search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி கலெக்டர் புகைப்படத்தை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது யார்?-சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை
    X

    தூத்துக்குடி கலெக்டர் புகைப்படத்தை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது யார்?-சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை

    • கலெக்டர் செந்தில்ராஜ் புகைப்படம் மற்றும் பெயரை மர்மநபர் ஒருவர் வாட்ஸ்அப்பில் பயன்படுத்தி அதன்மூலம் பலருக்கு பணம் கேட்டு தகவல் அனுப்பி உள்ளார்.
    • சம்பந்தப்பட்ட மர்மநபர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு, கலெக்டர் அறிவுறுத்தினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் புகைப்படம் மற்றும் பெயரை மர்மநபர் ஒருவர் வாட்ஸ்அப்பில் பயன்படுத்தி அதன்மூலம் பலருக்கு பணம் கேட்டு தகவல் அனுப்பி உள்ளார்.

    மேலும் கலெக்டர் செந்தில்ராஜ் அனுப்பியது போன்று போலீஸ் அதிகாரி ஒருவருக்கும் தகவல் அனுப்பினார்.

    இது குறித்து கலெக்டருக்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட மர்மநபர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு, கலெக்டர் அறிவுறுத்தினார்.

    அதன்பேரில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட மர்மநபர் யார்? எத்தனை பேருக்கு இது போன்ற தகவல் அனுப்பி உள்ளார் ? யாரிடமாவது மோசடியாக பணம் பெற்றுள்ளாரா ? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் தனது புகைப்படத்தை மர்மநபர் ஒருவர் மோசடியாக வாட்ஸ்அப்பில் பயன்படுத்தி அதன்மூலம் பணம் கேட்டு பலருக்கு தகவல்கள் அனுப்பி வருவதாக தெரிகிறது.

    இதனால் யாரும் ஏமாற வேண்டாம். அது போன்ற தகவல்கள் வந்தால் உடனடியாக சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யுங்கள் என கலெக்டர் செந்தில்ராஜ் கூறி உள்ளார்.

    Next Story
    ×