search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Keys"

    • கடந்த மாதம் 22-ந்தேதி முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் காமராஜர் மார்க்கெட்டை திறந்து வைத்தார்.
    • சாவிகள் ஒப்படைக்கப்பட்டதையடுத்து உடனடியாக கடைகள் செயல்பாட்டுக்கு வரும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அரண்மனை வளாகத்தில் காமராஜர் காய்கனி மார்க்கெட் கடந்த 60 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் இருந்த கட்டிடங்களை இடித்து விட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக மார்க்கெட் கட்ட முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து காமராஜர் காய்கனி மார்க்கெட் தற்காலிகமாக குழந்தையேசு கோவில் அருகே உள்ள இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து ரூ.20.26 கோடி செலவில் மார்க்கெட் கட்டி முடிக்கப்பட்டது. அதன்படி 4.1 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தில் 87 பெரிய கடைகளும், 201 சிறிய கடைகளும் கட்டப்பட்டன. இது தவிர வாகனங்கள் நிறுத்துமிடம், ஏ.டி.எம். மையம், கழிவறை வசதிகளும் கட்டப்பட்டுள்ளன.

    இதையடுத்து கடந்த மாதம் 22-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் காமராஜர் மார்க்கெட்டை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து கடைகள் ஏலம் விடப்பட்டன. இருப்பினும் பல்வேறு இடையூறுகள் காரணமாக கடைகள் திறக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் வியாபாரிகள் கலந்து பேசி சுமூக தீர்வு ஏற்பட்டது.இதையடுத்து ஏலம் எடுத்த கடை வியாபாரிகளுக்கு, சாவிகள் ஒப்படைக்கப்பட்டன. சாவிகள் ஒப்படைகக்ப்பட்ட தையடுத்து உடனடியாக கடைகள் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வியாபாரிகள் மார்கழி மாதம் என்பதால் தயக்கம் காட்டினர்.

    இந்த நிலையில் வருகிற 1-ந்தேதியான ஆங்கில புத்தாண்டு தினம் முதல் மார்க்கெட்டை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது என வியாபாரிகள் முடிவு செய்தனர். இதற்கான பணிகளில் வியாபாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி குழந்தையேசு கோவில் அருகில் உள்ள தற்காலிக மார்க்கெட்டில் செயல்பட்ட காய்கனி மார்க்கெட் வருகிற 1-ந்தேதி முதல் அரண்மனை வளாகத்தில் உள்ள புதிய கட்டிடத்தில் செயல்படும் என காமராஜர் மார்க்கெட் காய்கனி வர்த்தக நல சங்கத்தினர் தெரிவித்தனர்.

    • நீதிமன்ற தீர்ப்பினை வரவேற்று அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
    • கொள்ளிடத்தில் ஒன்றிய செயலாளர் நற்குணன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

    சீர்காழி:

    சென்னையில் உள்ள அ.தி.மு.க தலைமை கழக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலினை அகற்றி சாவியை எடப்பாடி.பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த தீர்ப்பினை வரவேற்று சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரே அ.தி.மு.க நகர செயலாளர் எல்.வி.ஆர்.வினோத் தலைமையில், மேற்கு ஒன்றிய செயலாளர் ஆதமங்கலம்.ரவிச்சந்திரன் முன்னிலையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.இதில் ஜெயலலிதா பேரவை செயலாளர் ஏவி.மணி, முன்னாள் நகர செயலாளர் பக்கிரிசாமி, வழக்குரைஞர் மணிவண்ணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணை செயலாளர் சத்தியமூர்த்தி, நிர்வாகிகள் சுரேஷ், தெட்சிணா மூர்த்தி, செந்தில், லெனின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் கொள்ளிடத்தில் ஒன்றிய செயலாளர் கே.எம்.நற்குணன் தலைமையில் பட்டாசு வெடித்துஇனிப்பு கள் வழங்கி கொண்டாடப்பட்டது.

    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் முன்னணி வீராங்கனைகள் 8 பேர் 3-வது சுற்றுக்குக் கூட முன்னேறாமல் வெளியேறியுள்ளனர். #Wimbledon2018
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் முதல் சுற்று, 2-வது சுற்று என தொடக்க நிலையிலேயே அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்து வெளியேறி வருகிறார்கள்.

    உச்சக்கட்டமாக வீராங்கனைகளில் விம்பிள்டன் டென்னிஸ் தொடருக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள வீராங்கனைகளுக்கு பெரும் சோதனை ஏற்பட்டுள்ளது.

    ஏனென்றால் முதல் 10 வீராங்கனைகளில் 8 பேர் 2-வது மற்றும் 3-வது சுற்றோடு வெளியேறிவிட்டனர். முதல் நிலை வீராங்கனையான ஹாலெப், 7-ம் நிலை வீராங்கனையான பிலிஸ்கோவா ஆகியோர் மட்டுமே தொடரில் நீடிக்கின்றனர்.


    3-ம் நிலை வீராங்கனை முகுருசா

    2-ம் நிலை வீராங்கனை வோஸ்னியாக்கி, 3-ம் நிலை வீராங்கனையான முகுருசா, 4-ம் நிலை வீராங்கனை ஸ்டீபன்ஸ், 5-ம் நிலை வீராங்கனையான ஸ்விடோலினா, 6-ம் நிலை வீராங்கனையான கார்சியாக 8-ம் நிலை வீராங்கனையான கிவிட்டோவா, 9-ம் நிலை வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ், 10-ம் நிலை வீராங்கனையான கெய்ஸ் ஆகியோர் தொல்வியடைந்து வெளியேறியுள்ளனர்.
    ×