search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wozniacki"

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நான்கு மணி நேரம் போராடியும், 12-ம் நிலை வீரரான மெட்வெதேவால் வெற்றிபெற முடியவில்லை.
    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸில் நேற்று தொடங்கியது. இன்று நடைபெற்ற ஆண்களுக்கான முதல் சுற்று ஒன்றில் 12-ம் தரநிலையில் உள்ள ரஷியாவைச் சேர்ந்த டேனில் மெட்வெதேவ் பிரான்ஸைச் சேர்ந்த ஹெர்பெர்ட்-ஐ எதிர்கொண்டார்.

    தொடக்கத்தில் தரநிலை பெறாத ஹெர்பெர்ட்டால் 12-ம் நிலை வீரரான மெட்வெதேவின் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் மெட்வெதேவ் 6-4, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    அதன்பின் ஹெர்பெர்ட் வீறுகொண்டு எழுந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 3-வது செட்டை 6-3, 6-2 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் 2-2 என இருவரும் சமநிலையில் இருந்தனர். வெற்றியை தீர்மானிக்கும் ஐந்தாவது செட்டில் இருவரும் ஒருவருக்கொருவர் ஈடுகொடுத்து விளையாடினர். இறுதியில் ஹெர்பெர்ட் 7-5 என வெற்றி பெற்று மெட்வெதேவ்-ஐ முதல் சுற்றோடு வெளியேற்றினார்.

    ஐந்து செட்டுகளில் மூன்று மணி நேரம் 54 நிமிடங்கள் போராடி ஏமாற்றம் அடைந்தார் மெட்வெதேவ்.
    பிரெஞ்ச் ஓபனில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் 13-ம் நிலை வீரரான வோஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்வியடைந்து முதல் சுற்றோடு வெளியேறினார்.
    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் நேற்று பாரீஸ் நகரில் தொடங்கியது. இன்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் 13-ம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி, தரநிலை பெறாத ரஷியாவின் வெரோனிகா குடேர்மெட்டோவை எதிர்கொண்டார்.

    முதல் செட்டை வோஸ்னியாக்கி 6-0 என எளிதில் வென்றார். பின்னர் அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 2-வது செட்டை வெரோனிகா 6-3 எனக் கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட்டிலும் ஆக்ரோஷம் காட்டினார். 3-வது செட்டை 6-3 எனக் கைப்பற்றி வோஸ்னியாக்கியை வெளியேற்றினார்.
    எட்டு முன்னணி வீராங்கனைகள் பங்கேற்று விளையாடும் உலக பைனல்ஸ் டென்னிஸ் தொடரில் ஸ்விடோலினா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். #WTAFinals #CarolineWozniacki #ElinaSvitolina
    சிங்கப்பூர்:

    டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் ‘ஒயிட்’ பிரிவில் நேற்று கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடந்தன. ஒரு ஆட்டத்தில் தரவரிசையில் 8-வது இடம் வகிக்கும் கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), சக நாட்டவர் பெட்ரா கிவிடோவாவை 6-3, 6-4 என்ற நேர் செட்டில் விரட்டியடித்தார்.

    மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), 7-ம் நிலை வீராங்கனையான எலினா ஸ்விடோலினாவுடன் (உக்ரைன்) பலப்பரீட்சை நடத்தினார். இதில் நேர் செட்டில் வெற்றி பெற்றால் மட்டுமே அரைஇறுதி வாய்ப்பை பெற முடியும் என்ற நெருக்கடியுடன் களம் புகுந்த வோஸ்னியாக்கி முதலாவது செட்டை வசப்படுத்தினார். 2-வது செட்டில் 5-5 என்று வரை சமநிலை வந்தது. அதன் பிறகு அடுத்த இரு கேம்களை ஸ்விடோலினா தனதாக்கி, வோஸ்னியாக்கியின் கனவை சிதைத்தார். 2 மணி 35 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் ஸ்விடோலினா 5-7, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வோஸ்னியாக்கியை சாய்த்து 3-வது வெற்றியோடு அரைஇறுதிக்கு முன்னேறினார். இந்த பிரிவில் பிளிஸ்கோவாவும் (2 வெற்றி, ஒரு தோல்வி) அரைஇறுதியை உறுதி செய்தார். வோஸ்னியாக்கி (ஒரு வெற்றி, 2 தோல்வி), கிவிடோவா (3 தோல்வி) வெளியேறினர்.

    ‘ரெட்’ பிரிவில் இன்று நடக்கும் லீக் ஆட்டங்களில் ஒசாகா (ஜப்பான்)-கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி)- ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் மோதுகிறார்கள். 
    பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி, செக்குடியரசின் பெட்ரா கிவிடோவாவை தோற்கடித்து அரைஇறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டார். #WTAFinal #Singapore #Wozniacki
    சிங்கப்பூர்:

    டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று ‘ஒயிட்’ பிரிவில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடந்தன. ஒரு ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் களம் புகுந்த நடப்பு சாம்பியனான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 7-5, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் செக்குடியரசின் பெட்ரா கிவிடோவாவை தோற்கடித்து அரைஇறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டார்.

    இந்த ஆட்டம் 2 மணி 19 நிமிடங்கள் நீடித்தது. 2-வது தோல்வியை தழுவிய கிவிடோவா இனி அடுத்த சுற்றை எட்டுவது கடினம் தான். மற்றொரு ஆட்டத்தில் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 6-3, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தார். 
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் முன்னணி வீராங்கனைகள் 8 பேர் 3-வது சுற்றுக்குக் கூட முன்னேறாமல் வெளியேறியுள்ளனர். #Wimbledon2018
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் முதல் சுற்று, 2-வது சுற்று என தொடக்க நிலையிலேயே அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்து வெளியேறி வருகிறார்கள்.

    உச்சக்கட்டமாக வீராங்கனைகளில் விம்பிள்டன் டென்னிஸ் தொடருக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள வீராங்கனைகளுக்கு பெரும் சோதனை ஏற்பட்டுள்ளது.

    ஏனென்றால் முதல் 10 வீராங்கனைகளில் 8 பேர் 2-வது மற்றும் 3-வது சுற்றோடு வெளியேறிவிட்டனர். முதல் நிலை வீராங்கனையான ஹாலெப், 7-ம் நிலை வீராங்கனையான பிலிஸ்கோவா ஆகியோர் மட்டுமே தொடரில் நீடிக்கின்றனர்.


    3-ம் நிலை வீராங்கனை முகுருசா

    2-ம் நிலை வீராங்கனை வோஸ்னியாக்கி, 3-ம் நிலை வீராங்கனையான முகுருசா, 4-ம் நிலை வீராங்கனை ஸ்டீபன்ஸ், 5-ம் நிலை வீராங்கனையான ஸ்விடோலினா, 6-ம் நிலை வீராங்கனையான கார்சியாக 8-ம் நிலை வீராங்கனையான கிவிட்டோவா, 9-ம் நிலை வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ், 10-ம் நிலை வீராங்கனையான கெய்ஸ் ஆகியோர் தொல்வியடைந்து வெளியேறியுள்ளனர்.
    ×