசனம் செய்து வருகின்றனர். பலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து பகிர்ந்து வருகின்றனர்.

    இது பற்றி பக்தர்கள் கூறும்போது, காளியம்மன் கோவில் வேப்பமரத்தில் இருந்து முதலில் மரத்தின் ஒரு பகுதியில் மட்டும் பால் வடிந்தது. தற்போது 3 இடங்களில் வடிந்து ஓடி கொண்டிருக்கிறது என்றனர்.

    தமிழகத்தில் கோவிலில் அவ்வப்போது நிகழும் இந்த அதிசயம் தற்போது தஞ்சையிலும் நிகழ்ந்துள்ளது. 

    • சுவாமி ஐயப்பன் தாம்பத்திய கோலத்தில் ஆரியங்காவில் அருள்பாலிக்கிறார்.
    • முதுகுத் தண்டுக்குள் கடைசியில் உள்ளது மூலாதாரம்.

    ஐயப்பனின் ஆறு ஆதாரத் தலங்கள்!

    ஐயப்பன் நம்மைப் போலவே வாழ்ந்தவர்.

    பால ரூபத்தில் குளத்துப் பிழையிலும்,

    கௌமார கோலத்தில் சபரி மலையிலும்,

    தாம்பத்திய கோலத்தில் ஆரியங்காவிலும்,

    வானப்பிரஸ்த நிலையில் அச்சன் கோவிலிலும்,

    ஜீவன் முக்த நிலையில் வான வெளியிலும்

    திருக்கோலம் கொண்டு அருள்பாலிக்கிறார்.

    ஐயப்பன் பக்தர்கள் சரணம் சொல்லும்போது இந்த தலங்களைக் குறிப்பிடுகிறார்கள்.

    ஐயப்பன் குளத்துப்புழையில் பாலகனாகவும், சபரி மலையில் கௌமார கோலத்திலும், ஆரியங்காவில் தாம்பத்திய கோலத்தில் பூர்ணா புஷ்பகலா சமேதனாகவும், அச்சன் கோவிலில் வானப்பிரஸ்த கோலத்தில் அரசனாகவும், காந்தமலையில் ஜோதியாகவும், வீற்றிருப்பதாக ஐதீகம்.

    இப்படி ஆராதிப்பதில் பெரும் தத்துவம் அடங்கியுள்ளது.

    நமது தேகத்தில் ஆறு ஆதாரங்கள் உள்ளன.

    முதுகுத் தண்டுக்குள் கடைசியில் உள்ளது மூலாதாரம்.

    பிருத்வி மயமான அதில் கணபதி வீற்றிருக்கிறார். நெல்லை மாவட்டத்தில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோவில் மூலாதாரம்.

    தொப்புகளுக்கு கீழ்ப்பகுதி சுவாதிஷ்டானம்.

    ஜல மயமான அப்பகுதியில் நாராயணன் இருக்கிறார்.

    அச்சன் கோவில் சுவாதிஷ்டானம்.

    நாபி கமலத்திற்கு மணிபூரகம் என்று பெயர். அக்னி மயமான அப்பீடத்தில் இருப்பவர் சூரியன்.

    ஆரியங்காவு மணிபூரகமாக கருதப்படுகிறது. வாயுமயமான ஹிருதய ஸ்தானம் அநாகதம். அங்கு பராசக்தி வீற்றிருக்கிறாள். குளத்துபுழா அநாகதமாக கருதப்படுகிறது.

    ஆகாச மயமான கண்டத்திற்கு விசுத்தி என்று பெயர். அங்கே நீலகண்டனான பரமசிவன் வீற்றிருக்கிறார். பந்தனம் விசுத்தி என்ற பெயர் பெற்றுள்ளது.

    ஆறாவது ஸ்தானம் பஞ்ச பூதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஸ்தானம். நெற்றியில் இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள அந்த ஸ்தானத்தில் ஐயப்பன் வீற்றிருக்கிறார். அது ஆக்ஞை எனப்படுகிறது.

    "எங்கும் நிறைந்த ஜோதிஸ்வரூபன் ஐயன் மணிகண்டன்

    ஏகாந்தத்தில் இருப்பவராமே ஐயன் மணிகண்டன்

    ஐசுவரியத்தைத் தந்திடும் ஈசன் ஐயன் மணிகண்டன்

    ஒன்பது இரண்டு படிகள் மேலமர்ந்தவன் ஐயன் மணிகண்டன்

    ஓங்காரத்தின் உருவாய் வந்தார் ஐயன் மணிகண்டன்"

    • செந்தணல் வண்ணத்தில் ஓர் ஒளி தென்படும்.
    • ஞானமாகிய அறிவு தானாகவே பிரகாசிப்பது ஜோதி.

    மகர ஜோதியே ஐயப்பா!

    ஞானமாகிய அறிவு தானாகவே பிரகாசிப்பது ஜோதி.

    அந்த ஜோதியின் வடிவமாகவே ஐயப்பன் விளங்குகிறார்.

    'காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா' என்ற கோஷம் வானைப்பிளக்கும் நட்சத்திரக் கூட்டத்தின் மத்தியில், செந்தணல் வண்ணத்தில் ஓர் ஒளி தென்படும்.

    அதுதான் ஜோதி. சிறிது நேரமே தென்படும்.

    இந்த ஜோதி எப்படி ஏற்படுகிறது என்பது இன்றைய விஞ்ஞான உலகத்தால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    ஜோதி வழிபாடுதான் ஆதிகாலம் முதற்கொண்டு இருந்து வருகிறது.

    பண்டைத் தமிழர்கள் வழிபட்ட மும்மூர்த்திகள் சூரியன், சந்திரன்,நெருப்பு ஆகும்.

    இறைவனை வேதம் "ஓம்" என்கிற ஒலி வடிவாக வணங்கும்.

    அதற்கடுத்தபடி ஒளி வடிவமாக விளங்குகிறது.

    இந்த விண்ணின் விளக்குதான் மகரஜோதி.

    ஒளியே சிவம் என்பது ராமலிங்க சுவாமிகள் கருத்து. அவர் ஒளி விளக்குக்கே ஆலயம் அமைத்தார்.

    திருநாவுக்கரசர் "நமச்சிவாய" மந்திரமே ஒளிமயமானது என்று வருணிக்கிறார்.

    அஞ்ஞானம் என்ற இருளை அகற்றுவதற்காக நம் முன்னோர்கள் ஜோதி வழிபாட்டைக் கடைப்பிடித்தனர்.

    இறைவன் ஒளிகளுக்கெல்லாம் ஒளியாகத் திகழ்கிறான். வானத்தில் ஒரே சமயத்தில் ஆயிரமாயிரம் கதிரவன்கள் தோன்றினால் அந்தப் பேரொளியை ஒருவாறு இறைவனுடைய ஒளிக்கு உவமையாகக் கூறலாம்.

    உலகிருளை நீக்கும் கதிரவனும், மதியவனும், தாரகைகளும் அப்பரஞ்ஜோதியின் முன்பு மங்குகின்றன. மின்னொளியும், அக்கினியும் அங்கே சுடர் விடுவதில்லை.

    "தீயளி பரப்பும் இறைவனே! மாந்தருக்கு வெளிச்சத்தைக் கொடுப்பதற்காக நீ வானத்தில் கதிரவனையும் எண்ணற்ற தாரகைகளையும் தோற்றுவித்தாய். நீயே மக்களின ஒளி. எங்கள் அருகில் இருந்து நீ எமக்கு நன்மையும் அன்பும் தருகிறாய்" என்று புகழ்கிறது ரிக்வேதம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு தோண்டி எடுக்கப்பட்டது.
    • ஏராளமான பொது மக்கள் மற்றும் மிசோரிக்கு சுற்றுலா வந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

    மிசோரி:

    உலகத்தில் எங்காவது ஒரு இடத்தில் அதிசய சம்பவங்கள் நடைபெறுவது உண்டு. அதுபோல தான் அமெரிக்காவில் உள்ள மிசோரி என்ற சிறிய நகரத்தில் ஒரு அதிசயம் அரங்கேறி உள்ளது.

    அங்குள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த வில்ஹல்மினா லான்சாஸ்டர் என்ற கன்னியாஸ்திரி கடந்த 2019-ம் ஆண்டு தனது 95-வது வயதில் மரணம் அடைந்தார்.

    அவரது உடல் மரச்சவப் பெட்டியில் வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவரது உடலை வேறு ஒரு இடத்தில் புதைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையொட்டி அவரது உடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு தோண்டி எடுக்கப்பட்டது.

    பின்னர் சவப்பெட்டியை திறந்து பார்த்தபோது மற்ற கன்னியாஸ்திரிகள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் கன்னியாஸ்திரி வில்ஹல்மினா லான்சாஸ்டர் உடல் புதைக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆன போதிலும் அப்படியே கெடாமல் இருந்தது. அவரது தலைமுடி, மூக்கு, உதடு மற்றும் கண்கள் எந்தவித சேதமும் இல்லாமல் இருந்தது.

    முகம் சிரித்த முகத்துடன் காட்சிஅளித்தது. பொதுவாக யாராவது இறந்து அவரது உடல் புதைக்கப்பட்டால் சில மாதங்களில் அது எலும்புக் கூடாக மாறிவிடும். ஆனால் அப்படி எதுவும் இல்லாமல் கன்னியாஸ்திரி உடல் இருந்ததால் இந்த தகவல் வேகமாக பரவியது. இதனால் ஏராளமான பொது மக்கள் மற்றும் மிசோரிக்கு சுற்றுலா வந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் கன்னியாஸ்திரி உடலை அதிசயத்துடன் பார்த்தனர். பொதுமக்கள் அவரது பாதத்தை தொட்டு வணங்கினார்கள். இன்று வரை அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. அதன்பிறகு மீண்டும் அடக்கம் செய்யப்படும். இதனை அந்த நகர மக்கள் இது மிசோரியின் ஒரு அதிசயம் என தெரிவித்து உள்ளனர்.

    அவரது உடலுக்கு அருகே ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. தயவு செய்து சகோதரியின் உடலை குறிப்பாக அவரது பாதங்களை தொடுவதில் மென்மையாக இருங்கள் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • சென்னிமலை அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த சிறுவன் மாயமானார்.
    • இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் பாரதியார் ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகிறது. இதில், திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலை சேர்ந்த நமச்சிவாயம் (52) செயலாளராக உள்ளார்.

    இந்த இல்லத்தில், சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரது மகன் பரத் (13), ஈரோடு மாவட்ட குழந்தைகள் நலக் குழு மூலமாக சேர்க்கப்பட்டிருந்தார். நேற்று காலை குழந்தைகள் ஆஜர் பட்டியல் எடுத்தபோது சிறுவன் பரத் இல்லை.

    உடனிருந்த குழந்தைகளை விசாரித்தபோது அவன் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட நலக்குழுவுக்கும் சிறுவனின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் உதவியுடன் ஈரோடு, பெருந்துறை, அறச்சலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடியும் பரத் கிடைக்கவில்லை. இதையடுத்து இல்லத்தின் செயலாளர் நமச்சிவாயம் அளித்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×