search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யம் அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
    X

    வேதாரண்யம் அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

    வேதாரண்யம் அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா கரியாப்பட்டினத்தில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கரியாப்பட்டினத்தில் 7-வது நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

    டெல்டா மாவட்டமான திருவாரூர் மாவட்டம் திருகாரவாசல் முதல் நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் வரை ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஏல அறிவிப்பு செய்துள்ளது.

    இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் விளைநிலங்கள் மற்றும் தண்ணீர் பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கரியாப்பட்டினம் அரசு மருத்துவமனை சாலையில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு குழுவினர் மற்றும் கரியாப்பட்டினம், செட்டிப்புலம், வடமலை மணக்காடு, தென்னம்புலம், மருதூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமமக்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து 7-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வேதாரண்யம் தாலுக்கா முழுவதும் இன்று 1000க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வர்த்தகர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×