என் மலர்
நீங்கள் தேடியது "திருவண்ணாமலை"
- இன்ஜின் இல்லாத கார்தான் அதிமுக
- வரும் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிகம் வாய்ப்பு கொடுக்கவேண்டும்.
திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் மாநாடு இன்று நடைப்பெற்றது. அதில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
"மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நமக்கெல்லாம் ஒரு சவால் விடுத்துள்ளார். அடுத்த இலக்கு தமிழ்நாடுதான் என்று. நான் அமித்ஷாவிற்கும், அவரது அடிமைக் கூட்டத்திற்கும் ஒன்று சொல்கிறேன். நீங்கள் எவ்வளவு மிரட்டினாலும் அதை எதிர்கொள்வதற்கு எங்களது கருப்பு, சிவப்பு படை, இளைஞரணி படை களத்தில் இருக்கும். டெல்லியின் ஆதிக்கத்தை எதிர்க்கத்தான் நாங்கள் வருகிறோம் என்று சொல்லித்தான் கருப்பு, சிவப்பு கொடியை ஏற்றினார் அண்ணா. அன்றிலிருந்து தமிழ்நாட்டை காப்பதற்கான போர்வரிசையில் என்றுமே திமுக முன் நின்றுள்ளது. இந்த போர்களத்தில் எதிரிகள்தான் மாறியுள்ளனர். திமுக அப்படியேத்தான் இருக்கிறது.
ஏனெனில் முதலமைச்சர் சொன்னவாறு 'தமிழ்நாடு என்றுமே டெல்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல்தான்'. அப்படிப்பட்ட நம்மை பார்த்து தயாராக இருங்கள், தமிழ்நாட்டிற்கு வருகிறோம் என மிரட்டப் பார்க்கிறார்கள். ஆட்சி, அதிகாரத்திற்காக உருவாக்கப்பட்ட கட்சி அல்ல திமுக. தமிழ்நாட்டை காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது. மிசா என்ற நெறிபாட்டில் நீந்தி வந்த இயக்கம். உலக வரலாற்றிலேயே ஈடு, இணை இல்லாத மொழிப்போரை நடத்தி அதிலும் வெற்றிப் பெற்ற இயக்கம். தமிழ்மொழிக்காக தண்டவாளத்தில் தலை வைத்த இயக்கம் திராவிட இயக்கம். பல துரோகங்களை, அடக்குமுறைகளை வீழ்த்தியது. இப்படிப்பட்ட எங்களை குஜராத்தில் இருந்து மிரட்டி, அடிபணிய வைக்க நினைத்தால், நிச்சயம் அது உங்கள் கனவில் கூட நடக்காது. கடைசி உடன்பிறப்பு இருக்கும்வரையில் தமிழ்நாட்டை சங்கி கூட்டத்தால் தொட்டுக்கூட பார்க்கமுடியாது. வடமாநிலங்களில் நீங்கள் எளிதாக நுழைந்துவிடலாம். ஆனால் தமிழ்நாட்டில் நுழைந்துவிடலாம் என தப்பு கணக்கு போடூகிறீர்கள். ஏனெனில் தமிழ்நாட்டிற்கு என்று ஒரு தனித்துவம் உள்ளது.

நிகழ்ச்சியில்
பெரியார் எனும் கொள்கை நெருப்பு தமிழ்நாட்டை சுற்றிநின்று காப்பாற்றி கொண்டிருக்கிறது. 23 வயதிலேயே மிசா கொடுமையை கண்ட கட்சித் தலைவர் இன்று நம்மை வழிநடத்த இங்கு உள்ளார். பாஜக மதம்பிடித்து ஓடும் யானை என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.ஆனால் அந்த யானையை அடக்கக்கூடிய அங்குசம் இங்கு இருக்கக்கூடிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இது மோடிக்கும் தெரியும், அமித்ஷாவுக்கும் தெரியும். அதனால்தான் நேராக வந்தால் ஜெயிக்க முடியாது என, பழைய அடிமைகளையும், புது புதுசா புது அடிமைகளையும் அழைச்சிக்கிட்டு நம்மோடு மோத பார்க்கிறார்கள்.
இன்று சிபிஐ, அமலாக்கத்துறை, வருவாய் துறை, தேர்தல் ஆணையம் என எல்லோருடனும் கூட்டு வைத்து தமிழ்நாட்டில் நுழையப் பார்க்கிறது பாஜக. இப்படிப்பட்ட பாஜகவை நம்பிதான் எடப்பாடி பழனிசாமியும் தேர்தல் களத்திற்கு வந்துள்ளார். ஆனால் நாம் தொண்டர்களையும், தமிழ்நாட்டு மக்களையும் நம்பி களத்திற்கு வந்துள்ளோம். நாம் தொடர்ந்து மக்களோடு உள்ளோம். அவர்களும் தொடர்ந்து நம்முடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இருப்போம். 2026-ல் எடப்பாடியை முதலமைச்சராக்குவோம் என அடிமைகள் தீர்மானம் போட்டுள்ளனர். காரில் பேட்டரி போனால் தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்யலாம். காரில் இன்ஜினே இல்லை என்றால் எவ்வளவு தள்ளினாலும் ஸ்டார்ட் ஆகாது. இன்ஜின் இல்லாத கார்தான் அதிமுக. எடப்பாடி எதை எதையோ காப்பாற்ற வேண்டும் எனக்கூறுகிறார். முதலில் அவர் அதிமுகவை பாஜகவிடமிருந்து காப்பாற்ற வேண்டும்.
அதிமுகவிலிருந்து நிறைய பேர் வெளியேறுகிறார்கள். ஆனால் அவர், யார் வேண்டுமானாலும் போகலாம், யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் நான்தான் நிரந்தர பொதுச்செயலாளர் என சொல்கிறார். அது அவருக்கும் மட்டும் தேவை இல்லை. நமக்கும் அதுதான் தேவை என்பதை நீங்கள் உணரவேண்டும். அடிமையாய் இருந்து சுகமாய் வாழ்வதைவிட, சுயமரியாதையோடு சுதந்திரமாக வாழவேண்டும். பாசிச சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை காக்கும் சக்தி திமுகவிற்கும் மட்டும்தான் உண்டு என தமிழ்நாட்டு மக்கள் நம்புகின்றனர். வரும் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிகம் வாய்ப்பு கொடுக்கவேண்டும். யார் வேண்டுமானாலும் இடையில் வரட்டும், போகட்டும். அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை. வானவில்லை பார்க்க மக்கள் கூடுவார்கள். ஆனால் அது நிரந்தரம் கிடையாது. உதய சூரியன் மட்டும்தான் நிரந்தரம்." எனப் பேசினார்.
- தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கியது.
- நினைவுப்பரிசாக வழங்கப்பட்ட சிம்மாசனத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமர்ந்தார்.
திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவருக்கு நினைவுப்பரிசாக வழங்கப்பட்ட சிம்மாசனத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமர்ந்தார்.
பின்னர் அவர் மேடையில் உரையாற்றியதாவது:-
மாஸா, கெத்தா இணைஞரணி சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்துள்ள டிராவிடியன் ஸ்டாக் அனைவருக்கும் நன்றி.
நிகழ்ச்சிக்கு வந்துள்ள இஞைர்களை பார்த்ததும் 50 ஆண்டுகள் பின்னால் சென்றதபோல் உணர்கிறேன். நிகழ்ச்சிக்கு வந்துள்ள திமுக இளைஞர்களின் எனர்ஜி எனக்கு டிரான்பராகிவிட்டது.
50 ஆண்டுகளுக்கு முன்பு இளைஞராக இருந்தபோது திமுக இளைஞரணியை வளர்க்க தமிழகம் முழுவதும் பயணம் செய்தேன்.
கிராமம் கிராமமாக திண்ணை பிரசாரம் பொதுக்கூட்டம் என மக்களை வரவழைத்து திமுகவை வளர்த்தெடுத்தேன்.
திமுகவை பேரறிஞர் அண்ணா தொடங்கியபோது அவருக்கு வயது 40. உழைத்து, வளர்க்கப்பட்ட இயக்கத்திற்கு புது ரத்தம்போல இளைஞர்கள் வந்திருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இது கணக்கு காட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டம் இல்லை.
- திமுகவில் மட்டும்தான் உடன்பிறப்பே என அன்புடன் அழைக்கும் கூட்டம் இருக்கிறது
திருவண்ணாமலை மலப்பாம்பாடி பகுதியில் திமுக இளைஞரணி வடக்கு மண்டல மாநாடு இன்று(டிச. 14) நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் நிர்வாகிகளுக்கு மத்தியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
"இன்று பல கட்சிகளில் மாநாடு என்றால் இளைஞர்களை திரட்டுவது மிக கஷ்டம். ஆனால் திமுகவில் மட்டும்தான் இளைஞரணி நிர்வாகிகளையே மாநாடு போல இங்கு கூட்டியிருக்கிறோம். இந்தியாவில் வேறு எந்த இயக்கமும் செய்யாத சாதனையை நாம் செய்து காட்டியுள்ளோம். இது கணக்கு காட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டம் இல்லை. நம் எதிரிகளை சுக்குநூறாக்க கூட்டப்பட்ட கூட்டம், நம் இளைஞரணி கூட்டம், கொள்கை கூட்டம். இளைஞர்கள் அதிகம் கூடினால் அவர்களை கட்டுப்படுத்த முடியாது என்ற பிம்பம் தற்போது உருவாகி உள்ளது. ஆனால் நம் கட்சியினர் அப்படி கிடையாது. அவர்கள் மிகுந்த கட்டுப்பாடு மிக்கவர்கள் என்பதற்கு இங்கு கூடியுள்ள கூட்டம் சாட்சி.
கட்டுப்பாடு இல்லாமல் 1 லட்சம் இல்லை, 1 கோடி இளைஞர்கள் திரண்டாலும் அதனால் யாருக்கும் எந்த பயனும் கிடையாது. அப்படிப்பட்ட கட்டுப்பாடற்ற கூட்டத்தை வைத்துக்கொண்டு யாராலும், எதையும் சாதிக்க முடியாது. ஆனால் உங்களைப் போன்ற இந்த கொள்கை கூட்டம் கட்சிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் ஒரு பலம் என என்னால் உறுதியாக கூறமுடியும். மற்ற கட்சிகளில் தொண்டர்கள், தலைவர்கள், நிர்வாகிகள் இருப்பர். ஆனால் திமுகவில் மட்டும்தான் உடன்பிறப்பே என அன்புடன் அழைக்கும் கூட்டம் இருக்கிறது." என தெரிவித்தார்.
- நிகழ்ச்சிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
- முதலமைச்சரின் வருகையையொட்டி திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டுள்ளது.
திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சிக்கு கட்சியின் இளைஞர் அணி செயலாளரான துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மை செயலாளரும், நகராட்சி துறை அமைச்சருமான கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்களான ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, க.பொன்முடி எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களான திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், கனிமொழி கருணாநிதி, செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வழக்கறிஞர் அணி செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர். பொதுப்பணித்துறை அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு வரவேற்று பேசுகிறார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு எழுச்சியுரையாற்ற உள்ளார். முடிவில் இளைஞர் அணி மாநில துணை செயலாளர் பிரபு கஜேந்திரன் நன்றி கூறுகிறார்.
முன்னதாக இன்று திருவண்ணாமலைக்கு வருகை தந்த முதலமைச்சருக்கு மாவட்ட எல்லையான மேல்செங்கத்தில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு முதலமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர். முதலமைச்சரின் வருகையையொட்டி திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டுள்ளது.
- ஞான தபோதனரை வாவென்றழைக்கும் திருவண்ணாமலையின் சிறப்பு என்பது கார்த்திகைத் தீபத் திருவிழா
- 2668 அடி மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது.
ஞான தபோதனரை வாவென்றழைக்கும் திருவண்ணாமலையின் சிறப்பு என்பது கார்த்திகைத் தீபத் திருவிழா ஆகும். இது உலக பிரசித்தி பெற்றது. இத்திருவிழா திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் உச்ச நிகழ்ச்சியாக இன்று அதிகாலை 4 மணியளவில் அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அண்ணாமலையாரை அரோகரா பக்தி கோஷத்துடன் வழிபட்டனர். அதனைத்தொடர்ந்து தற்போது 2668 அடி மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது.
- கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, வெகு விமரிசையாக நடந்து வருகிறது.
- மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்பட உள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலைாயார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, வெகு விமரிசையாக நடந்து வருகிறது.
இதன் உச்சகட்டமாக கார்த்திகை தீப விழாவை ஒட்டி திருவண்ணாமலை மலையில் இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்பட உள்ளது.
முன்னதாக இன்று அதிகாலை 4 மணிக்கு, அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இந்த நிகழ்வில் அதிகாலையிலேயே கோயிலுக்கு வந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
கோயிலில் அதிகாலை பரணி தீபத்தை தரிசிக்கவும், மாலை கோயிலில் இருந்து மகா தீபத்தையும், அர்த்தநாரீஸ்வரரையும் தரிசனம் செய்வதற்கும் லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலை நோக்கி வந்த வண்ணம் உள்ளதால் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
முன்னதாக திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிளிலும் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
- நெல்லையில் இருந்து டிசம்பர் 3ம் தேதி இரவு 9.30 மணிக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்.
- விழுப்புரத்தில் இருந்து வரும் 30, டிசம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் சிறப்பு ரெயில்.
கார்த்திகை தீபத்தை ஒட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
நெல்லையில் இருந்து டிசம்பர் 3ம் தேதி இரவு 9.30 மணிக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில். மறுமார்க்கமாக இது டிசம்பர் 4ம் தேதி இரவு 7.55 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மறுநாள் காலை நெல்லை சென்றடையும்
சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் டிசம்பர் 3, 4 தேதிகளில் காலை 9.15 மணிக்கு புறப்படும் ரெயில் திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி வழியே திருவண்ணாமலை சென்று, பின்னர் விழுப்புரம், செங்கல்பட்டு வழியே இரவு 7 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடையும்
விழுப்புரத்தில் இருந்து வரும் 30, டிசம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் காலை 10.10 மணிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரெயில் திருவண்ணாமலை செல்லும். மறுமார்க்கமாக இதே தேதிகளில் மதியம் 12.40 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்
விழுப்புரத்தில் இருந்து டிசம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் 10.40 மணிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரெயில் வேலூர் கண்டோன்மெண்ட் செல்லும். மறுமார்க்கமாக அங்கிருந்து டிசம்பர் 4, 5, 6 தேதிகளில் அதிகாலை 2.05 மணிக்கு புறப்பட்டு, காலை 5 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்
தாம்பரத்தில் இருந்து வரும் டிசம்பர் 3, 4 தேதிகளில் காலை 9.15 மணிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரெயில் திருவண்ணாமலை செல்லும். மறுமார்க்கமாக அதே நாளில் மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் முன்பதிவு வசதி கொண்ட ரெயில்களுக்கு நாளை (புதன்கிழமை) காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது குறிப்பிடத்தக்கது.
- ஸ்ரீலீலா தற்போது தமிழ் மற்றும் இந்தி சினிமாக்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.
- பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம்வரும் ஸ்ரீலீலா தற்போது தமிழ் மற்றும் இந்தி சினிமாக்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.
பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை ஒட்டி திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், நடிகை ஸ்ரீலீலா திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார். திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அப்போது பக்தர்கள் பலரும் ஸ்ரீலீலாவுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
- வரும் நவ.4ம் தேதி விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரெயில்.
- சிறப்பு ரயில் குறித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பௌர்ணமி கிரிவல நிகழ்வை ஒட்டி நவ.4ம் தேதி விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

- காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோரால் இளம்பெண் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
- இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலையில் இளம்பெண்ணை 2 காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப்பகுதியில் கிழக்கு காவல் நிலையக் காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோரால் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான காவலர்கள் இருவரும் சஸ்பெண்ட் ஆன நிலையில் தற்போது நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
- ரெயில் நிலையத்திற்கு இரவு நேரத்தில் வந்து சேர்ந்தாள் ஒரு பெண்மணி.
- திருவண்ணாமலை குறித்து இன்னொரு சம்பவம் வரலாற்றில் பதிவாகியுள்ளது.
திருவண்ணாமலையைத் தேடி வந்தவர். அங்கு தங்கி அங்கேயே தவம் செய்து வாழ்ந்தவர். அங்கேயே தம் உடலை உகுத்து இறைவனுடன் கலந்தார்.
திருவண்ணாமலை என்னும் புனிதத் திருத்தலத்தின் மகிமையை ஸ்ரீரமணர் முழுமையாக உணர்ந்திருந்தார். திருவண்ணாமலையிலேயே அவர் தங்க அதுதான் காரணம். அந்தத் தலத்தின் அற்புதங்கள் பற்றிப் பல அன்பர்களிடம் அவர் சொன்னதுண்டு.
ஸ்ரீரமணரின் அடியவர்களில் ஒருவர் தேவராஜ முதலியார். திருவண்ணாமலையின் மகிமை குறித்து ஸ்ரீரமணர் தம்மிடம் தெரிவித்த செய்தியொன்றை தேவராஜ முதலியார் பதிவு செய்திருக்கிறார். அந்தச் செய்தி இதுதான்:
திருவண்ணாமலை ரெயில் நிலையத்திற்கு இரவு நேரத்தில் வந்து சேர்ந்தாள் ஒரு பெண்மணி. திருவண்ணாமலை ஆலயத்தில் அண்ணாமலையானை தரிசிக்க வேண்டும் என்பதே அவள் வருகையின் நோக்கம். அவள் ஒரு சிவ பக்தை.
கையில் கொஞ்சம் பணம் வைத்திருந்தாள். நகை நட்டுக்கள் வேறு அவள் உடலை அலங்கரித்தன.
ஏதேனும் ஒரு நல்ல உணவு விடுதிக்குப் போய் அன்றிரவு அறை எடுத்துத் தங்க வேண்டும். பிறகு மறுநாள் காலை ஆலயத்திற்குச் சென்று அண்ணாமலையானைக் கண்ணார தரிசிக்க வேண்டும். இதுவே அவள் திட்டம். அவளுடைய நெடுங்காலக் கனவு இது.
உணவு விடுதிக்குச் செல்வதற்குக் குதிரை வண்டி ஏதேனும் கிடைக்குமா என அவள் கண்கள் தேடிக் கொண்டிருந்தபோது, ஒரு ஜட்கா அவள் அருகில் வந்து நின்றது. எங்கே போக வேண்டும் எனக் கேட்டார் அந்தக் குதிரை வண்டி ஓட்டுநர்.
அவள் பக்கத்தில் உள்ள ஏதேனும் ஒரு நல்ல உணவு விடுதியில் தன்னைக் கொண்டு விடுமாறு சொல்லி எவ்வளவு கட்டணம் என்பதையும் கேட்டுக் கொண்டு ஜட்காவில் ஏறினாள்.
சிறிதுதூரம் சென்றதும் ஜட்கா யாருமில்லாத ஓர் ஒதுக்குப் புறமான இடத்தில் திடீரென நின்றது. ஜட்காவிலிருந்து குதித்துக் கீழே இறங்கினான் ஜட்காவை ஓட்டியவன்.
அவள் முன் வந்துநின்ற அவன் அவளிடமுள்ள பணம், நகை போன்றவற்றைக் கொடுத்துவிடுமாறு கத்தியைக் காட்டி மிரட்டத் தொடங்கினான்.
எங்கும் இருள். சுற்றிலும் யாருமில்லை. இப்போது என்ன செய்து எப்படித் தப்பிப்பது?
அவள் கடும் பீதி அடைந்தாள். `அண்ணாமலையானே, என்னைக் கைவிட்டு விடாதே! உன்னை தரிசிக்கத் தானே ஓடோடி வந்தேன்? நடுவழியில் இப்படியொரு திருடன் வந்து என்னை மிரட்டுகிறானே? இந்த அநியாயத்தைக் கேட்க ஆளில்லையா? இந்தப் புனித பூமியில் இப்படி நடக்கலாமா?` என அச்சத்தில் கண்ணீர் விட்டுக் கதறி அழத் தொடங்கினாள்.
மறுகணம் நடந்தது அந்த அற்புதம். அவள் குரலைக் கேட்டுத்தானோ என்னவோ டக் டக் என யாரோ நடந்துவரும் ஒலி கேட்டது. எங்கிருந்தோ இரு காவலர்கள் அங்கு வந்துசேர்ந்தார்கள்.
அவர்கள் வண்டி ஓட்டியவனை அதட்டினார்கள். நாங்களும் வண்டியில் வருகிறோம், எங்களையும் சேர்த்து உணவு விடுதிக்கு அழைத்துச் செல் என உத்தரவிட்டார்கள்.
காவலர்களைப் பார்த்ததும் அவளிடம் திருட நினைத்த வண்டியோட்டி பயந்துவிட்டான். மறுபேச்சுப் பேசாமல் தான் வண்டியில் ஏறி அவளையும் அந்தக் காவலர்களையும் வண்டியில் ஏற்றிக் கொண்டான். அவர்களை உணவு விடுதியில் இறக்கி விட்டான். எதுவும் பேசாமல் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டான். அந்தக் காவலர்கள் இருவருக்கும் சமயத்தில் அவர்கள் செய்த உதவிக்கு நன்றி கூறினாள் அந்தப் பெண்மணி. அவள் படபடப்பு அப்போதுதான் கொஞ்சம் தணிந்திருந்தது.
தன்னைச் சரியான தருணத்தில் வந்து காப்பாற்றிய அவர்களின் பெயர்களைக் கேட்டுக் குறித்துக் கொண்டாள். அவர்கள் அவளை ஜாக்கிரதையாக இருக்குமாறு அறிவுறுத்தி விட்டு இருளில் நடந்து மறைந்தார்கள்...

திருப்பூர் கிருஷ்ணன்
உணவு விடுதியில் அறை எடுத்துத் தங்கிய அவள், தகுந்த நேரத்தில் தன்னைக் காப்பாற்ற ஆள் அனுப்பிய அண்ணாமலையானை மனதில் வணங்கியவாறு, அந்த இரு காவலர்களை நெகிழ்ச்சியோடு நினைத்த படியே உறங்கினாள். மறுநாள் காலை எழுந்ததும் அவளுக்கு ஓர் எண்ணம் தோன்றிற்று. அந்தக் காவலர்களின் பெயர்களைத்தான் அவள் குறித்து வைத்திருக்கிறாளே? திருவண்ணாமலை காவல் நிலையத்திற்குப் போய் அவர்களுக்கு ஒரு சிறிய அன்பளிப்புத் தொகையைக் கொடுத்துவிட்டு அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு வந்தால் என்ன?
இந்த எண்ணத்தோடு அவர்களைத் தேடிச் சென்றாள் அவள். அவள் அணிந்திருந்த தங்க நகைகளையெல்லாம் காப்பாற்றியவர்கள் அவர்களல்லவா?
ஆனால் காவல் நிலையத்தில் விசாரித்தபோது அவள் தெரிந்துகொண்ட விவரம் அவளைத் திகைப்பில் ஆழ்த்தியது. அப்படிப்பட்ட பெயர்களிலோ அவள் சொன்ன ஜாடையிலோ அங்கே எந்தக் காவலரும் பணியாற்றவில்லை!
இது என்ன வியப்பு! அப்படியானால் நேற்றிரவு தக்க தருணத்தில் வந்து தன்னைக் காப்பாற்றியவர்கள் யார்?
அண்ணாமலை கோபுரத்தை நோக்கி அவள் கைகள் தானாய்க் குவிந்தன. திருவண்ணாமலைக்கு பக்தியோடு வருவோரின் பாதுகாப்பை அண்ணாமலையான் பார்த்துக் கொள்வான் என்பதைப் புரிந்துகொண்டாள் அவள்.
இந்த சம்பவம் உண்மையாக நடந்ததுதான் என்றும் கற்பனைக் கலப்பில்லாதது என்றும் இந்த நிகழ்ச்சி பற்றி ஸ்ரீரமணரே தம்மிடம் விவரித்துச் சொன்னதாகவும் தேவராஜ முதலியார் பதிவு செய்துள்ளார்.
திருவண்ணாமலை குறித்து இன்னொரு சம்பவம் வரலாற்றில் பதிவாகியுள்ளது. சுந்தரேச ஐயர் தொடர்பான சம்பவம் அது.
ஸ்ரீரமணரின் தத்துவங்களில் சரணடைந்து வாழ்ந்த ஒரு தீவிர ரமண பக்தர் சுந்தரேச ஐயர். அடிக்கடி ஸ்ரீரமணரைப் போய்ப் பார்ப்பதும் திருவண்ணாமலை ஆலயத்திற்குச் சென்று இறைவனை தரிசிப்பதும் அவரின் வழக்கம்.
அவரது உறவினர் ஒருவருக்கு திடீரென்று காலில் அடிபட்டுக் கால் ஊனப்பட்டுவிட்டது. எவ்வளவோ சிகிச்சை செய்து பார்த்தும் பூரண குணம் கிட்டவில்லை.
கையில் ஒரு கம்பு வைத்து ஊன்றிக் கொண்டுதான் அவரால் நடக்க முடியும். கம்பில்லாமல் ஓர் அடி கூட எடுத்துவைக்க இயலாது என்கிற நிலைமை.
இப்படியாகி விட்டதே, இனி வாழ்நாள் முழுதும் தான் இப்படித்தான் வாழ வேண்டுமா என்று அவர் பெரிதும் மனம் புழுங்கினார். ஊன்று கோல் இல்லாமல் முன்போல் தன்னால் எப்போது இயல்பாக நடக்க முடியும் எனக் கவலையில் ஆழ்ந்தார்.
திருவண்ணாமலையில் வாழும் பகவான் ரமணர் பற்றி அவர் கேள்விப் பட்டிருந்தார். உறவினர் சுந்தரேச ஐயர் அடிக்கடி ஸ்ரீரமணரின் பெருமைகள் பற்றி அவரிடம் சொல்வதுண்டு. அதனால் அவருக்கு பகவான் ஸ்ரீரமணரிடம் மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது.
திருவண்ணாமலையை வலம் வரலாம், பகவான் ரமணரைச் சரணடைந்து வாழலாம், காலப்போக்கில் கம்பில்லாமலே இயல்பாக நடக்கக் கூடிய நிலையை ஸ்ரீரமணர் கட்டாயம் அருள்வார் என அவர் மனதில் திடமான உறுதி ஏற்படுத்திக் கொண்டார்.
தம் இருப்பிடத்தையே திருவண்ணாமலைக்கு மாற்றிக் கொண்டார் அவர். திருவண்ணாமலையிலேயே தொடர்ந்து வசிக்கலானார்.
நாள்தோறும் கம்பை ஊன்றிக் கொண்டு கால் வலிக்க வலிக்க கிரிவலம் வந்தார். மகரிஷி ரமணரின் பாதாரவிந்தங்களை பக்தியோடு நாள்தோறும் நமஸ்கரித்தார். கம்பில்லாமல் நடக்க வேண்டும் கடவுளே என ஓயாமல் பிரார்த்தனை செய்தவாறிருந்தார்.
இப்படியாகச் சிறிது காலம் சென்றது. ஆனால் நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை. நாட்கள் சென்றனவே தவிர, ஊன்றுகோலை எடுத்துவிட்டு இயல்பாக நடப்பதென்பது அவரால் இயலாததாகவே இருந்தது.
நடக்க முடியும் என்று தான் நினைத்தது நடக்காததால், மெல்ல மெல்ல அவருக்குத் தம் திருவண்ணாமலை வாழ்வில் சலிப்பு ஏற்பட்டது. ஆனால் ஸ்ரீரமணரோ அவர் திருவண்ணாமலையில் வசிப்பதையும் நாள்தோறும் கிரிவலம் வருவதையும் ஊக்குவித்துக் கொண்டிருந்தார்.
`இவ்வளவு நாள் ஆகிவிட்டது, இனி மேலும் திருவண்ணாமலையில் இருந்து என்ன பயன்?` என எண்ணத் தொடங்கினார் அவர். ஒருநாள் மனம் வெறுத்துப் போய் விரக்தியுடன் திருவண்ணாமலையை விட்டுப் புறப்பட்டார்.
தளர்ந்த உடலோடும் தளர்ந்த மனத்தோடும் கம்பை ஊன்றிக் கொண்டு, ரமணாஸ்ரமத்திலிருந்து விடைபெற்று, மெல்ல திருவண்ணாமலையை விட்டு விலகிச் செல்லலானார். அப்போதுதான் அந்த விந்தையான சம்பவம் நடந்தது. அவர் முன்பின் பார்த்திராத, அவருக்கு அறிமுகமே இல்லாத யாரோ ஒருவர் திடீரென அங்கே வந்தார். சற்று நில் என அவரை கம்பீரமாக அதட்டினார். கட்டளைக்குக் கட்டுப்பட்டாற்போல் நின்றார் அவர். அவர் கம்பை ஊன்றிக் கொண்டு நடக்க முடியாமல் நடப்பதையே சற்றுநேரம் உற்றுப் பார்த்தார் வந்த புதியவர். பின் `அடேய்! இனி உனக்குக் கம்பு தேவையில்லை!` எனக் கூறி, கம்பை அவர் கையிலிருந்து சடாரென்று பிடுங்கி இரண்டாய் முறித்து வீசிவிட்டு விறுவிறுவென்று நடந்து போய்விட்டார். அவர் எங்கு போனார் என்றே தெரியவில்லை.
இருந்த கம்பும் போயிற்றா, இனி என்ன செய்வது என்று எண்ணியவாறே கம்பில்லாமல் நடக்கத் தொடங்கினார் அந்த அன்பர். என்ன ஆச்சரியம்! கம்பில்லாமலேயே அவரால் முன்புபோல் இயல்பாக நடக்க முடிந்தது!
அதை உணர்ந்ததும் அவர் மனத்தில் வியப்பும் பரவசமும் எழுந்தன. `அண்ணாமலை யாரைப் பிரார்த்தித்தால் ஆழ்மனம் வலிமை பெறுகிறது, நடக்காது என்று நாம் நினைத்ததையெல்லாம் வலிமை பெற்ற ஆழ்மனம் நடக்கச் செய்துவிடுகிறது!` என்னும் சூட்சுமத்தைப் புரிந்துகொண்ட அந்த அன்பரின் விழிகளில் கரகரவெனக் கண்ணீர் பெருகியது. அண்ணாமலை ஆலயத்தை நோக்கியும் ரமணாஸ்ரமம் இருந்த திசைநோக்கியும் அவரது இரு கரங்களும் குவிந்தன. திருவண்ணாமலை மேலும் ஸ்ரீரமணர்மேலும் வைக்கும் திடமான நம்பிக்கை அற்புதங்களை நிகழ்த்தக் கூடியது என்பதை அவர் மனம் உணர்ந்துகொண்டது.
தொடர்புக்கு: thiruppurkrishnan@gmail.com
- ஆரணியில் தெருநாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது.
- விபத்தில் படுகாயம் அடைந்த சிறுமி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தமிழ்நாட்டில் தெருநாய் தொல்லை தற்போது அதிகரித்துள்ளது. இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு நாய்க்கு ஆதரவாக பேசியவர்களின் கருத்துக்கள் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தெருநாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் அனாமிகா என்ற 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தில் படுகாயம் அடைந்த சிறுமி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.






