என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » crackers sold
நீங்கள் தேடியது "crackers sold"
தமிழகத்தில் பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தியும், பட்டாசு தொழில்களுக்கான தடைகளை நீக்கக்கோரியும் வருகிற 26-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெறுகிறது.
சிவகாசி:
தமிழ்நாடு பட்டாசு வியாபாரிகள் கூட்டமைப்பின் மாநிலத்தலைவர் ராஜாசந்திரசேகரன், பொதுச்செயலாளர் இளங்கோவன், பொருளாளர் கந்தசாமிராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட்டு நேரக் கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும் சரவெடி தயாரிக்கவும், பேரியம் பச்சை உப்புகள் பயன்படுத்தவும் தடை விதித்தது.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவால் 1070 பட்டாசு தொழிற் சாலைகளில் பணியாற்றும் 8 லட்சம் தொழிலாளர்கள் கடந்த 12-ந்தேதி முதல் வேலையில்லாமல் பரிதவித்து வருகின்றனர்.
பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்ததின் காரணமாக பட்டாசு விலையும் 40 சதவீதம் குறைந்து வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தியும், பட்டாசு தொழில்களுக்கான தடைகளை நீக்கக்கோரியும் வருகிற 26-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெறுகிறது.
இதில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பட்டாசு வியாபாரிகள் கடையடைப்பு செய்து போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
போராட்டத்தின் முடிவில் கோரிக்கையை வலியுறுத்தி முதல்-அமைச்சரிடம் மனு கொடுக்கப்படும்.
மேற்கண்டவாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பட்டாசு வியாபாரிகள் கூட்டமைப்பின் மாநிலத்தலைவர் ராஜாசந்திரசேகரன், பொதுச்செயலாளர் இளங்கோவன், பொருளாளர் கந்தசாமிராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட்டு நேரக் கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும் சரவெடி தயாரிக்கவும், பேரியம் பச்சை உப்புகள் பயன்படுத்தவும் தடை விதித்தது.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவால் 1070 பட்டாசு தொழிற் சாலைகளில் பணியாற்றும் 8 லட்சம் தொழிலாளர்கள் கடந்த 12-ந்தேதி முதல் வேலையில்லாமல் பரிதவித்து வருகின்றனர்.
பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்ததின் காரணமாக பட்டாசு விலையும் 40 சதவீதம் குறைந்து வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தியும், பட்டாசு தொழில்களுக்கான தடைகளை நீக்கக்கோரியும் வருகிற 26-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெறுகிறது.
இதில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பட்டாசு வியாபாரிகள் கடையடைப்பு செய்து போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
போராட்டத்தின் முடிவில் கோரிக்கையை வலியுறுத்தி முதல்-அமைச்சரிடம் மனு கொடுக்கப்படும்.
மேற்கண்டவாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X