search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "crackers"

    • நெல்லையில் பட்டாசு விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது.
    • சிவகாசிக்கு வியாபாரிகள் நேரடியாக சென்று பட்டாசுகளை வாங்கி வந்துள்ளனர்.

    நெல்லை:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் நெல்லையில் பட்டாசு விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது.

    தற்காலிக கடைகள்

    கடந்த 2 வாரங்களாக தமிழகத்தின் பட்டாசு நகரம் என்று அழைக்கப்படும் சிவகாசிக்கு மொத்த வியாபாரிகள் நேரடியாக சென்று பட்டாசுகளை வாங்கி நெல்லைக்கு கொண்டு வந்துள்ளனர்.

    அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தற்காலிக கடைகளை அமைத்து தங்களது விற்பனையை தொடங்கியுள்ளனர்.

    புதுப்புது ரகங்கள்

    நவீன காலத்தில் நாம் உடுத்தும் உடைகளில் புதுமை இருப்பதைப்போல பட்டாசுகளிலும் இந்த ஆண்டு புதுப்புது ரகங்கள் பல்வேறு விலைகளில் கடைகளுக்கு விற்பனைக்கு வந்துள்ளன.

    வழக்கமாக மத்தாப்பு, தரைச்சக்கரம், சாட்டை வகைகள், பூச்சட்டி, பல வண்ணக் கலா் பென்சில், பேன்சி பட்டாசுகள், 28 வாலா முதல் 3,000 வாலா சரவெடிகள், புல்லட், ராக்கெட்டுகள், சில்வா் பாம், ஆட்டோ பாம், குருவி வெடி, லட்சுமி வெடி, டபுள் ஷாட், டிரிபிள் ஷாட் உள்ளிட்டவையும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

    விறுவிறுப்பான விற்பனை

    மேலும் பம்பரம் வெடி, ஒரே பூச்சட்டியில் 5 நிறங்கள் வரும் பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன. நெல்லை மாநகரில் டவுன் பகுதியில் தொடங்கி பெரும்பாலான இடங்களில் சாலையோர கடைகளும் போடப்பட்டுள்ளன.

    வண்ணார்பேட்டை, சந்திப்பு, பாளை, சமாதான புரம் பகுதி மற்றும் பெருமாள் புரம் பகுதிகளிலும் தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரிகள் பட்டாசு விற்பனையை தொடங்கியுள்ளனர்.

    இன்னும் 2 நாட்களே உள்ளதாலும், மழைக்கு வாய்ப்புள்ளதாலும் இன்று முதலே பொதுமக்கள் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது.

    விலை சற்று உயர்வு

    கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு பெரும்பாலான பட்டாசுகளின் விலை 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகவும், ஆனாலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் அதிக அளவில் வாங்கி செல்வதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து டவுன் பகுதியை சேர்ந்த பட்டாசு வியாபாரி ஒருவா் கூறியதாவது:-

    காகிதம், அலுமினிய பவுடா் போன்ற மூலப் பொருள்கள் விலையேற்றம், போக்குவரத்து செலவு அதிகரிப்பு ஆகியவற்றால் பட்டாசுகளின் விலை கணிசமாக உயா்ந்துள்ளது.

    குழந்தைகளை கவரும் புதுரகங்கள்

    பட்டாசு ரகங்களில் பாக்ஸ்கள் அதிகம் விற்பனையாகின்றன. ரூ. 250, 350, 500, 1,000, 1,500 என பல்வேறு விலைகளில் பாக்ஸ்கள் உள்ளன. பல வண்ண ஒளிதரும் பட்டாசுகளை மக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனா்.

    வானில் பல்வேறு வண்ணங்களில் வெடித்து சிதறும் புதிய ரக வானவெடி தொகுப்புகள் ரூ. 1,000 முதல் ரூ. 15,000 வரையிலான விலைகளில் கிடைக்கின்றன. 10 முதல் 30 நிமிடங்கள் வரை தொடா்ச்சியாக ஒளி தரும் பட்டாசுகளை இளம் வயதினர் விரும்பி வாங்கிச் செல்கின்றனா். குழந்தைகளை கவரும் பட்டாசுகளுக்கே ஆண்டு தோறும் தயாரிப்பு ஆலைகள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன‌.

    குழந்தைகளை கவரும் வகையில் சோட்டா பீம், காளியா, பென்-10 உள்ளிட்ட புதிய காா்ட்டூன் கதாபாத்திரங்கள், சூப்பா்மேன் போன்ற பழைய காா்ட்டூன் கதாபாத்திரங்களின் பெயா்களிலும், பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன.

    ஆண்டுக்கு அதிகபட்சம் ஒரு வாரம் வரை மட்டுமே இந்த வியாபாரம் இருக்கும். இதற்காக லட்சக்கணக்கான பட்டாசு தொழிலாளர்கள் உழைக்கின்றனர். ஆனால் காற்று மாசுபடுகிறது என்று கூறி அரசு பட்டாசு வெடிக்கும் நேரத்தை ஒவ்வொரு ஆண்டும் குறைத்துக் கொண்டே வருகிறது.

    இதனால் பட்டாசு தொழிலை நம்பி உள்ள லட்சக்கணக்கான குடும்பத்தினர் வாழ்வா தாரம் இழக்கக்கூடிய சூழ்நிலை உள்ளது. எனவே அரசு பட்டாசு தொழிலுக்கும், பட்டாசு தொழிலாளர்களுக்கும் வாழ்வாதாரத்துக்கு ஏதேனும் வழிவகை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • ஒளியை ஏற்றுங்கள் பட்டாசுகளை அல்ல.. என்ற பொது விழிப்புணர்வு பிரச்சாரம் அக்டோபர் 21 அன்று தொடங்கப்படும்.
    • டெல்லி அரசு வரும் வெள்ளிக்கிழமை கனாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பூங்காவில் 51,000 தீபங்கள் ஏற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக காற்றின் தரம் அபாய அளவை தாண்டி மிக மோசமான நிலையில் உள்ளது.

    டெல்லி தேசிய தலைநகர பிராந்தியத்தில் (டெல்லி என்சிஆர்) காற்று மாசை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பட்டாசு புகையால் காற்றின் தரம் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அபாயகரமான நிலைக்கு செல்லும் என கூறப்படுகிறது. இதனால், டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கும், விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் டெல்லி தேசிய தலைநகர பிராந்தியத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடித்தால் 6 மாதம் வரை சிறைத் தண்டனையும் ரூ.200 அபராதமும் விதிக்கப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது:-

    தலைநகரில் பட்டாசு தயாரித்தல், பதுக்கி வைத்தல் மற்றும் விற்பனை செய்தால் வெடிபொருள் சட்டத்தின் 9பி பிரிவின் கீழ், 5,000 ரூபாய் வரை அபராதமும், 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.

    கடந்த 2 ஆண்டுகளாக கடைபிடித்து வரும் தீபாவளி உள்ளிட்ட அனைத்து பண்டிகைகளிலும் பட்டாசுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு ஜனவரி 1-ஆம் தேதி வரை முழுமையான தடை உத்தரவை கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் விதிக்கப்பட்டது.

    ஒளியை ஏற்றுங்கள் பட்டாசுகளை அல்ல.. என்ற பொது விழிப்புணர்வு பிரச்சாரம் அக்டோபர் 21ம் தேதி அன்று தொடங்கப்படும். அதன்படி, டெல்லி அரசு வரும் வெள்ளிக்கிழமை கனாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பூங்காவில் 51,000 தீபங்கள் ஏற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

    டெல்லியில் பட்டாசுகளை வாங்குவதற்கும், வெடிப்பதற்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் 200 ரூபாய் அபராதம் மற்றும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

    தடையை அமல்படுத்த 408 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ல்லி காவல்துறை உதவி ஆணையர்களின் கீழ் 210 குழுக்களையும், வருவாய்த் துறை 165 குழுக்களையும், டெல்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு 33 குழுக்களையும் அமைத்துள்ளோம்.

    அக்டோபர் 16-ம் தேதி வரை 188 விதிமீறல் வழக்குகள் கண்டறியப்பட்டு, 2,917 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    • பட்டாசு கொளுத்தும் போது ஒரு வாளியில் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும்.
    • தீ புண்ணுக்கு குளிர்ந்த நீர் அல்லது சாதாரண நீரை மட்டுமே ஊற்ற வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் பாதுகாப்பான முறையில் தீபாவளியை கொண்டாடுவது குறித்து தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

    வெடிகளை திறந்த வெளியில் வைத்து வெடிக்க வேண்டும்.

    நீண்ட ஊதுபத்திகளை கொண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசு கொளுத்தும் போது ஒரு வாளியில் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும்.

    தீ புண்ணுக்கு குளிர்ந்த நீர் அல்லது சாதாரண நீரை மட்டுமே ஊற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் நிலைய அலுவலர் (போக்குவரத்து) ராமச்சந்திரன் தலைமையில் வழங்கப்பட்டு பிரச்சாரம் நடைபெற்றது.

    தீயணைப்பு வீரர்கள் நீலகண்டன், வெங்கடேசன், ஆகாஷ் கண்ணன், நிரஞ்சன், விமல் ராஜ், வினோத் ஆகியோர் பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவில், புதிய பஸ் நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.

    • அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும்.
    • பட்டாசு வெடித்தும், பொதுமக்கள், வியாபாரிகள், பஸ் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.

    சீர்காழி:

    அதிமுக இடைக்கால பொதுசெயலாளராக எடப்பாடி.பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்று சீர்காழி அடுத்த கொள்ளிடத்தில் அ.தி.மு.க. சார்பில் கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் கே.எம்.நற்குணன் தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.

    மேற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ சக்தி, மீனவரணி செயலாளர் நாகரத்தினம், மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய துணை செயலாளர் பாலதண்டாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து பட்டாசு வெடித்து பொதுமக்கள், வியாபாரிகள், பேருந்து பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் அ.தி.மு.க பொறுப்பாளர்கள் கருணாகரன், பாஸ்கரன், சொக்கலிங்கம், பூவராகன் பங்கேற்றனர்.

    • நீதிமன்ற தீர்ப்பினை வரவேற்று அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
    • கொள்ளிடத்தில் ஒன்றிய செயலாளர் நற்குணன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

    சீர்காழி:

    சென்னையில் உள்ள அ.தி.மு.க தலைமை கழக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலினை அகற்றி சாவியை எடப்பாடி.பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த தீர்ப்பினை வரவேற்று சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரே அ.தி.மு.க நகர செயலாளர் எல்.வி.ஆர்.வினோத் தலைமையில், மேற்கு ஒன்றிய செயலாளர் ஆதமங்கலம்.ரவிச்சந்திரன் முன்னிலையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.இதில் ஜெயலலிதா பேரவை செயலாளர் ஏவி.மணி, முன்னாள் நகர செயலாளர் பக்கிரிசாமி, வழக்குரைஞர் மணிவண்ணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணை செயலாளர் சத்தியமூர்த்தி, நிர்வாகிகள் சுரேஷ், தெட்சிணா மூர்த்தி, செந்தில், லெனின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் கொள்ளிடத்தில் ஒன்றிய செயலாளர் கே.எம்.நற்குணன் தலைமையில் பட்டாசு வெடித்துஇனிப்பு கள் வழங்கி கொண்டாடப்பட்டது.

    பட்டாசு ஆலைகளை திறக்கக்கோரி இன்று சிவகாசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. #FireCrackers
    சிவகாசி:

    இந்தியாவின் 80 சதவீத பட்டாசு தேவையை சிவகாசி பட்டாசு ஆலைகள் பூர்த்தி செய்து வருகிறது. பட்டாசு உற்பத்தி மையமாக விளங்கும் இங்கு 800-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள், தீப்பெட்டி ஆலைகள் இயங்கி வருகின்றன.

    இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    கடந்த சில ஆண்டுகளாக சுற்றுச்சூழல் மாசு அடைவதாக கூறி பட்டாசு உற்பத்திக்கு தொடர்ந்து கடுமையான தட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையன்று குறிப்பிட்ட நேரத்தில் தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதன் காரணமாக பட்டாசு விற்பனை பெருமளவில் சரிந்தது. மேலும் பசுமை பட்டாசுகளை தயாரிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் பட்டாசு தொழிலை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

    உச்சநீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும், பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி சிவகாசியில் கடந்த ஒரு மாதமாக பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.


    இதன்காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடந்தது. அதுவும் தோல்வியில் தான் முடிந்தது.

    பட்டாசு ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம், தொழிலாளர்கள் சங்கம், அச்சக உரிமையாளர்கள் சங்கம், சிறுவணிகர்கள் சங்கம் என அனைத்து தரப்பினரும் இன்று (21-ந்தேதி) கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்து இருந்தனர்.

    அதன்படி இன்று சிவகாசி மற்றும் திருத்தங்கல், வெம்பக்கோட்டை, தாயில் பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. சிவகாசியின் முக்கிய வீதிகள் வெறிச்சோடியது.

    மார்க்கெட், பஸ் நிலையம் மற்றும் முக்கிய இடங்களில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    கடையடைப்பு போராட்டம் காரணமாக சிவகாசி, திருத்தங்கல், வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. #FireCrackers
    தமிழகத்தில் பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தியும், பட்டாசு தொழில்களுக்கான தடைகளை நீக்கக்கோரியும் வருகிற 26-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெறுகிறது.
    சிவகாசி:

    தமிழ்நாடு பட்டாசு வியாபாரிகள் கூட்டமைப்பின் மாநிலத்தலைவர் ராஜாசந்திரசேகரன், பொதுச்செயலாளர் இளங்கோவன், பொருளாளர் கந்தசாமிராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட்டு நேரக் கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும் சரவெடி தயாரிக்கவும், பேரியம் பச்சை உப்புகள் பயன்படுத்தவும் தடை விதித்தது.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவால் 1070 பட்டாசு தொழிற் சாலைகளில் பணியாற்றும் 8 லட்சம் தொழிலாளர்கள் கடந்த 12-ந்தேதி முதல் வேலையில்லாமல் பரிதவித்து வருகின்றனர்.

    பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்ததின் காரணமாக பட்டாசு விலையும் 40 சதவீதம் குறைந்து வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தியும், பட்டாசு தொழில்களுக்கான தடைகளை நீக்கக்கோரியும் வருகிற 26-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெறுகிறது.

    இதில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பட்டாசு வியாபாரிகள் கடையடைப்பு செய்து போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

    போராட்டத்தின் முடிவில் கோரிக்கையை வலியுறுத்தி முதல்-அமைச்சரிடம் மனு கொடுக்கப்படும்.

    மேற்கண்டவாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    காலவரையின்றி மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகள் தொடர்பாக உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றி தொழிலாளர்களுக்கு உரிய தீர்வை தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும் என்று தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். #TTVDhinakaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள், சுப்ரீம் கோர்ட் விதித்த கடுமையான நிபந்தனைகளின் எதிரொலியாக காலவரையின்றி மூடப்படுவதாக அறிவித்துள்ளது. இதனால், சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ள அவலம் மிகுந்த வேதனை அளிக்கக்கூடிய செய்தி.

    குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசி நகரம் முடங்கியே போகும் நிலை ஏற்பட்டுள்ளது. பட்டாசு வெடிக்கவும், விற்பனை செய்யவும் தடை இல்லை எனக் கூறிவிட்டு, பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதால் அவற்றை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லாதது என்று பட்டாசு ஆலைகளின் கூட்டமைப்பான டான்பாமா தெரிவித்து உள்ளது.

    மாண்புமிகு அம்மா அவர்களின் மறைவுக்குப் பின்னர், தமிழகம் தொடர்பான அனைத்து வழக்குகளிலும், மாநில நலன் கருதி உரிய வாதங்களை பழனிசாமி அரசு முன்னெடுக்காததால் பெரும் பாதிப்பை தமிழகம் தொடர்ந்து சந்தித்து வருகிறது.

    மக்கள் விரும்பாத திட்டங்களை முன்னெடுப்பதில் பழனிசாமி  அரசுக்கு இருக்கும் அதீத அக்கறை, மக்கள் நலன் சார்ந்த முடிவுகளை நடைமுறைப்படுத்துவதில் இல்லாதது தொடர்ந்து வெளிப்பட்டு வருகிறது.


    தற்போது கூட சுற்றுச்சூழல் விதியிலிருந்து பட்டாசுகளுக்கு விலக்கு அளித்தாலே, இத்தொழில் காப்பாற்றப்படும் என்ற நிலை இருக்கின்றபொழுது, டெல்லியிடம் இணக்கமாக இருக்கும் பழனிசாமி  அரசு பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கின்ற வகையில் உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க முயன்றிருக்கலாம்.

    தமிழக கலாச்சார அடையாளங்களில் ஒன்றாகவும், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாகவும் திகழும் பட்டாசு தொழிலை பாதுகாக்க உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றி அவர்களுக்கான உரிய தீர்வை பெற்றுத்தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.   #TTVDhinakaran
    தீபாவளிக்கு சென்னையில் நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 2190 பேரிடம் அபராதம் வசூலிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    சென்னை:

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால் பொதுமக்கள் இதனை கண்டு கொள்ளாமல் விரும்பிய நேரங்களில் எல்லாம் பட்டாசு வெடித்தனர்.

    இது தொடர்பாக தமிழகம் முழுவதும் 2190 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இவர்கள் அனைவரும் கண்டிப்பாக கோர்ட்டில் அபராதம் செலுத்த வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர். விதிமுறைகளை மீறிய அனைவர் மீதும் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இதன்படி பட்டாசு வழக்கில் சிக்கிய அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    சென்னையில் நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக ஏற்கனவே 343 பேர் பிடிபட்டுள்ளனர். அவர்கள் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் மேலும் 15 பேர் பட்டாசு வெடித்த குற்றத்துக்காக போலீசில் சிக்கியுள்ளனர். #tamilnews
    வேலூர்- திருவண்ணாமலை மாவட்டத்தில் கோர்ட்டு தீர்ப்பை மீறி அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    வேலூர் மாநகர பகுதியில் ஒதுக்கப்பட்ட நேரத்தை விட மற்ற நேரத்தில் பட்டாசு வெடித்த 14 பேர் மீதும், காட்பாடி-4, ராணிப்பேட்டை-6, அரக்கோணம்-2, குடியாத்தம்-4, ஆம்பூர்-6, வாணியம்பாடி-7, திருப்பத்தூர் 7 பேர் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 50 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் அனுமதிக்கப்படாத நேரத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்தததாக 93 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதில் ஒரு சிலர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். #tamilnews
    உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி தீபாவளி நாளில் பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். #MDMK #Vaiko
    ஈரோடு:

    ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று ஈரோட்டுக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    பட்டாசு வெடிக்க இரண்டு மணிநேரம் மட்டும் என்று நேரம் கொடுத்துள்ளனர். அதாவது நாம் காலம் காலமாக வந்து நாள் முழுக்க காலை முதல் மாலை வரை பட்டாசு வெடித்து வருகிறோம். சிறுவர்கள், இளைஞர்கள் ஆர்வம் மிகுதியால் சில இடங்களில் பட்டாசு போட்டிருக்கலாம். அவர்களை எச்சரித்து இதுபோன்று செய்யக்கூடாது என்று சொல்லிவிட்டு விட்டு இருக்கலாம்.

    அதை விட்டுவிட்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்வது தவறானது. 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் விருப்பமில்லாமலேயே இருக்கிறார். ஏற்கனவே நீதிமன்றம் விடுதலை செய்யலாம் என்று பச்சைக் கொடி காட்டி விட்டது.

    அதுபோன்ற தமிழ்நாடு அமைச்சர் அவையும் தீர்மானம் போட்டு அனுப்பி விட்டது. அரசியல் சட்டத்தின் 161 வது பிரிவின்படி அவர்களை விடுதலை செய்ய வேண்டியது ஆளுநரின் மனிதாபிமான கடமையாகும். அவர்கள் கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகள் தங்கள் வாழ்க்கையை சிறையில் கழித்து விட்டனர்.

    அதனால் ஆளுநர் மனிதாபிமான அடிப்படையில் அவர்களை விடுதலை செய்யலாம். ஆனால் ஆளுநர் உச்சநீதிமன்றத்தில் இன்னொரு தரப்பினர் வழக்கு போட்டு உள்ளனர் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.


    முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அவர்கள் அணையை உடைக்க வேண்டும் எண்ணத்திலேயே செயல்பட்டு வருகின்றன. இரண்டு கமிட்டிகள் ஆய்வு செய்து அதை மிக வலுவாக இருக்கிறது என்று சொல்லிவிட்டது.

    ஆயிரம் ஆண்டுகளானாலும் பாதிப்பு இல்லை என்றும் கூறி விட்டது. உச்சநீதிமன்றம் அமைத்த நீதிபதி ஆனந்த் தலைமையிலான கமிட்டி குழுவில் கேரளா சார்பில் நீதிபதி தாமஸ் தமிழ்நாடு சார்பில் நீதிபதி லட்சுமணன் அடங்கிய கமிட்டி மிகத் தெளிவான அறிக்கை கொடுத்துள்ளது. இன்னொரு அணை கட்டுவதற்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கூறிவிட்டது. ஆனாலும் கேரள அரசு வழக்கு போட்டுள்ளது. இந்த விசயத்தில் மத்திய அரசு துரோகம் செய்துள்ளது.

    மத்திய அரசு தொடர்ந்து தமிழக பிரச்சனையில் தலையிட்டு வருகிறது. மீத்தேன் ஹைட்ரோ கார்பன் போன்ற எல்லா பிரச்சனைகளும் அனைத்தும் அரசுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. சிறுமிகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களுக்கு இப்போது உள்ள சட்டங்களை வைத்து கடுமையான நடவடிக்கை எடுக்கலாம்.

    இவ்வாறு வைகோ கூறினார். #MDMK #Vaiko
    ஈரோடு மாவட்டங்களில் கோர்ட்டு அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 18 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    ஈரோடு:

    இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு நீதிமன்றம், மற்றும் அரசு சார்பில் பல்வேறு கட்டுபாட்டுகளை விதித்திருந்தது.

    தொடர்ச்சியாக வெடிக்க கூடிய வெடிகள், அதிக புகை வரும் வெடிகளை வெடிக்க கூடாது என்று அரசு அறிவித்தது. அதே போன்று நீதிமன்றம் பட்டாசு வெடிக்கும் நேரத்தை 2 மணி நேரமாக குறைந்தது.

    இதையடுத்து தமிழக அரசு பட்டாசு வெடிக்கும் நேரத்தை காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை வெடிக்க வேண்டும் என்று அறிவித்திருந்தது.

    நீதிமன்ற உத்தரவை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். மீறி பட்டாசு வெடித்தால் 6 மாத சிறை தண்டனை என்றும் அறிவித்தது.

    ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவுபடி அந்தந்த எல்லைக்குட்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கொண்ட குழுவினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அனுமதி அளித்த நேரத்தை தாண்டி நீதிமன்ற தடையை மீறி பட்டாசு வெடித்ததாக நேற்று தீபாவளி அன்று ஈரோடு மாவட்டம் முழுவதும் 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கோயில் நேற்று இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தடையை மீறி பட்டாசு வெடித்த கோபியை சேர்ந்த தேவராஜ்(வயது25), குமரேசன்(19), நல்லகவுண் டன் பாளையத்தை சேர்ந்த தீரன்(21), சிவகுமார்(22), முருகேசன்(24), மொடச்சூரை சேர்ந்த (பாலு22) ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    இதே போன்று கவுந்தப்பாடி, சத்தியமங்கலம், பங்களாபுதூர், புளியம்பட்டி, பெருந்துறை, சித்தோடு, பவானி, கருங்கல்பாளையம், சூரம்பட்டி ஆகிய பகுதியில் தடையை மீறி பட்டாசு வெடித்ததாக ஒரு வரும், வீரப்பன்சத்திரத்தில் 3 பேரும் என மாவட்டம் முழுவதும் 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. #tamilnews
    ×