என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோடு மாவட்டத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்த 18 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்7 Nov 2018 10:39 AM GMT (Updated: 7 Nov 2018 10:39 AM GMT)
ஈரோடு மாவட்டங்களில் கோர்ட்டு அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 18 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ஈரோடு:
இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு நீதிமன்றம், மற்றும் அரசு சார்பில் பல்வேறு கட்டுபாட்டுகளை விதித்திருந்தது.
தொடர்ச்சியாக வெடிக்க கூடிய வெடிகள், அதிக புகை வரும் வெடிகளை வெடிக்க கூடாது என்று அரசு அறிவித்தது. அதே போன்று நீதிமன்றம் பட்டாசு வெடிக்கும் நேரத்தை 2 மணி நேரமாக குறைந்தது.
இதையடுத்து தமிழக அரசு பட்டாசு வெடிக்கும் நேரத்தை காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை வெடிக்க வேண்டும் என்று அறிவித்திருந்தது.
நீதிமன்ற உத்தரவை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். மீறி பட்டாசு வெடித்தால் 6 மாத சிறை தண்டனை என்றும் அறிவித்தது.
ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவுபடி அந்தந்த எல்லைக்குட்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கொண்ட குழுவினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அனுமதி அளித்த நேரத்தை தாண்டி நீதிமன்ற தடையை மீறி பட்டாசு வெடித்ததாக நேற்று தீபாவளி அன்று ஈரோடு மாவட்டம் முழுவதும் 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோயில் நேற்று இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தடையை மீறி பட்டாசு வெடித்த கோபியை சேர்ந்த தேவராஜ்(வயது25), குமரேசன்(19), நல்லகவுண் டன் பாளையத்தை சேர்ந்த தீரன்(21), சிவகுமார்(22), முருகேசன்(24), மொடச்சூரை சேர்ந்த (பாலு22) ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இதே போன்று கவுந்தப்பாடி, சத்தியமங்கலம், பங்களாபுதூர், புளியம்பட்டி, பெருந்துறை, சித்தோடு, பவானி, கருங்கல்பாளையம், சூரம்பட்டி ஆகிய பகுதியில் தடையை மீறி பட்டாசு வெடித்ததாக ஒரு வரும், வீரப்பன்சத்திரத்தில் 3 பேரும் என மாவட்டம் முழுவதும் 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. #tamilnews
இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு நீதிமன்றம், மற்றும் அரசு சார்பில் பல்வேறு கட்டுபாட்டுகளை விதித்திருந்தது.
தொடர்ச்சியாக வெடிக்க கூடிய வெடிகள், அதிக புகை வரும் வெடிகளை வெடிக்க கூடாது என்று அரசு அறிவித்தது. அதே போன்று நீதிமன்றம் பட்டாசு வெடிக்கும் நேரத்தை 2 மணி நேரமாக குறைந்தது.
இதையடுத்து தமிழக அரசு பட்டாசு வெடிக்கும் நேரத்தை காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை வெடிக்க வேண்டும் என்று அறிவித்திருந்தது.
நீதிமன்ற உத்தரவை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். மீறி பட்டாசு வெடித்தால் 6 மாத சிறை தண்டனை என்றும் அறிவித்தது.
ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவுபடி அந்தந்த எல்லைக்குட்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கொண்ட குழுவினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அனுமதி அளித்த நேரத்தை தாண்டி நீதிமன்ற தடையை மீறி பட்டாசு வெடித்ததாக நேற்று தீபாவளி அன்று ஈரோடு மாவட்டம் முழுவதும் 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோயில் நேற்று இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தடையை மீறி பட்டாசு வெடித்த கோபியை சேர்ந்த தேவராஜ்(வயது25), குமரேசன்(19), நல்லகவுண் டன் பாளையத்தை சேர்ந்த தீரன்(21), சிவகுமார்(22), முருகேசன்(24), மொடச்சூரை சேர்ந்த (பாலு22) ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இதே போன்று கவுந்தப்பாடி, சத்தியமங்கலம், பங்களாபுதூர், புளியம்பட்டி, பெருந்துறை, சித்தோடு, பவானி, கருங்கல்பாளையம், சூரம்பட்டி ஆகிய பகுதியில் தடையை மீறி பட்டாசு வெடித்ததாக ஒரு வரும், வீரப்பன்சத்திரத்தில் 3 பேரும் என மாவட்டம் முழுவதும் 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X