search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "crackers sold"

    தமிழகத்தில் பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தியும், பட்டாசு தொழில்களுக்கான தடைகளை நீக்கக்கோரியும் வருகிற 26-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெறுகிறது.
    சிவகாசி:

    தமிழ்நாடு பட்டாசு வியாபாரிகள் கூட்டமைப்பின் மாநிலத்தலைவர் ராஜாசந்திரசேகரன், பொதுச்செயலாளர் இளங்கோவன், பொருளாளர் கந்தசாமிராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட்டு நேரக் கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும் சரவெடி தயாரிக்கவும், பேரியம் பச்சை உப்புகள் பயன்படுத்தவும் தடை விதித்தது.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவால் 1070 பட்டாசு தொழிற் சாலைகளில் பணியாற்றும் 8 லட்சம் தொழிலாளர்கள் கடந்த 12-ந்தேதி முதல் வேலையில்லாமல் பரிதவித்து வருகின்றனர்.

    பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்ததின் காரணமாக பட்டாசு விலையும் 40 சதவீதம் குறைந்து வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தியும், பட்டாசு தொழில்களுக்கான தடைகளை நீக்கக்கோரியும் வருகிற 26-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெறுகிறது.

    இதில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பட்டாசு வியாபாரிகள் கடையடைப்பு செய்து போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

    போராட்டத்தின் முடிவில் கோரிக்கையை வலியுறுத்தி முதல்-அமைச்சரிடம் மனு கொடுக்கப்படும்.

    மேற்கண்டவாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    ×