search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "merchant struggle"

    • சேரன்மகாதேவி பதிவு மாவட்டம் முக்கூடல் சார்பதிவாளர் அலுவலகம் சுமார் 40 ஆண்டுகளாக முக்கூடல் கீழவீதியில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
    • பாப்பாகுடி யூனியன் கவுன்சிலர்கள் கூட்டத்தில் ஏகமனதாக சார்பதிவாளர் அலுவலகம் கட்டுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதுவும் தற்போது முடியாத நிலையில் உள்ளது.

    முக்கூடல்:

    நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பதிவு மாவட்டம் முக்கூடல் சார்பதிவாளர் அலுவலகம் சுமார் 40 ஆண்டுகளாக முக்கூடல் கீழவீதியில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

    கடந்த சில ஆண்டுகளாக முக்கூடல் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு கட்டிடம் கட்டுவதற்கு அப்பகுதி மக்கள் பல போராட்டங்கள், சமாதான கூட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்டவை நடத்தினர்.

    பாப்பாகுடி யூனியன் கவுன்சிலர்கள் கூட்டத்தில் ஏகமனதாக சார்பதிவாளர் அலுவலகம் கட்டுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதுவும் தற்போது முடியாத நிலையில் உள்ளது.

    சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கு அரசு மற்றும் தனியார் இடங்களை பார்வையிட்டும் அதனையும் விரைவாக தேர்வு செய்யாமல் அதிகாரிகள் இழுத்து அடிப்பதாக அப்பகுதி மக்கள் புகார் கூறி வருகின்றனர்.

    இதனால் முக்கூடல் வட்டார பொதுமக்கள் நலன் கருதி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முக்கூடல் நகர வியாபாரிகள் சங்கம் சார்பில் அகிம்சை வழியில் இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் முக்கூடலில் உள்ள கீழ பெரிய வீதி, மேல பெரிய வீதி உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    வேதாரண்யம் அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா கரியாப்பட்டினத்தில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கரியாப்பட்டினத்தில் 7-வது நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

    டெல்டா மாவட்டமான திருவாரூர் மாவட்டம் திருகாரவாசல் முதல் நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் வரை ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஏல அறிவிப்பு செய்துள்ளது.

    இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் விளைநிலங்கள் மற்றும் தண்ணீர் பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கரியாப்பட்டினம் அரசு மருத்துவமனை சாலையில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு குழுவினர் மற்றும் கரியாப்பட்டினம், செட்டிப்புலம், வடமலை மணக்காடு, தென்னம்புலம், மருதூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமமக்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து 7-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வேதாரண்யம் தாலுக்கா முழுவதும் இன்று 1000க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வர்த்தகர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழகத்தில் பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தியும், பட்டாசு தொழில்களுக்கான தடைகளை நீக்கக்கோரியும் வருகிற 26-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெறுகிறது.
    சிவகாசி:

    தமிழ்நாடு பட்டாசு வியாபாரிகள் கூட்டமைப்பின் மாநிலத்தலைவர் ராஜாசந்திரசேகரன், பொதுச்செயலாளர் இளங்கோவன், பொருளாளர் கந்தசாமிராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட்டு நேரக் கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும் சரவெடி தயாரிக்கவும், பேரியம் பச்சை உப்புகள் பயன்படுத்தவும் தடை விதித்தது.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவால் 1070 பட்டாசு தொழிற் சாலைகளில் பணியாற்றும் 8 லட்சம் தொழிலாளர்கள் கடந்த 12-ந்தேதி முதல் வேலையில்லாமல் பரிதவித்து வருகின்றனர்.

    பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்ததின் காரணமாக பட்டாசு விலையும் 40 சதவீதம் குறைந்து வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தியும், பட்டாசு தொழில்களுக்கான தடைகளை நீக்கக்கோரியும் வருகிற 26-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெறுகிறது.

    இதில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பட்டாசு வியாபாரிகள் கடையடைப்பு செய்து போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

    போராட்டத்தின் முடிவில் கோரிக்கையை வலியுறுத்தி முதல்-அமைச்சரிடம் மனு கொடுக்கப்படும்.

    மேற்கண்டவாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    ×